Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வவுனியாவில் விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

Featured Replies

வவுனியாவில்  விடுதலைப் புலிகளின் கடித தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள்

 

 

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத் தலைப்புகளுடன் துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

20170830_165920.jpg

வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப்புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன.

20170830_165850.jpg

சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.

 

குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தன, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

Ltte-notice-_1_.jpg

இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பொலிஸாரும், புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/23775

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்களால் சர்ச்சை!

வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பல இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன.

சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.

குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.

இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஒன்றில், “தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய துண்டுப்பிரசுரத்தில், வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்! என்ற தலையங்கத்தில்,

“தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை.” போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/statements/01/156882

 
  • தொடங்கியவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் விட்ட தவறுகள்: இது உண்மையா?

 
தமிழீழ விடுதலைப் புலிகள் விட்ட தவறுகள்: இது உண்மையா?

வவுனியாவில் நேற்றைய தினம் தமிழீழ விடுதலை புலிகளின் பெயரில் விநியோகிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களில் தமிழ் மொழிக் கொலை இடம்பெற்றுள்ளமை தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தமிழர் தாயகத்தில் தமிழ் மொழிக்கு விசேட அந்தஸ்தை வழங்கியிருந்த தமிழீழ விடுதலை புலிகள், தமிழ் மொழியின் பயன்பாட்டில் எப்போதும் தனிக் கவனம் செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வவுனியாவில் போடப்பட்டிருந்த துண்டு பிரசுரங்களில் அநேகமான வார்த்தைகளில் எழுத்துப் பிழைகளை அவதானிக்க முடிந்துள்ளது.

இந்த துண்டு பிரசுரத்தில் இவ்வாறான எழுத்துப் பிழைகளை அவதானிக்க முடிந்தது.

விடுதலையையம், கணவில், போரடி, மாவிரர், முரண்படுவேறுக்கு, இக்கனம், மணம், என்னத்துடன், முயறச்சிததனர், வாணிலும், விவச்சாரமும், முன்னால், நடந்துகொண்டுருப்பதை, நடைவடிக்கையும், சொண்ணார்கள், வெண்றுடுக்கலமெண்று, துஸ்பிரியோகம், கற்றுக்கொடுத்திறுக்கின்றார்கள், ஏமாற்றுவதன்றும், கற்றுக்கொடுத்திரார்கள், வால் வெட்டு, தகுகியற்றவன், தமிழணை, குடும்த்தாரும், அவுமானத்தையும் போன்ற வார்த்தைகள் எழுத்துப் பிழைகளுடன் இருப்பதை எங்களால் அவதானிக்க முடிந்துள்ளது.

இதன் மூலம் இந்த கடிதம் தமிழீழ விடுதலை புலிகளுக்கு சார்பானவர்களால் தான் போடப்பட்டதா? என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதன் ஊடாக தமிழ் மக்களை யாராவது தொடர்ந்தும் அடக்கி ஆளுவதற்கு முயற்சிக்கின்றார்களா என்பதும் இங்கு மற்றுமொரு கேள்வியாக காணப்படுகின்றது.

அண்மைக்காலமாக வடக்கின் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள் வெட்டு மற்றும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இதே கேள்வியை தமிழ் மக்கள் மத்தியில் எழச் செய்துள்ளது.

இவ்வாாறான சம்பவங்கள் மூலம் வடக்கில் இராணுவப் பிரசன்னத்தை நீடிப்பதன் ஊடாக தமிழ் மக்களை ஒர் அச்ச நிலையில் வைத்திருக்கவும் அவர்களின் உரிமைகளை பறிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றே தமிழர் தரப்பு அரசியல் தலைமைகள் வாதிட்டுவருகின்றன.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/Large-scale-errors-in-the-LTTE-s-pamphlet

நடைபெறும் திட்டமிட்ட தமிழின இனப்படுகொலை நிகழ்ச்சி நிரலில் இதையெல்லாம் யார் செய்வார்கள், இதனால் யாருக்கு நன்மை என்பதை விளங்கிக்கொள்வதில் பெரிய சிரமம் இருக்காது.

சர்வதேச நெருக்கடிகள் வலுக்கும் நேரத்தில், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய அழுத்தங்கள் அதிகரிக்கும் நேரத்தில் அவர்களை ஏமாற்ற சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் புதிய முயற்சி தான் இந்த துண்டுப்பிரசுரங்கள். இதன் பின்னணியில் தமிழினப் படுகொலைகளின் பங்குதாரரான ஹிந்திய அரச பயங்கரவாதிகளும் உள்ளதாக தெரியவருகிறது. சுஸ்மாவின் அவசர விஜயமும் இதன் பின்னணியில் உள்ளது.

நீதிபதியின் மீதான தாக்குதலின் மூலமும், வடமாகாணம் முழுவதும் ஆவா குழு என்ற வாள்வெட்டு குழுக்களை உருவாக்கி இயக்கியதன் மூலமும் இன்னும் விடுதலைப் புலிகள் இயங்குவதாக சர்வதேசத்தை ஏமாற்ற நினைத்து தோல்வியடைந்த சிங்கள-பௌத்த அரச / முப்படைப் பயங்கரவாதிகளின் புதிய முயற்சி தான் இந்த துண்டுப்பிரசுரங்கள்.

தமிழ் மக்களின் நீதிக்கான தொடர் போராட்டங்களை சிதைக்க சிங்கள-பௌத்த அரச / முப்படைப் பயங்கரவாதிகளால் வடமாகாணம் முழுவதும் ஈ.பி.டி.பி., புளட், வரதர் கும்பலில் இருந்த சமூகவிரோதிகள் ஊடாக பல பகுதிகளில் தறிகெட்டு திரிந்த மாணவர்களைக் கொண்டு ஆங்காங்கே உருவாக்கப்பட்ட ஆவா குழுவின் பின்னணி சர்வதேசத்தால் உணரப்பட்ட நிலையில் இந்த துண்டுப்பிரசுரங்கள் வெளிவந்துள்ளன.

இந்த ஆவா குழுவில் இருக்கும் தறிகெட்டு திரிந்த மாணவர்கள் சிலர் இம்முறை சில பல்கலைக்கழகங்களுக்கும், பொறியியல் பீடத்துக்கும் கூட  தெரிவாகியுள்ளனர். இதுவும் சிங்கள-பௌத்த அரச / முப்படைப் பயங்கரவாதிகளின் சதிமுயற்சிகளின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, போல் said:

நீதிபதியின் மீதான தாக்குதலின் மூலமும், வடமாகாணம் முழுவதும் ஆவா குழு என்ற வாள்வெட்டு குழுக்களை உருவாக்கி இயக்கியதன் மூலமும் இன்னும் விடுதலைப் புலிகள் இயங்குவதாக சர்வதேசத்தை ஏமாற்ற நினைத்து தோல்வியடைந்த சிங்கள-பௌத்த அரச / முப்படைப் பயங்கரவாதிகளின் புதிய முயற்சி தான் இந்த துண்டுப்பிரசுரங்கள்.

ஈழத்திலும் புலத்திலும் விடுதலைப்புலிகள் கட்டமைப்பு எப்படியிருந்தது என்பது சர்வதேசத்திற்கு நன்றாகவே தெரியும். எல்லாம் கிந்திய  நயவஞ்சகத்தால் மட்டுமே சர்வதேசம் பாரமுகம் காட்ட வேண்டிய கட்டாயம் மற்றும் அரசியல் சுயலாபங்கள்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.