Jump to content

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்


Recommended Posts

ஆயிரத்தில் இருவர் திரை விமர்சனம்
card-bg-img
 

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்காக ஒரு சிலர் படம் பார்ப்பார்கள். அப்படி தனக்கென்று பெரிய ரசிகர்கள் வட்டத்தை வைத்திருந்தவர் இயக்குனர் சரண். ஆனால், இவர் அசல் படத்திற்கு பிறகு எந்த படங்களையுமே இயக்கவில்லை. நீண்ட இடைவேளைக்கு பிறகு வினய் நடித்துள்ள ஆயிரத்தில் இருவர் படத்தை இயக்கியுள்ளார். சரண் கம்பேக் கொடுத்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

வினய் இரட்டையர்கள், அம்மா வயிற்றுக்குள் இருக்கும் போதே அடித்துக்கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுப்போவதில்லை. அந்த சமயத்தில் வினய் அப்பாவிற்கு ஏற்கனவே பங்காளி வீட்டு சண்டை உள்ளது.

ஒருநாள் அனைவரும் குடும்பத்துடன் கண்ணியாகுமரி டூர் செல்ல, அங்கு ஒரு பெண்ணை பார்த்து ஒரு வினய் பின்னாடியே செல்கின்றார். அப்போது தன் அப்பாவின் பல நாள் எதிரியின் காரில் ஏறி செல்ல, அதை எல்லோரும் பார்த்துவிடுகின்றனர்.

அந்த பெண்ணின் மீது கொண்ட காதலால் அப்படியே வினய் ஐதராபாத் செல்ல, இங்கு வினய்யை கொன்றுவிட்டதாக தகவல் வருகின்றது. பிறகு என்ன இரட்டையர்கள் படம் என்றாலே ஆள் மாறாட்டம் இருக்க தானே செய்யும், அவர் இடத்திற்கு இவர் வர, இவர் இடத்திற்கு அவர் போக, பிறகு என்னென்ன ஆனது என்பதை மீண்டும் ஒரு அட்டகாசமான கதைக்களத்தில் எடுத்து வைத்துள்ளார் சரண்.

படத்தை பற்றிய அலசல்

என்னது அட்டகாசம் கதையா? படம் அப்படித்தானா? என்று தயவு செய்து நினைக்கவேண்டாம். உண்மையாகவே ஜெமினி, வசூல் ராஜா, அட்டகாசம், அமர்க்களம், வட்டாரம் எடுத்த சரண் தானா இந்த படத்தை எடுத்தார் என்று கேட்க தோன்றுகின்றது.

வினய் தற்போது தான் துப்பறிவாளனில் ப்ரேக் கொடுத்தார். அடுத்த வாரமே இப்படி ஒரு படம், பல வருடங்களாக எடுத்து இருப்பார்கள் போல, எதற்கு பாட்டு வருகின்றது, எதற்கு சண்டை வருகின்றது என்று நமக்கு மட்டுமில்லை இயக்குனருக்கே தெரியவில்லை போல.

கருப்பு பணம், ஹவாலா பிஸினஸ் என சரணுக்கே பேவரெட்டான ஒரு கதைக்களத்தில் தேவையில்லாத பல காட்சிகளில் பொறுமையை சோதிக்கின்றார். அதிலும் பாடல்கள் எல்லாம் என்ன ஆச்சு பரத்வாஜ் சார் என்று கேட்க தோன்றுகின்றது.

ஐதராபாத், திருநெல்வேலி என்று படம் இரண்டு தளங்களில் பயணிக்கின்றது. எதற்குமே ஒரு வித்தியாசமில்லை, ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போலவே ஓர் உணர்வு, படத்தின் ஒரே ஆறுதல் மயில்சாமி, அருள்தாஸ் டீமின் காமெடி காட்சிகள் மட்டுமே.

க்ளாப்ஸ்

மயில்சாமி ஒரு சில காட்சிகள் வந்தாலும் ரசிக்க வைக்கின்றார். அருள்தாஸ் தன் டீமுடன் அடிக்கும் லூட்டி.

பல்ப்ஸ்

மற்ற அனைத்துமே.... சரண் நீங்கள் பழைய பலத்துடன் மீண்டு(ம்) வரவேண்டும்.

மொத்தத்தில் ஆயிரத்தில் இருவரில் ஒருவர் கூட திருப்திப்படுத்தவில்லை

Link to comment
Share on other sites

கமல், அஜித், விக்ரம் என சொல்லியடித்த சரணா இது?! - 'ஆயிரத்தில் இருவர்' விமர்சனம்

 

ஏரியாவில் வாழ்ந்து கெட்டவர்களை 'ஒரு காலத்துல எப்படி இருந்த மனுஷன்' என சலித்துக்கொள்வோமே, அப்படித்தான் இயக்குநர் சரண் பற்றியும் சொல்லவைக்கிறது அவர் இயக்கத்தில் வெளியான 'ஆயிரத்தில் இருவர்' படம். 

ஆயிரத்தில் இருவர்

 

செவத்தக்காளை, செந்தட்டிக்காளை என்ற இரட்டையர்கள் எதற்கெடுத்தாலும் "ஏல செந்தட்டி... ஏல செவத்த" எனத் தங்களுக்குள் அடித்துக்கொள்ளும் ரகம். சின்ன வயதில் குடும்பப் பகையால் ஏற்படும் ஒரு குழப்பத்தில் செந்தட்டிக் காளை வீட்டைவிட்டு ஓடி ஹைதராபாத்தில் தஞ்சமடைகிறார். அவர் இறந்துவிட்டாரென மொத்தக் குடும்பமும் நம்புகிறது. மற்றொரு பக்கம், அரசியல்வாதியின் பினாமி ஒருவர் தன் சுவிஸ் வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டை தன் மகளின் உடம்பில் பச்சை குத்தி (க்யூ ஆர் கோட் உட்பட) வைக்க அந்தப் பெண் காணாமல் போகிறார். இன்னொரு பக்கம், தன் அப்பாவின் சாவிற்கு செவத்தக் காளைதான் காரணம் என நினைக்கும் ரவுடி தன் கும்பலோடு ஹீரோவைத் தேடி அலைகிறார். மற்றொரு பக்கத்தில் நான்கு பேர் ஒரு படம் பார்க்க திரையரங்கிற்கு வந்து வசமாக மாட்டிக்கொள்கிறார்கள். (வேற யாரு, நாங்கதேன்!)

வினய்

ஹீரோவாக இரட்டை வேடத்தில் வினய். கடைசியாக ஹிட் கொடுத்து பத்தாண்டுகள் ஆகிவிட்டது என்ற குறையை கடந்தவாரம் வந்த துப்பறிவாளன்தான் போக்கியது. அதற்குள் கண் திருஷ்டி. அதுவும் திருநெல்வேலி பாஷை பேசுகிறேன் என 'ஏல அல்வால டேஸ்ட்டுல கம்மில' என வார்த்தைக்கு வார்த்தை 'ல' போட்டுப் பேசி அந்த வட்டார மொழியை வதைக்கிறார். டிம் மோரியார்டியாக போன வாரம் மிரட்டிய வினய்க்கு இதில் பெரிதாக வேலையே இல்லை. சாமுத்ரிகா, ஸ்வஸ்திகா என பேரைப் போலவே அழகான ஹீரோயின்கள். ஹீரோவைப் பார்க்கிறார்கள், காதலில் விழுகிறார்கள், பாட்டுப் பாடுகிறார்கள், க்ளைமேக்ஸில் சிரிக்கிறார்கள். தட்ஸ் ஆல். பிரதீப் ராவத், இளவரசு, அருள்தாஸ், ஶ்ரீஜித் ரவி என எக்கச்சக்க திறமையான நடிகர்கள் இருக்கிறார்கள்... ம்ம்ம் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு காட்சிகளில் மயில்சாமியும் அருள்தாஸோடு வரும் ரவுடியும் சிரிக்க வைக்கிறார்கள். மற்றபடி காமெடிக்கும் பஞ்சம்தான். ஒருவேளை நீங்கள் படம் பார்த்தால் இடைவேளைக்குப் பிறகு வரும் அருள்தாஸ் - காஜல் ஜோடிக்கு வைத்திருக்கும் காதல் எப்பிசோடு வரை பொறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நிச்சயம் ஜென் நிலைக்கு சென்றிருப்பீர்கள். அடுத்து எதைக் காட்டினாலும் தாங்கிக் கொள்ளும் மனவலிமை வந்துவிடும். 

Vinay

இரட்டை சகோதரர்கள், அதில் ஒருவர் சின்ன வயதிலேயே தொலைந்து போகிறார், அதற்குக் காரணமானவர்களை பழிவாங்க ஆள்மாறாட்டம் செய்கிறார் - யெஸ், அதே 'அட்டகாசம்' கதைதான். ஆனால் சரண் ஆக்‌ஷன் படமாக எடுக்க நினைத்து, ரொமான்ஸ் கதையாக எழுதி காமெடி படமாக எடுத்திருப்பதால்... திரைக்கதை அநியாயத்திற்கு குழப்பியடிக்கிறது. அதனால் பாவம் எடிட்டர் கெவினும் இருக்கும் காட்சிகளை தொகுத்து படமாக்கியிருக்கிறார். அதனாலேயே படத்தில் இரண்டு வினய் இருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளவே நேரம்பிடிக்கிறது. படத்தில் இதுவரை பார்க்காத புதிய விஷயம் என்றால் சண்டைக்காட்சிகள்தான். ரெண்டு வினயும் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டு கண்களைக் கட்டிக் கொண்டு சண்டை போடும் அதிசயமான சண்டைக் காட்சிகளை இதற்கு முன்பு பார்த்ததுண்டா யுவன் ஹானர்? என்னதான் அஜித் உங்கள் நண்பராக இருந்தாலும், "உங்க தல கழுத்த பாத்துப் பேசுறவரு இல்லடி, கண்ணப் பாத்து பேசுறவரு" போன்ற அஜித் ரெஃபரன்ஸ் வசனங்கள் எல்லாம் அவசியம் வைத்திருக்க வேண்டுமா?

Saran

சரண் - பரத்வாஜ் இணை ஒரு காலத்தில் இளசுகளின் ஹார்ட்பீட்டாக பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டும் ஈர்க்க மறுக்கின்றன. அதிலும் "மாங்கா பீஸுல இந்த மாங்கா பீஸுல மொளகாப் பொடி முத்தத்தால் கலகம் செஞ்சுபுட்ட" பாடல் எல்லாம் ஏலியன் லெவல். 2012-ல் "செந்தட்டிகாளை செவத்தகாளை"யாகத் தொடங்கப்பட்ட படம் 2017ல் "ஆயிரத்தில் இருவர்" ஆக வெளியாகியிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகளில் தமிழ் சினிமா இசை நான்கு கால் பாய்ச்சலில் முன்னேறிவிட்டது கூட காரணமாக இருக்கலாம். ஆனால், அதற்காகக் கூட அந்த "ஏலேய்ய்ய்ய்" பாடலை ஏற்றுக் கொள்ள முடியாது பரத்வாஜ். ஒளிப்பதிவு ஒன்றிரண்டு காட்சிகளில் பளிச். படத்தில் ஒரு வினய் வெளிநாட்டுக்கு செல்வதாக காட்டப்படும் காட்சிகள் எல்லாம் ஏதோ ஒரு கேமிராவில் ஒளிப்பதிவு செய்து பிக்ஸல் உடைந்து புள்ளியடிக்கிறது. 

இருட்டுக்கடை அல்வா போல ஹீரோயினின் அம்மா வெளிச்சக்கடை அல்வா செய்பவர் என யோசித்த அளவுக்காவது வசனத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தின் மிகப்பெரிய மைனஸ் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு பாணியில் எழுதப்பட்டிருக்கும் வசனங்கள்... 

 

 

'என்னண்ணே இப்படி கொலைப் பட்டினியா கிடக்கீங்க?'

'கொலை பண்ணத்தான் இப்படி பட்டினியா கிடக்கேன்டா' என வில்லனும் அடியாளும் பேசிக்கொள்ளும் இந்த டயலாக் ஒரு சோறு பதம். 

 

கமல், அஜித், விக்ரம் என டாப் ஸ்டார்களை வைத்து சொல்லியடித்த சரணுக்கு இது சொல்லிக்கொள்ளும்படியான படம் இல்லை. பழைய ஃபார்முக்கு சீக்கிரம் வாங்க ப்ரோ!

http://cinema.vikatan.com/movie-review/103120-aayirathil-iruvar-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குமரவேலு குமரகுருபரன் அவர்களிடம் இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும். உங்களது உறவினர் யாராவது யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்களிடம் சொல்லவும் நேரடியாகப்போய்க் கதைக்கச்சொல்லி.
    • ஆகாயத்தில் பாய்ந்து அசோகவனம் சென்ற அனுமன் ஆடிவரும் வண்டியில் அசைந்து வருகின்றார்......!  🙏
    • கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார்.  கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அரசின் மிருத சஞ்சீவனி திட்டத்தின் மூலம் அந்த உறுப்புகள் தேவைப்படும் நபர்களுக்கு கொடுத்துள்ளனர். அவர்கள் அனைவரையும் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது நிபந்தனையாக இருந்தது.  அந்த வகையில் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த 44 வயதான அசோக்கிற்கு விஷ்ணுவின் இதயம் பொருத்தப்பட்டுள்ளது. அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட நாளன்று தான் ஷஜனாவை அவர் முதல் முறையாக சந்தித்துள்ளார்.  அதன் பிறகு ஷஜனாவுடன் தொடர்ந்து பேசி வந்த அசோக், விஷ்ணு குறித்து தெரிந்துக் கொண்டுள்ளார். ஷஜனாவை தனது அம்மாவாகவே அசோக் கருதியுள்ளார். இந்த சூழலில் தான் ஏற்கெனவே புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஷஜனாவுக்கு நோய் பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. அதற்கான சிகிச்சையில் அவர் இருந்தபோதும் அசோக் உடன் இருந்துள்ளார். இந்த சூழலில் சிகிச்சை பலன் அளிக்காமல் ஷஜனா உயிரிழந்தார். இதையடுத்து ஒரு மகனாக இருந்து ஷஜனாவுக்கு இறுதி சடங்கை அசோக் செய்துள்ளார். இதற்கு ஷாஜியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த செயல் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளது. உடல் அளவில் அசோக் இருந்தாலும், தனது உள்ளத்தளவில் வாழும் விஷ்ணுவின் உருவாக நின்று இறுதி சடங்கை செய்துள்ளார். https://www.hindutamil.in/news/life-style/1241046-man-performed-funeral-rites-for-heart-donor-s-mother-kerala.html
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.