Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்'

Featured Replies

`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்'

ஸ்பேனிஷ் ஒற்றுமையை வலியுறுத்திய அரசர் ஆறாம் ஃபெலிப்பேபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஸ்பேனிஷ் ஒற்றுமையை வலியுறுத்திய அரசர் ஆறாம் ஃபெலிப்பே

கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அந்த வாக்கெடுப்பிற்கு பின் முதன்முதலாக பிபிசி-க்கு பேட்டி அளித்த கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், சுதந்திரத்தை அறிவிப்பது தொடர்பான விஷயத்தில் இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திற்குள் எமது அரசு செயலில் இறங்கும் என்றார்.

ஸ்பேனிஷ் அரசாங்கம் தலையிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டில் கேட்டலோனியா அரசாங்கத்தை கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற நம் கேள்விக்கு பதிலளித்த பூஜ்டிமோன், "அது எல்லாவற்றையும் மாற்றும் பெரும் பிழையாக இருக்கும்" என்றார்.

மேலும் அவர், தற்சமயம் கேட்டலோனியா நிர்வாகத்திற்கும், மேட்ரிடில் இயங்கும் மைய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

சட்டத்திற்கு புறம்பான செயல்

அதே சமயத்தில், இந்த வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயினின் அரசர் ஆறாம் ஃபெலிப்பே , இந்த வாக்கெடுப்பை ஒருங்கிணைத்தன் மூலம் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றார்.

தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அரசர், வாக்கெடுப்பின் ஒருருங்கிணைப்பாளர்கள் அரசின் அதிகாரத்திற்கு அவமரியாதை செய்திருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சிக்கான ஜனநாயக கோட்பாடுகளை மீறி இருக்கிறார்கள் என்றார்.

  •  

மேலும் அவர், இந்த வாக்கெடுப்பானது வளமான வடகிழக்கின் பொருளாதாரம் உட்பட மொத்த ஸ்பெயினின் பொருளாதாரத்திற்கே சேதங்களை ஏற்படுத்தலாம் என்றார். அதே நேரம், இந்த கடினமான காலத்திலிருந்து ஸ்பெயின் மீண்டு வரும் என்பதை அழுத்தமாக தெரிவித்தார்.

ஸ்பெயினின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்ற அவர், ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தார்.

ஸ்பெயினின் மத்திய அரசு இந்த வாக்கெடுப்பையே சட்டவிரோதமானது என்று விவரித்து இருக்கிறது.

மக்கள் ஆர்ப்பாட்டம்

வாக்கெடுப்பு நாளன்று ஸ்பேனிஷ் போலீஸ் தாக்கியதில் 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

கேட்டலோனியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

பார்சிலோனாவில் மொத்தவிலை கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியிலிருந்த 770 உணவகங்கள் மூடப்பட்டதால், அந்த பகுதியே ஆள் அரவமற்று காணப்பட்டது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன அல்லது குறைந்த அளவில் இயங்கின.

மூடப்பட்ட கடைகள்படத்தின் காப்புரிமைEPA Image captionமூடப்பட்ட கடைகள்

ஆனால், எல் பிராட் விமான நிலையம் வழக்கம் போல இயங்கியது.

 

http://www.bbc.com/tamil/global-41494800

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரிய பிரித்தானியாவில் இரண்டு பகுதிகள் பிரிந்து செல்ல விரும்புகின்றன.
பெல்ஜியத்தில் ஒரு பகுதி பிரிந்து செல்ல விரும்புகின்றது.
ஏன் இத்தாலியில் கூட இருபகுதியாக பிரிந்து செல்ல மக்கள் விரும்புகின்றனர்.
கேட்டலோனியாவும் சுதந்திரம் கேட்கின்றது.
 
வளர்ச்சி அடைந்த நாடுகளில் .....சகலருக்கும் சம உரிமை உள்ள நாளுகளில் கூட  தனி இன சுதந்திர காற்றை மக்கள் சுவாசிக்க விரும்புகின்றார்கள்.

மதத்தால், மொழியால்,பழக்க வழக்கங்களால், நடை உடை பாவனைகளால், உணவுவகைகளால் இன்னும் பல விடயங்களால் மாறுபட்ட ஈழத்தமிழர் இனவாத/அடக்குமுறை சிங்களத்திடமிருந்து விடுதலை கேட்பதில் என்ன தவறு?
வடக்கு கிழக்கு தமிழர்  தமிழர் பிரதேசம் என்றுதான் வரலாறும்  அன்றைய பத்திரிகை செய்திகளும் சொல்கின்றது.

ஆனால் இலங்கையில் மட்டும் தமிழினத்திற்கு ஏன் இந்தக்கதி????
உரிமையை வாயால் கேட்டும் அழிவு
உண்ணாவிரதமிருந்து கேட்டும் அழிவு
ஆரத்தழுவி கேட்டும் அழிவு
அதட்டி கேட்டும் அழிவு
அடித்து கேட்டும் அழிவு
அடிவாங்கி அழிந்த பின்னும் அழிவு.

கேட்டலோனியாவின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
எமது கொள்கைகளுடன் சிறிது வேறுபட்டாலும் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் ஒரு நாட்டுக்கு இப்படியான பிரச்சனைகள் வருவது நமக்கு சுகாதாரமானது.
 

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை சிங்களவனிடம் இல்லை.

எம்மிடம் தான்.

இங்கு போராட்டங்களில் வெற்றி பெறுபவர்கள் யார் என்று பார்த்தால்.. சமரசத்துக்கு சப்பைக் கட்டுக் கட்டாமல்.. ஒரே... இலட்சியத்தை ஒருவர் பின் இன்னொருவராக முன்னிறுத்திப் போராடுவது தான். 

ஆனால்.. எங்கடையள்... இத்தனை அழிவுகளின் பின்னும்..  தன் இனத்துக்காகப் போராடியவனையே.. பயங்கரவாதிகள் என்று சொல்லிச் சரணாகதி அடையுதுகள் என்றால்.. அதுங்களை யார் நம்பி.. நாடு எடுக்க உதவுவினம்..??!

எம்மிடம்.. இலட்சியத்தில் உறுதி இல்லை. போராட்டத்தில் தொடர்ச்சி இல்லை.. அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் நிலை.. காட்டிக்கொடுத்துப் பிழைப்பது.. சரணாகதி அரசியலில் அற்பம் பெறத்துடிப்பது.. எஜமான விசுவாசத்தைப் பொழிஞ்சு தள்ளுவது... இன்னும் சிலது.. சொந்த மலத்தை கிண்டிக்கிளறி கட்டுரை வரைந்து மகிழ்வதில் காலம் கழிப்பது.... இப்படி..... அதை பெரிய மீளாய்வுன்னு.. சொல்லிக்கிறது.. முட்டாளுங்க... 

இல்ல சொல்லுங்களா..சொறீலங்கா சுதந்திரம் அடைஞ்ச போது.. நான் பெருசா மகிழ்ந்து துள்ளினன்.. சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சன்.. இப்ப எனக்குப் பிச்சை போடுங்க என்று..

இப்படியாப்பட்ட அரசியல் தலைமைகளை தேர்வு செய்யும் முட்டாள் தனமாகச் சிந்திக்கும் மக்கள்..

இவை தான்.. நாம் விடிவின்றி.. அழிவு.. ஆக்கிரமிப்பில் வாழ முக்கிய காரணம்.

இந்த சுதந்திரம் கேட்கும் மக்களுக்கு இல்லாத பெரிய அவசியம் எமக்கிருந்தும்.. நாம் சுதந்திரம் பெற முடியாமைக்கு நாமே தான் முக்கிய காரணம். tw_angry:tw_anguished:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

...

இங்கு போராட்டங்களில் வெற்றி பெறுபவர்கள் யார் என்று பார்த்தால்.. சமரசத்துக்கு சப்பைக் கட்டுக் கட்டாமல்.. ஒரே... இலட்சியத்தை ஒருவர் பின் இன்னொருவராக முன்னிறுத்திப் போராடுவது தான். 

...

போராட்ட விடயத்தில் ஈழமாவது கொஞ்சம் பரவாயில்லை..

இதே நிலைமை தமிழ்நாட்டிற்கு வந்திருந்தால், குவார்ட்டர் சாராயம், பிரியாணியில் சுருட்டியிருப்பார்கள்..

அதையும் மீறினால், போலீஸை விட்டு ரெண்டு தட்டு.. ! அனைத்தும் பனால்...!! :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nedukkalapoovan said:

பிரச்சனை சிங்களவனிடம் இல்லை.

எம்மிடம் தான்.

----இப்படியாப்பட்ட அரசியல் தலைமைகளை தேர்வு செய்யும் முட்டாள் தனமாகச் சிந்திக்கும் மக்கள்..

இவை தான்.. நாம் விடிவின்றி.. அழிவு.. ஆக்கிரமிப்பில் வாழ முக்கிய காரணம்.

இனியாவது... பாத்துக் குத்துங்கோ...

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.