Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் பிரமுகர்கள் தலைமையில் வடமாகாணத்தில் தேசிய தமிழ் தின விழா

Featured Replies

அரசியல் பிரமுகர்கள் தலைமையில் வடமாகாணத்தில் தேசிய தமிழ் தின விழா

 

வடமாகாணத்தில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் பாடசாலைகளின் கலாச்சார விழா என்பன நடைபெறவுள்ளன.

அரசியல் பிரமுகர்கள் தலைமையில்  வடமாகாணத்தில் தேசிய  தமிழ் தின விழா

யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளில்  ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சி  தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.

இந்த விழாவில் தமிழ் தின போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து மாணவர்களின்  கலை நிகழ்ச்சிகளும், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மற்றும் சுகி சிவம் ஆகியோர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான 'பாரத கலாஞ்சலி' வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறும்.

அத்துடன், வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கல்விமான்கள், வியாபார துறையில் மிளிர்ந்தவர்கள் மற்றும் சிறந்த சேவையாற்றிய ஊடகவியலாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

ஆரம்ப நிகழ்வுகளில் பிரதானமாக யாழ்.மத்திய கல்லூரியில் இருந்து யாழ்.இந்து கல்லூரி வரையில் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/tamil-day-in-jaffna-hindu-college-

  • தொடங்கியவர்

ஜனா­தி­பதி மைத்­திரி யாழ். விஜயம்

 

 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் 14ஆம் திகதி சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜ யம் செய்­ய­வுள்ளார். யாழ்ப்­பாணம் இந்­துக்­கல்­லூரி விளை­யாட்டுத் திடலில்   கல்வி அமைச்­சினால்  ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள  அகில இலங்கை   தமிழ் தினப்­போட்­டியில்  வெற்­றி­பெற்ற மாண­வர்­க­ளுக்­கான பரி­சுகள் வழங்கும்  வைப­வத்தில்  பிர­தம அதி­தி­யாக  கலந்­து­கொள்ளும் வகை­யி­லேயே  ஜனா­தி­ப­தியின் யாழ்ப்­பாண விஜயம்  அமை­ய­வுள்­ளது. 

கல்வி அமைச்சர் அகில விராஜ்  காரி­ய­வசம், இரா­ஜாங்க அமைச்சர்  வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரின்  அழைப்­பின்­பேரில்  ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு  விஜயம் செய்­கிறார்.  இந்த பரி­ச­ளிப்பு விழாவில்  எதிர்க்­கட்சித் தலை­வரும்,  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன், வட­மா­காண ஆளுநர்  ரெஜினோல்ட் குரே ,  வட­மா­காண  முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் ஆகியோர் உட்­பட பலரும்   இந்­நி­கழ்வில் பங்­கேற்­க­வுள்­ளனர். 

காலை 10 மணி முதல் பிற்­பகல் 1 மணி­வரை இந்த நிகழ்­வுகள் நடை­பெ­ற­வுள்­ளது. 

இந்த நிகழ்வை அடுத்து  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிளிநொச்சி மாவட்டத்திற்கும்  விஜயம் செய்யவுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது. 

http://www.virakesari.lk/article/25575

யாழில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் கலாச்சார விழா ஆகியன மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்துடன், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி மற்றும் சுகி சிவம் ஆகியோர் கலந்து கொள்ளும் பட்டிமன்றம், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பரதநாட்டிய அக்கடமியான ‘பாரத கலாஞ்சலி’ வழங்கும் ஓம் சிவா முருகா பரத நாட்டிய நிகழ்வும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு எதிர்வரும் 15ஆம், 16 ஆம் நாட்களில் யாழ். இந்துக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், வடமாகாணத்தில் திறம்பட செயற்பட்ட கலைஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டு வீரர்கள், கல்வி மான்கள், வியாபாரத்தில் மிளிர்ந்தவர்கள், சிறந்த ஊடகவியலாளர்கள் எனப் பலர் விருது வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

 

http://thuliyam.com/?p=80943

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Athavan CH said:

யாழில் முதல் தடவையாக தேசிய தமிழ் தின விழா மற்றும் கலாச்சார விழா ஆகியன மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.

http://thuliyam.com/?p=80943

தமிழ் எழுத்துகளின் 'இடமாற்றத்தால்' பொருள் தவறாக உள்ளதோ..? think_smiley_13.gif

think_smiley_11.gif இப்படித்தானே இருக்க வேண்டும்...?

17 minutes ago, Athavan CH said:

யாழில் முதல் தடவையாக 'தமிழ்த் தேசிய தின விழா' மற்றும் கலாச்சார விழா ஆகியன மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ளது.

http://thuliyam.com/?p=80943

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

தமிழ் எழுத்துகளின் 'இடமாற்றத்தால்' பொருள் தவறாக உள்ளதோ..? think_smiley_13.gif

think_smiley_11.gif இப்படித்தானே இருக்க வேண்டும்...?

" தமிழ் தேசியம்" என்றால் எங்கன்ட ஆட்சியாளர்களுக்கும் அவர்களது சொந்தக்காரர்களுக்கும் ஒத்து வராது....அது தான் சிறிலங்கா(சிங்கள) தேசியத்தில் தமிழ் தின விழா கொண்டாடுகிறார்கள் :10_wink:

  • தொடங்கியவர்

தேசிய தமிழ் தின விழா இம்முறை யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

 
 

தேசிய தமிழ் தின விழா இம்முறை யாழ்.இந்து கல்லூரியில் எதிர்வரும் 14ம், 15ம் திகதிகளில் நடைபெறும் என கூறியிருக்கும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்,

இந்நிகழ்வில் ஜனாதிபதி மை த்திரிபால சிறிசேனா, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர்  சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேற்படி தேசிய தமிழ் தின விழா தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற பத்தி ரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இவ்வாண்டு தேசிய தமிழ் தின விழா யாழ்மாவட்டத்தில் உள்ள யாழ்.இந்து கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் தமிழ் பண்பாட்டு ஊர்வலம் மற்றும் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

குறிப்பாக இந்நிகழ்வில் தென்னிந்தியாவில் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டிமன்றங்களும் இடம்பெறவுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என கூறினார்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் சில விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வடமாகாணத்தில் இராணுவத்திடம் உள்ள பாடசாலைகள் தொடர்பாக.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தனித்தனியாகவும் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு இன்று காலை ஒன்றாகவும் சந்திப்புக்களை நடத்தியுள்ளோம்.

இதனடிப்படையில் வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டில் மற்றும் இராணுவ சுற்றாடலுக்குள் இருக்கின்றது. எனவே அவை தொடர்பாக ஆராய்வதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கின்றேன்.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் பல இடங்களில் இராணுவம் தங்கள் முகாம்களை அகற்ற இணக்கம் காட்டியுள்ளது.

மேலும் யாழ்.மாவட்டத்திலேயே அதிக பாடசாலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது.

குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 11 பாடசாலைகள் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் அல்லது இராணுவ சூழலுக்குள் இருக்கின்றது.

எனவே அவை தொடர்பாக பேசியதன் அடிப்படையில் யாழ்.மாவட்டத்தில் 2 பாடசாலைகளை விடுவிக்க படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனினும் பலாலியில் உள்ள ஆசிரியர் பயிற்சி பாடசாலையை மட்டும் விடுவிக்க படையினர் மறுக்கின்றனர். எனவே அது தொடர்பாக கொழும்பு சென்று பேச்சுவார்த்தை நடத்துவேன் என்றார்.

மேலும் போர் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பாடசாலைகளின் வளப் பற்றாக்குறை தொடர்பாக. முறைப்பாடுகள் எவையும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை. முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றாலே நடவடிக்கை எடுக்க இயலும் என்றார்.

http://www.yaalaruvi.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
சனி யாழில் ஜனாதிபதி
 

- எஸ். நிதர்ஷன்

யாழ்ப்பாணத்துக்கு, எதிர்வரும் சனிக்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.


எதிர்வரும் சனிக்கிழமை காலை ஒன்பது மணிக்கு, விசேட விமானம் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ள ஜனாதிபதி, முதல் நிகழ்வாக, புத்தூர் நிலாவறை கமநலசேவை திணைக்களத்தில் நடைபெறும் தேசிய வேலைத் திட்டத்தின் அங்கமாக, விவசாயிகளுக்கு விதைப் பொருட்களை வழங்கி வைக்கவுள்ளார்.

பின்னர், யாழ்.இந்து கல்லூரியில் மூன்று மாடிக் கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளதுடன், இந்துக் கல்லூரியில் தேநீர் உபசாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

மேலும் அங்கு இடம்பெறுவுள்ள தமிழ் மொழித் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதுடன், பிற்பகல் இரண்டு மணிக்கு, கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை  திறந்து வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சனி-யாழில்-ஜனாதிபதி/71-205352

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.