Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம்

Featured Replies

தீபாவளியன்று தாயும் மகனும் கழுத்தறுத்துக் கொலை ; ஏறாவூரில் சம்பவம்

 

 

தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

eravuoor.jpg

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

22554379_1891073844253900_508631582_n.jp

குறித்த தாயும் மகனும் தனிமையில் இருந்த வேளை, வீட்டுக்குள் புகுந்த கொள்ளைக் கும்பலொன்று தாயையும் மகனையும் கழுத்தறுத்துக்கொலை செய்து விட்டு அங்கிருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலைசெய்யப்பட்டவர் இளம் தாயெனவும் கணவன் வெளியூரில் வசிப்பதாகவும் தெரிய வருகின்றது.

இச் சம்பம் இரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் சம்பம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிளவிலேயே தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தனர்.

கழுத்தறுத்துக் கொலை செய்யபட்டவர்கள் ராஜா மதுவந்தி 26 வயதெனவும் மதுசன் வயது 11 எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி தினமான இன்று இக் கொடூரச் சம்பவம் இடம்பெற்ற நிலையில் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் அப் பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/25937

  • தொடங்கியவர்
தாயும் மகனும் கொலை…
 

image_72492a0b96.jpg

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடியில் 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் கொலைசெய்யப்பட்டுள்ளனரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சவுக்கடி, முருகன் கோவில் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து மதுவந்தி மற்றும் அவரது மகன் மதுசன் ஆகிய இருவருவரின் சடலங்களையும், இன்று (18) காலை, ஏறாவூர் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்கள் வசித்து வரும் வீட்டின் கூரை பிரிக்கப்பட்டுள்ள நிலையில் காணப்படுவதாகவும் கூரையைப் பிரித்து அதனூடாக வீட்டினுள் இறங்கி இனந்தெரியாத நபர்கள், இவர்களை அடித்துக் கொலை செய்திருக்கலாமென, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

(படங்கள்: பேரின்பராஜா சபேஷ்)

image_cab5113700.jpgimage_398d38515b.jpgimage_60452bed98.jpgimage_60f17bfb24.jpgimage_99d12030fa.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தாயும்-மகனும்-கொலை/46-205753

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/தாயும்-மகனும்-கொலை/46-205753

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதை தவிர ஒன்றும் இல்லை அவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு தூக்கு வழங்கப்படவேணும் அந்த........கள்ள நாய்களுக்கு காசுக்காக எதுவெல்லாம் செய்கிறார்கள்  தற்போது திருட்டுக்கள் பரவல்லாக நடைபெறுகிறது 

  • தொடங்கியவர்

தாயும் மகனும் கொலை ; பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் 3 பேர் கைது

 

 

ஏறாவூர்  முருகன் கோவில் வீதி சவுக்கடியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில்  மூவர் கைது செய்யபடுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.

mothaeww.jpg

தீவிர விசாரணைகளின் பின்  மோப்ப  நாய்கள் இருவரை அடையாளம் காட்டியத்தை அடுத்து இவர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

 

 

குறித்த கொலை தொடர்பான தீவிர விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்ணெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25966

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஏறாவூர் இரட்டை படுகொலை : பிரதான சூத்திரதாரி கைது

 

 

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைப் படுகொலையின் பிரதான சூத்திரதாரியென சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவைச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

2_Arrested.jpg

கடந்த 18 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று ஏறாவூர் சவுக்கடி முருகன் கோவில் வீதியிலுள்ள வீட்டில் இருந்து 26 வயதுடைய தாயும் 11 வயதுடைய மகனும் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

 

இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் சந்தேகத்தில் மூவரை கைதுசெய்து விசாரணைகளுக்குட்படுத்தியதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பிரதான சூத்திரதாரியை நேற்று மட்டக்களப்பு மாவட்ட புலன்விசாரணைக் குழுவினர் கைது செய்தனர்.

இதேவேளை இக் கொலை தொடர்பாக சுமார்  80 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணைகள் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாகவும் 27 பேரிடம் வாக்க மூலம் பெறப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட விசேட புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/26455

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவை சேர்ந்த்வருக்கு என்ன சம்பந்தம் என புரியவில்லையே:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

முல்லைத்தீவை சேர்ந்த்வருக்கு என்ன சம்பந்தம் என புரியவில்லையே:rolleyes:

இப்பிடியானவர்கள் ஊரு விட்டு ஊரு வந்து 
விளையாடுவதுதான் அவர்கள் பாணி 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

இப்பிடியானவர்கள் ஊரு விட்டு ஊரு வந்து 
விளையாடுவதுதான் அவர்கள் பாணி 

ஊகிக்க முடியவில்லை அதான் கேட்டேன் சிலர் இருக்கிறார்கள் கூலிக்கு மாரட்டிப்பது  சிலரின் தொழில் 

  • தொடங்கியவர்

ஏறாவூர், சவுக்கடி இரட்டைக் கொலை; காரணம் அம்பலம்

 

 

ஏறாவூர், சவுக்கடி, முருகன் கோவில் வீதியில் கடந்த தீபாவளி தினத்தன்று இடம்பெற்ற தாய் மற்றும் மகன் இரட்டைக் கொலையின் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர். மேற்படி வீட்டில் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.

மிருசுவில் வடக்கு கொடிகாமத்தைச் சேர்ந்த ஒருவரும் சவுக்கடி தன்னாமுனையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி ஒருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

தீபாவளி தினமான கடந்த 18ஆம் திகதி, பீதாம்பரம் மதுவந்தி(23) மற்றும் அவரது மகன் பீதாம்பரம் மதுசான் (11) ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டனர்.

இதையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே பிரதான சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பிரதான சந்தேக நபர், சவுக்கடியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுவந்துள்ளார். இதன்போது, அவருக்கும் மற்றொரு சந்தேக நபரான சவுக்கடியைச் சேர்ந்த ஆட்டோ சாரதிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.

5_Eravur.JPG

அவரது ஆட்டோவிலேயே மதுவந்தி மற்றும் மதுஷன் ஆகியோர் அடிக்கடி பயணித்துள்ளனர். தீபாவளி தினத்துக்கு முந்தைய தினம் தனது நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்று வருவதற்கும் இதே ஆட்டோவிலேயே பயணித்துள்ளார்.

இந்தப் பணத்தையும் மேலும் சில நகைகளையும் குறிவைத்தே சந்தேக நபர்கள் இருவரும் கொலைகளை அரங்கேற்றியுள்ளனர்.

5_Eravur1.JPG

சம்பவம் இடம்பெற்ற தினமே பிரதான சந்தேக நபர் யாழ்ப்பாணத்திற்கு சென்று கொள்ளையிட்ட நகைகளை அடகு வைத்து 515,000 ரூபாய் முற்பணம் பெற்றுள்ளதுடன் அதிலிருந்து அவர் செலுத்த வேண்டிய வாகன தவணைப் பணத்திற்காக 170,000/= செலுத்தி இருப்பதாகவும் தெரியவருகிறது.

கொலையானவர்கள் இருக்கும்போதே வீட்டினுள் புகுந்து மறைந்திருந்ததாகத் தெரிவித்த பிரதான சந்தேக நபர், அவர்களை மயக்குவதற்காகவே தடியால் தலையில் தாக்கியதாகவும், அவர்கள் மயங்காததாலேயே அவர்களைக் கொலை செய்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அடகு வைக்கப்பட்ட திருட்டு நகைகளை, யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பிரதேசத்தில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/26565

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.