Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!

Featured Replies

அரியாலையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூடு

 
அரியாலையில் சற்றுமுன்  துப்பாக்கிச்சூடு
 

அரியாலைப்பகுதியில் சற்று முன்னர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவ இடத்துக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

http://newuthayan.com/story/39559.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

 

 
 

யாழ்ப்பாணம்  குருநகர் பகுதியில் இன்று மதியம் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை இடம்பெற்று வருகின்றது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் கடற்தொழில் செய்பவர் என்றும் வீதியால் சென்று கொண்டிருந்தவர் மீது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-kurunaker-area-shooting-one-man

  • தொடங்கியவர்

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் ; யாழில் பதற்றம்

 

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

jaffna0.jpg

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம், உதயபுரம், கடற்கரைவீதியிலேயே குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை மோட்டர் சைக்கிளொன்றில் வந்த இரு ஆயுததாரிகள் வழிமறித்து துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

jaffna2.jpg

இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்ஷ்மன்  என்பவர் வயிற்றுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் யாழ் . வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaffna.jpg

இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

 

இதையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் துப்பாக்கிப்பிரயோகம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/26157

  • தொடங்கியவர்

யாழில் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்காக...!

 

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், படுகாயமடைந்த இளைஞர் தொடர்ந்தும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அரியாலை கிழக்கு உதயபுரம் பகுதியை சேர்ந்த  24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் எனும் கடற்தொழில் செய்யும் இளைஞனே குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

முதுகுப் பகுதியில் துப்பாக்கி குண்டு துளைத்ததனால் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது குறித்த இளைஞர் அவசர சத்திர சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைக் கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

யாழில் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு; படுகாயமடைந்தவர் சத்திரசிகிச்சைக்காக...!

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞருடன் உந்துருளியில் பயணித்த மற்றுமொரு இளைஞர் பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-in-jaffna-oct22-hospital

  • தொடங்கியவர்

அரியாலையில் பதற்றம்; துப்பாகிச் சூடு இடம்பெற்ற பகுதியில் அதிரடிப்படை குவிப்பு!

 

யாழில் இளைஞர் ஒருவர்மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் தற்பொழுது விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இன்று பிற்பகல் குறித்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின்போது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருந்தார். உந்துருளியில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்றுவரும் இளைஞரின் நிலை தற்பொழுது கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவருகிறது.

வலப்பக்க முதுகில் குண்டு பாய்ந்ததனால் அதிகமான இரத்தப்போக்கு நிகழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையிலேயே சம்பவ இடத்தில் மேலெதிக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-jaffna-oct22-ariyalai

  • தொடங்கியவர்

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு! – இளைஞர் உயிரிழப்பு!!

மூன்றாம் இணைப்பு

யாழ்ப்பாணம் அரியாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

இரண்டாம் இணைப்பு

யாழ்ப்பாணம், அரியாலையில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உதயபுரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று கூறப்படுகின்றது.

viber-image6-3-750x400.jpg

படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை அவசர சிகிச்சைப பிரிவில் சேர்க்கபபட்டுள்ளார். இவர்து மார்பில் 3 ரவைகள் பாய்ந்துள்ளன என்று கூறப்படுகின்றது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் அறியப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறுகின்றனர்.

http://newuthayan.com/story/39609.html

  • தொடங்கியவர்

யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

DMwOHUFV4AA9CjJ.jpg

இன்றைய தினம் யாழ்.மணியம் தோட்டம் உதயபுரம் கடற்கரை வீதி சந்தியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தொன் போஸ்கோ ரிஸ்மன் மற்றும், நிஷாந்தன் ஆகியோர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது.

 

இத் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் தொன் போஸ்கோ ரிஸ்மன் என்வர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

gfgg.jpg

இந்நிலையில் குறித்த நபரது உடல் நிலை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெருவித்திருப்பதாவது,

 

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு கடுமையான இரத்த போக்கு நிலை காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒர் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இரண்டாவது சத்திர சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 

மேலும் குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் துப்பாக்கி குண்டானது அவரது நெஞ்சு பகுதியூடாக சுவாசப்பை பகுதியை துளைத்து சென்றுள்ளது. இந்திலையில் தொடர்ச்சியாக அவருக்கு தீவிர சிகிச்சையானது வழங்கப்பட்டிருந்தது. எனினும் சுவாசப்பையில் ஏற்பட்ட அதித இரத்தப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்திருந்தார்..

http://www.virakesari.lk/article/26159

 

எத்தனையே நாடுகளின் நகரங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணம் ஒரு மிகச் சிறிய பிரதேசம். அதில்தான் எத்தனை வாள்வெட்டுக்கள் துப்பாக்கிச் சூடுகள் பாலியல் அத்துமீறல்கள் கிலோக் கணக்கில் கஞ்சா கைமாறுல்கள் களவுகள். இத்தனைக்கும் ராணுவம் காவல்துறை கடற்படை உளவுத் துறைகள் என அனைத்தும் நிறைந்த பிரதேசம். முன்பு குண்டு வீசி படையெடுத்து அதிக சத்தத்துடன் அழித்தார்கள். இப்போது சத்தமில்லாமல் எமது கைகளை எடுத்து எமது கண்களையே குத்துகின்றார்கள். வரலாற்றில் புலியின் காலத்தில் மட்டும்தான் யாழ்பாணத்தின் உள்கட்டமைப்பு அமைதியாக இருந்தது. ஏரியாவுக்கு ஒரு அரசியல் துறைப் போராளி என்று சில பத்து போராளிகளின் நிர்வாகத்தில் காக்கப்பட்ட அமைதியை இன்று இத்தனை பெரிய அரச இயந்திரம் இருந்தும் காக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் அனைத்துக் குற்றங்களிலும் அவர்கள் பங்கும் இருக்ககின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, நவீனன் said:

யாழ். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் பலி

(ரி.விரூஷன்)

யாழ்ப்பாணம் மணியம் தோட்ட பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான நபருக்கு சுவாசப்பையில் ஏற்பட்ட கடுமையான இரத்த போக்கினால் அந் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

மூன்றுதமிழருக்கு ஒரு படையினர் என்று இருக்கும்போது இந்த "இனம்தெரியாத"  நபர்கள் யார்? மிகநுட்பமாகச் சிங்களம் திட்டமிட்டுச் செயலாற்றுகிறது. மக்கள் விழிப்போடு இருந்து  கண்காணிப்போடு பயணிக்க வேண்டிய சூழலை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். 

  • தொடங்கியவர்

யாழ்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு.

யாழ்.அரியாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 25) எனும் இளைஞனே வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

011-1.jpg
அரியாலை கிழக்கு உதயபுரம் முதலாம் குறுக்கு தெரு பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
 
பின்னால் இருந்தே சுட்டனர். 
 
“நானும் ரிக்மனும் , மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எமக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடை தரித்த இருவர் ரிக்மனுக்கு பின்புறமாக துப்பாக்கி பிரயோகத்தினை நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர் ” என உயிரிழந்த இளைஞனுடன் பயணித்த இளைஞர் தெரிவித்தார்.
 
தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியில் சென்றவன். 
 
எனது மகன் கடற்தொழில் செய்பவர் , இன்றைய தினம் மதியம் வீட்டில் இருந்து உணவருந்திக்கொண்டு இருந்த வேளை தொலைபேசி அழைப்பொன்று மகனுக்கு வந்தது , அதை அடுத்து ” இதோ வாறன் ” என கூறி உணவையும் உண்ணாது வெளியில் சென்று விட்டான். வெளியில் சென்று 10 நிமிடத்திற்குள் மகன் மீது சூட்டு உள்ளார்கள் என உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்தார்.
 
அதிக இரத்த போக்கால் மரணம். 
 
இளைஞனின் சுவாச குழாய்களை துப்பாக்கி ரவைகள் துளைத்து சென்றமையினால் அதிகளவான இரத்த போக்கு ஏற்பட்டமையினால் தான் மரணம் சம்பவித்ததாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
விரைவில் கைது செய்வோம். 
 
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்து உள்ளோம். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களை விரைவில் கைது செய்வோம். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
 
மூன்று பொலிஸ் குழுக்கள் களத்தில் ..
 
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இரகசிய பொலிஸ் பிரிவு , யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் கீழான குழுவினர் மற்றும் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவினர் என மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடவடிக்களை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://globaltamilnews.net/archives/46418

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

.

shot-dead-ariyalai (2)யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணியம்தோட்டம், உதயபுரம் – கடற்கரை வீதிச் சந்தியில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில், உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, மற்றொரு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மூன்று குண்டுகள் துளைத்து படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில்  அவர் மரணமானார்.

சுவாசப் பையில் குண்டுதுளைத்ததால், ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே அவரது மரணத்துக்குக் காரணம் என்று, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

shot-dead-ariyalai (1)shot-dead-ariyalai (2)shot-dead-ariyalai (3)

“துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவருக்கு அதிக குருதிப் போக்கு காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி ரவை அவரது மார்பின் ஊடாக,  சுவாசப்பையை துளைத்துச் சென்றுள்ளது.  சுவாசப்பையில் ஏற்பட்ட அதித குருதிப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இளைஞன் மரணமான சம்பவத்தை அடுத்து, யாழ். போதனா மருத்துவமனையில் பதற்றநிலை காணப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திலும், காவல் நிலையங்களிலும், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

அதேவேளை, சாதாரண உடையில் இருந்த காவல்துறையினரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

http://www.puthinappalakai.net/2017/10/23/news/26759

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.