Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு

Featured Replies

சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு

 

கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

இடைக்­கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்ற எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் அனு­மதி மறுத்­துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர் கரு­ ஜெ­ய­சூ­ரி­ய­வி­டத்தில்

முறைப்­பாடு செய்­துள்ளார்.

இச்­ச­ம­யத்தில் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், மாவை.சோனா­தி­ராஜா, எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளட்ட எதிர்க்­கட்­சி­யான கூட்­ட­மைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிர­சன்­ன­மா­கி­ய­ருந்து அமை­தி­யாக முறை­பாட்டை அவ­தா­னித்­த­வா­றி­ருந்­தனர்.

அர­சி­ய­ல­மைப்பு சபையில் நேற்று புதன்­கி­ழமை புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான மூன்றாம் நாள் விவாதம் முற்­பகல் 10.30இற்கு ஆரம்­ப­மா­னது.

இதன்­போது அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர் கரு­ஜெ­ய­சூ­ரி­யவின் அறி­விப்­பினை அடுத்து அவரால் நேற்­றைய நாளின் விவா­தத்­தினை ஆரம்­பித்து உரை­யாற்­று­வ­தற்­காக எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் அழைக்­கப்­பட்டார்.

இதன்­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் எழுந்து கொண்ட அதே சம­நே­ரத்தில் அதே முன்­வ­ரிசை நிர­லி­லி­ருந்து எழுந்த எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவாட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன்,

புதிய அர­சி­ய­ல­மைப்பின் வழி­ந­டத்தல் குழு­வி­னு­டைய இடைக்­கால அறிக்கை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­வ­தற்கு எனது கட்­சி­யாலும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ராலும் அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் இந்த விவா­தத்தில் கலந்து கொண்ட எனக்கு கருத்­துக்­களை முன்­வைப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் மறுக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் நான்கு கட்­சிகள் அங்கம் வகிக்­கின்­றன. அவ்­வாறு அங்கம் வகிக்கும் கட்­சியின் செய­லா­ள­ராக நான் இருக்­கின்றேன். கடந்த 16ஆண்­டு­க­ளாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக வன்­னி­மா­வட்ட மக்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி இருக்­கின்றேன்.

இந்த விடயம் சம்­பந்­தாக உங்­க­ளி­டத்தில்(அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர்) மூன்று தட­வைகள் முறை­யிட்­டுள்ளேன். குறிப்­பாக எழுத்து மூல­மா­கவும் முறை­யிட்­டுள்ளேன். ஆகவே இந்த விவாத்தில் எனது நிலைப்­பாட்­டினை வௌிப்­ப­டுத்­து­வற்­கு­ரிய நேர ஒதுக்­கீட்­டினை பெற்­றத்­த­ர­வேண்டும். அத்­துடன் எதிர்­கா­லத்­திலும் இவ்­வா­றான இடை­யூ­றுகள் வரா­தி­ருப்­ப­தற்­கான நிலை­மையை ஏற்­ப­டுத்தித் தர­வேண்டும் என்றார்.

இதன்­போது பதி­ல­ளித்த அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர் கரு ஜெய­சூ­ரிய, உங்­க­ளு­டைய கோரிக்கை தொடர்­பாக நான் கவனம் செலுத்­தி­யுள்ளேன். நேர ஒதுக்­கீடு செய்யும் பொறுப்­பா­னது எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்­கு­ரி­ய­தா­கின்­றது. அது தொடர்­பான செயற்­பா­டு­களை அவரே முன்­னெ­டுக்­கின்றார். இன்று(நேற்று) காலை­யிலும் நான் இந்த விடயம் சம்­பந்­த­மாக அவ­தானம் செலுத்­தி­யி­ருந்தேன். மேலும் மீண்டும் ஒரு தடவை உங்­க­ளுடை கோரிக்கை தொடர்­பாக ஆராய்ந்து பார்க்­கு­மாறு எதிர்க்­கட்சித் தலை­வ­ரின்­க­வ­னத்­திற்கு கொண்டு வரு­கின்றேன்.

இத­னை­ய­டுத்து மீண்டும் எழுந்த சிவ­சக்தி ஆனந்தன் எம்.பி, அர­சி­ய­ல­மைப்பு சபையின் தலைவர் என்ற வகையில் தாங்கள் அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய வாய்ப்­பினை பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி­யுள்­ளீர்கள். அதன் கார­ணத்­தி­னா­லேயே தங்­க­ளி­டத்தில் முறை­யீட்­டினை செய்­கின்றேன்.

இலங்கை அர­சியல் வர­லாற்­றி­லேயே எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஒருவர் தனது கட்­சியின் உறுப்­பினர் ஒரு­வ­ருக்கு பேசு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்காத முதற்­சந்­தர்ப்பம் இது­வாகும். மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­யொ­ரு­வ­ருக்கே இவ்­வாறு கருத்து வௌியி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் மறுக்­கப்­ப­டு­கின்­ற­தென்றால் இந்த நாட்டின் சாதா­ரண பிர­ஜை­யொ­ரு­வ­ருக்கு எவ்­வாறு சந்­தர்ப்பம் வழங்­கப்­படும் என்று கரு­த­மு­டியும். அதே­நேரம் நேர­ஒ­துக்­கீடு வழங்­கப்­ப­டாத பட்­சத்தில் இந்த சபையில் நான் பங்­கேற்­றி­ருப்­பது பய­னற்­றது என்­ப­தையும் தங்­களின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கின்றேன் என்றார்.

இதன்­போது, அர­சி­ய­ல­மைப்பின் தலைவர் கரு ஜெய­சூ­ரிய, உங்­க­ளு­டைய விட­யத்­தினை நான் கவ­னத்தில் கொள்­கின்றேன். நாளையும்(இன்றும்) விவாதம் நீடிக்­கப்­பட்­டுள்­ளது. கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­திலும் இவ்­வி­டயம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­கின்றேன். எதிர்க்­கட்­சித்­த­லை­வரின் கவ­னத்­திற்கும் கொண்டு வரு­கின்றேன் என்றார்.

கூட்டு எதிர்க்­கட்­சியும் நேர ஒதுக்­கீட்டை கேட்­டது

இத­னை­ய­டுத்து கூட்டு எதிர்க்­கட்­சியின் காஞ்­சன விஜே­சே­கர எம்.பி கூட்டு எதிர்க்­கட்­சிக்கு நேர ஒதுக்­கீடு வழங்­கி­யி­ருந்­தாலும் நேற்று முன்­ன­திமும்,நேற்றும், தலா­மூ­வரே உரை­யாற்­று­வ­தற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே எமக்கான சந்தர்ப்பங்களும் அளிக்கப்படவேண்டும் என்றார்.

ஆதற்கு பதிலளித்த அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜெயசூரிய, கட்சிகள் வழங்கும் நிரல் பட்டியலுக்கு அமையவே வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நாளையும் விவாத்தின் நாள் நீடிக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆதன்பின்னர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் கட்சிகள் வழங்கும் பட்டியலுக்கு அமையவே வாய்ப்பு வழங்கப்படுகின்றது என்றுகூறினார். இதனையடுத்து எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் உரையை ஆரம்பித்தார். 

http://epaper.virakesari.lk/

  • கருத்துக்கள உறவுகள்

சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பில் இருந்து விலகியதாக கடிதம் வழங்கினால்  பேச சந்தர்ப்பம் தருபவதாக சபாநாயகர் கூறியதாக வானொலி செவ்வி ஒன்றில் (சில மணித்தியாலங்களுக்கு முன்பு) கூறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடம் ஜனநாயகம் கேட்ட இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை அடியோடு மறுப்பு!

 
 

விடுதலைப் புலிகளிடம் ஜனநாயகம் இருக்கின்றதா என கேட்டு, கிண்டலடித்த இலங்கை நாடாளுமன்றத்தில், உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பேச்சுரிமை அடியோடு மறுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பல்வேறு கேள்விகள் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

புலிகளிடம் ஜனநாயகம் கேட்ட  இலங்கை நாடாளுமன்றத்தில் பேச்சுரிமை அடியோடு மறுப்பு!

நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி (Parliamentary Standing Order) உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவருக்கு, அவர் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்ற நேரம் ஒதுக்கலாம் என மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இருவரும் மறுத்தால் சபாநாயகர் பிரத்தியேகமான முறையில் இன்னுமொரு உறுப்பினரின் நேரத்தை கேட்டு, அல்லது அரசதரப்பு பிரதம கொறடாவின் ஒத்துழைப்புடன் சம்மந்தப்பட்ட உறுப்பினருக்கு உரையாற்ற அனுமதிளிக்க முடியும்.
ஆனால் இங்கு, சிவசக்தி ஆனந்தனுக்கு எந்தவழியாலும் நேரம் ஒதுக்க முடியாத இக்காட்டான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய, நாடாளுமன்ற செயலாளர் அலுவலக அதிகாரி ஒருவர், தமிழரசுக் கட்சியின் அழுத்தம் காரணமாக சாபாநாயகர் கூட, நேரத்தை ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் கருத்து வெளியிட்ட சிவசக்தி ஆனந்தன், இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3.30க்கு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தனது பேச்சுரிமை விடயம் தொடர்பாக பேசப்பட்டது என்றும் ஆனால் சாதகமான முடிவுகள் இல்லையெனவும் கூறினார்.

பேசுவதற்கு பத்து நிமிடமாவது ஒதுக்க வேண்டும் என சபாநாயகர் கருஜெயசூரிய, கூட்டத்தில் கேட்டதாகவும் ஆனால் கட்சிக் கொள்கையின் பிரகாரம் சிவசக்தி ஆனந்தனுக்கு பேச அனுமதிக்க முடியாது என சம்பந்தன் அழுத்தம் கொடுத்தார் என்றும் சிவசக்தி ஆனந்தன் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளரிடம் குறிப்பிட்டார்.

2015இல் நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றதும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், நேர்வேயின் சமாதான பணிக்கு பின்னர் கூட, விடுதலைப் புலிகளிடம் முழுமையான ஜனநாயக செயற்பாடுகள் இல்லையென குற்றம் சுமத்தினார்.

அரசதரப்பு எதிர்த்தர்ப்பு உறுப்பினர்களும் விடுதலைப் புலிகள் ஜனநாயக வழியில் உரிமையை கோர வேண்டும் என பல்வேறு சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் சிவசக்தி ஆனந்தனுக்கு உரையாற்ற அனுமதி மறுத்த சம்பந்தனும் இலங்கை நாடாளுமன்றமும் ஜனநாயக பண்புகளில் இருந்து விலகிவிட்டதாகவும், சோசலிச ஜனநாயக நாடு என்று கூறுவதற்கான தகுதியை இழந்து விட்டதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேவேளை 1995ஆம் ஆண்டு வாசுதேவநாணயக்கார உரையாற்றுவதற்கு அரசதரப்பும் எதிர்த்தரப்பும் மறுத்திருந்த நிலையில் அப்போதைய சபாநாயகா் அமரர் கே.பி.ரத்னாயக்க எதிர்த்தர்ப்பு உறுப்பினர் ஒருவரின் நேரத்தைப் பெற்று அவருக்கு உரையாற்ற அனுமதியளித்திருந்தார். 

2005ஆம் ஆண்டு விமல் வீரவன்ச ஜே.பி.வியில் இருந்து விலகியபோது அவருக்கு உரையாற்ற ஜே.பி.வி அனுமதி மறுத்திருந்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி சார்ப்பில் விமல் வீரவன்சவுக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கியிருந்தார்.

2001ஆம் ஆண்டு பந்துல குணவர்த்தன உட்பட 11 உறுப்பினர்கள் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தபோது அவர்களுக்கு உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு உரையாற்ற நேரம் ஒதுக்கினார்.

ஆனால் இன்று சிவசக்தி ஆனந்தனுக்கு தமிழ்த்தேசியக் சுட்டமைப்பின் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் சம்பந்தன் பதவி வகிக்கின்றமையினால் யாருமே நேரம் ஒதுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் சபாநாயகர் கூட சம்பந்தனின் அழுத்தத்தத்திற்கு கட்டுப்பட வேண்டிய கட்டாய அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள விவாதத்தின்போது சிவசக்தி ஆனந்தனுக்கு பேசுவதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கலாம் என உள்ளகத் தகவல் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

https://news.ibctamil.com/ta/politics/Sampanthan-s-democracy

  • தொடங்கியவர்

 

பாராளுமன்றக் குழுவின் தீர்மானத்திற்கேற்பவே, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு அறிக்கை விவாதத்தில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனுக்கு ஜனநாயகம் தெரியும் என்று யார் சொன்னது?
அந்த மனுஷனுக்கும் அவரின் வால்களுக்கும் அறவே தெரியாத விடயங்களில் இந்த ஜனநாயகமும் ஒன்று.  

சம்பந்தனுக்கு முழுமையாக தெரிந்த ஒரு விடயம் அற்பசொற்ப சலுகைகளுக்கு மதிமயங்கி தமிழின விரோதிகளுக்கு கைகட்டி சேவகம் செய்வது. இதை தான் அந்த மனுஷன் பல தசாப்தங்களாக முக்கி முக்கி செய்து பிழைப்பு நடக்கிறது.

இந்த அடிப்படையில் தான் உலகின் பெரிய போலி ஜனநாயக நாடாகவும் மோசமான பயங்கரவாதிகளின் நாடாகவும் இருக்கும் ஹிந்தியாவின் அடிவருடியாக சம்பந்தன் இயக்கிவருகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Shalini Akilesh இதில் சுமந்திரன் குறிப்பிட்ட மிக தெளிவான விடயம் தாங்கள் பிரிக்க முடியாத இறைமைக்கு (Indivisible) தயார் என்பது தான் . சட்ட விஞ்சான அடிப்படையில் பிரிக்க முடியாத இறைமை என்பது ஒற்றையாட்சின் classic பண்பு. இதை நேற்று பாராளுமன்றில் பேசிய இந்த இடைக்கால அறிக்கையை தயாரித்த சட்ட அறிஞ்சர் Dr Jayampathi Wickramaratne வலியுறுத்தி இருந்தார் .பகிரப்படாத இறைமை அல்லது தேசிய அரசுக்கு மாத்திரம் இறைமை என்பது மிக ஆபத்தான நிலைப்பாடு ஆகும் .திரு சுமந்திரன் இதை ஏற்று கொள்ளுவது என்பது மிக பெரிய நெருக்கடிக்குள் மக்களை தள்ளி விடும் .வழமை போல பௌத்த முன்னுரிமை என்கிற விடயத்தை சுட்டி காட்டினார் . மறுபுறம் ஒரு சட்டத்தரணியாக தான் சார்ந்து மகிந்த தரப்பு தேர்தல் காலத்தில் அரசியல் அமைப்பு மாற்றம் குறித்து பேசியதை ஆதாரங்களுடன் நிரூபித்தார் . அதே போல இடைக்கால அறிக்கையை ஏற்று கொள்ளுகிறோம் என்கிறார் .எந்த அடிப்படையில் அதை செய்கிறோம் என சொல்ல வில்லை .. காணி அதிகாரங்கள் மிக தெளிவாக மத்திய அரசுக்கு வழங்க பட்டு இருக்குறது .போலீஸ் அதிகாரங்கள் இல்லை . நிதி அதிகாரங்கள் யில்லை .மாகாண பட்டியல் இல்லை . மாகாணங்கள் கொள்கையை வகுக்க முடியாது . இந்த 13 - என்றவாறு உள்ள இடைக்கால அறிக்கையை எந்த அடிப்படியில் ஏற்று கொள்ளுகிறோம் என்பது சொல்ல வில்லை
மொத்தத்தில் மிக தெளிவாக ஏமாற்றுகிறார் .

அதி புத்திசாலிகளான எங்கள் ஆட்கள் ஆங்கிலத்தில் பேசியதை பார்த்து மிரண்டு விட்டார்கள் என நினைக்கிறன் ..அறிவற்ற சமூகம் இப்படி தான் ஏமாறும்

ஜனநாயக வேஷத்தில் உலாவும் சந்தர்ப்பவாத சர்வாதிகாரிகளில் சம்பந்தனும் ஒருவர்! சம்பந்தனின் "கோழயா" சுமந்திரன் பலபடிகள் அதிகம்.

சம்பந்தன்-சுமந்திரன் இரட்டையர் கோஷ்டியின் தலைமையிலான கூட்டமைப்பிலும், மாவரைக்கும் மாவை  தலைமையிலான தமிழரசுக் கட்சியிலும் உள்ள ஜனநாயகப் பண்புகளைவிட  தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்த ஜனநாயகப் பண்புகள் பல ஆயிரம் மடங்கு உயர்ந்தது என்று கடந்த 5-6 வருடங்களில் நிரூபணமாகியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.