Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேடம் கலைந்­தது

Featured Replies

 
வேடம் கலைந்­தது
 
 

வேடம் கலைந்­தது

 

2015 ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடந்து முடிந்து மூன்­றரை மாதங்­கள் கடந்து முடிந்­தி­ருந்­தன. அதே ஆண்டு டிசெம்­பர் மாதம் 19ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் வடக்கு மாகா­ண­ச­பை­யின் கேட்­போர் கூடத்­தில் இர­க­சி­ய­மாக ஒரு கூட்­டம் நடந்­தது.

மாலை மங்­கும் வேளை­யில் ஆரம்­ப­மான அந்­தக்  கூட்­டம் இரவு வரை­யில் நீடித்­தது. கூட்­டத்­தில் பங்­கேற்­ற­வர்­கள் கூட்­டம் முடிந்து ஒவ்­வொ­ரு­வ­ராக வெளியே வந்­த­தும், ஊட­கங்­கள் அவர்­களை மொய்க்க ஆரம்­பித்­தன.

விபசார வழக்­கில் கைதா­கு­ப­வர்­கள் எப்­படித் தங்களது முகங்­களை மறைத்­துக்­கொண்டு ஊட­கங்­க­ளி­ட­மி­ருந்து ஒளிந்து ஓடி ஓட்­டம்­பி­டிப்­பார்­களோ அப்­ப­டித்­தான், அந்­தக் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­வந்த பலர் ஊட­க­வி­ய­லா­ளர்­களை எதிர்­கொள்­ளாது தப்­பிச் சென்­ற­னர்.

ஒரு சிலரை ஊட­கங்­கள் சுற்­றி­ வ­ளைத்துக் கேள்­வி­கள் தொடுத்­த­போது மௌனத்­தையே பெரும்­பா­லும் தமது பதி­லாக்­கி­விட்­டுச் சென்­ற­னர்.

அந்­தக் கூட்­டத்­தில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னும் பங்­கேற்­றி­ருந்­தார். அதில் கலந்­து­கொண்­ட­வர்­க­ளில் பெரும்­பா­லா­ன­வர்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் அதி­ருப்­தி­யா­ளர்­கள். அப்­ப­டிச் சொல்­வதை விட, சம்­பந்­தன் – மற்­றும் சுமந்­தி­ர­னின் அதி­ருப்­தி­யா­ளர்­கள் என்­றும் கூற­லாம்.

பொது அமைப்­புக்­கள் என்ற பெய­ரில் கூட்­டத்­தில் குந்­தி­ய­வர்­கள் பலர், கடந்த காலங்­க­ளில் தமிழ் சிவில் சமூ­கத்­தி­னர் என்ற கோதா­வில் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான போக்­கில் செயற்­பட்­ட­வர்­கள். சுருங்­கச் சொன்­னால் காங்­கி­ரஸ் கஜேந்­தி­ர­கு­மா­ரின் ‘விசி­ல­டிச்­சான் குஞ்­சு­க­ளா­க’ச் செயற்­பட்­ட­வர்­கள் அவர்­கள்.

கூட்­ட­மைப்­புக்கு  எதி­ரான மாற்று அணி 
தமிழ் மக்­கள் பேரவை

அந்­தக் கூட்­ட­மும், கூட்­டும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான மாற்று அணி என்று அப்­போது அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது. கூட்­ட­மைப்­புக்கு குடைச்­சல் கொடுக்­கும் அணி என்­றும் வர்­ணிக்­கப்­பட்­டது.

அர­சி­யல் கதி­ரை­களை கைப்­பற்­று­வ­தில் தோற்­றுப் போனோர், எப்­ப­டி­யா­வது பத­விக் கதி­ரை­க­ளைப பற்­றிக் கொள்­வ­தற்­காக உரு­வாக்­கிய அமைப்பு அது. – – தமிழ் மக்­கள் பேரவை– – என்று அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டது.
விழுந்­த­டித்­துக் கொண்டு – கோயி­லில் கற்­பூ­ரம் கொழுத்தி சத்­தி­யம் செய்­யாத குறை­யாக, பேரவை, மக்­கள் இயக்­கம் என்று அறிக்கை விட்­டார்­கள்.

பேர­வை­யால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லும் சரி, அதன் இணைத் தலை­வ­ராக இருத்­தப்­பட்டு அழகு பார்க்­கப்­பட்ட முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கை­யி­லும் சரி, பேரவை ஒரு மக்­கள் இயக்­கம்; ஒரு­போ­தும் தேர்­தல் அர­சி­ய­லில் அந்த  அமைப்பு ஈடு­ப­டாது என்று சொல்­லப்­பட்­டது.

தறி­கெட்­டுச் செல்­லும் தமி­ழர் தலை­மை­களை நேர்­சீர் செய்­வதே தமிழ் மக்­கள் பேர­வை­யின் நோக்­கம் எனத் தெரி­விப்பு இந்த வாக்கு திரும்­பத் திரும்­பச் சொல்­லப்­பட்­டுக் கொண்டே வந்­தது. தறி­கெட்­டுச் செல்­லும் தமிழ் மக்­க­ளின் தலை­மை­களை சீர் செய்து நேரிய பாதைக்குக் கொண்டு வரு­வதே பேர­வை­யின் நோக்­கம் என்­று தெரி­விக்­கப்­பட்­டது.

மறு­பு­றத்­தில் தமிழ் மக்­கள் பேர­வை­யா­னது, தேர்­த­லில் தோற்­றுப்­போ­ன­வர்­க­ளின் கூட்டு என்­றும், அவர்­கள் அர­சி­ய­லுக்கு வரு­வ­தற்­காகவே அமைக்­கப்­பட்ட அமைப்­பு என்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் பகி­ரங்­கக் குற்­றச்­சாட்டு முன்­வைக் கப்­பட்­டது. அதுவும் திரும்­பத் திரும்ப அது அழுத்­த­மா­கச் சொல்­லப்­பட்டு வந்­தது.

தமிழ் மக்­கள் பேர­வை­யில், அது ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் என்ற மூன்று அர­சி­யல் கட்­சி­கள் இடம்­பெற்­றி­ருந்­தன.

பேர­வை­யில் கோலோச்­சும் நிலை­யில், தமிழ்க் காங்­கி­ர­ஸும், ஈ.பி.ஆர்.எல்.எவ்­வுமே இருந்­தன. இந்த இரண்டு கட்­சி­க­ளும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தோற்­றுப் போன -– மிகக் கடு­மை­யாக அடி­வாங்­கிய – கட்­சி­க­ளாக இருந்­தன.

இழந்­து­போன அல்­லது கிட்­டாது போய்­விட்ட பத­விக் கதி­ரை­களை, முத­ல­மைச்­ச­ரைப் பயன் ப­டுத்தி மீண்­டும் கவ்­விக் கொள்­வதே அந்த இரண்டு கட்­சி­க­ளி­ன­தும் நோக்­கம் என்று தெளி­வா­கக் கூறப்­பட்­டது.

ஆனால் முத­ல­மைச்­சரோ, வெளுத்­தது எல்­லாம் பால் என்­பது போல, ‘‘சீச்சீ, அவர்­கள் எல்­லாம் அப்­ப­டி­யல்ல. பேரவை மக்­கள் இயக்­கம்­தான். அவர்­கள் அர­சி­ய­லில் ஈடு­ப­ட­மாட்­டார்­கள் என்ற உறு­தி­மொழி தந்­த­தால்­தான், நான் அதில் இணைந்து கொண்­டேன் என்று கூறி­னார்.

போதாக்­கு­றைக்­குக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னைச் சந்­தித்து இத­னைத் தெளி­வு­ப­டுத்­தி­னார்.

பேரவை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தன் நோக்­கமே தோற்­றுப்­போன இரண்டு கட்­சி­க­ளுக்­கும் களம் ஏற்­ப­டுத்­திக் கொடுப்­ப­து­தான் என்­பதை அந்த அமைப்­பி­னது கடை­சிக் கூட்­டம் உறு­திப்­ப­டுத்­தி­விட்­டது.

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற தமிழ் மக்­கள் பேர­வை­யின் கூட்­டத்­து­டன், அந்த அமைப்­பின் மக்­கள் இயக்­கம் என்ற வேடம் துயி­லு­ரி­யப் பட்டு விட்­டது. கூட்­ட­மைப்­புக்­கான போட்டி அணி­தான் பேரவை என்­ப­தைக் கிட்­டத்­தட்­டப் பகி­ரங்­க­மாக அறி­வித்­து­விட்­டார்­கள்.

தமிழ் மக்­கள் பேர­வை­யில் அங்­கம் 
வகிக்­கும் ஒரு தரப்பின­ரது அதி­ருப்தி நிலை

இதற்கு மேலாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த பேர­வை­யின் கூட்­டம் பலத்த சல­ச­லப்­புக்கு மத்­தி­யி­லேயே நடை­பெற்­றுள்­ளது.

பேர­வை­யில் இடம்­பெற்­றி­ருந்த மதத்­த­லை­வர்­கள், புளொட் அமைப்பு, வேறு சில சிவில் அமைப்­புக்­கள் கடந்த ஞாயிற்­றுக்கிழமை நடை­பெற்ற கூட்­டத்­தில் பங்­கேற்­க­வில்லை. அவர்­கள் பங்­கேற்­க­வில்லை என்று சொல்­வ­தை­விட, அதைப் புறக்­க­ணித்­தார்­கள்;
அதி­லி­ருந்து வில­கிக் கொண்­டார்­கள் என்று கூறு­வதே பொருத்­தம்.

மக்­கள் இயக்­கம் என்ற வேடத்தை பேரவை தாங்­கி­யி­ருந்­த­தா­லேயே அந்த அமைப்­பில் இணைந்து செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள். ஆனால் கடந்த ஞாயிற்­றுக் கிழ­மைக் கூட்­டம், உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் தொடர்­பா­னது என்று அறி­விக்­கப்­பட்­ட­மை­யி­னால், குறிப்­பிட்ட அந்­தத் தரப்­புக்­கள் வில­கிக் கொண்­டன.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் வழ­மை­போன்று தான் எழு­திக் கொண்டு வந்த உரையை பேர­வை­யில் வாசித்­தார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வெளி­யேறி தனி­வழி செல்ல முயன்ற சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ர­னின் ‘மண்­டை­யில்’ குட்­டுப்­போ­டும் வகை­யில் முத­ல­மைச்­ச­ரின் அந்த உரை அமைந்­தி­ருந்­தது. கிழக்கு மாகா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­து­ வப் ப­டுத்­தும் மற்­றொரு இணைத்­த­லை­வ­ரான வசந்­த­ரா­ஜா­வின் உரை­யும், முத­ல­மைச்­ச­ரின் உரை­யைத் தழு­வி­ய­தாகவே இருந்­தது.

தமிழ் மக்­கள் பேர­வை­யின் தலை­மைத்­து­வங்­கள் மத்­தி­யில் கருக்­கொண்ட கருத்து வேறு­பா­டு­கள்

இணைத்­த­லை­வர்­க­ளின் உரை­கள் முடிந்­த­தும் முதல் ஆளாக எழுந்த சுரேஷ், முத­ல­மைச்­ச­ரின் உரை­யைக் கண்­டித்­தார். முதலமைச்சர் தமது உரை­யில் தெரி­வித்த கருத்­துக்­களை மீளப்­பெ­ற­ வேண்­டும் என்­றார். அவ­ருக்­குப் பக்­கப்­பாட்டு பாடும் வகை­யில் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­ல­மும், அதே கருத்தை வெளி­யிட்­டார்.

நிலமை கையை­மீ­றிப் போவதை உணர்ந்த முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், ‘நைசாக’ அங்­கி­ருந்து கழன்­றார். மல­ச­ல­கூ­டம் செல்­வ­தாக எழுந்து வெளியே வந்த முத­ல­ மைச்­சர், அப்­ப­டியே கூட்­டத்­தி­லி­ ருந்­தும் வெளியே வந்­து­விட்­டார்.

பின்­னர் தனது உத­வி­யா­ள­ரைத்­தான் உள்ளே அனுப்பி தான் தம்­மு­டன் கொண்டு வந்த கோப்­புக்­களை எடுப்­பித்­துக் கொண்­டார். வெளி­யில் வந்த முத­ல­மைச்­சர் வாக­னத்­தில் ஏறி­ய­தும் செய்­தி­யா­ளர்­கள் மொய்த்­துக்­கொண்­ட­னர்.

அவ­ரும் தான் உள்ளே பேசிய பேச்­சின் சாரம்­ச­மாக, பேரவை, தேர்­தல் அர­சி­ய­லில் போட்­டி­யி­டாது என்று சொல்­லி­விட்­டுச் சென்­று­விட்­டார்.

ஆனால் பேர­வைக் கூட்­டம் முடிந்­த­ பின்­னர், காங்­கி­ரஸ் கஜேந்­தி­ர­கு­மா­ரும், ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ர­னும் புதிய அர­சி­யல் கூட்­டுத்­தொ­டர்­பி­லும், அதற்­கான பேர­வை­யின் ஆத­ரவு தொடர்­பி­லும் கருத்­துத் தெரி­வித்­த­னர்.

அன்று வெளி­யி­டப்­பட்ட பேர­வை­யின் ஊடக அறிக்­கை­யும், புதிய அர­சி­யல் கூட்­டுக் கான தமது பின்­புல ஆத­ரவை தெளி­வா­கக் கோடிட்­டுக் காட்­டி­யி­ருந்­தது.

முத­ல­மைச்­சர் வெளி­யே­றிய ­பின்னர் அல்­லது வெளி­யேற்­றப்­பட்ட பின்­னர், உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான வழி­ந­டத்­தல் குழுவை பேரவை நிய­மித்­தி­ருந்­தது. தமது பேரவை சார்­பில் உத­ய­மா­கும் புதிய அர­சி­யல் கூட்­டுக்கு வேட்­பா­ளர்­க­ளைத் தேடிப் பிடித்­துக் கொடுப்­பது தொடக்­கம் தொகு­திப் பங்­கீடு வரைக்­கும் வழி­ந­டத்­தல் குழுவே விட­யங்­க­ளைக் கையா­ளும் என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பேர­வை­யின் கொள்கை நிலைப்­பாடு குறித்த முத­ல­மைச்­ச­ரது கருத்­துக்­க­ளில் சறுக்­கல் போக்கு

கஜேந்­தி­ர­கு­மார் –் – சுரேஷ் ஆகி­யோ­ரது அறி­விப்­பின் பின்­ன­ரும் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனோ, தேர்­தல் அர­சி­ய­லில் பேரவை ஈடு­ப­டாது என்று சொல்­லிக்­கொண்­டி­ருந்­தார். முத­ல­மைச்­ச­ரின் நிலைப்­பாட்­டி­லி­ருந்து பேரவை வில­கல் கோணத்­தில் செல்­வதை பேர­வை­யி­னர் உணர்ந்­த­னர்.

அதே­போன்றதொரு நிலையையே முத­ல­மைச்­ச­ரும் உணர்ந்­தார். இதில் முந்­திக் கொள்ள நினைத்த முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வ­ரன், பேர­வை­யின் தேர்­தல் அர­சி­யல் முடி­வுக்­கும் தனக்­கும் தொடர்­பில்லை என்ற தொனிப்­பட அறிக்கை வெளி­யி­டத் தயா­ரா­னர்.

முத­ல­மைச்­ச­ரின் வீட்­டி­லி­ருந்த கறுப்­பாடு ஒன்­றின் ஊடாக, அந்­தத் தக­வலை அறிந்த பேர­வை­யின் மூத்த தலை­கள் சில, இர­வோடு இர­வாக முத­ல­மைச்­சர் வீட்­டுக்கு ஓடிச்­சென்­றன.

முத­ல­மைச்­சர் அந்த அறிக்­கையை வெளி­யிட்­டால் தமது இருப்பே கேள்­விக்­கு­றி­யா­கி­வி­டும் என்­ப­தால், இர­வோடு இர­வாக முத­ல­மைச்­சரை சமா­தா­னப்
படுத்­தும், – மூளைச் சலவை செய்­யும் வேலையை அவர்­கள் முன்­னெ­டுத்­த­னர்.

நீண்ட – நெடிய போராட்­டத்­தின் பின்­னர், முத­ல­மைச்­சர் அந்த அறிக்கை வெளி­யி­டு­த­லைச் சற்­றுத் தள்­ளி­வைக்கச் சம்­ம­தித்­தார்.

அதே­வேளை, தான் வளர்த்த பேர­வையே தறி­கெட்­டுப் போயுள்­ளது என்று மற்­ற­வர்­கள் தூற்­றக் கூடாது என்­ப­தற்­காக சமா­ளிப்பு அறிக்கை ஒன்றை கேள்வி –பதில் வடி­வத்­தில் முத­ல­மைச்­சர் வெளி­யிட்­டார்.

கூட்­ட­மைப்­புத் தலை­மையை மாத்­தி­ரம் சாடி­னார். கூட்­ட­மைப்­பின் பிளவை நியா­யப்­ப­டுத்­தும் விதத்­தி­லும் அவ­ரது கருத்து அதில் இழை­யோ­டி­யி­ருந்­தது.

முத­ல­மைச்­ச­ரின் இந்த அறிக்­கை­யின் பின்­ன­ரும் அவ­ரைச் சமா­ளித்து தமது தேர்­தல் அர­சி­ய­லுக்கு அவ­ரைப் பச்­சை­கொடி காட்ட வைப்­ப­தற்­கான முயற்­சி­களை பேர­வை­யின் முக்­கிய புள்­ளி­கள் மட்­டு­மல்ல, புதிய தேர்­தல் கூட்­டின் தலை­வ­ரும் முன்­னெ­டுத்­தார்.

ஒரு­வேளை முத­ல­மைச்­சர் இந்­தப் பேச்­சுக்­க­ளில் மசிந்து, தனது பழைய நிலைப்­பாட்­டைத் தூக்கி எறிந்­து­விட்டு தானும் ஒரு சாதா­ரண அர­சி­யல்­வா­தி­தான் என்­பதை நிரூ­பிக்­கக் கூடும்.

எது­எப்­ப­டி­யி­ருந்­த­போ­தி­லும், பேரவை ஆரம்­பிக்­கப்­ப­டும்­போது அதன்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு 23 மாதங்­க­ளில் நிரூ­பிக்­கப்­பட்டு விட்­டது. இனி மக்­கள்­தான் தீர்ப்பு வழங்­க­வேண்­டும்.

 

http://newuthayan.com/story/47692.html

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பால் இதுவரை தமிழினம் அடைந்த நன்மைகள் என்ன....? உதயனால் அதனைப் பட்டியலிட முடியுமா.....?? கூட்டமைப்பால் தமிழினம் அடைந்த நன்மைகளை உதயன் தெரிவிக்குமானால்...! பேரவை பற்றிய உதயனின் பதிவு பொய்யானாலும், அதனை உண்மை என்று ஏற்றுச் செயற்பட மக்கள் முன்வருவார்கள்.  :rolleyes:
 

  • கருத்துக்கள உறவுகள்

 அப்படியே தாங்கள் கனவான்கள், பேரவைதான் ஏமாற்றுக்காரர் என்று படம் பிடித்து தங்கள் சரியும் வாக்குவங்கியை சரிசெய்ய முயற்சிக்கிறார்கள். முதல்வர் பாவம். ஏதோ மக்களுக்கு செய்ய முயற்சிக்கிறார். அவரையும் அரசியல் சகதிக்குள் மூட பகீரதப் பிரயத்தனம் இரு பக்கமும் நடக்கிறது. இந்தக் கட்டுரையிலிருந்து  ஒன்றுமட்டும் விளங்குகிறது முதல்வர் இன்றி தமது வாக்குவங்கி நிறையாது ஆகவே அவரை தமக்கு சார்பாக இழுக்க அல்லது அவரின் தமக்கு எதிரான கருத்தை மக்களிடம் இருந்து தவிர்த்து அவரை தேர்தல் காலங்களில் ஒதுங்கி இருக்க வைக்கவும், அதேவேளை அவரும் நல்லவரல்ல என்பது போலவும் இந்தக்கட்டுரை அமைந்துள்ளது. பிரிவுக்கும், தமிழ் மக்களது வாக்குகள் சிதைவடைக்கும்  செயலற்ற, தான்தோன்றித்தனமான த. தே. கூட்டமைப்பின் செயற்பாடுகளே காரணம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேடம் கலைந்ததிற்கு ஆப்பால்....சரிபிழைகளுக்கு அப்பால்.....
2009க்கு பின் சம்பந்தன் சுமந்திரன் சாதித்தது என்ன?
யாராக இருந்தாலும் தமிழர்களுக்குள் பலமான எதிர்க்கட்சி ஒன்று தேவை. இது காலத்தின் கட்டாயம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

கூட்டமைப்பால் இதுவரை தமிழினம் அடைந்த நன்மைகள் என்ன....? உதயனால் அதனைப் பட்டியலிட முடியுமா.....?? கூட்டமைப்பால் தமிழினம் அடைந்த நன்மைகளை உதயன் தெரிவிக்குமானால்...! பேரவை பற்றிய உதயனின் பதிவு பொய்யானாலும், அதனை உண்மை என்று ஏற்றுச் செயற்பட மக்கள் முன்வருவார்கள்.  :rolleyes:

அழகான... கருத்து, பாஞ்ச்  அண்ணை.  :)

இப்படியான விடயத்தை.... தாண்டி, சம் / சும்  கோஸ்டி,
வாக்கு  பிச்சை எடுத்து...  அடி வாங்கவும், தயாராக இருக்க வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

வேடம் கலைந்ததிற்கு ஆப்பால்....சரிபிழைகளுக்கு அப்பால்.....
2009க்கு பின் சம்பந்தன் சுமந்திரன் சாதித்தது என்ன?
யாராக இருந்தாலும் தமிழர்களுக்குள் பலமான எதிர்க்கட்சி ஒன்று தேவை. இது காலத்தின் கட்டாயம் என்பது என் கருத்து.

அது சாத்தியமா? தமிழரின்  வாக்குகளை சிதறடித்து சிங்களத்தில் மீண்டும் தொங்கிக் கொண்டு நிற்கப்போகிறார்கள். சிங்களம் வெகு காலமாய் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ஆசை நிறைவேறப்போகுது. இவர்கள் சாதிக்கவில்லை ஒதுங்கி மற்றவர்களுக்கு இடம் கொடுக்கலாம். கொடுப்பார்களா? கதிரையை அணங்கு மாதிரி கட்டிப்பிடித்துக்கொண்டு இருப்பவர்கள் லேசில் களர மாட்டார்கள்.  தமிழர்களுக்கும் விடிவு விலகிக்கொண்டே போகுது. 

  • கருத்துக்கள உறவுகள்

உதயன் கூட்டமைப்பின் பத்திரிகை இப்படித் தான் எழுதும்.
 
இந்தியாவின் கதையைக் கேட்டு பேரவையில் உள்ளவர்களை வெளியே அனுப்பும் போது இந்த ஒப்பாரி எல்லாம் எங்கே போச்சு?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

வேடம் கலைந்ததிற்கு ஆப்பால்....சரிபிழைகளுக்கு அப்பால்.....
2009க்கு பின் சம்பந்தன் சுமந்திரன் சாதித்தது என்ன?
யாராக இருந்தாலும் தமிழர்களுக்குள் பலமான எதிர்க்கட்சி ஒன்று தேவை. இது காலத்தின் கட்டாயம் என்பது என் கருத்து.

தமிழர்களுக்குள் எதிர்க்கட்சி ஒன்று தேவையில்லை. இயற்கையே தமிழினத்திற்குள் அதனை வழங்கியுள்ளதைக் காலங்கள் நிரூபித்து வருகிறது. இதனை மாற்றித் தமிழர்களை ஒன்றிணைக்க வந்த தலைவனையும் கூறுபோட்டுக் காடாத்திவிட்டார்கள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.