Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்மட்டியால் அடித்த விக்னேஸ்வரன், அடாத்தாக பேசிய சுமந்திரன் – ஜான்சிராணி கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்மட்டியால் அடித்த விக்னேஸ்வரன், அடாத்தாக பேசிய சுமந்திரன் - ஜான்சிராணி கண்டனம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:- காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட்ட இழப்புகள், பதற்றங்கள் ஆகியவற்றில் இருந்து அப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் உறவுகள் மீளவே இல்லை என்பதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை.

இதே போல வவுனியாவில் பள்ளிவாசலுக்கு சொந்தமான நான்கு கடைகள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டன. வட மாகாண முதலமைச்சரும், ஓய்வு நிலை நீதியரசருமான சீ. வி. விக்னேஸ்வரன் ஐயா மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் என்று கருத்து வெளியிட்டு இருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தேறி உள்ளன. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்துகள் ஒவ்வொரு முஸ்லிம் நபரின் இதயத்திலும் சம்மட்டியால் அடித்த வேதனையை ஏற்படுத்தி உள்ளன. இதே போல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் கல்முனையை நான்கு சபைகளை பிரிப்பது தொடர்பாக தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான சபையை கேட்கின்ற தார்மீக உரிமை கிடையாது என்று அடாத்தாக பேசி உள்ளார்.

எவை எப்படி இருப்பினும் வன்செயல்கள், வன்முறைகளை தூண்டுகின்ற பேச்சுகள் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் நிதானம் இழக்காது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்பதில் நம்பிக்கை உள்ளது. தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளர் என்கிற வகையில் நான் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஏனென்றால் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக கூடி கலந்தாலோசித்து மீண்டும் சந்தித்து பேச தீர்மானித்து உள்ள நிலையில் இவரின் கருத்து வெளியில் வந்து உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பாக இருக்கட்டும் அல்லது பிரிப்பாக இருக்கட்டும் இவரின் கருத்துகள் தமிழ் – முஸ்லிம் மக்களை இணைக்க விடாமல் நிரந்தரமாக பிரிப்பதாகவே அமைந்து விட்டன. அத்துடன் விரோதத்தையும், குரோதத்தையும் தூண்டுகின்ற வார்த்தைகளாக வெளிவந்து விட்டன. என்னை பொறுத்த வரை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் ஆளுகைக்கு உட்பட்ட வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு வெட்கக்கேடாகவும், அவமான சின்னமாகவும் இப்போது கருத நேர்ந்து உள்ளது

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=187489 .

  • கருத்துக்கள உறவுகள்

சவுதிக்குப் போங்க அங்கு நிறைய உழைக்கலாம்....உங்க திறைமஈகு...பல வீடுகள்  திறப்பினம்...அடே இப்ப நானா போய் ...நானியளும் கதைக்க வந்திட்டினம்...எல்லாம் இந்த அக்குறண  செய்யிற வேலை....ஞானசாரதேரரிடம் காட்டு பாக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

 வன்செயல்கள், வன்முறைகளை தூண்டுகின்ற பேச்சுகள் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் நிதானம் இழக்காது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும்

இப்ப விளங்குகிற தா ஜான்சிராணீ...அய்யா ஏன் அப்படிப் பேசினவர் என்று.....உன்கடை இனத்தின் குணமே இதுதான்....உலகில் நடப்பது இது....காத்தான்குடி இனம் இதுக்கு விதி விலக்கல்ல..

நைஜீரியா மசூதிக்குள் மனித வெடி குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் பலி! 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

சம்மட்டியால் அடித்த விக்னேஸ்வரன், அடாத்தாக பேசிய சுமந்திரன் - ஜான்சிராணி கண்டனம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டிய சந்தர்ப்பம் இதுவாகும் என்று தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளரும், மகளிர் பொறுப்பாளருமாகிய ஜான்சிராணி சலீம் வெளியிட்டு உள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்து உள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயும், உள்ளேயும் முஸ்லிம்கள் மீது வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டு இருப்பது தொடர்பாக இவர் விடுத்து உள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார். இவரின் அறிக்கை வருமாறு:- காலி ஹிந்தோட்டையில் முஸ்லிம்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்குள் கடந்த சனிக்கிழமை இரவு காடையர்கள் புகுந்து வீடுகளுக்கு தீ வைத்ததுடன் வாகனங்களுக்கும் தீ மூட்டி சென்று உள்ளனர். இதனால் ஏற்பட்ட இழப்புகள், பதற்றங்கள் ஆகியவற்றில் இருந்து அப்பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் உறவுகள் மீளவே இல்லை என்பதுடன் அவர்களின் இயல்பு வாழ்க்கை இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை.

இதே போல வவுனியாவில் பள்ளிவாசலுக்கு சொந்தமான நான்கு கடைகள் இன்று அதிகாலை தீயிட்டு கொளுத்தப்பட்டன. வட மாகாண முதலமைச்சரும், ஓய்வு நிலை நீதியரசருமான சீ. வி. விக்னேஸ்வரன் ஐயா மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்களே வடக்கு, கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றனர் என்று கருத்து வெளியிட்டு இருந்த நிலையில் இத்தாக்குதல்கள் நடந்தேறி உள்ளன. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்துகள் ஒவ்வொரு முஸ்லிம் நபரின் இதயத்திலும் சம்மட்டியால் அடித்த வேதனையை ஏற்படுத்தி உள்ளன. இதே போல மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் கல்முனையை நான்கு சபைகளை பிரிப்பது தொடர்பாக தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான சபையை கேட்கின்ற தார்மீக உரிமை கிடையாது என்று அடாத்தாக பேசி உள்ளார்.

எவை எப்படி இருப்பினும் வன்செயல்கள், வன்முறைகளை தூண்டுகின்ற பேச்சுகள் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கு வெளியேயும், உள்ளேயும் வாழ்கின்ற முஸ்லிம்கள் நிதானம் இழக்காது பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். சட்டம் அதன் கடமையை செய்யும் என்பதில் நம்பிக்கை உள்ளது. தேசிய காங்கிரஸின் வட மாகாண அமைப்பாளர் என்கிற வகையில் நான் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். ஏனென்றால் வரலாற்றில் முதல் தடவையாக தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை தொடர்பாக கூடி கலந்தாலோசித்து மீண்டும் சந்தித்து பேச தீர்மானித்து உள்ள நிலையில் இவரின் கருத்து வெளியில் வந்து உள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பாக இருக்கட்டும் அல்லது பிரிப்பாக இருக்கட்டும் இவரின் கருத்துகள் தமிழ் – முஸ்லிம் மக்களை இணைக்க விடாமல் நிரந்தரமாக பிரிப்பதாகவே அமைந்து விட்டன. அத்துடன் விரோதத்தையும், குரோதத்தையும் தூண்டுகின்ற வார்த்தைகளாக வெளிவந்து விட்டன. என்னை பொறுத்த வரை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவின் ஆளுகைக்கு உட்பட்ட வட மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை ஒரு வெட்கக்கேடாகவும், அவமான சின்னமாகவும் இப்போது கருத நேர்ந்து உள்ளது

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=187489 .

 

வடக்கு கிழக்கு எமது பூர்வீகம் 
இணைப்பது பிரிப்பது எமது விருப்பு வெறுப்பு சார்ந்தது 

இதில் வடக்கு கிழக்கில்  இரத்த ஆறு ஓடும் என்பவன் 
தானகவே  ஒத்துக்கொள்கிறான் 
அவன் அந்த பிரதேசம் சார்ந்த ஆள் இல்லை என்று 

இதில் நீங்கள் ஏன் உங்களை சம்மட்டியால் அடிக்கிறீர்கள் ?
சம்மட்டியால் அடிப்பதை நிறுத்தி ...
நுளம்பு இலையான் அடிப்பதில் ஈடுபட்டால் 
உங்கள் வசிப்பிடங்கள் கொஞ்சம் சுத்தம் ஆகும் 
என்பது அடியேனின் வேண்டுகோள்! 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

சவுதிக்குப் போங்க அங்கு நிறைய உழைக்கலாம்....உங்க திறைமஈகு...பல வீடுகள்  திறப்பினம்...அடே இப்ப நானா போய் ...நானியளும் கதைக்க வந்திட்டினம்...எல்லாம் இந்த அக்குறண  செய்யிற வேலை....ஞானசாரதேரரிடம் காட்டு பாக்கலாம்...

சிங்களவர் தமிழரை தமிழ்நாட்டுக்கு போங்கள் என்று சொல்வதும் இதுவும் ஒரே விதமானதே.

உண்மையில் இலங்கையில் எல்லா இனங்களிலும் இனத்துவேஷம் உள்ளவர் நிறையவே உள்ளனர்.

4 hours ago, Maruthankerny said:

வடக்கு கிழக்கு எமது பூர்வீகம் 
இணைப்பது பிரிப்பது எமது விருப்பு வெறுப்பு சார்ந்தது 

இதில் வடக்கு கிழக்கில்  இரத்த ஆறு ஓடும் என்பவன் 
தானகவே  ஒத்துக்கொள்கிறான் 
அவன் அந்த பிரதேசம் சார்ந்த ஆள் இல்லை என்று

வடக்கு கிழக்கு எமது பூர்வீகம் மட்டுமல்ல அங்கு பல தலைமுறைகளாக வாழும் அனைவரதும் பூர்வீகம். இதனை நாம் மறுப்பது சிங்களவரில் இனத்துவேசம் உள்ளவர்கள் இலங்கை எமது பூர்வீகம் என்பதை மறுப்பது போன்றதே.

வடக்கு கிழக்கில்  இரத்த ஆறு ஓடும் என்று முன்னர் மறைந்த விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் இலங்கை படைகள் போரை மீள ஆரம்பிப்பது பற்றிய ஊடக செவ்வி ஒன்றில் சொல்லி இருந்தார்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

 சோனிக்கு ஒன்று என்றாள்  மாரியில் காளான்கள்  முளைப்பதுபோல சனம் வந்திடும்.....மற்றவன் நம்ம இனத்தை மாடுபோல மிதிச்சாலும் ....கிடந்து அசைபோடும்.......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.