Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்….

Featured Replies

அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்….

 Mavai.jpg?resize=800%2C621
” ஜனநாயக போராளிகள் கட்சியை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில், அம்பாறை மாவட்ட , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான, தேர்தல் தெளிவூட்டும் கலந்துரையாடலில் இன்று இன்று கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

தமிழர்களின் ஜனநாயக போராட்ட வரலாற்றில், மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என குறிப்பிட்ட அவர்,
இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டே, கூட்டமைப்பு இம்முறை முன்னாள் போராளிகளையும் தேர்தலில் களமிறக்கியிருப்பதாவும் தெரிவித்தார்.

2009 மே.18 அன்று, ஆயுத போராட்டமானது ஒரு எல்லையை அடைந்தது அதன்பின், தமிழ் மக்களுடைய பேரம் பேசும் பலம் வழுவிழந்து போனது. எனினும் எமது மக்கள் தங்களது பலத்தினை தேர்தல் காலங்களில் வாக்குப்பலம் மூலம் நிருபித்து, வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

அதேபோல் ஆயுதப்போராட்டம் முடிவுற்றதன் பின், நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதனை தமிழ் மக்கள் நிருபிக்க தவறவில்லை.

அவற்றின் பயனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என சம்பந்தன் தலைமையிலான குழுவினை அழைத்த அமெரிக்கா, தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டது எனவும் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/58872/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

அதேபோல் ஆயுதப்போராட்டம் முடிவுற்றதன் பின், நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதனை தமிழ் மக்கள் நிருபிக்க தவறவில்லை.

அப்படி ஏக பிரதிநிதிகள் என்று போய் எண்ணத்தை தமிழ் மக்களுக்கு வாங்கி தந்தீங்க ? அவ்வளவு பயனையும் உங்கள் சுயநல அரசியலுக்கு உபயோகித்து எல்லாத்தையும் கெடுத்து குட்டிசுவர் ஆக்கி விட்ட பெருமை  எங்கள் பிரச்சனையை சொறிலங்கா பார்லிமென்ட் டில் கதைக்க கூட உங்களால் முடியவில்லை இந்த திறனில் அமெரிக்க அதிகாரிகளுக்கு எண்ணத்தை சொல்லி இருப்பீர்கள் ?

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகளின் பலத்தை இழந்துவிட்டோம் - இருப்பது வாக்குப்பலமே!

 

விடுதலைப்புலிகளின் பலத்தை இழந்துவிட்டோம் - இருப்பது வாக்குப்பலமே!

தமிழர்களுடைய ஜனநாயக போராட்ட வரலாற்றில் மிகவும் உச்சமான பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள். அந்த பலத்தின் ஒரு பகுதியினை தற்போது இழந்து நிற்கின்றோம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்களை தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது இன்று(01) காலை நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்தாா்.

இவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்......

இன்றைய காலகட்டத்தில் மூன்று கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு பலமான ஜனநாயகக்கட்சியாக மக்கள் முன் தேர்தலில் குதித்திருக்கின்றது.

இதனை அனைத்து தமிழ் மக்களும் நன்குணர்ந்து செயற்படவேண்டும்.த.தே.கூட்டமைப்பானது ஜனநாயக மக்கள் கட்சியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளுராட்சி தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது.

இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கூட்டமைப்பானது இம்முறை முன்னால் போராளிகளையும் தேர்தல் களத்தில் களமிறக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருந்தபோதும் த.தே.கூட்டமைப்பிற்கு எதிராக பல விதமான விமர்சனங்களை மாற்றுக்கட்சியினர் சுமத்துவதனை ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. த.தே.கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக எமது மக்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவரிடமும் இருக்கின்றது.

எமது மக்கள் ஆயுத போராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களது உடமைகளும் அழிந்து நாசமாகின அவை அனைத்தையும் மக்கள் இழந்தபோதும் அவர்களது உரிமையை தங்களிடம் உள்ள வாக்குப்பலம் மூலம் நிருபித்திருந்தார்கள் என்று மேலும் தெரிவித்தாா்.

இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா, மற்றும் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உட்பட இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கவிருக்கும் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/mavai-senathirasha-speach-1

  • கருத்துக்கள உறவுகள்

தேர்த்தல் நெருங்க வழமையான திரை கதை வசனங்களுடன் (வீர) வெளிக்கிட்டு விடுவார்கள்.

9 hours ago, நவீனன் said:

அமெரிக்கா TNAஐ பேச்சுக்கு அழைத்தமைக்கு காரணம், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் நாமே, என மக்கள் நிரூபித்துள்ளனர்….   மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

அமெரிக்கா அழைத்தது TNA ஐ தான். தமிழரசுக்கட்சியை அல்ல.

மாவை-சுமந்திரன்-சம்பந்தன் கும்பலின் தமிழரசுக்கட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டியகட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நவீனன் said:

சம்பந்தன் தலைமையிலான குழுவினை அழைத்த அமெரிக்கா, தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டது

 அவர்கள் கேட்டறிவதற்கு அமெரிக்கா போனீர்களாக்கும். இந்த நாட்டில அமெரிக்க  தூதுவர் ஒருவர் இருக்கிறார் எண்டதை அமெரிக்காவும் மறந்து உங்களை கூப்பிட, நீங்களும் மறந்து ஓடிப் போனீங்களாக்கும். ஜெனீவா வராதேங்கோ நாங்களே உங்களுக்காக பேசுறோம் எண்டவை,  பிரச்னை என்ன என்று தெரியாமலே சொன்னவையாக்கும். புத்தி இருந்தால் ஒரு போஸ்ற் காட்டில விபரமாய் எழுதி போட்டிருக்கலாம் . இதை சொல்லுறதுக்கு வாக்குப் போட்டு அனுப்பவேணுமாக்கும். கேட்டு அறிஞ்ச்சு ஏதாவது நிலைமை மாறி இருக்கா? கேட்டு அறிஞ்ச்சதை உண்மையோ என்று விசாரிக்க    இன்னொருக்கா கூப்பிடுவினம் அதுக்காகத்தான் இந்தமுறை நாங்கள் வாக்குப் போடவேணும் எண்டு ஐயா கேக்கிறார்.  . போறதுதான் போறீங்கள் எப்ப முதலமைச்சரை பதவி இறக்கிறது எண்டும் கேட்டுவிட்டு வாங்கோ.

 

6 hours ago, நவீனன் said:

இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு எமது கூட்டமைப்பானது இம்முறை முன்னால் போராளிகளையும் தேர்தல் களத்தில் களமிறக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை இதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவேயில்லை. உங்களுக்கும் வாழ்வா, சாவாப் போராட்டம். இறுதி முயற்சியாய் செய்து பாருங்கோ. ஒன்று மட்டும் தெரியுது. உங்கட கழுத்துக்கு  கயிறு இறுகுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.