Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஏமாந்த இந்தியா...!

Featured Replies

இலங்கையில் ஏமாந்த இந்தியா...!

p1-15bbbb2cefa1757f3a2d6a75ba5547e0fe5e8168.jpg

 

இலங்கை, சீனா, - இந்­தியா என்ற முக்­கோண உற­வுகள் விட­யத்தில், இந்­தியா ஏமாந்து போயி­ருக்­கி­றதோ என்று தோன்­று­கி­றது.

‘உலகம் மாறி­விட்­டது, அல்­லது மாறிக் கொண்­டி­ருக்­கி­றது, இந்­தியா இன்­னமும் பழைய நினைப்பில் தான் இருக்­கி­றது’ என்ற தொனிப்­பட, இந்­தி­யாவின் முன்னாள் வெளி­வி­வ­காரச் செய­லர்­க­ளான, இரண்டு மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் வெளி­யிட்ட கருத்­துக்­களே இந்த சந்­தேகம் எழு­வ­தற்குக் காரணம்.

2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி புது­டில்­லியில் வெளி­நாட்டுச் செய்­தி­யாளர் சங்­கத்தில் நடந்த கலந்­து­ரை­யா­டலின் போது, இந்­தி­யாவின் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரா­கவும், வெளி­வி­வ­காரச் செய­ல­ரா­கவும் இருந்து ஓய்­வு­பெற்ற, சிவ்­சங்கர் மேனன் சில கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார்.

அதில் ஒன்று தான், “பத்­தாண்­டு­க­ளுக்கு முந்­திய பாதையில் தான் இந்­தியா இன்­னமும் பயணம் செய்து கொண்­டி­ருக்­கி­றது, ஆனால் உலகம் நிறை­யவே மாறி விட்­டது. வித்­தி­யா­ச­மாக செய்து கொண்­டி­ருக்­கி­றது” என்ற கருத்து.

கடந்த ஜன­வரி 29ஆம் திகதி ஜெய்ப்பூர் இலக்­கிய விழாவில் உரை­யாற்­றிய, இந்­தி­யாவின் முன்னாள் வெளி­வி­வ­காரச் செயலர் சியாம் சரணும், இதே­போன்ற கருத்தைத் தான் கூறி­யி­ருந்தார்.

“உலகம் மாறி விட்­டது. இது எனது கொல்­லைப்­புறம், இங்கு நான் மட்டும் தான் ஆட்சி செய்வேன் என்று நீண்­ட­கா­லத்­துக்கு கூறிக் கொண்­டி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை.” என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இரண்டு பேரி­னது கருத்­துக்­களும் இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையைப் பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தன.

அதுவும், அயல்­நா­டு­களைக் கையா­ளு­வது மற்றும் அயல்­நா­டு­களில் சீனாவின் தலை­யீ­டுகள் பற்­றிய விட­யங்­களில் தான் இவர்கள் இரு­வரும் இந்தக் கருத்தைக் கூற வந்­துள்­ளனர்.

சியாம் சரண், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரை இந்­திய வெளி­வி­வ­காரச் செய­ல­ராகப் பணி­யாற்­றி­யவர். இவ­ருக்குப் பின்­னரே இந்­திய வெளி­வி­வ­காரச் செய­ல­ராக சிவ்­சங்கர் மேனன் நிய­மிக்­கப்­பட்டார். எனினும், சிவ்­சங்கர் மேனன், பின்னர் தேசிய பாது­காப்பு ஆலோ­ச­க­ரா­கவும் 2014 வரை பணி­யாற்­றி­யி­ருந்தார்.

இவர்கள் இரு­வரும், இரா­ஜ­தந்­திரப் பத­வி­களை விட்டு ஓய்­வு­பெற்று விட்­டாலும், இவர்கள் கூற வந்­தி­ருக்­கின்ற விடயம், கடந்த காலத் தவ­றுகள் பற்­றி­ய­தாக இருக்­கி­றது.

“இலங்கை விட­யத்தில் இந்­தியா தவ­றி­ழைத்து விட்­டது. எமது அயல் நாடு­களைக் கையாளும் முறையில் நாம் மாற்­றங்­களைச் செய்ய வேண்­டிய தேவை உள்­ளது. உங்­களின் அயல் நாடுகள், உங்­க­ளுக்கு மட்­டுமே அயல் நாடுகள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர்­கள் ஏனை­ய­வர்­க­ளுக்கும் கூட அயல்­நா­டுகள் தான். இது ஒரு பூகோள உலகம்.” என்று சிவ்­சங்கர் மேனன் கடந்த ஆண்டு கூறி­யி­ருந்தார்.

இப்­போது, அதையே வேறொரு முறையில் கூறி­யி­ருக்­கிறார் சியாம் சரண்.

“இலங்­கை­யிலும், நேபா­ளத்­திலும் சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து வரும் விட­யத்தில் ஒன்றைக் கவ­னத்தில் கொள்ள வேண்டும். உலகம் மாறி விட்­டது. இது எனது கொல்­லைப்­புறம். இங்கு நான் மட்டும் தான் ஆட்சி செய்வேன் என்று நீண்­ட­கா­லத்­துக்கு கூறிக் கொண்­டி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை” என்­பதே அவ­ரது கருத்து.

இலங்கை உள்­ளிட்ட அயல் நாடு­களைக் கையாளும் விட­யத்தில், இந்­தியா தவறு செய்­தி­ருக்­கி­றது. இன்­னமும் அதே கொள்­கையில் தான் செயற்­ப­டு­கி­றது என்­பதை இந்த இரண்டு முன்னாள் இந்­திய இரா­ஜ­தந்­தி­ரி­களும் மிகவும் தாம­த­மாக உணர்ந்து கொண்­டி­ருக்­கி­றார்கள் போலத் தோன்­று­கி­றது.

பத­வியில் இருக்கும் வரை இவர்­களும் அதே அச்சில் தான் சுழன்று கொண்­டி­ருந்­த­வர்கள். இப்­போது இவர்­களின் கருத்­துக்­களில் மாற்­றங்கள் தெரிய ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன . அதிலும் சியாம் சரணின் நிலைப்­பா­டு­களில் மிகப்­பெ­ரிய மாறு­தல்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. 2011ஆம் ஆண்டு நவம்பர் மாத நடுப்­ப­கு­தியில் இந்­தி­யாவின் முன்னாள் வெளி­வி­வ­காரச் செயலர் சியாம் சரண், இலங்­கையில் பயணம் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்தார்.

 அப்­போது அவர் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம், கொழும்பு உள்­ளிட்ட பல இடங்­க­ளிலும், இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்கை மற்றும் இலங்­கை­யு­ட­னான உற­வுகள் தொடர்­பாக உரை­களை நிகழ்த்­தி­யி­ருந்தார். 

இந்தக் கருத்­த­ரங்­கு­களின் போது, அவர் சீன -– இலங்கை உற­வுகள் தொடர்­பான விவ­கா­ரத்­துக்கே முக்­கி­யத்­துவம் அளித்­தி­ருந்தார்.

“இலங்­கையில் சீனாவின் தலை­யீ­டுகள் குறித்து இந்­தியா கவ­லைப்­ப­ட­வில்லை. அம்­பாந்­தோட்­டையில் சீனா அமைக்கும் துறை­முகம் குறித்து இந்­தி­யா­வுக்கு கவ­லை­யில்லை. சீனாவின் முத­லீ­டு­க­ளுக்குப் போட்­டி­யாக இலங்­கையில் இந்­தியா முத­லீ­டு­களை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை. சீனா­வுக்குப் போட்­டி­யாக இந்­தியா எதையும் செய்­ய­வில்லை” என்று வலி­யு­றுத்தும் வகையில் அவர் உரை­யாற்­றி­யி­ருந்தார்.

ஆனால், அப்­போது வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு நேர்­மா­றான கருத்­து­க­ளையே சியாம் சரண் இப்­போது ஜெய்ப்பூர் இலக்­கிய விழாவில் வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதா­வது, “அண்டை நாடு­க­ளுக்குள் சீனாவின் ஊடு­ரு­வல்கள் குறித்து இந்­தியா கரி­சனை கொள்ள வேண்டும். சீனா மிகப்­பெரும் சக்­தி­யாக எழுந்­துள்­ளதை நாம் ஒப்­புக்­கொள்ள வேண்டும்.

நேபா­ளத்தில் சீனாவின் தலை­யீ­டுகள் பெரி­ய­ளவில் உள்­ளன. உள்­நாட்டு அர­சி­ய­லிலும் சீனாவின் தலை­யீ­டுகள் ஏற்­படத் தொடங்­கி­யுள்­ளன. அது­போ­லவே, அம்­பாந்­தோட்­டை­யிலும் நடக்­கி­றது. நாங்கள் விரும்­பா­விட்­டாலும், பல ஆண்­டு­க­ளாக அது உண்­மை­யாகி வரு­கி­றது.

இலங்­கை­யிலும், நேபா­ளத்­திலும் சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து வரும் விட­யத்தில் ஒன்றைக் கவ­னத்தில் கொள்ள வேண்டும். உலகம் மாறி விட்­டது. இது எனது கொல்­லைப்­புறம், இங்கு நான் மட்டும் தான் ஆட்சி செய்வேன் என்று நீண்­ட­கா­லத்­துக்கு கூறிக் கொண்­டி­ருப்­பது சாத்­தி­ய­மில்லை. அதனால் சீனா­வுடன் போட்­டி­யிட வேண்டும்.

உங்கள் அயல் நாடு­க­ளுக்கு சிறந்த வாய்ப்­பு­களை வழங்­கு­வதன் மூலம், ஏன் உங்­களின் தலை­யீ­டு­களை அதி­க­ரிக்க முடி­யாது? இந்­தி­யா­வுக்கு அதற்­கான ஆற்­றல்கள் உள்­ளன.

எனவே, வாய்ப்­பு­களை நீங்கள் உரு­வாக்க வேண்டும். அதற்­கான முடி­வு­களை இன்றே எடுக்க வேண்டும்” என்றும் அவர் இப்­போது உசுப்­பேற்றும் பாணியில் உரை­யாற்­றி­யி­ருக்­கிறார்.

ஆறு ஆண்­டு­க­ளுக்கு முன்னர், இந்­தி­யாவின் ஒரு மூத்த இரா­ஜ­தந்­தி­ரி­யான சியாம் சரண், யாழ்ப்­பா­ணத்தில் வைத்து, சீனாவின் தலை­யீ­டு­க­ளை­யிட்டு அலட்­சி­ய­மான கருத்­துக்­க­ளையே கூறி விட்டுப் போயி­ருந்தார். அவரே இன்று, சீனாவின் தலை­யீட்டை ஆபத்­தா­ன­தாக கூறு­கிறார்.

அது­மாத்­தி­ர­மன்றி, சீனா­வுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்­தியா முத­லீடு செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை என்று கூறிய அவரே, இப்­போது, போட்டி போட வேண்டும் என்­கிறார்.

அயல் நாடு­களில் வாய்ப்­பு­களை உரு­வாக்கி, தலை­யீ­டு­களை மேற்­கொள்ள வேண்டும் என்றும் ஆலோ­சனை கூறி­யி­ருக்­கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் சீனாவின் தலை­யீ­டுகள் இலங்­கையில் அதி­க­ரித்த போது, அது­பற்றி இந்­திய இரா­ஜ­தந்­தி­ரிகள் அதி­க­மாகப் பேச­வில்லை. இந்­தி­யாவின் பாது­காப்பு வல்­லு­னர்­களும் கூட அதனைப் பெரிய விட­ய­மாக எடுத்துக் கொள்­ள­வில்லை.

இந்­திய இரா­ணுவத் தள­ப­தி­களும், கடற்­படைத் தள­ப­தி­களும் கூட சீனாவின் தலை­யீடு இந்­தி­யா­வுக்கு அச்­சு­றுத்­த­லா­னது அல்ல என்று தான் கூறி வந்­தி­ருந்­தார்கள். மிகச் சமீ­பத்தில் தான் எல்லாத் தரப்­பி­ன­ருமே சீனாவின் தலை­யீட்டின் ஆபத்தை உணரத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இந்­தி­யாவின் மூத்த இரா­ஜ­தந்­தி­ரிகள் எவ்­வாறு சீனாவின் எண்­ணப்­போக்கை அவ்­வ­ளவு இல­கு­வாக எடுத்துக் கொண்­டார்கள், கணிக்கத் தவ­றி­னார்கள் என்­பது தான் ஆச்­ச­ரி­ய­மா­னது.

சிவ்­சங்கர் மேனனும், சியாம் சரணும், 2011ஆம் ஆண்டில் சீனாவை பெரி­ய­தொரு அச்­சு­றுத்­த­லாகப் பார்த்­தி­ருக்­க­வில்லை. அதனால் தான், இப்­போது அவர்கள், உலகம் மாறி விட்­டது, இந்­தி­யாவும் கடந்­த­காலப் பாதையை விட்டு மாற வேண்டும் என்று கூறத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தியா நிறை­யவே ஏமாந்து போயி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ காலத்தில் விடு­தலைப் புலி­களை அழிக்க வேண்டும் என்ற இந்­தி­யாவின் எண்­ணத்தை, இலங்கை அரசு தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்­டது.

அதன் விளை­வாக, விடு­தலைப் புலிகள் அழிக்­கப்­பட்­டார்கள், அதே­வேளை, இலங்கை மீதான இந்­தி­யா­வி­னது பிடியும் தளர்ந்து சீனாவின் செல்வாக்கு ஓங்கியது.

விடுதலைப் புலிகள் என்ற கடிவாளத்தை வைத்து இலங்கையை தனது கைக்குள் வைத்திருந்த இந்தியாவுக்கு, அந்தக் கடிவாளம் இல்லாமல் போனது தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது..

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால், தமிழ்த் தேசிய தனிநாட்டுச் சிந்தாந்தம் முடிவுக்கு வந்து விடும் என்று கருதியது இந்தியா. ஆனால் சட்டிக்குள் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாக, சீனாவின் தலையீடுகளுக்கு இந்தியா பலிக்கடாவாகியிருக்கிறது.

இந்தநிலைக்கு தீர்க்கதரிசனமற்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையும், அதனை நடைமுறைப்படுத்திய முன்னைய இராஜதந்திரிகளும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சியாம் சரண், சிவ்சங்கர் மேனன் போன்றவர்களின் அண்மைக்கால கருத்துகளில் இருந்தே அதனை உணர்ந்து கொள்ள முடிகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-02-04#page-1

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் மட்டுமல்ல, கல்கத்தாவில் நடந்த இன்னுமோர் மகாநாட்டில் இதே கருத்தை முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் தெரிவித்துள்ளார்.

http://www.thesundayleader.lk/2018/02/02/china-accused-of-engaging-in-economic-blackmail-in-sri-lanka/

 

  • தொடங்கியவர்
4 minutes ago, Nathamuni said:

இவர்கள் மட்டுமல்ல, கல்கத்தாவில் நடந்த இன்னுமோர் மகாநாட்டில் இதே கருத்தை முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் தெரிவித்துள்ளார்.

http://www.thesundayleader.lk/2018/02/02/china-accused-of-engaging-in-economic-blackmail-in-sri-lanka/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தானே எமது தீரக்கதரிசி தலைவர் பிரபாகரன் 

தமிழீழம் ஒன்றே இந்தியாவுக்கு என்றும் பாதுகாப்பு என்று அடித்து சொன்னார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிந்தியா உயிரை குடுத்தாலும்........ சிறிலங்கா எண்ட முத்து சீனாவுக்குத்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.