Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல் முடிவின் எதிரொலி! பதவி விலகுகிறார் ரணில்?

Featured Replies

தேர்தல் முடிவின் எதிரொலி! பதவி விலகுகிறார் ரணில்?

1

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவதாக, முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ராகீத ராஜபக்ச முகநூலில் பதிவிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த போது இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

உத்தியோகப்பற்றற்ற வகையிலான தகவல் கிடைத்துள்ளது என பிரதமர் பதவி விலகுகின்றார் என ராகீத ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்தக் கருத்தால் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/politics/01/173997?ref=home-latest

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் ஐயா போறதுதான் போறீங்க அப்படியே எங்கடை பக்கமும் சுமத்திரன் என்பவரையும் கூட்டிக்கொண்டு போங்க அடம் பிடிக்கும் இழுத்துக்கொண்டு போங்க .

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

ரணில் ஐயா போறதுதான் போறீங்க அப்படியே எங்கடை பக்கமும் சுமத்திரன் என்பவரையும் கூட்டிக்கொண்டு போங்க அடம் பிடிக்கும் இழுத்துக்கொண்டு போங்க .

அப்பிடியே கோத்தபாயவையும் ஜனாதிபதியாக்கி விட்டு போங்கோ என்றும் சொல்லலாமே? மகிந்தவை இப்படி தானே தேர்தலை புறக்கணித்து ஜனாதிபதியாக்கினோம்?

 

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Jude said:

அப்பிடியே கோத்தபாயவையும் ஜனாதிபதியாக்கி விட்டு போங்கோ என்றும் சொல்லலாமே? மகிந்தவை இப்படி தானே தேர்தலை புறக்கணித்து ஜனாதிபதியாக்கினோம்?

 

இப்போதுள்ள பிரச்சனையை பார்ப்பதை விட்டு இன்னும் பழைய உறி தொங்கின பக்கம் குருட்டு பூனை பாய்வது போல் பாய்ந்து கொண்டு இருக்கிறீர்கள் .

தமிழரசு தம்மை அசைக்க முடியாது என்று ஆடுனவை இன்று வெற்றி என்று சொல் மட்டும் அவர்களிடம் பல இடங்களில் சுயேட்சையுடன் ஒத்து போனால்த்தான் காரியம் நடக்கும் எனும் நிலை .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பெருமாள் said:

இப்போதுள்ள பிரச்சனையை பார்ப்பதை விட்டு இன்னும் பழைய உறி தொங்கின பக்கம் குருட்டு பூனை பாய்வது போல் பாய்ந்து கொண்டு இருக்கிறீர்கள் .

பழையதில் இருந்து தானே இப்போது உள்ள பிரச்சினை தொடருது? பழையதில் இருந்து படித்த பாடத்தை மறக்க கூடாது அல்லவா? கோத்தபாயவுக்கு எதிரான சண்டே டைம்ஸ் வழக்கில் கோத்தபாய ஆட்சியில் இருக்கும் போதே துணிச்சலாக வழக்கு நடத்தியவர் சுமேந்திரன். கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு சுமேந்திரன் தான் முக்கியம் தேவை. அமெரிக்க அரசும் சுமேந்திரனுடன் தொடர்பில் உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Jude said:

பழையதில் இருந்து தானே இப்போது உள்ள பிரச்சினை தொடருது? பழையதில் இருந்து படித்த பாடத்தை மறக்க கூடாது அல்லவா? கோத்தபாயவுக்கு எதிரான சண்டே டைம்ஸ் வழக்கில் கோத்தபாய ஆட்சியில் இருக்கும் போதே துணிச்சலாக வழக்கு நடத்தியவர் சுமேந்திரன். கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கு சுமேந்திரன் தான் முக்கியம் தேவை. அமெரிக்க அரசும் சுமேந்திரனுடன் தொடர்பில் உள்ளது.

 

வழக்குகளில் எதிர்தரப்பு வாதியாக உண்மையிலே துணிச்சலாக என்றால்  கோத்தா சிறையில் தான் இருக்கணும் இல்லையே ?

சண்டே டைம்ஸ் இருவழக்கும் அவரை கைது செய்வதுக்கான ஆதாரங்கள் மிகையின்றி இருந்தன ஆனாலும் சிங்கன் வெளியில் எப்படி ? அப்படி பார்க்கபோனால் துணிச்சலானவர் இரண்டாவது வழக்கு மிக் கொள்வனவு ஊழலை அம்பலப்படுத்திய இக்பால் அத்தாசை சொல்லலாம் .

விடுதலை புலிகளையும் காப்பற்ற அமெரிக்க கப்பல் வருது என்று சொன்னவையல் தான் இப்ப தம்பி சுமந்திரனை தொடர்பில் வைத்திருக்கு என்று சொல்லினம் .

  • தொடங்கியவர்

ரணிலுக்கு கடும் நெருக்கடி! தலைமை பதவியில் நீடிப்பதில் சிக்கல்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சியின் தலைமைப்பதவியிலிருக்கும் பிரதமர் ரணில் அந்த பதவியினை, சபாநாயகர் கருஜயசூரிய அல்லது அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்குமாறு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக ஐ.தே.கவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கொழும்பில் இன்று சந்தித்துப் பேசியிருந்த நிலையில், கட்சியின் தலைமை பதவியை கருஜயசூரியவிடம் கையளிக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகியுள்ளதாக வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் ஜனாதிபதியும், பிரதமரும் சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரதமர் பதவி விலகியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும், அந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து பேசியிருந்ததாக பிரதமருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவித்துள்ளன.

 

http://www.tamilwin.com/politics/01/174099?ref=home-latest

  • தொடங்கியவர்

பிரதமர் றணில் விக்கிரமசிங்க பதவி விலகுகிறாரா?

குளோபல் தமிழ்ச் செய்தியாளர் -கொழும்பு…

Maithri-ranil-karu.jpg?resize=490%2C315

பிரதமர் றணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேனவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிக்கொண்டு உள்ளன. இன்று இரவுப் பொழுதில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் அதில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஐக்கியதேசியக் கட்சியின் தலைமையில்  ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம்  தனித்து ஆட்சி அமைக்கத் தீர்மானித்திருப்பதாகவும், அந்த அரசாங்கத்துடன் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து 16 அமைச்சர்கள் வரை இணையவுள்ளதாகவும், ஏனையோர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இணையவுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இவ்வாறான சூழலில் றணில் விக்கிரமசிங்க தனது பிரமர் பொறுப்பில் இருந்து விலகி, சபாநாயகர் கரு ஜெயசூரிய பிரதமர் பொறுப்பிற்கு நியமிக்கப்படவுள்ளதாகவும், அதனை சிறிலங்காசுதந்திரக்கட்சியில் இருந்து ஐக்கியதேசிய முன்னணியில் இணையவுள்ளவர்களும் ஏற்றுக்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, சுயமான முடிவுகளை எடுப்பதற்கு,   பிரதமர் றணில் விக்கிரமசிங்கவை  இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதி மைத்திரிபாலசிரிசேன கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனினும் இந்தத் தகவல்களை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை.

http://globaltamilnews.net/2018/66603/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.