Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!

Featured Replies

  • ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!
 
mahinda-mithri.jpg

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஆயுதமாக அமைந்தது இனவாதமே!

 

இயற்­கை­யின் நிய­தி­யால் தாமரை மொட்டு மலர்­கி­றது. ‘ஈஸ்ட்’ என்ற நொதி­யம் அப்­பத்­துக்­கான மாவைப் பொங்க வைக்­கி­றது.’’ கடந்த சில நாள்­க­ளாக சமூக இணை­ய­ளத்­தங்­க­ளில் வெளி­யான விமர்­ச­னத் துணுக்­கு­க­ளில் மேற்­கு­றித்த துணுக்கு பல­ரது இர­ச­னைக்­குப் பாத்­தி­ர­மா­யிற்று.

மாறி­வ­ரும் உல­கில் மாறா­தி­ருக்­கு­மொரு விட­யம் ‘மாற்­றமடைதல்’ என்­பதே என முது­மொ­ழி­ யொன்று வழக்­கில் உள்­ளது. அது எப்­போ­துமே உண்­மை­யா­ன­தும், யதார்த்­த­மா­ன­தும்­கூட. இது அர­சி­ய­லுக்­கும் மிகப் பொருத்­த­மா­ன­தொன்றே. ஆனால் இந்த யதார்த்­தத்தை எமது அர­சி­யல்­வா­தி­கள் புரிந்­து­கொள்­ளத் தவறி வரு­கின்­ற­னர்.

1994ஆம் ஆண்­டுப் பொதுத் தேர்­த­லில், நாட்­டின் அர­சி­யல் வர­லாற்­றில் மிக நீண்­ட­கா­ல­மா­கப் பத­வி­யில் இருந்து வந்த அரசை, பத­வி­யில் இருந்து சந்­தி­ரிகா அகற்­றி­னார். பொது­மக்­கள் ஐக்­கிய முன்­னணி தரப்­புக்கு அந்­தத் தேர்­த­லில் 94 நாடா­ளு­மன்ற ஆச­னங்­கள் கிட்­டிய அதே­வேளை, ஐ.தே.கட்சி 81 நாடா­ளு­மன்ற ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­யி­ருந்­தது.

ஆட்­சி­ய­மைத்த சந்­தி­ரிகா தரப்­புக்கு 14 தேசி­யப் பட்­டி­யல் மூல­மான ஆச­னங்­க­ளும், ரணி­லின் தலை­மை­யி­லான ஐ.தே.கட்­சிக்கு 13 நாடா­ளு­மன்ற ஆச­னங்­க­ளும் கிட்­டின. முஸ்­லிம் காங்­கி­ர­சின் 7 உறுப்­பி­னர்­கள் மற்­றும் சுயேட்சை உறுப்­பி­ன­ரொ­ரு­வ­ரது ஆத­ரவு பெற்று சந்­தி­ரிகா அர­ச­மைத்­தார். ஒரே­யொரு மேல­திக ஆச­னத்­து­டன் எட்டு ஆண்­டு­கள் கால­மாக சந்­தி­ரிகா ஆட்­சியை முன்­னெ­டுத்­துச் சென்­றார்.

 

ஆனால் 2001 ஆம் ஆண்­டின் பொதுத் தேர்­த­லில் குறிப்­பி­டத்­தக்க தொகை கொண்ட நாடா­ளு­மன்ற ஆச­னங்­களை வென்­றெ­டுத்த ரணி­லால், இரண்டு ஆண்­டு­கள் காலத்­துக்­குக்­கூட ஆட்­சியை முன்­னெ­டுக்க இய­லாது போயிற்று. அவ்­வி­தம் தாம் அதி­கா­ரத்தை இழக்க நேரு­மென ரணில் கன­வி­லும் கரு­தி­யி­ருந்­தி­ருக்­க­மாட்­டார். அர­சி­ய­லின் சுபா­வம் அத்­த­கை­ய­து­தான். ‘‘நினைப்­ப­தெல்­லாம் நடப்­ப­தில்லை. நினைக்­கா­தது நடந்­து­வி­டும்’’ என்­பது முது­மொழி.

டி.எஸ்.சேன­நா­யக்கா – எதிர் –
எஸ்.டபிள்யூ ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்கா

1946ஆம் ஆண்­டில் ஐ.தே.கட்சி ஆரம்­பிக்­கப்­பட்­ட­வேளை, டி.எஸ்.சேன­நா­யக்கா ஒரு சுதந்­தி­ரப் போராட்ட வீரர். 1948ஆம் ஆண்­டில் நாட்­டின் முத­லா­வது தலைமை அமைச்­சர் பத­வியை அவர் ஏற்­ற­போது பெரும் பின்­ன­டைவு நிலை­யி­ருந்த ஐ.தே.கட்­சியை இரண்டு வரு­டங்­கள் கால இடை­வெ­ளி­யில் அவர் பலப்­ப­டுத்தி வைத்­தார் டி.எஸ். 1947ஆம் ஆண்­டில் டி.எஸ். சேன­நா­யக்கா தரப்­பி­னர்­க­ளுக்கு அதி­கா­ரத்தை வழங்­கிய தேர்­த­லின் பின்­னர், இலங்­கை­யின் வாக்­கா­ளர்­க­ளது போக்­கில் மாற்­றம் ஏற்­பட்­டது.

அர­சி­யல் போட்­டிக் களத்­தில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்­கும் துருப்­புச் சீட்­டாக கிரா­மப்­புற வாக்­கு­களே முக்­கி­யத்­து­வம் பெற்­றன. அந்த வேளை­யில் எஸ்.டபிள்யூ ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்கா தாம் எப்­ப­டி­யா­வது நாட்­டின் தலைமை அமைச்­ச­ராக ஆகி­வி­டக் கனவு கண்­டார். சேன­நா­யக்கா தரப்­பி­ன­ரால் பண்­டா­ர­நா­யக்கா, பரம்­ப­ரை­யி­ன­ருக்கு நன்­மை­யே­தும் கிட்­டப் போவ­தில்லை என உணர்ந்த பண்­டா­ர­நா­யக்கா, ஐ.தே.கட்­சி­யி­லி­ருந்து வெளி­யேறி சுதந்­தி­ரக் கட்­சி­யென்ற பெய­ரில் புதிய கட்­சியை நிறு­வி­னார். இலங்கை அர­சி­ய­லில் வலு­வா­ன­தொரு எதிர்த்­த­ரப்பு இதன் மூலம் உரு­வா­யிற்று.

நாட்­டில் இன­வா­தத்தை வளர்த்­தெ­டுத்த
எஸ்.டபிள்யூ. ஆர்.டி பண்­டா­ர­நா­யக்கா

1956ஆம் ஆண்­டின் பொதுத் தேர்­த­லில் ஐ.தே.கட்சி அர­சுக்கு எதி­ராக சுதந்­தி­ரக் கட்சி, பிலிப் குண­வர்த்­தன தலை­மை­யி­லான சம­ச­மா­ஜக் கட்சி மற்­றும் வேறு அர­சி­யல் அமைப்­புக்­கள் இரண்­டு­டன் கூட்­டணி ஏற்­ப­டுத்­திக் கொண்டு மக்­கள் ஐக்­கிய முன்­னணி என்ற கூட்­ட­ணியை உரு­வாக்கிய பண்­டா­ர­நா­யக்கா தாமே அதற்கு தலைமை தாங்­கிச் செயற்­பட்­டார்.

சிங்­க­ள­ மொ­ழியை மட்­டுமே அரச கரு­ம­மொ­ழி­யாக ஆக்­கு­வது உட்­ப­டப் பல்­வேறு சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­தித் திட்ட யோச­னை­களை முன்­வைத்து மக்­கள் ஐக்­கிய முன்­னணி பொதுத் தேர்­தலை எதிர்­கொண்­டது. சிங்­க­ளத்தை மட்­டும் அரச கரு­ம­மொ­ழி­யாக்­கும் யோச­னையை இட­து­சா­ரிக் கட்­சி­கள் ஏற்­றுக் கொள்­ள­வில்லை. இது ஐ.தே.கட்­சிக்கு வாய்ப்­பா­னதே என சேர்.ஜோன் கொத்­த­லா­வல கரு­தி­ய­போ­தி­லும், சிங்­கள வாக்­கா­ளர்­கள் ஐ.தே.கட்­சி­யைப் புறக்­க­ணித்து ‘மக்­கள் ஐக்­கிய முன்­ன­ணிக்கே’ பேரா­த­ரவு வழங்­கி­ய­தால் ஐ.தே.கட்சி ஆட்சி அதி­கா­ரத்தை இழக்க நேர்ந்­தது. பண்­டா­ர­நா­யக்கா நாட்­டின் புதிய தலைமை அமைச்­ச­ரா­கப் பத­வி­யேற்­றார்.

உய­ரச் செல்­லும் ஊஞ்­சல் மீண்­டும் பழைய இடத்­துக்கு வரு­வ­து­போன்று குறு­கிய கால இடை­வெ­ளி­யில் எவ­ரும் எதிர்­பா­ராத நிகழ்­வு­கள் நடந்­தே­றின. ஆட்­சித் தரப்­பி­னர் மத்­தி­யில் கருத்து வேறு­பா­டு­கள் தலை­தூக்­கின. இனக்­க­ல­வ­ரம் நாட்­டில் பேர­ழிவை ஏற்­ப­டுத்­தி­யது. ஆறு­மாத காலம் கழி­வ­தற்கு முன்­னர் கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­த­லில் அரச தரப்பான சுதந்­தி­ரக் கட்சி படு­தோல்வி கண்­டது. ஐ.தே.கட்­சியே கொழும்பு மாந­கர சபை­யின் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­டது.

அரச தரப்­பால் தலை­தூக்க இய­லாத விதத்­தில் பின்­ன­டைவு நிலை உரு­வா­யிற்று. இட­து­சா­ரித் தரப்­பான பிலிப் குண­வர்த்­தன தரப்­பி­னர் அர­சின்­றும் வெளி­யே­றி­னர். அரச தரப்­புக்­குள்­ளேயே கருத்து மோதல்­கள் உரு­வா­கின. சிக்கல் நிலைமை தீவி­ர­ம­டைந்­தது. ஒப்­பந்­தங்­கள் கிழித்து வீசப்­பட்­டன. 1959ஆம் ஆண்­டில் சுதந்­தி­ரக் கட்­சிக்­குள்­ளி­ருந்து உரு­வான சதி முயற்­சி­யில் சிக்கி, தலைமை அமைச்­சர் பண்­டா­ர­நா­யக்கா படு­கொ­லை­யுற நேர்ந்­தது.

மகிந்த– எதிர் – மைத்­தி­ரி­பால

2010ஆம் ஆண்­டின் அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்த மீண்­டும் தெரி­வாகி அரச தலை­வ­ரா­கப் பத­வி­யைத் தொடர முடிந்­தது. மூன்று தசாப்த கால­மாக விடு­த­லைப் புலி­க­ளு­டன் இடம்­பெற்ற போரை முடி­வுக்­குக் கொண் வந்து நாட்­டைக் காப்­பாற்­றிய தலை­வ­ராக மகிந்த இரண்­டா­வது தட­வை­யா­க­வும் அரச தலை­வ­ரா­கப் பதவி ஏற்­றுக் கொண்­டார். இலங்­கை­யின் தேர்­தல் வாக்­க­ளிப்பு முறை மீண்­டும் மாற்­ற­முற்­றது.

அர­சி­ய­ல­ரங்­கில் ஊழ­லுக்கு எதி­ரான மக்­க­ளது வாக்­கு­களே பெரும் துரும்­புச் சீட்­டாக அமைந்­தது. மைத்­தி­ர­பால தலைமை அமைச்­சர் பத­விக்­கா­கக் கனவு கண்­டார். ராஜ­பக்ச தரப்­பி­னர்­க­ளால் தமது தரப்­புக்கு அர­சி­யல் ரீதி­யில் பய­னே­தும் கிட்­டப்­போ­வ­ தில்லை என்­பதை உணர்ந்த மைத்­தி­ரி­பால 2014ஆம் ஆண்­டில் மகிந்­த­வி­ட­மி­ருந்து தூர விலக ஆரம்­பித்­தார். இதன் பய­னாக இலங்கை அர­சி­ய­லில் மீண்­டும் பெரி­ய­தொரு மாற்­றுச் சக்தி உரு­வாக நேர்ந்­தது.

இதன் தொடர்ச்­சி­யாக மகிந்­த­வுக்கு எதி­ராக பல தரப்­புக்­கள் இணைந்த கூட்­டுப் போரொன்று ஆரம்பமாகியது.
ஐ.தே.கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, ஹெல உறு­மய, நியா­ய­மான சமூ­க­மொன்­றுக்­கான மக்­கள் இயக்­கம் மற்­றும் முன்­னணி அர­சி­யல் அமைப்­புக்­கள் சில­வும் இந்­தக் கூட்­டில் இணைந்து கொண்­டன. அரச தலை­வர் பத­விக்­கான தேர்­த­லில் மகிந்­த­வுக்கு எதி­ரான கூட்­டுத் தரப்­பின் பொது வேட்­பா­ள­ராக மைத்­திரி கள­மி­றக்­கப்­பட்­டார்.

புதிய ஜன­நா­யக முன்­னணி சார்­பில் ‘அன்­னம்’ சின்­னத்­தில் மைத்­திரி போட்­டி­யிட்­டார். மகிந்த அர­சின் செயற்­பா­டு­க­ளில் இடம்­பெற்ற நியா­ய­வீ­னங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி மைத்­தி­ரி­பால தரப்­பி­னர் தமது பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­த­னர். கடை­சி­யில் மகிந்த, அரச தலைவர் பத­வியை இழந்து வீடு செல்ல நேர்ந்­தது. இலங்கை அர­சி­ய­ல­ரங்­கில் முதல் தட­வை­யாக இரு பிர­தான கட்­சி­க­ளும் இணைந்து கூட்டு அர­சொன்றை நிறுவ முடிந்­தது. அரச தலை­வ­ராக மைத்­தி­ரி­யும் தலைமை அமைச்­ச­ராக ரணி­லும் இணைந்து நல்­லாட்சி அரசு என்ற பெய­ரில் நிர்­வா ­கத்தை முன்­னெ­டுத்­துச் சென்­ற­னர்.

நீண்­ட­கா­லம் கடக்கு முன்­னர், உய­ரச் சென்ற ஊஞ்­சல் மீண்­டும் கீழே வந்­தது. நினைத்­த­தற்கு மாறான சம்­ப­வங்­கள் நடந்­தே­றின. நல்­லி­ணக்­க முயற்சிகள் பின்­ன­டைவு கண்­டன. தென்­னா­சிய வட்­ட­கை­யி­லேயே மிகப் பெரும் வங்­கிக் கொள்ளை எனக் கொள்­ளத்­தக்க பிணை­முறி ஊழல் இடம்­பெற்­றது. ஊழல்­கள் விட­யத்­தில் மாற்­ற­மெ­து­வும் ஏற்­ப­ட­வில்லை. ஊழல் புரிந்­தோர் சுதந்­தி­ர­மாக வெளி­யில் உல­வு­கின்­ற­னர்.

அத்­தி­யா­வ­சிய பாவ­னைப் பொருள்­க­ளது விலை­க­ளில் நாளுக்கு நாள் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டன. நிறை­வேற்று அதி­கா­ரத்­தில் எந்­த­வித மாற்­ற­மும் ஏற்­ப­ட­வில்லை. பொது­மக்­க­ளது கடன் படு­நிலை உயர்­வ­டைய நாட்­டின் பொரு­ளா­தார நிலை வீழ்ச்­சி­கண்­டது. தேசிய அர­சின் பங்­கா­ளிக் கட்­சி­கள் இரண்­டும் ஒன்­றுக்­கொன்று மோதிக் கொள்­ளும் நிலை உயர்­வ­டைந்­தது.

எவ­ருமே எதிர்­பா­ராத விதத்­தில் கூட்டு அர­சின் இரண்­டாண்­டு­கள் கால முடி­வில் மகிந்­த­வின் புதிய கட்­சிக்கு எதி­ரா­க உள்ளூராட்சித் தேர்த லில் போட்­டி­யிட்ட கூட்டு அர­சின் பங்­கா­ளிக் கட்­சி­கள் பெரும் தோல்­விக்கு முகம் கொடுக்க நேர்ந்­தது.

ஜன­வரி 8 புரட்­சி­யின் பின்­னர் நாட்­டின்
அர­சி­ய­லில் எதிர்­பார்ப்பு பலித­மா­க­வில்லை

ஜன­வரி 8 புரட்­சி­யின் பின்­னர், வாக்­கா­ளர்­க­ளைக் கவ­ரும் திற­மையை கூட்­டாட்சி அரசு கொண்­டி­ருந்­த­தா­கத் தோன்­ற­வில்லை. வெற்­றிக் களிப்­பில் கூட்டு அரசு திளைத்­தி­ருந்த வேளை, மகிந்­தவோ பெளத்த விகா­ரை­க­ளி­லி­ருந்து தமது முயற்­சியை மீண்­டும் ஆரம்­பித்­தார். அடி­மட்ட ஆத­ர­வா­ளர்­கள் மத்­தி­யில் தமது நட­வ­டிக்­கை­களை விரி­வு­ப­டுத்­தி­னார். அவ­ரது முயற்­சிக்கு அமைய உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் வாக்­கா­ளர்­கள் தமது பேரா­த­ரவை அவ­ரது தரப்­புக்கு வழங்கி உற்­சா­கப்­ப­டுத்­தி­யுள்ளனர்.

இம்­முறை உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இரண்­டா­வது மற்­றும் மூன்­றா­வ­தை­யும் கூட்­டி­னால் முத­லா­வதை முந்­துமா? படு­தோல்­வி­யைச் சந்­தித்த ஐ.தே.கட்­சி­யும் சுதந்­தி­ரக்­கட்­சி­யும் தத்­த­மது தோல்­விக்கு பற்­பல வியாக்­கி­யா­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றன.

1970ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லில் சிறி­மா­வோ­ வின் தலை­மை­யில் சுதந்­தி­ரக் கட்சி 91ஆச­னங்­க­ளைக் கைப்­பற்­றி­ய­போது, டட்­லி­யின் தலை­மை­யி­லான ஐ.தே.க.17 ஆச­னங்­களை மட்டுமே கைப்­பற்­றி­யது. ஆனால் அந்­தப் பொதுத் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்சி மொத்­த­மாக 18லட்­சத்து 39ஆயி­ரத்து 979 வாக்­கு­க­ளைப் பெற, ஐ.தே.கட்­சியோ 18 லட்­சத்து 92ஆயி­ரத்து 525 வாக்­கு­களை மொத்­த­மா­கப் பெற்­றி­ருந்­தது.

ஆனால் கடை­சி­யில் ஐ.தே.கட்சி படு­தோல்வி அடைந்­த­தா­கவே விமர்­சிக்­கப்­பட்­டது. அந்த வகை­யில் தேர்­த­லில் முத­லா­வது இடத்தை அடை­ப­வரே வென்­ற­வ­ரா­கக் கொள்­ளப்­ப­டு­வார். இரண்­டாம், மூன்­றாம் இடங்­க­ளைப் பெற்­ற­வர்­கள், இரு தரப்­பி­ன­ரது வாக்­கு­க­ளை­யும் கூட்­டித் தாம் வெற்றி பெற்­ற­தா­கக் கூறு­வது பகி­டிக்கு இட­மா­கக் கொள்­ளத்­தக்­கது.
மொத்­தத்­தில் மகிந்­த­வின் அர­சி­யல் எழுச்­சி­யைத் தோற்­க­டிக்­கத்­தக்க திற­னுள்ள அர­சி­யல்­வாதி ஒரு­வ­ரைத்­தா­னும் ஐ.தே.கட்­சி­யில் தேடிக் கண்­டு­பி­டிக்க இய­லா­துள்­ளது.

சுதந்­தி­ரக்­கட்­சியோ அநாதை நிலைக்கு உள்­ளா­கி­யுள்­ளது. அர­சி­ய­லில் எப்­போ­துமே பொது­மக்­களை மடை­ய­வர்­க­ளாக்­கிட இய­லாது. அந்த வகை­யில் இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தாமரை மொட்­டுக்கு மாபெ­ரும் வெற்­றியை மக்­கள் வழங்­கி­யுள்­ள­னர். மகிந்­த­வால் இந்த மக்­கள் ஆணையை 2020 ஆம் ஆண்­டு­வரை பாது­காத்­துக் கொள்ள இய­லுமா என்­பது குறித்து எதை­யும் நிச்­ச­ யப்­ப­டுத்­திக் கொள்ள இய­லா­துள்­ளது. மாறி­வ­ரும் உல­கில் மாற்­ற­மு­றாத ஒரே­யொரு விட­யம் மாற்­ற­ம­டை­தல் மட்­டுமே. இந்த உண்­மை­யைப் புரிந்து கொண்டு செயற்­ப­டும் அர­சி­யல் தலை­வ­ரையோ, கட்­சி­யையோ இந்த நாட்­டில் காண இய­லாதுள்ளது என்­பதே யதார்த்­தம்.

http://newuthayan.com/story/70330.html

  • கருத்துக்கள உறவுகள்

யார் இனவாதம் கூட பேசுகிறாரோ அவரே வெற்றியாளர் என்பது   சிறிலங்காவில் பொது விதியாக உள்ளது. இதில் மகிந்த விதிவிலக்காக இருக்கவே மாட்டார்.

இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள் நெடுஞ்சேரன் என்பவரால் மிக நுணுக்கமாக சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கின் தன்மை எழுதப்பட்டுள்ளது. நல்லதொரு பதிவு. .......

//சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான அதனது வக்கிர வளர்ச்சியில் ஆர்முடுக்கலான பரிணாம வளர்ச்சியை எய்தியே வந்துள்ளது என்பதை வரலாற்றை மீள் வாசிக்குட்படுத்தி ஐயம்திரிபறப் புரிந்துகொள்வதோடு அதனது இயக்கம் இனியும் எவ்வாறு அமையுமென்பதை உறுதியாக விளங்கிக்கொள்ள இப்பத்தி உதவுமென்ற நம்பிக்கையுடன் எழுதப்படுகின்றது.//

 

 

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய குறைப்பேச்சுகள் -நெடுஞ்சேரன்-

September 28, 2017 Admins

Sinhala-Lion.jpg

வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது. மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள பௌத்த பேரின வெறியிலிருந்து வெளிக்கிளம்பும் பிணவாடையை மறைத்துவிட முடியாது. எமக்குவப்பில்லாத வரலாற்றுச் சூழமைவில் பேரம் பேச வல்ல எல்லா வலுவையும் இழந்து பேதலித்த நிலையில் பதுங்கிப் பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, தமிழ் மக்களிற்கு ஒளிமயமான வாழ்க்கையை உருவாக்க அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டப் போவதாகச் சொல்லுவது அரசியற் போக்கிரித்தனத்தின் உச்சமே என்பதில் மறுபேச்சுக்கிடமில்லை. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்தைக் கடத்துகின்றதே தவிர, எவ்வளவோ அருஞ் சாதனைகளை அந்த இடத்திலிருந்தால் செய்திருப்போம் என்று சொல்லும் மக்களால் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாதவர்களின் கவர்ச்சிகரமான அரசியற் சொற்பொழிவுகளைப் புலுடா என்று தான் வகைப்படுத்த வேண்டும். ஏனெனில் உலகின் மாபெரும் அதிசயமாக மைத்திரி, ரணில் போன்ற சிங்களத் தலைவர்களின் மனநிலை அசோகச் சக்கரவத்திக்கேற்பட்ட மனமாற்றம் போல மாறினாலும் கூட, சிறிலங்கா அரச இயந்திரம் கட்டமைக்கப்பட்ட விதத்தின் விளைவாக, அவர்களால் தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுத்து நிறுத்தவியலாது.

சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கெதிரான அதனது வக்கிர வளர்ச்சியில் ஆர்முடுக்கலான பரிணாம வளர்ச்சியை எய்தியே வந்துள்ளது என்பதை வரலாற்றை மீள் வாசிக்குட்படுத்தி ஐயம்திரிபறப் புரிந்துகொள்வதோடு அதனது இயக்கம் இனியும் எவ்வாறு அமையுமென்பதை உறுதியாக விளங்கிக்கொள்ள இப்பத்தி உதவுமென்ற நம்பிக்கையுடன் எழுதப்படுகின்றது.

வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையின் தெற்கு மற்றும் மத்தியப் பிரதேசங்களில் சிங்களவர்களும் வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்குப் பிரதேசங்களில் தமிழர்களும் வாழ்ந்து, ஆட்சி புரிந்து வருகின்றனர். தமக்கேயுரிய இன, மொழி, மத பண்பாட்டு அடிப்படையில் தமிழர்கள் உயரிய நெறியுடன் தமது மண்ணில் அறவாழ்வு நடத்தி வந்தனர். ஐரோப்பியரின் ஆக்கிரமிப்புடன் தமிழரின் வாழ்விடத் தொடர்ச்சி கணக்கெடுக்கப்படாமல் அவர்களின் நிருவாக வசதிக்கேற்றாற் போல ஆட்சிமுறைமை மாற்றமடைந்தது. சிங்கள தேசியம் அநாகரிகதர்மபால போன்றோரால் ஒரு அரசியற் சமூகமாகத் தன்னை வெற்றிகரமாகக் கட்டியமைக்கும் வரை, கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக் குடிகள் அவர்களின் நலன்களிற்காகத் தமிழரின் அரசியலைக் குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் அதிகார இலாபம் ஈட்டி வந்தனர். சிங்கள தேசிய வாதம் அரசியற்பரிமாணம் பெற ஆரம்பித்ததன் நேரடித்தாக்கத்தை இந்தக் கொழும்பு வாழ் மேட்டுக்குடிகள் உணர ஆரம்பிக்கும் வரை தமிழர் என்ற தனித்தன்மையான சொல்லை ஒரு சொல்லுக்கேனும் தமது சிந்தையில் நிறுத்தாமல், அதிகாரத்தில் பங்கு கேட்கும் அவர்களின் மேட்டுக்குடி ஆதிக்கப் போக்குத் தொடர்ந்த வண்ணமே இருந்தது.

 சிங்கள தேசியத்தின் எழுச்சியால் தமது அதிகார அரசியல் ஆட்டம் காணுவதை உணர்ந்த கொழும்பு வாழ் தமிழ் மேட்டுக்குடிகளின் பிரதிநிதிகளில் ஒருவரான சேர். பொன்.அருணாசலம், அவர்களது வர்க்க நலனுக்காகவேனும் 1920 இல் தமிழர் தேசியவாத எழுச்சியைத் தோற்றுவித்தார். 1920 இல் அவர் காலமாக அந்தத் தேசியவாத எழுச்சியும் தேக்க நிலைக்கு வந்துவிட்டது.

DS-GG.jpg

1931 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட டொனமூர் அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் இலங்கைத்தீவில் எண்ணிக்கையளவில் சிறிய தேசிய இனங்களின் தனித்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய வகையில் இன-பிரதேச ரீதியிலான அரசியல் ஏற்பாடுகளைச் செய்யாமல், தொகுதிவாரித் தெரிவு முறையில் சர்வசன வாக்குரிமை கொண்டுவரப்பட்டமையானது சிங்களப் பேரினவாத பெரும்பான்மையினரால் தமிழர்களின் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை நசுக்குவதற்கான ஏற்பாடானது அரசியலமைப்பினூடாக உறுதியாக்கப்பட்டது. டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி நடக்கவிருந்த தேர்தலைப் புறக்கணிக்குமாறு கோரி கண்டி பேரின்பநாயகம் தலைமையிலான யாழ்ப்பாண மாணவர் காங்கிரசானது (Jaffna Students Congress) பல போராட்டங்களைச் செய்தது. ஆனால் G.G.பொன்னம்பலம் இவ்விடயத்தில் தமிழ் மக்களுக்கு மாபெரும் இரண்டகம் இழைத்து தேர்தலில் போட்டியிட்டு சிங்கள மந்திரி சபை உருவாக்கத்திற்குப் பெரிதும் பங்காற்றினார். இதில் வெற்றியீட்டிய D.S.சேனநாயக்க வேளாண்துறை அமைச்சராகப் (Minister of Agriculture) பொறுப்பேற்று தமிழர்களின் நிலங்களை அரச வளங்களைப் பயன்படுத்தி வன்கவர்ந்து தமிழர் தாயக நிலங்களை சிங்களமயமாக்கினான்.

1947 இல் ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கிவிட்டுப் போகும் நோக்கில் வடிவமைத்த சோல்பரி அரசியலமைப்பு சிங்கள மேலாதிக்கத்திற்கு எவ்வளவு மோசமாக அடித்தளமிடுகின்றது என்று கோடிட்டுக் காட்டி முழுமூச்சாக எதிர்த்து 50- 50 பிரதிநிதித்துவம் கேட்ட G.G. பொன்னம்பலம் பின் இளகுநிலை ஒத்துழைப்பு என்பதாகத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இலங்கையின் முதற்பிரதமராகப் பதவியேற்ற நாயக்கர் வம்சாவழியான D.S. சேனநாயக்காவுக்கு ஆதரவு வழங்கி அவனது அமைச்சரவையில் 1948 இல் அமைச்சுப் பதவியையும் பெற்று முழுத் தமிழர்களையும் முட்டாள்களாக்கினார்.

 இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்ததும் முதற்கட்ட தமிழினக் குரோத நடவடிக்கையாக மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்து தமிழர்களின் இன விகிதாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் D.S.சேனநாயக்காவின் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவழித்து ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் நீக்க முடியாத கறையை G.G.பொன்னம்பலம் என்ற கொழும்பு வாழ் மேட்டுக்குடி அரசியல்வாதி ஏற்படுத்தினார்.இதனால் வெட்கமும் அவமானமும் சீற்றமுமுற்ற தமிழ் அரசியல்22 தலைமைகள் 1949 இல் பின்னாளில் தமிழரசுக் கட்சி என்று பெயர்மாற்றத்திற்குட்பட்ட சமஸ்டிக் கட்சியைத் தந்தை செல்வா தலைமையில் தொடங்கினார்கள்.

SWRD-Bandaranayake.jpg

ஐக்கிய தேசியக் கட்சியில் தமது செல்வாக்குக் குன்றிவிடுமென்று கிலிகொண்ட S.W.R.D.பண்டாரநாயக்கா ஐ.தே.க வுக்குப் போட்டியான ஒரு கட்சியாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்குவதற்காகத் தனிச் சிங்களச் சட்டத்தினைக் கொண்டு வரப்போவதாக சிங்கள மக்களிற்கு வாக்குக்கொடுத்து அதன்படி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடனே தனிச் சிங்களச் சட்டத்தை 1956 இல் கொண்டு வந்தான். D.S.சேனநாயக்க 10 இலட்சம்தமிழர்களை அரசியல் ஏதிலிகளாக்கி விட்டுச் செல்ல, S.W.R.D.பண்டாரநாயக்கவோ தனிச் சிங்களச் சட்டத்தைக்கொண்டு வந்து 40 இலட்சம் தமிழர்களை அவர்களது தாயகமண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்களபௌத்த பேரினவாதத்தின் தமிழர்களுக்கெதிரான வக்கிரவளர்ச்சியை உறுதிப்படுத்தினான். இதை எதிர்த்து அமைதி வழியில் காலி முகத்திடலில் போராடிய தந்தை செல்வா தலைமையிலான தமிழர்கள் மீது சிங்கள இனவெறிக் காடையர்களின் வெறியாட்டத்தை பண்டாரநாயக்கா ஏவினான். பின்னர் 1956 இல் கல்லோயா கலவரத்தைத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்துத் தமிழர்களை வகை தொகையின்றிக் கொன்றொழித்தான் பண்டாரநாயக்கா. நிலைமை மிக மோசமடைவதைக் கண்ட பண்டாரநாயக்கா தந்தை செல்வாவுடன் பண்டா- செல்வா உடன்படிக்கை என்றழைக்கப்படும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டான். எனினும் தனிநாட்டிற்கான முதற்படி இதுவென பொய்ப்பரப்புரை செய்த J.R.ஜெயவர்த்தன கண்டி தலதா மாளிகைநோக்கி நடைப்பயணம் செய்து சிங்கள பௌத்த பேரினபூதத்தை இன்னும் வெறி கொள்ளச் செய்ய 300 பௌத்த பிக்குகளின் முன்பு அந்த உடன்படிக்கையைக் கிழித்துப் போட்டான் பண்டாரநாயக்கா. எனினும் தமிழர்களுடன் உடன்படிக்கைக்குச் சென்றமைக்காகவும் 1943 இல் ஜே.ஆர் சிறிலங்காவின் அரசவையில் முன்மொழிந்த சிங்களச் சட்டத்தை பண்டாரநாயக்கா எதிர்த்ததாலும் அவன் எவ்வளவு சிங்கள வெறியாட்டம் ஆடியும் அவன் மீது பௌத்த பிக்குகள் சந்தேகம் கொள்ள 1959 இல் பௌத்த பிக்குவினால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

Srimavo.jpg

தனது கணவனின் இறப்பின் பின்பு 1960 இல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிப் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது இந்தப் பதவிக்காலத்தில் சிங்கள “சிறி” யினை வாகன எண் பதிவில் கட்டாயமாக்க, இதனை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வா தலைமையிலான தமிழர்கள் தமிழ் முத்திரை வழங்கினர். இதனால் தந்தை செல்வாவை வீட்டுக் காவலில் வைத்த சிறிமா ஏனைய சமஸ்டிக் கட்சித் தலைவர்களை பனாகொடை இராணுவ முகாமில் அடைத்து வைத்தார். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் 60- 80% ஆக அரச பணியிலிருந்த தமிழர்களின் எண்ணிக்கை இந்த ஆட்சியில் 8- 12% ஆனது. மேலும் 100% சிங்களவர்களைக் கொண்ட சிங்கள இராணுவமும் வெறும் 2% மட்டுமே தமிழர்களைக் கொண்ட சிங்கள பொலீசும் உருவாக்கப்பட்டது.

சிறிமாவின் மிலேச்சத்தனமான சிங்கள வெறியாட்ட நடவடிக்கைகளால் கொதித்துப் போயிருந்த தந்தை செல்வா தலைமையிலான தமிழ்த் தலைமைகள் டட்லி சேனநாயக்காவுடன் ஒரு உடன்படிக்கை செய்வதாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதியினால் 1965 இல் டட்லிக்கு ஆதரவு வழங்க பிரதமரான டட்லி பின்பு தான் கையெழுத்திட்ட டட்லி– செல்வா என்றழைக்கப்படும் உடன்படிக்கையைக் கிழித்துப்போட்டான்.

Broken-Promises.gif

இதன் பின்னர் இடதுசாரிகளின் ஆதரவுடன் 1970 களில் ஆட்சிக்கட்டிலுக்கு சிறிமா வந்தார். இனரீதியில் சிங்கள மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக உள்நுழைக்கும் நோக்கில் சிறிமா கல்வியில் தரப்படுத்தல் எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார் (இன விடயத்திற்கு புறம்பாகச் சென்று இத்தகைய கல்விக் கொள்கையை ஒரு சமூக அறவடிப்படையில் மாற்றுக் கோணத்தில் பார்க்கும் பார்வை இப்பத்தி எழுத்தாளருக்கு உண்டு என்பதை இங்கு சுட்டும் அதேவேளை இது குறித்து ஒரு பத்தி வேறு தலைப்பின் கீழ் பின்னர் எழுதப்படும் என இங்கு குறிப்பிடப்படுகிறது). இந்தக் கல்விக் கொள்கைக்கு எதிராக அறவழியில் அமைதியாகப் போராடிய தமிழ் மாணவர் பேரவையினர் மீது அரச பயங்கரவாதத்தை சிறிமா ஏவிவிட்டார். மாணவர்களைக் கைது செய்து கொடும் சிங்களச் சிறைகளில் விசாரணை இன்றித் தடுத்து வைத்து சிங்கள வெறியாட்டத்தைத் தமிழ் மாணவர்கள் மீது தொடர்ந்தார் சிறிமா. அத்துடன் 1972 ஆம் ஆண்டில் குடியரசுஅரசியலமைப்பைக் கொண்டு வந்து சோல்பரி அரசியலமைப்பில்பெயரளவுக்கேனும் இடம்பெற்றிருந்த 29ம் சரத்திலுள்ளசிறுபான்மையினருக்கான காப்பீட்டை இல்லாதொழித்ததுடன்அரசியலமைப்பு ரீதியாகப் பௌத்தத்திற்கு முதலிடம்கொடுத்தார்இவ்வாறாக தமிழ் மக்களை அரசியலமைப்புரீதியில் இரண்டாந்தர குடிமக்களாகிச் சிங்கள வக்கிரவளர்சியை ஆர்முடுக்கினார் சிறிமாஇதன் தொடர்ச்சியாக உலகத் தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதன் மீது அரச பயங்கரவாதத்தை ஏவினார் சிறிமா.

தமிழரின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான, இறைமையுடைய, சமயச்சார்பற்ற, சமதர்ம தமிழீழ அரசை மீட்டளித்தலும் மீள உருவாக்கலும், இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டுத் தவிர்க்க முடியாதது என 1976- வைகாசி– 14 ஆம் நாள் வட்டுக்கோட்டையில் தீர்மானம் இயற்றி தமிழீழக் கோரிக்கையைத் தமிழ் அரசியற் தலைவர்கள் முன்வைத்தார்கள். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட தனியரசுக் கோரிக்கைக்கான மக்களாதரவைக் காட்டுவதற்காகவே தாம் 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பங்கேற்பதாகக்  குறிப்பிட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம், அந்தத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை ஈட்டி சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவரான பின்பு, J.R.ஜெயவர்த்தனவால் 1977, 1981 இல் பாரிய இனப்படுகொலையைச் செய்து முடித்த பின்னர் கொண்டுவரப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை 1981 இல் ஏற்றுக்கொண்டு தமிழீழத் தனியரசு நோக்கி முன்னேறிய ஈழத்தமிழர் அரசியலை பொறுப்புணர்வில்லாமல் பின்தள்ளி தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஒரு ஆறாத வடுவை ஏற்படுத்தினார்.

JR.jpg

    ஆணைப்பெண்ணாகவும்பெண்ணைஆணாகவும்மாற்றுவதைத் தவிரஎன்னால் எதுவும்செய்ய முடியும் என்றளவில் 1978 ஆம் ஆண்டு இரண்டாம்குடியரசு அரசியலமைப்பை ஏற்படுத்தி அனைத்து அதிகாரமும்படைத்த சிங்கள அதிபராகப் பதவியேற்ற J.R.ஜெயவர்த்தனதமிழின அழிப்பை சகல தளங்களிலும் ஆர்முடுக்கி விட்டான். 1979 இல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நிறைவேற்றிஅப்பாவித் தமிழ் இளைஞர்களை வகை தொகையின்றிவிசாரணையில்லாமல் சிறையிலடைத்தான். தொடர்ந்து 1981 இல் தமிழரின் அறிவியற் சொத்தாகவும் வரலாற்று ஆவணக் காப்பகமாகவும் திகழ்ந்த யாழ் நூல்நிலையத்தை அதில் இருந்த 95,000 கிடைத்தற்கரிய நூல்களுடனும் ஓலைச் சுவடிகளுடனும் சேர்த்து J.R.ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசு திட்டமிட்டு எரித்துச் சாம்பலாக்கியது. இதன் தொடர்ச்சியாக 1983 ஆடி மாதம் தமிழர் மீது தீவளாவிய ரீதியில் இனவழிப்பு வன்முறை சிங்கள அரசினால் நன்கு திட்டமிடப்பட்டு ஏவிவிடப்பட்டது. இதில் 2000 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட, பல பெண்கள் பலாத்காரத்திற்குட்பட, குழந்தைகள் கொதிக்கும் எண்ணைய்த் தாச்சியில் போடப்பட, பல மில்லியன் தமிழர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட, 1 இலட்சம் பேர் சொந்த நாட்டில் ஏதிலிகளாக, 40,000 பேர் கடல் கடந்து ஏதிலிகளாகினர்.

இதையடுத்துஅரசியலமைப்புச் சட்டத்தின் 6 ஆவதுசரத்துப்படி சிறிலங்காவின் ஐக்கியத்தையும் பிரதேசஒருமைப்பாட்டையும் ஏற்று உறுதிமொழி வழங்காதநாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது நாடாளுமன்றப்பிரதிநிதித்துவத்தை இழக்க நேரும் என்றாகஅதனைநிராகரித்து விட்டுத் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர்இந்தியாவிற்குத் தஞ்சம் புகுந்தனர்.

ஜே,ஆரின் பின்னர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பிரேமதாசவோ இந்திய கொடும் படைகளை இலங்கைத் தீவிலிருந்து அகற்றுவதற்குத் தமிழரோடு இணைந்து வேலை செய்வதாகச் சொல்லிக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளைக் கண்டுகொள்ளாமல் பௌத்த பிக்குகளின் சொற்கேட்டுத் தொடந்து ஆடி வர அவரின் இறப்பின் பின்பு சிறிலங்காவின் சனாதிபதியான டி.பி.விஜயதுங்க பௌத்த சங்கத்தினரின்செல்லப்பிள்ளையாகவிருந்து எல்லா சிங்களஆட்சியாளர்களையும் விஞ்சியவனாக இலங்கைத் தீவில் இனச்சிக்கல் என்று ஒன்று கிடையாதெனவும் பயங்கரவாதச் சிக்கல்என்ற ஒன்று மட்டுமே உண்டெனவும் கூறி வந்தான்.

Ranil-and-Chandrika.jpg

 1994 ஆம் ஆண்டுஆட்சிக்கட்டில் ஏறிய நாயக்கச் சூழ்ச்சியின் வாரிசான சந்திரிக்கா அம்மையார் தன்னைச் சமாதனப் புறாபோல் பாசாங்கு செய்து 1994 ஐப்பசியில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி 6 மாதமாக எந்தவித முன்னேற்றமும் இன்று இழுத்தடித்து பாரிய போரிற்கான ஒழுங்குகளைச் செய்தார். தனது மனங்கவர்ந்த அன்புக்குரியவனான லக்ஸ்மன் கதிர்காமர் என்ற தமிழினத்திற்கு இரண்டகம் செய்த கொடியவனை வெளிவிவகார அமைச்சராக்கி தமிழின உரிமைப்போராட்டத்தை பயங்கரவாதமாக பரப்புரை செய்தவாறேஅதிகாரப் பரவலாக்கம் என்ற தனது தீர்வுப் பொதியைசந்திரிக்கா கொண்டு வர அதனை அப்போதையபிரதமராகவிருந்த ரணில் நாடாளுமன்றில் வைத்துக் கிழித்துப்போட்டான். பின்பு புலிகளின் மீதான தடையை நீக்கிஇடைக்கால தன்னாட்சி அதிகார சபையை வடக்குகிழக்கினைத் தாயகமாகக் கொண்டு வாழும் தமிழர்களுக்குக்கொடுக்கப் போவதாக பாசாங்கு செய்து 2001 இல் தேர்தலில்தமிழ் மக்களின் வாக்குகளின் மூலம் வெற்றி பெற்ற ரணில்அமைதிப் பேச்சில் ஈடுபடுவதாகக் கூறி பன்னாட்டுச்சதிவலையைத் தமிழர்கள் மீது ஏற்படுத்தினான். எனினும் ரணில்அமைதிப் பேச்சுக்களில் ஈடுபடுவதைக் காரணம் காட்டிஜே.வி.பி மற்றும் பௌத்த மதகுருமார்கள் போன்ற சிங்களபௌத்த பேரினவாத வெறியர்களின் ஆதரவைத் திரட்டியவாறேதனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்திச் சந்திரிக்காபாராளுமன்றைக் கலைத்து மீண்டும் தேர்தல் நடத்திவெற்றியீட்டினார்முதன் முதலில் பௌத்த பிக்குகளையும்தேர்தலில் போட்டியிட வைத்து என்றுமில்லாதவாறு பௌத்தபேரினவாதத்தினை பாராளுமன்றுக்குள்ளும் நேரடியாகக்களமிறக்கினார் சந்திரிக்காஇதில் தனது உள்ளங் கவர்ந்தஅன்பரான லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமராக்கத் துடித்தசந்திரிக்கா பௌத்த சங்கத்தின் பாரிய எதிர்ப்புகளின்விளைவாக மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கினார்.

MR.jpg

பின்னர் சனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி சனாதிபதியான மகிந்தராஜபக்சகாலத்தில்நீதித்துறையைக் கையில் வைத்திருந்த மகிந்த 13 ஆவதுதிருத்தச் சட்டம் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பிற்குமுரணானது என்றும் அது திணிக்கப்பட்ட உடன்படிக்கை எனவும்சிறிலங்காவின் உச்ச நீதிமன்றத்தைத் தீர்ப்புச் சொல்ல வைத்துசிங்கள பௌத்த பேரினவாதத்தின் தமிழர்களுக்கெதிரானவக்கிர வளர்ச்சியில் இன்னும் வேகமாகப் பங்கெடுத்தான்.

மேற்குலக– இந்தியக் கூட்டுச் சதியால் ஆட்சிக்குக்கொண்டுவரப்பட்ட நல்லிணக்க அரசாங்கம் என்றுசொல்லப்படுகின்ற இன்னுமொரு சிங்கள பௌத்த பேரினவாதஇணையாட்சியானது தனது அரசியலமைப்புசீர்திருத்தத்திற்கான முன்னுரையில் இடம்பெற்ற தேசிய இனச்சிக்கலிற்கான தீர்வுபுதிய அரசியலமைப்பு போன்றவிடயங்களை கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்புகளைக் காரணம்காட்டி நீக்கியுள்ளதுமுன்னுரையிலேயே இல்லாத ஒன்றுதொடர்பாக நாம் “அதைத் தந்து ஏமாற்றி விடுவார்களோஇதைத் தந்து முடக்கி விடுவார்களோ” என்றெல்லாம் எண்ணிப்பீதியடையத் தேவையில்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் ஒரு துரும்பைத் தானும் தமிழர்களுக்குத் தீர்வென்று சொல்லிக் கொடுக்காது. அது தமிழர்களுக்கெதிரான தனது வக்கிர வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சியடைந்தே வந்துள்ளது. வருகிறது. வரும். இதைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத்தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டார்கள்

Anne.jpg

இதனாலே தான்தமிழீழம் என்றகொள்கையிலிருந்துநான் விலகினால்என்னை என்மெய்ப்பாதுகாவலர்களே சுடலாம்” என்று உறுதியுடன் கூறிதமிழீழம் என்ற ஒற்றைக் கனவுடனேயே வாழ்ந்து தமிழ் மக்களின்மனதில் இறையாகக் குடிகொண்டு நிற்கும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகுபிரபாகரன் அவர்களே தமிழீழம் நோக்கித்தனது இயக்க நடவடிக்கைகளை முடுக்கியவாறு பன்னாட்டு சதிவலையில் சிக்குண்டு கிடந்த தமிழர்களின் அரசியலை முள்ளில் அகப்பட்ட சேலையை மெதுவாக எடுப்பது போல மெதுவாக வெளியேற உள்ளகத் தன்னாட்சி உரிமை (Internal Self-determination), இடைக்கால தன்னாட்சி அதிகார சபை (Interim Self Governing Authority) போன்ற எமது இலட்சிய நோக்கின் மயிருக்கும் சமனில்லாத தீர்வுகளை பரிசீலிக்க இணக்கம் தெரிவிப்பது போல பீதியடையாமல் தெரிவித்து விட்டுத் தமிழீழ விடுதலை நோக்கிய இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதிலிருந்து சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஒரு துரும்பைக் கூட அதனையும் பெயரளவிற்கேனும் தீர்வாகத் தராது என்பதை எவ்வளவு தெளிவாக விடுதலைப் புலிகள் புரிந்து வைத்தார்கள் என்பது புலனாகும். எனவே இம்முறையும் அதுவே நடக்கப் போகிறது. எனவே,  சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பரிணாம வளர்ச்சிப்போக்கை முழுமையாகப் புரிந்துகொள்ளாததன் விளைவே அரசியலமைப்புச் சீர்திருத்தம் பற்றிய இப்போதைய குறைப்பேச்சுகள். 

Ranil-naai.jpg

எனவே உப்புச்சப்பில்லாமல் தீர்வு வரப் போவதாகவும் அதுவும் தமிழர்களுக்கு எதிரான தீர்வை தமிழர்களை வைத்தே சிங்களம் ஏற்றுக்கொள்ளச் செய்யப்போகின்றது என்ற குறைப்புரிதலிலிருந்து வெளிவந்து கீழ்வருவனவற்றை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்;

  • சிங்கள தேசம் தமிழர்களுக்கு ஒரு துரும்பைக் கூட அதனையும் பெயரளவிற்கேனும் தீர்வாகத் தராது. பதிலாக அது தனது தமிழர்களுக்கெதிரான வக்கிர வளர்ச்சியில் பரிணாம வளர்ச்சி எய்தியே வரும்.
  • சிங்கள பௌத்த பேரினவாத சிறிலங்கா அரச இயந்திரத்தைஆழக் கீறிஅடித்துத் தகர்த்துச் சிதைத்தெறியாமல்தமிழர்களின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத்தடுத்து நிறுத்துவதென்பது கல்லிலே நாருரிப்பதற்குஒப்பானது

எனவே, சிறிலங்கா அரச இயந்திரத்தைச் சிதைக்காமல், கட்டமைக்கப்பட்ட இனவழிப்பிலிருந்து தப்பித்து தமது தாயகத்தில் தமது இருப்பைத் தமிழர்களால் உறுதிப்படுத்த முடியாது என்பதே வெள்ளிடைமலை. விடுதலைக்குக் குறுக்கு வழி கிடையாது. மனுக் கொடுத்து ஐ.நா மன்றில் முறையிட்டுத் தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்காது. வெறென்ன வழி? அடுத்த கட்டப் பாய்ச்சலிற்குத் தமிழினம் அணியமாவது ஒன்றே ஒரே வழி. எனில் தொடர்ந்தும் ஈகம் செய்ய வேண்டியதைத் தவிர தமிழினத்திற்கு வேறு வழியில்லை.

“தமிழர் தமிழீழத்திற்காகப் போராடி தமிழீழம் மீட்டனர் என்று வரலாறு எழுதப்பட வேண்டும். இல்லை தமிழர் என்று ஒரு இனம் இருந்தது அது தமிழீழத்திற்காக உறுதியுடன் போராடி மாய்ந்தது என்று வரலாறு எழுதப்பட வேண்டும்”

-நெடுஞ்சேரன்-

2017-09-24

http://www.kaakam.com/?p=873

 

Edited by நியானி
களவிதிப்படி வெளியிலிருந்து இணைக்கப்படுபவை முழுமையாக இணைக்கப்படல் வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.