Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

16 ஆம் திகதி கேள்­வி­ எ­ழுப்பவுள்ள நாடுகள்

Featured Replies

16 ஆம் திகதி கேள்­வி­ எ­ழுப்பவுள்ள நாடுகள்

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37ஆவது கூட்­டத்­தொடர் ஜெனி­ வாவில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில்  எதிர்­வரும் 16 ஆம் திகதி இலங்கை   மனித உரிமை நில­வரம் குறித்த பூகோள  காலக்­கி­ரம மீளாய்வு குறித்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.  

கடந்த 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்­புக்கு  உட்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையின் அமு­லாக்­கத்தை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டே இந்த விவாதம் நடை­பெ­ற­வுள்­ளது.  

ஏற்­க­னவே இலங்கை குறித்த பூகோள காலக்­கி­ரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர் மாதம் நடை­பெற்­றது. அதன்­போது இலங்கை குறித்த பல்­வேறு பரிந்­து­ரைகள் அடங்­கிய அறிக்கை ஒன்றும் நிறை­வேற்­றப்­பட்­டது. அந்த அறிக்­கையில் 50 க்கும் மேற்­பட்ட நாடு­க­ளினால் 100 க்கும் மேற்­பட்ட பரிந்­து­ரைகள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் அவை திருத்­தங்­ளுடன் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தன.

இலங்கை குறித்த அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­த­தா­வது வெ ளிநாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­க­வேண்டும். அத்­துடன் . வடக்கு கிழக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வெண்டும். பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­துடன் ஐ.நா. பிரெ­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வெண்டும்.      

   காணாமல் போனோர் குறித்த அலு­வ­ல­கத்­துக்கு சுயா­தீன ஆணை­யா­ளர்­களை நிய­மிக்­க­வேண்டும். ( தற்­போது ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது) அந்த அலு­வ­ல­கத்­துக்கு தேவை­யான வளங்கள் வழங்­கப்­ப­டு­வ­துடன் சரி­யான அதி­கா­ரி­களும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இதற்கு முன்னர் காணாமல் போன­வர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்­கு­ழுக்­களின் அறிக்­கைகள் உட­ன­டி­யாக வெளி­யி­டப்­ப­ட­வேண்டும்.  

காணாமல் போதல்கள் தன்­னிச்­சை­யான தடுத்து வைத்­தல்கள் என்­பன தொடர்பில் சுயா­தீ­ன­மான விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை உறு­தி­ப­டுத்­த­வேண்டும். தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்கள் தொடர்­பான விப­ரங்­களை உற­வி­னர்­க­ளுக்கு வழங்­குங்கள்.

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரிக்க சர்­வ­தேச உத­வி­களை பெற­வேண்டும். அத்­துடன் மனித உரிமை மீறலில் ஈடு­பட்ட படை­யினர் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுங்கள். ( இந்த பரிந்­து­ரையை அமெ­ரிக்கா முன்­வைத்­தி­ருந்­தது)

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் குறித்த விசா­ர­ணை­களை ஆழ­மாக்கி குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்க வேண்டும்.

சர்­வ­தேச உத­வி­யுடன் நம்­ப­க­ர­மான பாதிக்­க­பட்ட மக்­களை கேந்­தி­ர­மாக கொண்ட பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுக்­க­வேண்டும். உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் என்­ப­ன­வற்றை நிய­மிக்­க­வேண்டும்.

2015 ஆம் ஆண்டு ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான 30 -1 என்ற பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­துங்கள். ( அமெ­ரிக்கா இந்த பரிந்­து­ரையை முன்­வைத்­தி­ருந்­தது.

அர­சி­ய­ல­மைப்பு மறு­சீ­ர­மைப்­பின்­போது அனைத்து மக்­க­ளுக்­கு­மான சமத்­துவம் உறு­தி­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். ( கனடா) பயங்­க­ர­வத தடைச் சட்­டத்தை உட­ன­டி­யாக நீக்­க­வெண்டும் ( கனடா) .

வெ ளிநாட்டு நீதி­ப­திகள் மற்றும் வழக்­க­றி­ஞர்­களை கொண்டு பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை உரு­வாக்­கு­வ­துடன் வடக்கு கிழக்கில் பொது மக்­களின் காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­க­வெண்டும். இவ்­வாறு பல்­வேறு பரிந்­து­ரைகள் இலங்கை குறித்த அறிக்­கையில் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள அமர்வில் முதலில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் உரை­யாற்­றுவார். அல் ஹுசேன் ஏற்­க­னவே இலங்கை தொடர்பில் வெ ளியிட்­டுள்ள அறிக்­கையை மேற்­கோள்­காட்­டியே ஹுசேன் கருத்து வெ ளியி­ட­வுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இலங்­கையின் சார்பில் தூதுக்­கு­ழுவின் தலைவர் உரை­யாற்­றுவார். வெ ளிவி­வ­கார அமைச்சர் திலக் மாரப்­பன இந்த விவா­தத்தில் இலங்­கையின் சார்பில் உரை­யாற்­றுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அதன் பின்னர் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள் மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச பங்­க­ளிப்­புடன் பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென தெரி­வித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் பிரே­ரணை ஒன்று நிறை­வேற்­றப்­பட்­டது. அந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது.

 

அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-03#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா:  நலம் நலமறிய ஆவல் 
எனைய நாடுகள்: நலம் ,இன்னும் மூன்று ஆண்டுகள் போதுமா பொறுப்­புக்­கூறல்க்கு .
சிறிலங்கா: அடுத்த ஆண்டு தீர்வு வழங்கப்படும்.
எனைய நாடுகள் : நன்றிகள்,சீனா ...சீனா.....
சிறிலங்கா: இந்தியா... இந்தியா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னதான் சீனாவும் இந்தியாவும் புடுங்குப்பட்டாலும் ஸ்ரீலங்கா விசயத்திலை ஒற்றுமையாய் கைகோர்த்துத்தான் நிப்பினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.