Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு

Featured Replies

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீடு

 
 

இலங்கை தமிழரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன் பத்திரிகை” வெளியீட்டு விழா நாளை காலை 09.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபை நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைகள், மதகுருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன் போது தமிழரசு கட்சியினால் ஆரம்பிக்கப்பட்ட “புதிய சுதந்திரன் பத்திரிகையானது” மட்டக்களப்பு மாவட்டத்தில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் உருவாக்கப்பட்ட “சுதந்திரன் பத்திரிகை” நாட்டின் அசாதாரண நிலை காரணமாக வெளிவராத நிலையில் தற்போது “புதிய சுதந்திரன்” எனும் பெயரில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.ujirppu.com/?p=28422

  • கருத்துக்கள உறவுகள்

புதிய   கோவை மகேசன்  யார்?

  • தொடங்கியவர்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” நாளை முதல் வெளியீடு

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழா நாளை 14ம் திகதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் , மதகுருமார்கள், இந்நாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டியவர்கள், கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

IMG_7156.jpg

 

தமிழரசுக்கட்சியின் தலைவர்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமன்றி நாளைய தினம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வுகள் இட்ம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தந்தை செல்வாவின் காலத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் ‘சுதந்திரன்’ என்ற பெயரில் ஈழத்திலிருந்து  ஒரு பத்திரிகை  வெளியான து .  சுதந்திரனின் முதல் இதழ்   1947 ம் ஆண்டு  ஜூன் 1ம்திகதி அன்று வெளியானது. ஆரம்பத்தில் நாளிதழாக வெளிவந்த சுதந்திரன் 1951 முதல் வார இதழாக வெளிவந்தது. சுதந்திரனின் முதல் ஆசிரியராக இருந்தவர் கோ. நடேசையர். 1952 – 1961 காலத்தில் எஸ். டி. சிவநாயகம் ஆசிரியராக இருந்தார். பின்னர் கோவை மகேசன் ஆசிரியரானார். 1977 வரை கொழும்பில் இருந்து வெளியான சுதந்திரன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியானது. இனக்கலவரத்தை அடுத்து ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின் மத்தியில் இந்தப்பத்திரியை வெளியீடு 1983 இறுதியில் நிறுத்தப்பட்டது.
 
35 வருடங்களின் பின்னர்  தற்போது அது புதிய பரிணாமத்தில்’ புதிய சுதந்திரன்’ எனும் பெயரில் வெளிவரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.newsuthanthiran.com/2018/03/13/இலங்கைத்-தமிழ்-அரசுக்-கட-2/

  • தொடங்கியவர்

“புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீடு

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் “புதிய சுதந்திரன்” பத்திரிகை வெளியீடு இன்று 14ஆம் திகதி புதன்கிழமை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமாகிய சி.வி.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

 
நிகழ்வில் புதிய சுதந்திரன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் எம். அகிலனிடம் இருந்து பத்திரிகையின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா நிகழ்வில் கலந்து கொண்ட பிரமுகர்களுக்குப் பிரதிகளை வழங்கி வெளியிட்டு வைத்தார்.
 
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும், உலகத் தமிழர் பேரவையின் தவைவர் இம்மானுவல் அடிகளார், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் கலாநிதி டானியல் தியாகராஜா மற்றும் இந்து, இஸ்லாமிய மதகுருமார், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ப பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
 
20180314_113016.jpg20180314_112659.jpg

http://www.newsuthanthiran.com/2018/03/14/புதிய-சுதந்திரன்-பத்திர/

  • தொடங்கியவர்

சில ஊடக நாடகத்தால் நாங்கள் பல களங்கங்கள் கற்பிக்கப்பட்டோம்

b148ddbfda6214ab4a569450ef9336ee?s=48&d=

மக்களை அழைத்து வந்து அவர்களைப் பேசச் செய்து அவர்கள் இப்படித் தான் பேசுவார்கள் என்று காட்டப்படுகின்றது, இது மென்முறையிலே வன்முறையைக் காட்டுகின்ற ஒரு ஊடக நாடகம். இவற்றாலெல்லாம் நாங்கள் களங்கம் கற்பிக்கப்பட்டோம். எனவே புதிய சுதந்திரனுக்கு பல்வேறு சோதனைகள் இருக்கும் என்கின்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொண்டு தான் சுதந்திரன் தன்னுடைய கால்களைப் பதிக்க இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்யை தினம் மட்டக்களப்பில் புதிய சுதந்திரன் பத்திரிகை வெளியீட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று புதிய சுதந்திரன் வந்திருக்கின்றது. எம்முடைய வரலாறு புதிதாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 60 ஆண்டுகளிலே நாங்கள் கடந்து வந்த பாதைகளையெல்லாம் சுக்குநூறாக்கி விடக்கூடிய விதத்திலாக முள்ளிவாய்க்கால் சம்பவம் இருந்தது. தமிழர்கள் வேரோடு சாய்ந்தனர் என்று சிங்களத் தேசிய வாதம் ஒரே நாடு ஒரே மக்கள் என்ற மகுட வாக்கியத்தோடு ஆட்சி செய்யத் தொடங்கியது. தமிழர்கள் தலைமைத்துவத்தை இழந்துவிட்டார்கள் என்று அவர்கள் கெக்களிக்கின்ற நேரத்தில் தான் 2010ல் வந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பீனிக்ஸ் பறவையாக தமிழர்களின் பிரதிநிதித்துவத்தோடு எழுந்தது. ஆனால் தனது பத்திரிகை மற்றும் வலு என எல்லாவற்றையும் இழந்ததாகத் தான் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது.

தற்போதைய பத்திரிகைகள் எல்லாம் ஏதேதோ எழுதிக்கொண்டு இருக்கின்றது, பொய்களையெல்லாம் எழுதிக் கொண்டிருக்கின்றது. அவற்றிற்கு மறுப்புத் தெரிவிக்க முடியாதவையாக இருக்கின்றது. மறுப்பினை எழுதி அனுப்பினால் கூட அதில் மிக முக்கியமான இடங்களை அகற்றிவிட்டு இடுகின்றார்கள். நாங்கள் அனுப்பும் பொருள் அதில் இருப்பதில்லை. எனவே பத்திரிகை என்பது மிகவும் முக்கியம் என்று பலராலும் எமக்கு எமது மத்திய குழுக் கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் எமது கட்சியைப் பொருத்தவரையில் எமது கட்சிக்கென்று ஒரு திரட்டு நிதி இல்லாத நிலையில் முழுக்க முழுக்க மக்கள் சக்தியோடு இருந்து கொண்டிருக்கின்ற இந்தக் கட்சியானது அதுவும் இந்தக் காலத்தில் ஒரு பத்திரிகையை நடத்துவது எவ்வாறு, அவ்வாறு பத்திரிகை நடத்தவதற்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழு மிகவும் முக்கியமானது. அந்த ஆசிரியர் குழுhமில் உள்ளவர்கள் தலைமைக்கு மிஞ்சி குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக வந்துவிட்டால் நாங்கள் பிள்ளையார் பிடிக்கப் போக குரங்காக மாறி விடுமோ என்று எச்சரிக்கைக்கு மேல் எச்சரிக்கைகளும் வந்தன. இவற்றையெல்லாம் கடந்துதான் இப்போது புதிய சுதந்திரனை நாங்கள் இங்கு கொண்டு வந்திருக்கின்றோம்.

இது மிகப் பெரிய பிரயத்தனம். எமது புலம்பெயர்ந்த உறவுகள் தான் இதற்கான உதவிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். மிகச் சிறந்த பண்பான ஆசிரியர் குழாமொன்றை நாங்கள் இங்கு கொண்டு வர வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற வகையில் மற்றவர்களின் கருத்துக்களையும் எடுத்து அவர்களுக்குப் பாடங்களாகச் சொல்லி அவர்களைத் திருந்தி வரச் சொல்லுகின்ற எழுத்துக்களை நல்குகின்ற ஒரு சுதந்திரனாக இந்தப் புதிய சுதந்திரனை நாங்கள் கொண்டவர வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

தற்போது ஊடகத்தினுடைய செயற்பாடு பல்வேறு விதமாகப் பரினமித்து நிற்கின்றது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக நிற்கும் ஊடகத்துறையின் முக்கியத்தவம் என்பது மற்றைய மூன்று துறைகளையும் உற்றதாக இருக்க வேண்டும் என்கின்ற மிகவும் வலிதானதாக இருக்கின்றது. எனவே பத்திரிகையாளர்கள் பத்திரிகை தர்மத்தைப் பேணுபவர்களாகவும், உண்மைகளைச் சொல்லுபவர்களாகவும் இருக்க வேண்டும். தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் என்று சொல்லுகின்ற போது தெரிவிக்கின்ற விடயங்கள் உண்மையான விடயங்களாக இருக்க வேண்டும்.

ஊடகங்கள் நாடகங்கள் நடத்துவதை நாங்கள் காண்கிறோம். மக்களை அழைத்து வந்து அவர்களைப் பேசச் செய்து அவர்கள் இப்படித் தான் பேசுவார்கள் என்று காட்டுகின்றார்கள். இது ஊடகம் அல்ல இது நாடகம். இது மென்முறையிலே வன்முறையைக் காட்டுகின்ற ஒரு நாடகம். இவற்றாலெல்லாம் நாங்கள் களங்கம் கற்பிக்கப்பட்டோம்.

எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் மிது இரண்டு கோடி என்ற கதை சொல்லப்பட்டு நாங்கள் இந்தத் தேர்தல் காலத்திலே மிகவும் கஷ்டமான ஒரு நிலைமையை அனுபவித்திருந்தோம். அந்தப் பொய்கள் மக்களிடைய மிக வேகமாகச் சென்றடைந்த அதற்கு இன்றைய ஊடகங்களின் விரிவாக்கம் காரணம். தற்போது முகநூல்கள் என்பவை முகமூடி நூல்களாக மாறிவிட்டன.

ஒருவன் தன்னுடைய எழுத்தக்குப் பொறுப்புக் கூற வேண்டும். அதில் அவர் முகத்தைக் காட்ட வேண்டும். ஒவ்வொருவரும் தன்னுடைய வார்த்தையை வெளியில் விட்டால் அதற்குப் பொறுப்புக் கூறுபவராக இருக்க வேண்டும் அதுதான் எழுத்துச் சுதந்திரம். அரசியலமைப்புச் சட்டத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற எழுத்தச் சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம் என்பன சொல்லுகின்ற எழுத்துச் சுதந்திரம் என்பது ஜனநாயக முறையிலே இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் பல ஊடக எழுத்தாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் முகநூல்கள் எழுத்துக்களை தங்கள் பாட்டிலே எழுதுகின்றன.

தற்போது கண்டியில் இடம்பெற்ற நிலைமையை அடுத்து இந்த முகநூல்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இதனால் நல்ல பலாபலன்கள் ஏற்பட்டிருக்கின்றது என்ற பல கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. ஆனால் இது ஜனநாயக சுதந்திரத்திலே கைவைக்கின்ற ஒன்று என்ற விடயத்தினையும், சுதந்திரம் என்பது கட்டப்பாடு இல்லாதது அல்ல என்பதையும் கருத்திலே கொண்டு, இனிமேல் இந்த முகநூல்கள் தொடர்பாக சட்டவிதிகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன என அறிகின்றோம்.

அவ்வாறு வருகின்ற போது ஒவ்வொருவரும் தங்களுடைய முகநூல் கணக்கு தொடர்பாக வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும், அவதூறான செய்திகள் வருகின்ற போது அவை தொடர்பாக முறைப்பாடு செய்கின்ற ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என்றும், அந்த முறைப்பாடுகளை குறிப்பிட்டவருக்கு அனுப்பி மூன்று நாட்களிலே அவர் அதற்கான விளக்கத்தைக் கொடுக்காத சந்தர்ப்பத்திலே ஏழு நாட்களிலே அவருடைய கணக்கு முடக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையின் அடிப்படையிலே முகநூல் தொடர்பில் இவ்வாறான கட்டப்பாடுகள் வர இருப்பதாக அறிகின்றோம். இது எழுத்துக்கும் கருத்து வெளியிடுகின்ற சுதந்திரத்திற்கும் இன்றியமையாத ஒன்று என்ற வகையிலே இந்த முகநூல்கள் இனிமேல் முகமூடி நூல்களாக இல்லாமல் வெளிப்பிடைத் தன்மையாக இருக்கும் என்று நான் நினைக்கின்றேன்

இப்போது இருக்கின்ற இந்த மின் ஊடகங்ளைப் பொருத்தவரையிலே செய்திகள் உடனுக்குடன் அனுப்பப்படுகின்றன. இளைஞர்கள் எல்லாம் இணையம், கைபேசி என்பவற்றில் தங்கி இருக்கின்றார்கள். இவற்றோடும் எமது பத்திரிகைகள் போட்டி போட இருக்கின்றன. எனவே புதிய சுதந்திரனுக்கு பல்வேறு சோதனைகள் இருக்கும் என்கின்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொண்டு தான் சுதந்திரன் தன்னுடைய கால்களைப் பதிக்க இருக்கின்றது என்று தெரிவித்தார்.

vlcsnap-2018-03-15-14h05m27s238.pngvlcsnap-2018-03-15-14h08m04s14.pngvlcsnap-2018-03-15-14h08m30s20.pngvlcsnap-2018-03-15-14h08m48s196.pngvlcsnap-2018-03-15-14h09m13s190.pngvlcsnap-2018-03-15-14h10m27s179.png

http://www.newsuthanthiran.com/2018/03/15/சில-ஊடக-நாடகத்தால்-நாங்க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.