Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்க இந்தியா இணக்கம்

Featured Replies

இலங்கைப் படையினருக்கு தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்க இந்தியா இணக்கம்!

இலங்கைப்படையினருக்கு தொடர்ந் தும் இராணுவப் பயிற்சிகளை வழங்க இந்தியா உடன்பாட்டுக்கு வந்திருக் கின்றது என்று இந்தியத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல் லாகம மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற பேச் சின்போதே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் பேச்சில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து, நீண்ட கலந்துரையாடல் நடைபெற்ற தாக வெளிவிவ கார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் இலங்கை இந்திய கூட்டுக்கடற் படை ரோந்து தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த ரோந்து குறித்துப் பரிசீலனை

இதுவரை காலமும் கூட்டுரோந்து நடவடிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வந்த இலங்கை முதன் முதலாக ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கை என்ற புதிய வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது புதிய மாற்றமாகக் கருதப்படும் என்று இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கையின் இந்த யோசனை குறித்து, இந்தியா பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கை விவகாரங்களை புதுடில்லியிலிருந்து கையாளும் ஸ்பெயின், பெல்ஜியம், கொஸ்டரிக்கா மற்றும் செக்குடியரசு ஆகியன உட்பட 16 ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை நேற்றுமுன்தினம் வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருந்தார் எனவும் கூறப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தடைவிதித்திருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து அந்நாடுகளில் நிதிதிரட்டுகின்றனர் எனவும், அந்த நிதி ஆயுததளபாடங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்பட்டிருப்பதாகவ

சொந்த மக்களின் நலனை விட நாற்காலி வெறி பிடித்த மனிதாபிமானமற்ற கூட்டம்

எம்மை பற்றியா கவலைப் படப்போகிறார்கள்

தமிழ் நாட்டுமக்கள் மத்திய அரசை நோக்கி கட்சிபேதங்கள் அற்று ஒன்றுபட்டு போரட்டங்கள் முன்னர் போன்று நடத்தினால் தான் சரி. வடக்கு கிழக்கு மாகணங்களை பிரித்ததற்கு கோவிக்க வேண்டிய இந்தியா, தமிழ் நாட்டு மீனவர்களை

தொடர்ந்து கொலைகளை பார்த்துக் கொண்டு தமிழ் நாட்டு மக்களையே தன் நாட்டு மக்களாக நினைக்காத இந்தியா , ஈழத்தமிழ் மக்களுக்கு உதவி செய்யாட்டியும் உபத்திரமாவது செய்யாமல் இருக்கும் என்று இருந்தோம்... ஆனால் மிகசிறிய நாடாகிய இலங்கை எவ்வளவு தந்திரமாக பெரிய நாடாகிய இந்தியாவையும் உலகத்தையும் ஏமாற்றுகிறது. இனி வாழ்வா சாவா போரட்டம் தான்?....

  • கருத்துக்கள உறவுகள்

உதிலை ஒரு பிரச்சினையுமில்லை தாராளமாக பயிற்சியை கொடுங்கோ. உங்க பயிற்சியெல்லாம் எங்களுக்குத் தெரியாத பயிற்சியா? அதாவது எப்படி தப்பியோடுவது என்பதைப் பற்றியது தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை.. அதே போன்று புலிகள் ஏமாறவும் இல்லை..

இது தமிழர்களுக்கு எப்போதோ தெரியும்..!.. இந்தியா வந்து எமக்கு விடிவு தரும் என்று நாம் ஒருபோதும் கனவு கண்டதுகூட இல்லை..

தாங்கள் பட்ட அநுபவங்கள் அதன் மூலம் பெற்ற பின்னடைவு

இதைத்தானே கொடுக்கப் போகின்றார்கள். அந்த மூலோபாயங்

களிலிருந்து புலிகள் எப்போதோ மாறிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பாதுகாப்பு அமைச்சர் எ.கே.அந்தோணிதான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாப் பாராளுமன்றத்தில், தமிழக மினவர்களை இலங்கை அரசாங்கம் கொல்வதில்லை என்று சொன்னவர். எல்லா நாடுகளும் தங்களது சுய லாபத்துக்காகவே நடந்துகொள்ளும். அகிம்சை, தர்மம் என்று பேசுவது எல்லாம் வெறும் பேச்சில் மட்டும் தான். அவங்களுக்கு தமிழன் செத்தால் என்ன? உயிரோடு இருந்தால் என்ன?, தாங்கள் நல்லாய் இருந்தால் போதும். சிட்னியில சில ஈழத்தமிழர்கள் மாவீரர்தினத்துக்கு போகமாட்டினம். ஆனால் தங்கட நண்பர்கள் கேட்டதற்காக இந்திய சுதந்திர தினத்துக்கு போய், தங்கட பிள்ளைகளை நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த பாதுகாப்பு அமைச்சர் எ.கே.அந்தோணிதான் சில நாட்களுக்கு முன்பு இந்தியாப் பாராளுமன்றத்தில், தமிழக மினவர்களை இலங்கை அரசாங்கம் கொல்வதில்லை என்று சொன்னவர். எல்லா நாடுகளும் தங்களது சுய லாபத்துக்காகவே நடந்துகொள்ளும். அகிம்சை, தர்மம் என்று பேசுவது எல்லாம் வெறும் பேச்சில் மட்டும் தான். அவங்களுக்கு தமிழன் செத்தால் என்ன? உயிரோடு இருந்தால் என்ன?, தாங்கள் நல்லாய் இருந்தால் போதும். சிட்னியில சில ஈழத்தமிழர்கள் மாவீரர்தினத்துக்கு போகமாட்டினம். ஆனால் தங்கட நண்பர்கள் கேட்டதற்காக இந்திய சுதந்திர தினத்துக்கு போய், தங்கட பிள்ளைகளை நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவினம்.

********************************************************************

சகோதரா கந்தப்பு நான் தொடர்ந்தும் எவ்வளவு காலத்திற்கு கேடுகெட்ட தமிழனாக இருக்கப்போகிறேன்?

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரா கந்தப்பு நான் தொடர்ந்தும் எவ்வளவு காலத்திற்கு கேடுகெட்ட தமிழனாக இருக்கப்போகிறேன்?

நீங்கள் சொல்வது விளங்கவில்லை. தெளிவாகச் சொல்லுங்கள்

  • தொடங்கியவர்

இந்தியா பொல்லுக் கொடுத்து அடிவாங்கிறத்துக்கு தயாரகிறது என்று நினைக்கிறேன், வாங்கட்டும் நல்லா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழர்களாகிய நீங்கள் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய இந்தியப் பாதுகாப்பு அதிகார மையத்தில் இருக்கும் கீழ்க்கண்ட நபர்களைப் பாருங்கள்....

1.ஏ.கே.அந்தோணி - பாதுகாப்புத்துறை அமைச்சர்

2. எம்.கே.நாராயணன் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்த மனிதர் முன்பு இந்திய அமைதிப் படை இலங்கையில் இருந்த போது இந்திய உள்நாட்டு உளவு அமைப்பின் தலைவராக இருந்தவர்.ஜே.என்.தீட்சித் சமீபத்தில் இறந்த பிறகு இவர் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.ஜே.என்.தீட்ச

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"" ஈழத்தமிழர்களாகிய 'நீங்கள்' ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.""

உங்களைப் பொறுத்தவரை என்னை அயலவராகவே கருதுகிறீர்கள் என்று நினைக்கிறேன்

(கப்பல் பயணிக்கு வானவில் வரவேற்ப்பைப் பாருங்கள்)

என்னைப்பொறுத்தவரை நான் ஈழத்தமிழர் தமிழகத் தமிழர் என்று வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை.

நான் நாற்பத்தேழில்(1947)இருந்துதான் இந்தியன். ஆனால் நாள் தோன்றிய காலம் முதலாய்த் தமிழன்.

- கப்பல் பயணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோபமான வார்த்தைகளும் தீர்க்கம் இல்லாத அறிக்கைகளும் நிதர்சனம் இல்லாத ஆய்வுகளும் தற்காலிய மனநிறைவுக்காக செய்யபடும் செயல்களும் தமிழர் வாழ்கையை வழபடுத்தது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

- பண்டார வன்னியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 14:29

சிறிலங்கா, இந்தியக் கடற்பரப்பில் இரண்டு கடற்படையினரும் இணைந்து கூட்டுரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

சென்னையிலுள்ள அ.தி.மு.க. அலுவலகத்துக்கு நேற்று சென்றிருந்த ஜெயலலிதா, ஊடகவியலாளர்களிடம் கருத்துக் கூறும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இந்துசமுத்திரக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன், இந்தியக் கடற்படையினர் கூட்டுரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது எனக் குறிப்பிட்ட அவர், இந்த விடயம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்திருக்கம் யோசனையை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளார்.

இலங்கை, இந்திய கடற்பரப்பில் இடம்பெறும் அசம்பாவிதங்களுக்கு கூட்டுரோந்து தீர்வாக அமையாது. இந்தியக் கடற்படையினரை அதிகளவில் பணியில் ஈடுபடுத்தி இந்தியக் கடல் எல்லையையும், இந்திய மீனவர்களையும் காப்பாற்ற முடியும். ஆனால் கூட்டுரோந்து யோசனையை ஏற்றுக்கொள்ளக் கூடாது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாதெனவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் றோகித்த போகல்லாகம, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முஹர்ஜி மற்றும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து கூட்டுரோந்து நடவடிக்கை பற்றிப் பேச்சுக்களை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹே ராம்!

ஹே காந்தி தேசமே!

காந்தியையே கொன்ற தேசமே!

எத்தனை முறை குளிப்பாட்டி பொட்டு வைத்தாலும்

கிழவன் குமரன் ஆவானா?

எத்தனை பயிற்சிகள் கொடுத்தாலும்

ஒரு கூலிப்படை ஒரு விடுதலை படைக்கு ஈடாகுமா?

பிணத்திற்கு அளிக்கும் பயிற்சி

ஒரு இனத்தின் விடுதலையை தடுத்திடுமா?

அகிலத்திற்கே ஆன்மீகம் சொல்லித் தந்த பாரத மாதா!

உன்னை சாக்கடையில் குளிப்பாட்டி இவர்கள் குட்டி அமெரிக்கா ஆக்க பார்க்கிறார்கள்

உன் புண்ணிய பூமியின் ஆன்மா உனை ஆள்வோருக்கு புரிந்திருந்தால்

பக்கத்து நாட்டில் ஒரு சிறு இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியிலும்

அரசியல் லாபம் தேடும் அநாகரீகம் செய்ய மாட்டார்கள்.

தர்மம் வெல்லும்! தர்மம் வெல்லும்! என்று தானே கீதை சொல்கிறது.

ஹே பாரதத்தின் அரசியல் பிதாமகர்களே, நீங்கள் தமிழனை தோற்கடிக்க முயற்சிக்கவில்லை!

கீதையை தோற்கடிக்க முயற்சி செய்கிறீர்கள். முடியுமா உங்களால்?

வினாஷாய ச்துஸ்க்ருதாம் சம்பவாமி யுகே யுகே!

அநீதிக்கு எதிராக ஆயுதம் தூக்குவது பயங்கரவாதம் என்றால்

அன்று அர்ச்சுனனை நோக்கி அநீதியை அழிக்க காண்டீபம் தூக்க சொன்ன

கண்ணனும் பயங்கரவாதி தான்.

சாமாதானம் இனி சரிவராது

சண்டை தான் கௌரவர்களின் அநீதிக்கு தீர்வு என்று சொன்ன

கண்ணன் என்ன போர்வெறியனா?

திருப்பதிக்கு போய் மொட்டை போட்டு

உண்டியலில் கட்டு கட்டாய் நோட்டுக்களை போட்டால் மட்டும் போததாது.

கண்ணன் சொன்ன தர்மம் கொஞ்சமாவது புரிய வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காஇ இந்தியக் கடற்பரப்பில் இரண்டு கடற்படையினரும் இணைந்து கூட்டுரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவது ஆபத்தானது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.

nஐயலலிதா எமக்கு எதிராக செயற்படுபவராக இருந்தாலும்

சில விடங்களில் மிகவும் தீரமான முடிவுகளை எடுக்க பின்னிற்பதில்லை.

என்னைப்பொறுத்தவரை இப்படியான தலைவர்கள் இந்தியாவில் மிகக்குறைவு.

இந்தியாவிற்கு இப்படியான தலைவர்கள்நிச்சயமாக தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.