Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்

Featured Replies

இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்

இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா ஸ்வராஜ்படத்தின் காப்புரிமைPRAKASH SINGH/AFP/GETTY IMAGES

செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், ஐ.எஸ் குழுவால் கடத்தப்பட்ட 40 பேரில், ஹர்ஜீத் என்பவர் மட்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறியதால், தப்பித்ததாக தெரிவித்துள்ளார்.

இறந்தவர்கள் மரபணுவை, அவர்களின் உறவினர்களின் மரபணுவுடன் ஒப்பிட்டு பார்த்து இதை உறுதி செய்ததாக அவர் கூறியுள்ளார். உயிரிழந்தவர்களில் 31 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். நான்கு பேர் இமாச்சல பிரதேசத்தையும், மற்றவர்கள் ,மேற்கு வங்கம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள் ஆவர்.

இறந்தவர்களின் உடல், புதைக்கப்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ், அவை அனைத்தும் ஒரே குழியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்: சுஷ்மா ஸ்வராஜ்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உறவினர்களின் மரபணு மாதிரிகள் நான்கு மாநிலங்களிலிருந்து பெறப்பட்டது என்றும், பின் அவை சோதனைக்கு அனுப்பப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தீப் என்ற இளைஞரின் மரபணுவே முதலில் பொருந்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிஎன்ஏ பரிசோதனையை தவிர பெரிய ஆதாரங்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/india-43468676

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு பேருமே, இஸ்லாத்துக்கு மாறி உயிர் தப்பி இருந்திருக்கலாமே... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் காரர் என்றால் ஒரு வழி பண்ணி இருப்பார்கள். 4வது பெரிய இராணுவத்தை வைத்துக்கொண்டு சிறிய நாடுகளுடன் சொறிய மட்டுமே இவர்களால் முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
42 minutes ago, nunavilan said:

இஸ்ரேல் காரர் என்றால் ஒரு வழி பண்ணி இருப்பார்கள். 4வது பெரிய இராணுவத்தை வைத்துக்கொண்டு சிறிய நாடுகளுடன் சொறிய மட்டுமே இவர்களால் முடியும்.

சொறிய இல்லை வீரம் காட்ட எண்டு சொல்லுங்கோ...:grin:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

சொறிய இல்லை வீரம் காட்ட எண்டு சொல்லுங்கோ...:grin:

காட்டுத் தீயில் சிக்கிய மாணவர்களை மீட்க, இரவில், இராணுவ விமானிக்கு கண் சரியா தெரியாது, காலையில் பார்க்கலாம் என்று சொல்லும் பாதுகாப்பு அமைச்சர் கொண்ட நாடு....

தீ வெளிச்சமாவது இருக்குமே என்று கேடடால் பதில் இல்லை.

அப்புறம்...?

17 hours ago, nunavilan said:

இஸ்ரேல் காரர் என்றால் ஒரு வழி பண்ணி இருப்பார்கள். 4வது பெரிய இராணுவத்தை வைத்துக்கொண்டு சிறிய நாடுகளுடன் சொறிய மட்டுமே இவர்களால் முடியும்.

 

  • தொடங்கியவர்

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழு பின்னணி

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் மரணமும் மரபணு சோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

ஈராக்கில் உள்ள மொசூல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், போதிய ஆதாரம் இல்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும் என்று கூறி இருந்தார்.

அவர்கள் கடத்தப்பட்டதிலிருந்து, இந்திய அரசு அவர்கள் உயிருடன் இருப்பதாகவே கூறி வந்தது. அவர்களை உயிருடன் மீட்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றது.

இப்படியான சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறி உள்ளார்.

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 உடல்களில், டி.என்.ஏ பரிசோதனையில் 38 உடல்கள் இந்தியர்களுடையது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு உடல் காணாமல் போனவரின் உடலுடன் 70 சதவீதம் மட்டுமே பொருந்துகிறது.

இதில் 31 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைSUKHCHARAN PREET/BBC

என்ன நடந்தது?

இராக்கில் 2014 ஆம் ஆண்டு 80 பேர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்கள். அதில் 40 பேர் இந்தியர்கள்; 40 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.

இந்த விவகாரம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வந்தது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

கடைசியாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, ஜூலை 27, 2017ஆம் தேதி இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறு முடியாது என்று அரசு கூறியது.

இதே ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கும் உடன் இருந்தார்.

அதன் பிறகு வி.கே. சிங், இராக் பயணமானார்.

தப்பியவரின் வாக்குமூலம்

அப்போது மொசூலில் இருந்து தப்பி இந்தியா வந்த ஹர்ஜீத் மஸீஹ், அனைவரும் ஐ. எஸ் அமைப்பால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு கூறினார். ஆனால், இது பொய் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.

இராக் பயணமான வி.கே.சிங் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் தலைவரை சந்தித்தார்.

மொசூலை ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிய பின் அனைவரையும் அங்கிருந்து வெளியேற சொன்னார்கள், ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. ஒரு நாள் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை பார்த்துவிட்டனர். இனி இவர்கள் அங்கே தங்க கூடாது என்று சொன்ன ஐ.எஸ் அமைப்பினர். அனைவரையும் ஒரு துணி ஆலையில் தங்க வைத்துள்ளனர்.

பின் அங்கிருந்து வங்க தேசத்தினரை மட்டும் இர்பில்லுக்கு அழைத்து சென்றனர். வங்க தேசம் சென்ற குழுவுடன் ஹர்ஜீத்தும், அலி என்ற பெயரை மாற்றி சென்றார் என்று சுஷ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைRAVINDER SINGH ROBIN/BBC

பின் ஹர்ஜீத் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறை தண்டனையும் அனுபவித்தார்.

பிபிசியிடம் பேசிய ஹர்ஜீத், "நான் அப்போதே 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றேன். ஆனால், நான் பொய் சொல்கிறேன் என்றார்கள். என்னை சிறையிலும் அடைத்தார்கள். இப்போது அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜே சொல்கிறார். அரசு அனைவரையும் தவறாக வழிநடத்தி உள்ளது. நான் எந்த பொய்யும் சொல்லவில்லை. அரசுதான் பொய் சொல்லி இருக்கிறது என்று நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

மொசூல் நகரத்தின் கதை

2014 ஆம் ஆண்டு, ஐ.எஸ் அமைப்பு இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தை கைப்பற்றியது.

இராக் ராணுவம், குர்து போராளிகள், பழங்குடிகள் ஐ,எஸ்-க்கு எதிராக போராடினர். அமெரிக்க வான்படையும் ஐ.எஸ்-க்கு எதிராக போராடியது.

இராக்கில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரம் - முழுப் பின்னணிபடத்தின் காப்புரிமைSUKHCHARANPREET/BBC

ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகரத்தை முழுவதுமாக சிதைத்தது. கட்டடங்களை தகர்த்தது.

மில்லியன் கணக்கான மக்கள் அந்த நகரத்திலிருந்து தப்பி சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டனர்.

ஒரு நீண்ட போருக்குப் பின் 2017 ஆம் ஆண்டு, இராக் பிரதமர் ஹைதர் அல்- அபைதி, மொசூல் நகரம் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.

ஒரு பில்லியன் டாலர் தேவை

மீண்டும் நகரத்தை நிர்மாணிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என்று ஐ.நா அமைப்பு கூறி இருந்தது.

சர்வதேச அகதிகள் நிறுவனம் ஏறத்தாழ எட்டு லட்சம் மக்கள் வீடுகளை விட்டு,, வேறு இடங்களுக்கு குடிபெர்யர்ந்துள்ளதாக கூறுகிறது.

http://www.bbc.com/tamil/india-43476781

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.