Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து

Featured Replies

அரசின் அசமந்தப்போக்கை கண்டித்து கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும் : ஐ.நா. பிரதிநிதிகளிடம் சுமந்திரன் வலியுறுத்து 

 

(ஆர்.யசி)

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்  மற்றும் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி  யாவசிடாவையும், அமெரிக்காவின்  ஐ.நாவுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவர் கேலி கரியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  இன்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். 

sumanthiran.jpg

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் மந்தகதி போக்கினை கருத்தில் கொண்டு நாளைய கூட்டத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்கா வரவேற்க வேண்டும் என்பதையும்  அவர்   வலியுறுத்தியுள்ளார். 

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள எம். ஏ. சுமந்திரன்  அங்கு இந்த  சந்திப்பை  நடத்தியுள்ளார்.  

இது குறித்து அவர்  மேலும் கூறுகையில்,  

எமது முதலாவது கூட்டத்திலே ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன்  மற்றும் அவருடன் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான மாரி  யாவசிடா ஆகிய இருவரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தோம். 

அண்மையில் இவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தவர்கள். அவர்களுக்கு இலங்கையின் நிலைமை நன்றாகவே தெரியும். அவர்களுடன் உலக தமிழர் பிரதிநிதிகள் தங்களுடைய நிலைபாட்டையும் முன்வைத்தனர். உலக தமிழர் பேரவையினர் எவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருந்தனர் என்றும் எவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பினை வழங்கினார்கள் என்றும் குறிப்பிட்டனர். 

 

எனினும் இப்போது இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமாக நகரவில்லை, முன்னேற்றகரமான நகர்வுகளில் பல தாமதங்கள் உள்ளன. குறிப்பாக பொறுப்புக்கூறல் விடயத்தில் இருந்து விலகுகின்ற தன்மையினை தொடர்ந்தும் வெளிப்படுத்திவரும்  காரணத்தினால் நாளை நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சில கடுமையான முடிவுகளை சர்வதேச சமூகம் எடுத்தாக வேண்டும் என்பதை மிகவும் திடமாக வலியுறுத்தியிருந்தனர். 

இதன்போது  கருத்து கூறிய அதிகாரிகள் - இது நாடுகளுடைய பேரவை, ஆகவே  நாடுகள் தான் அதற்கான தீர்மானங்களை எடுக்க வேண்டும். எனினும் தங்களுடைய பங்களிப்பை தாம் சரியாக  செய்வதாக  அதிகாரிகள் எமக்கு உறுதியளித்தனர். 

மேலும் இரண்டாம் கூட்டத்தில் அமெரிக்காவின்  ஐ.நா.வுக்கான தூதரகத்தில் உதவித் தூதுவரை சந்தித்தோம். கேலி கரி என்கின்ற தூதுவர்தான் வெளிவிவகார விவகாரங்களுக்கும் பொறுப்பாக உள்ளார். ஆகவே  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் விடுகின்ற அறிக்கையை தொடர்ந்து ஒவ்வொரு நாடும் தமது நிலைபாட்டை முன்வைக்கும்.     அதை அமெரிக்கா முன்னின்று வலியுறுத்த வேண்டும் என்றும் உயரிஸ்தானிகரின் புதிய யோசனைகளை அமெரிக்க வரவேற்க வேண்டும் என்பதையும்  நாங்கள் கேட்டுக்கொண்டோம். அவர்கள் கூறும் விடயங்கள் அதற்கு பதில் கூறும் நிலைப்பாடுகளில் அமெரிக்கா  கடுமையான ஒரு நிலைபாட்டை கைக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அவரும் அதற்கு சாதகமான பதிலை கொண்டுத்திருந்தார் எனக் குறிப்பிட்டார். 

http://www.virakesari.lk/article/31809

  • தொடங்கியவர்

நியூயோர்க்கில் ஐ.நா, அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுமந்திரன் பேச்சு

 

sumanthiran-GTF-feltmanஅமெரிக்காவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையி்னருடன் இணைந்து, ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.

சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், மாற்றுவழிகளை ஆராயுமாறு உறுப்பு நாடுகளைப் பரிந்துரைக்கப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, மாற்று வழிமுறைகளில் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறவைப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார்.

sumanthiran-GTF-feltman

sumanthiran-GTF-Kelly Currie

அவர், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அடிகளார், பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திர உள்ளிட்டவர்களுடன் இணைந்து,  நியூயோர்க்கில், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மேரி ஜமாசிட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அதேவேளை, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தில், அமெரிக்காவின்  ஐ.நாவுக்கான  பதில் துணைத் தூதுவர் கெல்லி கியூரி அம்மையாரையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நாளை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நகர்கவுளை முன்னெடுப்பது பற்றி இந்தச் சந்திப்புகளின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.puthinappalakai.net/2018/03/20/news/29924

  • கருத்துக்கள உறவுகள்

அரசின் அசமந்தா போக்கை எதிர் கட்சியான நீங்களே கண்டிக்கவில்லை, ஐ நா கண்டிக்க வேண்டுமாம்,

ஏன் ஐயா இந்த நாடகம்?

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளுருக்குள் செருப்பு மாலை காத்துகொண்டு இருக்குது எண்டவுடன் ஆள் இப்படி பிலிம் காட்ட வெளிக்கிட்டு விட்டார் . எழுதி வைத்து கொள்ளுங்கள் இவரால் ஒண்டும் பிடுங்க முடியாது சும்மா சவுண்டுதான் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்

Du7ONjJV?format=jpg&name=600x314

செய்ய வேண்டிய வேலைகளை விட்டு விட்டு ஆகாசத்தில் பறக்கிறார் சுமத்திரன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.