Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

TNAயின் நிலைப்பாட்டால் EPDPயின் களங்கம் களையப்பட்டது – முன்னணி ஆதரவு கோரவில்லை…

Featured Replies

TNAயின் நிலைப்பாட்டால் EPDPயின் களங்கம் களையப்பட்டது – முன்னணி ஆதரவு கோரவில்லை…

EPDP-Jegan-Remeediyas.jpg?resize=800%2C5

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

 

“எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள்”

எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எங்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பது வெளிப்பட்டு உள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளரும் , யாழ்.மாநகர சபை உறுப்பினருமான வி.கே.ஜெகன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

எங்கள் மீது குற்றசாட்டுக்களை அடுக்கியவர்கள் இன்று எமது ஆதரவு வேண்டி நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எம் மீது குற்றசாட்டுக்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் தான் சுமத்தினார்கள் என்பது வெளிவந்துள்ளது. எங்கள் மீதான குற்ற சாட்டுக்கள் பொய் என்பது நிரூபணமாகி உள்ளது.

அதேவேளை உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மை பெற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க நாம் வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது என தீர்மானித்து இருந்தோம்.

அதனால் கூட்டமைப்பினர் எங்களுடன் பேசி இருந்தார்கள். அதனால் நாங்கள் ஆதரவு வழங்கினோம். அதற்காக நாங்கள் அவர்களுடன் ஒருபோதும் கூட்டு சேர மாட்டோம். கூட்டமைப்புடன் கூட்டு சேர கூடிய எந்த சந்தர்ப்பமும் இல்லை நாம் எமது கட்சி கொள்கைகளை தான் முன்னெடுத்து செல்வோம்.

தீவகம் எமது இதய வாசல். நேற்று வேலணை பிரதேச சபையை கைப்பற்ற கூட்டமைப்பினர் முயன்றனர். இதய வாசலில் தொட முயற்சித்தால் நாம் விடமாட்டோம். அதனால் நாம் ஏற்கனவே தேசிய கட்சியான ஸ்ரீலங்கா பெரமுன கட்சியுடன் பேசி இருந்தோம். அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளோம்.

ஏனைய சபைகளில் ஆட்சி அமைக்க தமக்கு ஆதரவு தாருங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எம்மிடம் கோரவில்லை. அதனால் அவர்களுக்கு நாம் ஆதரவு வழங்க வில்லை. என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/72854/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, நவீனன் said:

எங்களை ஒட்டுக்குழு கொலைகார்கள் என்றவர்கள் இன்று எங்கள் ஆதரவை கேட்டு நிற்கின்றார்கள். அதன் மூலம் அவர்கள் எங்கள் மீது சுமத்திய குற்றசாட்டுக்கள் அனைத்தும் பொய் என்பது வெளிப்பட்டு உள்ளது

  இதன்மூலம்  அவர்களும் நீங்களும் ஒன்று என்பது நிரூபணமாகி உள்ளது. நீங்கள் ஒட்டி இருந்து கூடி அழித்தீர்கள். அவர்கள் எட்டி இருந்து அங்கீகாரம் அளித்து எல்லாம் வெற்றியாய் முடிந்தபின் அறிவியுங்கள் வாறோம் என்று கொண்டாட வந்தார்கள். நீங்கள் ஒட்டுக்குழு,அவர்கள் எட்டப்பர் குழு. இதுதான் உண்மை. அதை மறைத்து இப்படி கதையை மாத்துகிறீர்களே.  

இதற்கு சுமந்திரனின் பதில் எப்படி அமையப்போகிறது?  நீங்களும் நாங்களும் ஒன்றுதான் நண்பரே, வாருங்கள்  வந்து எங்களுடன்  ஒன்றாய் பந்தியில் அமருங்கள். விருந்து உண்டு கழிப்போம், இந்த நல்ல நாளை நான் ஆவலோடு எதிர்பாத்திருந்தேன் என்பாரா?

  • கருத்துக்கள உறவுகள்

அன்று துரோகி என்ற த தே கூ வாயால் இன்று தோழா என்று அழைக்கிறது......

இன்று தமிழ் அரசியலில் என்ன நடக்கிறது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழினத்தின் துரோகி என்று தமிழரசுக் கட்சி கூறி வந்தது.

தமிழரசுக் கட்சிக்கு ஆதரவான ஊடகங்கள் அதனை முதன்மைப்படுத்திப் பிரசுரித்தன.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபை, சாவகச்சேரி நகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி யைக் கைப்பற்றும் ஆசையில் டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை தமிழரசுக் கட்சி நாடியது.

இதோ சம்பாசணை (கற்பனை)

சேனாதி: ஐயா! நீங்கள் உதவி செய்தால்; ஆதரவு தந்தால் நாங்கள் யாழ். மாநகர சபையிலும் சாவகச்சேரி நகர சபையிலும் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

தேவா: தமிழரசுக் கட்சியின் தலைவர்களே! நீங்கள் என்னைத் துரோகி என்றீர்கள். என் கட்சிக்காரர்களை ஈபிடிபி என்று வெறுப்பாகப் பேசினீர்கள். இதன் பின் எப்படி உங்களை நாம் ஆதரிக்க முடியும்.

சேனாதி:ஐயனே! மன்னித்தருள்க. காலசூழ் நிலை அப்படியாகச் செய்துவிட்டது. இப்போது அதற்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்கிறோம்.

தேவா: அப்படியா! துரோகி என்ற வாயால் தோழர் என்று பாடுக.

சேனாதி:ஐயனே! ஒருமுறையல்ல பலமுறை பாடுவோம்.

தோழர் எனும் நாமம் கொண்ட தேவா! நமக்குத் தேவை எனும் போது ஆதரவு தரும் நாதா...

அன்று பித்தா என்ற பிழை போல் இன்று நாம் செய்த பிழை பொறுத்தருளி யாழ். மாநகர சபை முதல்வர் பதவி நமக்கே ஆக தந்திடுக தேவா

நின் ஆதரவைத் தந்திடுக நாதா.

தேவா: நல்லம் நல்லம். தந்தோம். தந்தது தெரியாமல் தந்தோம். நம் ஆதரவு உமக்கே என்பது மக்களுக்குப் புரியாமல் தந்தோம். ஆதரவு பெற்றிடுக நம் அன்பன் சட்டத்தரணி போட்டியிட்டே உன்னவரை முதல்வர் ஆக்குவார். காப்பார். அருள் தருவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.