Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புறுபுறுப்பு: புலப் பெயர்வுப் புழுக்கம்

Featured Replies

திருமணத்திற்கு நாட் குறிக்கப்ட்டு ஆயத்தங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் அதற்கு ஐந்தோ ஆறோ நாட்களிற்கு முன்னர் மணமகனின் 91 வயது தாத்தா இறந்து போனார். இதனால் திருமணத்தை ஒத்தி வைக்க மணமகன் வீட்டில் விருப்பம். ஆனால் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை.

திருமணத்திற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் பிணம் என்று பெயர் மாற்றம் பெற்ற தாத்தாவின் இறுதிக் கிரிகைகள் காலையில் நடைபெற, மாலையில் திருமணத்திற்குப் பொன் உருக்கு திட்டமிடப்பட்டபடி நடக்க எற்பாடு ஆனது. மணமகன் தாயார் உட்பட அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து பொன்னுருக்கில் பங்கேற்க மறுக்க, மணமகன் மட்டும் பெண் வீட்டாரால் இழவு வீட்டில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டு பொன் உருக்கப்பட்டது. இரு நாட்களில் கலியாணம்.

மணமகனின் பெற்றோர் சகோதரம் முதற் கொண்டு எவருமே கலியாணத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு மணமகனின் சகோதரி, தான் முன்னர் ஒத்துக்கொண்டதைப்போல இனிமேல் தோளியாகப் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறி விட்டார். இந்த நிலையில், பெண் வீட்டார் மும்முரமாக முயன்று, யாரோ ஒரு மணமகன் பக்கத்து தூரத்து உறவை தோளியாகப் பங்கேற்குமாறு ஒளுங்கு செய்துள்ளார்கள். அத்தோடு கலியாணம் குறித்த முகுர்த்தத்தில் நடந்தே தீருமென பெண் வீட்டார் முடிவாக இருக்கின்றார்கள். அத்தோடு பெண்ணும் மாப்பிள்யையும் தேன் நிலவு செல்வதற்கும் விமான சீட்டுக்கள் உறுதி செய்யப்ட்டுள்ளன.

அது சரி இந்த மணமகன் என்ன மனுசனா இல்லை.. எண்ணம் எழுகிறது.

விசாரித்த போது, இத்தம்பதியரிற்கு இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வருடங்களிற்கு முன்னர் பதிவுத் திருமணம் நடந்து முடிந்து விட்டதாம். அத்தோடு பெண்ணும் பையனும் ஒன்றாகத் தான் வாழ்கிறார்களாம். மணமகனின் பெற்றோர் மணமகனோடு தான் இருக்க வேண்டிய நிர்ப்பந்தமாம். அப்படி அவர்களுடன் சேர்ந்திருப்பதற்கு தான் ஒத்துக் கொள்ள வேண்டுமாயின் மாப்பிள்ளை குறித்த நாளில் தாலி கட்டியே ஆக வேண்டும் என்பதே பெண்ணின் துரம்புச் சீட்டாம்!

அது சரி, இது என்ன கலியாணம் ஒரு நாள் விளையாட்டா? இந்த சின்ன விடயத்தில் கூட விட்டுக் கொடுப்போ புரிந்துணர்வோ இல்லாதவர்கள் எப்படித் தம்பதியர்களாகப் பல்லாண்டு குப்பை கொட்டப் போகிறார்கள்? மற்றும் இந்த அன்பு, பாசம், காதல,; பரிவு இப்படியெல்லாம் சமாச்சாரங்கள் இருப்பதாய் சொல்கிறார்களே அது இப்ப இல்லையா? இந்த மணமகன்என்ன மடையனா? கடலில இது ஒண்டு மட்டும் தான் மீனா என்று பொங்கி எழுந்து ஒருவர் விசாரித்ததில் தெரிந்தது மாப்பிள்ளைக்கு இந்தப் பெண் தான் உலகமாம், தெய்வீகக் காதலாம்.

இதெல்லாம் ஒரு கலியாணம் இதுக்கெல்லாம் ஒரு செலவு..என்னத்தைச் சொல்ல...

(எதுவுமே கற்பனை இல்லை)

Edited by Innumoruvan

தாத்தாவின் ஆவி உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணத்திற்கு நாட் குறிக்கப்ட்டு ஆயத்தங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் அதற்கு ஐந்தோ ஆறோ நாட்களிற்கு முன்னர் மணமகனின் 91 வயது தாத்தா இறந்து போனார். இதனால் திருமணத்தை ஒத்தி வைக்க மணமகன் வீட்டில் விருப்பம். ஆனால் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை.

திருமணத்திற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் பிணம் என்று பெயர் மாற்றம் பெற்ற தாத்தாவின் இறுதிக் கிரிகைகள் காலையில் நடைபெற, மாலையில் திருமணத்திற்குப் பொன் உருக்கு திட்டமிடப்பட்டபடி நடக்க எற்பாடு ஆனது. மணமகன் தாயார் உட்பட அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து பொன்னுருக்கில் பங்கேற்க மறுக்க, மணமகன் மட்டும் பெண் வீட்டாரால் இழவு வீட்டில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டு பொன் உருக்கப்பட்டது. இரு நாட்களில் கலியாணம்.

மணமகனின் பெற்றோர் சகோதரம் முதற் கொண்டு எவருமே கலியாணத்தில் பங்கு கொள்ள மாட்டோம் என ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளனர். அத்தோடு மணமகனின் சகோதரி, தான் முன்னர் ஒத்துக்கொண்டதைப்போல இனிமேல் தோளியாகப் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறி விட்டார். இந்த நிலையில், பெண் வீட்டார் மும்முரமாக முயன்று, யாரோ ஒரு மணமகன் பக்கத்து தூரத்து உறவை தோளியாகப் பங்கேற்குமாறு ஒளுங்கு செய்துள்ளார்கள். அத்தோடு கலியாணம் குறித்த முகுர்த்தத்தில் நடந்தே தீருமென பெண் வீட்டார் முடிவாக இருக்கின்றார்கள். அத்தோடு பெண்ணும் மாப்பிள்யையும் தேன் நிலவு செல்வதற்கும் விமான சீட்டுக்கள் உறுதி செய்யப்ட்டுள்ளன.

அது சரி இந்த மணமகன் என்ன மனுசனா இல்லை.. எண்ணம் எழுகிறது.

விசாரித்த போது, இத்தம்பதியரிற்கு இற்றைக்கு ஏறக்குறைய மூன்று வருடங்களிற்கு முன்னர் பதிவுத் திருமணம் நடந்து முடிந்து விட்டதாம். அத்தோடு பெண்ணும் பையனும் ஒன்றாகத் தான் வாழ்கிறார்களாம். மணமகனின் பெற்றோர் மணமகனோடு தான் இருக்க வேண்டிய நிர்ப்பந்தமாம். அப்படி அவர்களுடன் சேர்ந்திருப்பதற்கு தான் ஒத்துக் கொள்ள வேண்டுமாயின் மாப்பிள்ளை குறித்த நாளில் தாலி கட்டியே ஆக வேண்டும் என்பதே பெண்ணின் துரம்புச் சீட்டாம்!

அது சரி, இது என்ன கலியாணம் ஒரு நாள் விளையாட்டா? இந்த சின்ன விடயத்தில் கூட விட்டுக் கொடுப்போ புரிந்துணர்வோ இல்லாதவர்கள் எப்படித் தம்பதியர்களாகப் பல்லாண்டு குப்பை கொட்டப் போகிறார்கள்? மற்றும் இந்த அன்பு, பாசம், காதல,; பரிவு இப்படியெல்லாம் சமாச்சாரங்கள் இருப்பதாய் சொல்கிறார்களே அது இப்ப இல்லையா? இந்த மணமகன்என்ன மடையனா? கடலில இது ஒண்டு மட்டும் தான் மீனா என்று பொங்கி எழுந்து ஒருவர் விசாரித்ததில் தெரிந்தது மாப்பிள்ளைக்கு இந்தப் பெண் தான் உலகமாம், தெய்வீகக் காதலாம்.

இதெல்லாம் ஒரு கலியாணம் இதுக்கெல்லாம் ஒரு செலவு..என்னத்தைச் சொல்ல...

(எதுவுமே கற்பனை இல்லை)<<<

அட! நீங்க வேற!!மூன்று வருசமா அவ காதலிச்சதே பெரிய விசயம் அதையும் விட ஏமாற்றாமல் கட்டிக்கொண்டது இன்னும் பெரிய விசயம்.!

இப்படித்தான் இருக்கு! இங்கத்தையை இயந்திர வாழ்க்கை முறை!.

அவர்களின் திருமண வாழ்க்கை நிறைவாய் இருக்க ஆண்டவன் தான் அருள் புரியோணும்! ஏனெனில். ஒரு வருடத் திதி செய்ய முதல் திருமணம் செய்தது பெரும்பிழை! இதெல்லாம் எங்க விளங்கப்போகுது!. ?! காலம் கலி!...

  • தொடங்கியவர்

இதில திதி முதலிய விடயங்களிற்கு மேல எனக்குப் புரியாதது என்ன வென்றால் 91 வருசம் இந்த உலகத்தில் வாழ்நத ஒரு மனிதரின் இறப்பை வெறும்ஐந்து நாட்கள் கூட அனுட்டிக்க முடியாது எங்கு மனிதம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பது தான்.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தாவின் ஆவி உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல....

அல்ல .....அல்ல..........அல்ல.........அதையும் தாண்டி கேவலமானது...து......து......து.... நான் துப்பவில்லை அது எதிரொலி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பிள்ளைக்கு இந்தப் பெண் தான் உலகமாம், தெய்வீகக் காதலாம்.

கொஞ்ச நாள் போகத்தெரியும். தெய்வீகக் காதலா இல்லையா என்று(மனிசியிட்ட அடி வாங்கும் போது).

  • கருத்துக்கள உறவுகள்

தம்பதியருக்கு என்ன கடன் தொல்லையா? "பணச்சடங்கு" வைத்து பரிசுப் பொருட்களையும், "மொய்"யையும் வாங்கித்தான் தீர்க்கவேண்டிய தேவையோ தெரியவில்லை!

ஒரு கிழண்டிப் போன தாத்தாதானே மோசம் போனார். இதில் கவலைப்பட என்ன இருக்கின்றது? ஹனிமூனுக்கு (இரண்டாம் தடவை?) போகப் புக் பண்ணிய ரிக்கற்றை வீணாக்க மனம் வருமா?

அது சரி.. இப்படிப் பட்ட கலியாணத்திற்குப் போகிறவர்களைப் பற்றியும் ஒரு நாலு வார்த்தை??

அது சரி.. இப்படிப் பட்ட கலியாணத்திற்குப் போகிறவர்களைப் பற்றியும் ஒரு நாலு வார்த்தை??

சொல்ல வார்தையில்லை :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற நிகழ்வுகள் புலம் பெயர்ந்த நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மண்டபத்துக்கான பணம், விமான டிக்கெட் இப்படி பல ஆயத்தங்களின் செலவினங்களைப்பற்றி யோசித்தார்களோ தெரியவில்லை.

இது போன்று நடப்பதற்கு தெரியவில்லை.

சில மாதங்களுக்கு முன் கொழும்பில் ஒரு சம்பவம்.

திருமணம் நடப்பதற்கு முன் இரண்டு நாட்களுக்கு முன் மணப்பெண்ணின் அம்மம்மா இறந்து போனா. அந்தநிலையிலும் அம்மம்மா வின் மரணச் சடங்கும், நடைபெற்று குறிப்பிட்ட நாளில் திருமணமும் சிறப்பாக நடைபெற்றது.

மரணச்சடங்கு வேறு ஒருவரால் நடத்தப்பட்டது. இறந்தவரின் மகள் மரணச்சடங்கில் (மணப்பெண்ணின் தாயார்) கலந்து கொள்ளவில்லை.

பெற்றுவளர்த்த தாயின் இறுதிக்கிரியைகளில் மகள் அருகே இருந்தும், கலந்து கொள்ளாதது பற்றி என்ன சொல்வது...........?

இதுவெல்லாம் காலத்தின் கோலம் என்பதா?

இது போன்ற நிகழ்வுகள் இன்னும் வரும்.

கொஞ்ச நாள் போகத்தெரியும். தெய்வீகக் காதலா இல்லையா என்று(மனிசியிட்ட அடி வாங்கும் போது).

கந்தப்புவுக்கு அநுபவம் போல

:rolleyes:

தினமும் வாங்கிறதாச்சே

அது உங்களுக்கும் தெறியுமா..........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.