Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை….

Featured Replies

புலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை….

maithri.jpg?resize=568%2C354
பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை (புலிகளை) தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக, இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற, சிறப்பு கூட்டத்தொடரில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை நிகழ்த்திய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்திய அவர், “கடந்த மூன்றரை வருடங்களாக சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்பை பெற்று புலிகளின் அந்தக் கொள்கையினை தோல்வியுறச் செய்வதற்கு நான் முயற்சித்தேன் எனினும் யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை கையாள்வது என்பது மிகுந்த சவாலாகும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்ற சமயம் அச்சவாலுக்கான விடைதேடும் பணி ஏழு வருடங்களால் தாமதமாகி இருந்ததனால் அவை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளாகியிருந்தது. மூன்று தசாப்தங்களாக சமூகத்தில் வேரூன்றியிருந்த போர் மனநிலையினை அகற்றி சகவாழ்வினை ஏற்படுத்துவதற்கு இன்னும் எம்மால் பாரிய வேலைகளை செய்ய வேண்டி இருக்கின்றது. ஒரு அரசாங்கத்தினால் மாத்திரம் அதனை செய்வது கடினமாகும். அதற்கு சமூகத்தின் அனைத்து தரப்புகளினதும் நேரடிப் பங்களிப்பு கட்டாயமாகத் தேவைப்படுகின்றது. அதனால் அந்த நோக்கை அடைவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோமென அனைத்து தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.”. எனதட் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பாக “நாட்டின் நிலையான அடித்தளம் தேசிய நல்லிணக்கமே ஆகும். உண்மையான தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்மானங்களை இயற்றத்தக்க கட்டமைப்பினை அறிமுகப்படுத்த வேண்டும். அந்த நோக்கை வெற்றிகொள்வதற்கு தற்போது செயலில் இருந்துவரும் மாகாண சபை முறைமையை மேலும் பலப்படுத்துவது காலத்தின் தேவையாகும் என நம்புகிறேன். அத்துடன் எவ்வாறான விமர்சனங்கள் எழுந்த போதிலும் வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் எனவும் தனது கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேன தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/2018/78224/

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் எனவும் தனது கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேன தெரிவித்துள்ளார்.

உங்களின் தமிழ் மக்களுக்கு எதிரான மறைமுக திட்டங்களை தமிழ் மக்கள் நன்கே அறிவர். அவர்களை ஏமாற்ற முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருக்காலும் லண்டனுக்கு வந்திட்டுப் போனால்.. இப்படிச் சிங்கள பெளத்த பேரினாவதத் திமிர் தலைவர்கள் பேசிக் கொள்வது வழமை. 

புலிகளின் சித்தாந்தம் என்ற ஒன்றில்லை. அவை தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள். அது தந்தை செல்வநாயகம் காலம் தொடங்கி நீள்கிறது. விடுதலைப் புலிகள் அந்த நியாயத்தை தமிழ் மக்களுக்கான இராணுவ வடிவில் நின்று பெற முனைந்தார்கள். 

அதனை பயங்கரவாதமாகச் சித்தரித்து.. ஹிந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் தனது சுய லாபங்களுக்காக நசுக்கிக் கொண்டுள்ளது. அதில் சிங்கள பெளத்த பேரின வெறியர்கள் வெற்றி விழாக் கொண்டாடுகிறார்கள். அவ்வளவே.

இது ஒருபோதும் தமிழ் மக்களின் வரலாற்று நியாயங்களையும் நிகழ் கால அவர்கள் உரிமைகளையும் நியாயங்களையும் கொல்ல முடியாது. அது வெல்லப்படும் வரை வளர்ந்து கொண்டிருக்கும்.. வாழ்ந்து கொண்டிருக்கும். அந்தக் கொள்கைகளுக்காக உயிர் கொடுத்த புலிகளும் நினைவில் வைக்கப்பட்டுக்கொண்டே இருப்பர். அவர்களையும் பெளதீக ரீதியில் அழித்திருக்கலாம்.. ஆனால் தத்துவார்த்த ரீதியில் அழிக்கவோ.. வெல்லவோ முடியாது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நவீனன் said:

புலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை….

maithri.jpg?resize=568%2C354
பௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை (புலிகளை) தோற்கடிக்க முடிந்த போதிலும் அவர்களின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு இன்னும் முடியாதுள்ளதாக, சனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். 

 

வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டுமாயின் மக்களின் விருப்பத்தையும் இணக்கப்பாட்டையும் பெற்ற அரசியல் வேலைத்திட்டமொன்றினை ஆரம்பித்தல் வேண்டும் 

காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம், அதுபோல் சிங்கள இனவாதிகளுக்கு புலிகள் என்றால் பயங்கரவாதிகள்.

புலிகளின் கொள்கைகொண்ட வடக்கு கிழக்கு மக்களின் மனங்களை வெல்லவேண்டும் என்று சனாதிபதி கூறுவதின் பொருள் என்ன.?? அவரின் பார்வையில் வடகிழக்கு மக்கள் அனைவரும் பயங்கரவாதிகளே.!! :( :shocked:

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.