Jump to content

மழை நின்ற காலத்தில்...


Recommended Posts

மழை நின்ற காலத்தில்...  

 

 
k2

 


குருவாயூர் கோயிலில் லட்டு கிருஷ்ணனின் தரிசனத்துக்காக வரிசையில் காத்து நின்றிருந்தேன். 
விசேஷ நாள் கிடையாது தான். என்றாலும் கூட்டம் இருந்தது. எதிரே துலாபாரத்தில் ஒரு
சிறுமியை உட்கார வைத்து எடைக்கு எடை நேந்திரம் காய்களை காணிக்கைக் கொடை தந்து கொண்டிருந்தார்கள். உள்ளே பூஜை நடந்து கொண்டிருக்க கொஞ்ச நேரமாகக் காத்திருப்பு.
யாரோ என் தோளைத் தொட திரும்பினேன்.
"நிங்ஙள அவிட யாரோ விளிக்குன்னு...''
அந்தப் பெரியவர் கை காட்டின திசையில் நோக்கினேன். எனக்குப் பின் வரிசையில், பத்திருபது பேர் தள்ளிக் கைக்குழந்தையுடன் நின்றிருந்த அந்தப் பெண் உற்சாகமாகக் கையாட்டினாள்.
யார் இவள்...? குழப்பத்துடன் "என்னையா?' என்பது போல் சைகை காட்ட அவள் சிரித்தபடி "ஆமாம்' என்பதாக பெரிதாகத் தலையாட்டினாள்.
அந்த முகம்... அந்த சிரிப்பு... கால் நொடியில் சிந்தனை, மூளை முழுவதும் பரவி ஞாபக செல்களைத் தட்டி எழுப்பி... அட, இது மினி... சிஸ்டர் மினி.
உற்சாகமாகப் புன்னகைத்து தலையாட்டினேன்.
இதுவே தமிழ்நாடு என்றால் அவளை முன்னே வரவழைத்துப் பேசலாம். கேரளா என்பதால் நான் பின்னே சென்று அவளுடன் சேர்ந்து கொண்டேன்.
"எந்தா ஏட்டா... மினியை அடையாளம் கண்டோ...?''
"மினி... எப்படியிருக்கே மினி...? எவ்வளவு வருஷமாச்சு உன்னைப் பார்த்து...''
"ம்... அதாச்சு ஏழெட்டு வருஷம் ஏட்டா...''
"யாரு மினி உன்னோட குழந்தையா...?''
"அதே. அசுவதிக் குட்டி... அங்கிளுக்கு குட்மானிங் பறையு...'' 
அவள் சொல்ல அதுவும் தன் இடது கையை நெற்றி மேல் வைத்து "மார்னி...'' என்றது.
"ஏட்டா... இது எண்ட அம்மை...''
அருகிலிருந்த அவள் தாயை அறிமுகம் செய்தாள்.
"ஞான் ஆஸ்பத்திரில ஜோலில இருந்தப்போ ஏட்டனோட அம்மைக்கு ட்ரீட்மென்ட் நோக்கான் வேண்டி ஏட்டன் அவிட வந்துட்டுண்டு...''
"ஓ...'' என்றவள் என்னிடம் திரும்பி "அம்மே இப்போ எங்கன உண்டு...? சுகந்தானே...''
"அம்மே...'' மினி தாயை அடிக்குரலில் அதட்டினாள்.
"ஏட்டனோட அம்மே இப்போ இல்லே. மரிச்சுப் போயி...'' என்று சொல்ல அவள் பதட்டமாகி "úஸôரி úஸôரி...'' என்றாள் வேகமாக.
"நோ ப்ராப்ளம்'' என்றேன் புன்னகையோடு. 
"ஏன் மினி கல்யாணமே கழிக்க மாட்டேன்னு சொன்ன...?''
"கடைசி வரை வேணாம்னு தான் பிரஸ்னம் பண்ணினா. சரியான மண்டை வேதனை. நானாக்கும் கம்பெல் பண்ணி செஞ்சு வச்சது...''
"எண்ட மாமன் மகன் தான் அவரு ஏட்டா.''
"சந்தோசமா இருக்கேல்ல மினி...? அது போதும். நர்ஸ் யூனிபார்மில உன்னைப் பார்த்தது... இப்போ திடீர்னு சேலைல பார்த்ததும் ஆள் அடையாளமே தெரியலே மினி''
"அதாக்கும்! செரி உங்க சம்சாரம் வரலையா...? ஒரு மகன் தானே...?''
"ம்... ரெண்டு பேருமே வரலை மினி. தனியாத் தான் வந்திருக்கேன்..''
கூட்டம் மெல்ல நகரத் துவங்கியது.
"அப்புறம் ஆஸ்பிட்டல் எப்படியிருக்கு மினி, ஜோசப் டாக்டரு எப்பிடியிருக்காரு...?''
"ஓ. நான் இப்போ அங்கே இல்லே ஏட்டா. வேற ஆஸ்பிடல் போயி...''
"ஓ அப்படியா...''
"அம்மையை என்னால மறக்கவே முடியாது ராஜேஸ் ஏட்டா. அம்மை இப்பவும் என்னோட கனவுல வந்துட்டுண்டு. வெல்லம் கேட்கும். சிரிக்கும்.''
திடீரென்று குழந்தை அழுதாள்.
"எந்தா குட்டி... மோளுக்கு பசிக்குதா'' என்று முந்தானையை விலக்கி விட்டுக் கொண்டாள்.
முன்புறம் திரும்பிக் கொண்டேன். அவள் பற்ற வைத்த அம்மாவின் ஞாபகத் தீ என்னுள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது...

 

அப்பாவைக் குறித்தான பெரிய நினைவுகள் என் மனதில் தேங்கியிருக்கவில்லை.
அவரிடமிருந்து அடிக்கும் சிகரெட் வாடையும், முரட்டுத்தனமான அணைப்பும், சைக்கிளில் என்னைப் பின்புறம் உட்கார வைத்துக்கொண்டு இரவுக்காட்சி என்று சினிமா அழைத்துப் போனதும், தப்புந் தவறுமாக நான் சொல்லும் இங்கிலீஸ் எஸ்úஸக்களைக் கேட்டு ரசிப்பதும்... அழுத்தமாகப் பதிவதற்குள்ளாகவே எனது பன்னிரெண்டாவது வயதில் லாரி விபத்தில் அவர் பிரிந்து போனார்.
அதன் பிறகு எனக்கு அம்மா தான் அப்பா.
சொந்த வீடும், அப்பாவின் இன்சூரன்ஸ் பணமும் எத்தனை நாள் துணைக்கு வரும்...?
அரைகுறையாகத் தனக்குத் தெரிந்த தையல் தொழிலை மேம்படுத்தி வீட்டின் முன்புறம் தையல் மெசின்களைப் போட்டு உழைப்பின் உன்னதம் உணர்த்தினதும், படிப்பு மட்டுமே கடைசி வரை துணை என்று அதன் அருமை புரிய வைத்ததும், நல்ல நட்புகளின் உறவு உண்டாக்கி, உலகம் உணர்த்தி உயர்வு உண்டாக்கியதும்... அவர் தான்.
"சே பாவம்... அப்பா இல்லாத பையன்' என்ற உணர்வு எனக்கே கூடத் தோன்ற விடாது வளர்த்த விதம் என்ன சொல்ல...
நன்றாகப் படித்தேன். எனது சுய முன்னேற்றமே அவளது சந்தோசத்திற்கான ஒரே காரணமாக அமையும் என்பதை புரிந்தே இருந்தேன். கல்லூரி முடித்த இரண்டாவது வாரத்திலேயே நான்கைந்து வாய்ப்புகள் தேடி வர அம்மாதான் எனக்கான வேலையைத் தேர்ந்தெடுத்தாள்.
"பெரிய கம்பெனில வேணாம். உன்னைக் காணாமப் பண்ணிடுவாங்க. சின்ன கம்பெனியும் வேணாம். உன்னோட திறமையை வீணடிச்சிடுவாங்க. வளர்ந்துட்டு வர்ற கம்பெனியா பாரு. நீயும் வளர்ந்து அவங்களையும் வளர்த்திடலாம்...''
அம்மாவின் கணிப்பு சரியானதாகவே இருந்தது. தேசம் முழுக்க கிளைகள் விரித்து பெரிதான முன்னேற்றம் அடையத் துடிக்கும் ஒரு நம்பிக்கையான நிதி நிறுவனத்தின் பொறுப்பில் அமர்ந்தேன். வேலையின் தன்மை உணர்ந்து, நிறைகள் பெருக்கி, தவறுகள் களைந்து... இரண்டு வருடத்தில் மூன்று பதவி உயர்வுகள் தேடி வந்தன. வெளிநாடு வந்தேன். தலைமைக்கு அடுத்த இடத்தில் இருப்பவருடன் நினைத்த நேரத்தில் பேசும் அதிகாரம். வீடு எடுத்தேன். அம்மாவின் பெயரில் ஆனந்த வீடு. 
அதே பிறந்தநாளில் அம்மா தொடங்கிவிட்டாள் திருமணப் பேச்சினை. 
"இதான் சரியான நேரம்டா... கல்யாணம் பண்ணிக்கோ''
"சரி உன் விருப்பம்'' என்று சொல்ல, பறந்து பறந்து தேடி எனக்காக தனலட்சுமியை திருமணம் செய்து வைத்தாள்.
தனலட்சுமிக்கு அவள் இன்னொரு தாய். 
நம்பகமான ஒரு ட்ராவல் ஏஜன்சி மூலம் காசி, கயா, மதுரா என்று உள்நாட்டிலும் , இலங்கை, மலேசியா என்று வெளிநாடுகளுக்கும் டூர் அனுப்பி வைத்தேன். கண்புரை சிகிச்சை செய்து கொண்டாள். லேசான மூட்டு வலி அவஸ்தை இருந்து வந்தது. 
அவள் ஆசைப்பட்டபடியே முதல் வாரிசாக அண்ணாமலை பிறந்தான். கண்ணுக்குள் வைத்து கவனித்துக் கொண்டாள்.
நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது வாழ்க்கை. அல்லது நான் தான் அப்படி தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேனோ? திடீரென்று ஒரு நாள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தாள். எழுப்பி நிறுத்த, மீண்டும் தொப்பென்று சரிந்து விழுந்தாள். ஏன் இப்படி, எதனால் என ஒருவருக்கும் புரியவில்லை. மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஓடினோம்.
மறுதினம் அவள் நிலை இன்னும் மோசமானது. இடது கையும், இடது காலும் முடங்கிப் போனது. கண்ணீர் விட்டுக் கதறினாள். 
"நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ணலையேடா''
அவளைத் தேற்றினேன். நியூரோ சர்ஜன் வந்தார். பொய் சுத்தியலால் மூட்டுகளைத் தட்டி, " இங்கே வலிக்குதா... இங்கே வலிக்குதா'' என்றார். மொன்னை ஆணியால் பாதம் கீறி ஏதாவது தெரியுதா என்று உணர்ச்சி
களைப் பரிசோதித்தார். சொன்னார்:
"பேராலைசிஸ் அட்டாக்'' - முடக்குவாதம்
இடிந்து போனேன் என்பதைவிட உடைந்துபோனேன் என்பதே நிஜம். 
அடுத்து வந்த நாட்கள் இன்னும் கொடூரமானதாகவே அமைந்தன. அவளது வாய் ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டுவிட்டது. அத்தனை கோபத்திலும் ஏதோ கருணை காட்டியதுபோல ஆண்டவனின் செயல் அமைந்தது. கோணிப் போன வாய் மட்டும் இரண்டொரு தினங்களில் தானாகவே சரியாகிப் போனது. 
அதுபோல கை, கால் முடமும் குணமாகிவிடும் என்று நம்பினேன். ஆனால் அது நடக்கவேயில்லை. 
இட்லியும், ரச சோறும் மட்டுமே சாப்பிட்டாள்.
தினசரி இரண்டு முறை நடைப்பயிற்சிக்கு பிசியோதெரபிஸ்ட் பயிற்சி. ஏராளமான மாத்திரைகள். தூக்கம் வர, யூரின் போக, மோசன் போக, நிறுத்த...
நானும் தனலெட்சுமியும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம். அண்ணாமலை அவளின் கை பிடித்து இழுத்து, "வாங்க பாத்தி... வீட்டுக்குப் போகலாம்'' என்று அடம்பிடித்து அழுதான். 
டாக்டர் என்னை அழைத்திருந்தார். 
"என்ன பண்ணப் போறீங்க ராஜேஷ்? இந்த விஷயத்துக்கு இங்கே ட்ரீட்மெண்ட் இப்படித்தான். இவ்வளவுதான். மத்த டாக்டர்ஸ் மாதிரி பொய்யாப் பேசி, பணத்தைக் கறக்க மாட்டேன். வேற ஏது பண்றதுக்கும் அவங்க உடம்பு தாங்காது. வயசாகி உழைச்சு தேஞ்ச உடம்பு. வேற ஏதாவது பண்ணி நீங்களும் கெடுத்திடாதீங்க. ஒவ்வொரு உறுப்பா தேய்மானம் அடைஞ்சிட்டிருக்கு. வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க. கூடவே இருங்க. தேவையானதை கேட்காமலேயே செய்து கொடுங்க. ரிஸ்க் எடுக்க வேணாம் ராஜேஷ்''
எனக்கு உண்டான கோபத்துக்கு பல்லைக் கடித்துக் கொண்டே வெளியே வந்துவிட்டேன். இவரென்ன டாக்டரா? ஞானியா?
டிஸ்சார்ஜ் செய்து அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தேன். ஆபிஸ் மறந்தேன். நெட்டில் தேடி மருத்துவ ஆலோசனைகள் கவனித்தேன். அம்மாவின் கட்டை விரல் ரேகை உருட்டி நாடி ஜோதிடம் பார்த்தேன். நோய்காண்டத்தில் சொன்ன பரிகாரங்களைச் செய்தேன்.
வீட்டிற்கே லேடி பிஸியோ தெரபிஸ்ட் தினசரி இரண்டு வேளை வந்து அம்மாவுக்குப் பயிற்சிகள் தந்து நடக்க வைக்க முயற்சிகள் தந்தாள். அம்மாவால் ஏதும் முடியவில்லை.
யாரோ சொன்னார்கள் என்றுதான் கோவைக்கும், பாலக்காட்டிற்கும் இடையே அமைந்திருக்கும் அந்த ஆயுர்வேத மருத்துவமனை பற்றித் தெரிந்து கொள்ள சென்றிருந்தேன். 
டாக்டர் தன்னம்பிக்கையோடு பேசினார். "சாரோட அம்மாவைப் போல நிறைய பேசன்டுங்க இவிட உண்டு. எங்களோட உழிச்சல், பிழிச்சல் ட்ரீட்மென்ட் நோயை சீக்கிரமா குணமாக்கித் தரும்''
என் வாழ்நாளில் நான் செய்த மிகப் பெரிய குற்றம் அவரின் வார்த்தைகளை நம்பி அம்மாவை அங்கே கொண்டு போய்ச் சேர்த்ததுதான். 
அம்மாவின் உடலில் மூலிகைகள் தேய்த்து, ஆயில் தடவி, மரக்கட்டிலில் படுக்க வைத்து ஊற வைப்பார்கள்.
குறிப்பிட்ட நேரம் கழித்து குளியல். குளிகை, கசாயம் என்ற பெயரில் திட, திரவ மருந்துகள்.
அந்தச் சிகிச்சையின் சரியாக மூன்றாவது நாளில் அம்மா ரத்த வாந்தி எடுத்தாள். பெரிய டாக்டர் வந்து பார்தார். 
"சிலருக்கு இந்த ட்ரீட்மென்ட் அலர்ஜியாகிவிடும். பக்கத்திலேயே நம்மளோட டயாபடிக் ஹாஸ்பிடல் உண்டு. அங்கே சேர்த்துடுங்க. நாலஞ்சு நாள் போகட்டும்''
அந்த மருத்துவமனையின் ஐ.சி.யூ.வில் அம்மாவைச் சேர்ப்பித்தேன். மிகவும் சோர்ந்து போயிருந்தாள். இடையில் இருந்த தெம்பு கூட காணாமல் போயிருந்தது. யூரின் போக சிரமம் என்று ட்யூப் சொருகிவிட்டார்கள். செயற்கை சுவாசத்துக்கு மூச்சுக் குழாய், நாசியருகே, நெஞ்சருகே துளையிட்டு அதிலும் ஒரு குழாய்.
"கடவுளே'' உள்ளூர அலறினேன் நான்.
ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று டாக்டர் அப்போதே சொன்னதை மதித்திருக்கலாமோ...
நான் இவளைக் காப்பாற்றுகிறேனா... இல்லை கஷ்டப்படுத்துகிறேனா...
அந்த மருத்துவமனையில் வைத்துத்தான் மினியைச் சந்தித்தேன். குழந்தை முகமும், கருணை உள்ளமும் நிறைந்திருந்தாள். என் கையைப் பிடித்து அவள் சொன்ன ஒற்றை வார்த்தையில் என் பாதித் துக்கம் கரைந்து போனது. 
"கரையாண்டா சாரே... இனி சாரோட அம்மே என்னோட அம்மே''
சொன்னபடியே அம்மாவை அப்படி கவனித்துக் கொண்டாள். எந்த அசூயையும், சின்ன முகச்சுழிப்பும் அவளிடம் இல்லை. அம்மாவைச் சுத்தம் செய்து விடுவதில் இருந்து அவள் தேவைகளைக் கவனித்து சோறுட்டி, பாதுகாத்து, சன்னமான குரலில் பாடல்கள் பாடி, ஜோக் சொல்லி... என்னைப் பார்த்தால் அழுதிடும் அம்மா அவளிடம் ஆசுவாசமாக இருந்தாள்.
சரியா ஆறாம் நாள் காலை நான்கு மணி இருக்கலாம். அறைக் கதவு படபடவென்று தட்டப்பட்டது.
"சாரே வேகம் வாரும். நிங்களோட அம்மைக்கு குறைச்சு சீரியசாயிட்டுண்டு''
பதற்றமாக இறங்கி கீழே வந்தேன். அவளின் அறை பரபரப்பாக இருந்தது. டாக்டர்களும், நர்சுகளும் உள்ளே வருவதும் , போவதும் ஏதேதோ சாதனங்கள் கொண்டு போவதும்...
அரை மணி நேரம் கழித்து பெரிய டாக்டர் வருத்தமான முகத்துடன் வெளியே வந்து....

 

"எந்தா ஏட்டா கரையுன்னு''
மினி என் தோளைத் தொட நிகழ்காலம் திரும்பினேன். தரிசனம் முடிந்து கோயில் சன்னதி விட்டு வெளியே வந்தோம்.
"என் கூட வா மினி''
அவளை அழைத்துக் கொண்டு அருகில் இருந்த நகைக்கடைக்குள் நுழைந்தேன். 
"எந்தா ஏட்டா'' என்றாள் புரியாமல்.
அவள் மறுக்க, மறுக்க குழந்தைக்கு அரைப் பவுனில் செயின் வாங்கித் தந்தேன். 
"அன்னைக்கே உனக்கு ஏதாவது செஞ்சிருக்கணும். அப்போ இருந்த பதட்டத்தில, துக்கத்தில என்ன பண்றதுன்னே புரியலே... நைட் டுயூட்டின்றதாலே நீயும் இருக்கலை. ஊருக்கு வந்த பின்னாடி உன்னோட ஞாபகம் வந்துட்டேயிருந்தது. இப்போ உனக்கு பண்ணினதாலே எனக்கு ஒரு மனதிருப்தி. அம்மாவும் சந்தோசப்படுவாங்க''
"என்டே ஹஸ்பெண்ட் கொல்லும்'' என்று புலம்பினாள்.
சமாதானம் செய்வித்து என் விசிட்டிங் கார்டைத் தந்தேன்.
"ஏதாவதுன்னா கூப்பிடு என்ன''
என்னோட ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
"வர்றேன் ராஜேஷ் ஏட்டா பை''

***************

அம்மாவின் நினைவுகளுடனே பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.
அம்மா இல்லாதது பெரும் துக்கமாகவே இருந்து வருகிறது. அவள் இன்னும் கொஞ்சகாலம் என்னுடன் இருந்திருக்கலாம். அதற்குள் அம்மா அவசரப்பட்டு....
அவ்வளவு பெரிய ஆள் பேருந்திற்குள் வாய் விட்டுக் கதறி அழுதது எல்லாரையும் பதற வைத்துவிட்டது.
"ஏ... எந்தா எந்தா...''
"என்னங்க... என்னாச்சு?''
"அம்மா... அம்மா....''
"அம்மாவுக்கு என்னாச்சு? உடம்பு சரியில்லையா?''
"செத்துப் போயிட்டாங்க''
"அடப் பாவமே... இப்போவா''
"எட்டு வருசத்துக்கு முன்னாடி''
"எந்தா எட்டு வருசம் கழிஞ்சோ'' பின் வாங்கினார்கள். 
"யோவ் எத்தனை வருஷம் போனா என்னய்யா. அம்மா அம்மா தானேய்யா''
"சரி சாரே சரி.. கரையண்டா'' தண்ணீர் பாட்டில் தந்தார்கள்.
இத்தனை காலமும் அவள் செத்துப் போன துக்கத்தைப் போலவே மனதை உறுத்தும் இன்னொரு விசயமும்...
அம்மா படும் வேதனைகளையும், துயரங்களையும் காணச் சகிக்காது, டாக்டருடன் கலந்து பேசி அம்மாவின் மூச்சை செயற்கையாக நான்தான் நிறுத்தினேன்.
ஒவ்வொரு முறை அவள் வேதனையுடன் பதறும்போதெல்லாம், கண்ணீர் தேங்கும் விழிகளுடன் என்னை வெறித்து நோக்கி, "டேய் என்னை விட்டுர்றா. என்னால முடியலேடா'' என்று சொல்லாமல் சொல்லுவாளே என்ன பதில் அதற்கு?
கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன். 
நான் தான் என் அம்மாவைக் கொன்றேன். நான்தான். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும். அம்மா நிச்சயம் மன்னிப்பாள். கண்களை மூடிக் கொண்டேன்.
மனதிற்குள் அம்மாவின் முகம் விரிந்தது. 
கருணை வழியும் கண்களுடன் என்னை ஆரத் தழுவி... தலை கோதி முத்தமிட்டு, "என் மகனைப் பத்தி எனக்குத் தெரியாதா?'' என்றாள்.
ய் நித்யா

 

 

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கருணைகொலைதான் ஆனால் என்ன செய்தவனையே மீண்டும் மீண்டும் கொல்கிறதே......!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணிப்பவர்களை விட மரணத்தின் தருணத்தை உடனிருந்து தரிசிப்பவர்களின் மனதின் வலி உயிருள்ளவரை உடனிருந்து கொல்லும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.