Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அடிநிலை மக்களின் காணிப்பிரச்சனைகள்- தீர்வின் முன் உதாரணம் சிவாபசுபதி கமம்…

Featured Replies

அடிநிலை மக்களின் காணிப்பிரச்சனைகள்- தீர்வின் முன் உதாரணம் சிவாபசுபதி கமம்…

இங்கிருந்து தொடங்க வேண்டும் – குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Sivapasupathi5.jpg?resize=800%2C533

 

சிவாபசுபதி கமம் 55 குடும்பங்களுக்கு பகிரந்தளிக்கப்பட்டுள்ளநிலையில் காணியை வழங்கிய உரிமையாளர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பன்னங்கண்டி சிவாபசுபதி கமத்தில் 1990 ஆம் ஆண்டு முதல் வாழ்ந்து வந்த மக்களுக்கு குறித்த காணிகளை காணி உரிமையாளர்கள் அவர்களுக்கு சொந்தமாகவே  வழங்கியுள்ளனர்.

கடந்த வருடம் மார்ச் மாதம் குறித்த மக்கள் தாங்கள் குடியிருக்கும் காணிகளுக்கு அனுமதிபத்திரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

காணி உரிமையாளார்களான இலங்கையின் முன்னாள் சட்டாமா அதிபராக இருந்த சிவாபசுபதியும் அவர்களது சகோதரர்களும். இவர்களின் ஒருவரின் மகளான மருத்துவர் மாலதிவரனிடமும் இந்த மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் போது அவர் தனது உறவினர்களுடன் பேசி குறித்த காணியை குடியிருக்கும் மக்களுக்கே வழங்குவதற்கு தீர்மானித்திருந்தனர்.

இதற்கு பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு அமைவாக கடந்த சனிக்கிழமை சிவாபசுபதி கமம் உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அமைவாக யோகர் சுவாமிகள் குடியிருப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டு காணி ஆவணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

பெறுமதியான காணியினை உவந்தளித்து தங்களின் வாழ்நாளில் முதல்முறையாக சொந்தமாக காணி ஒன்றை வழங்கிய உரிமையாளர்களுக்கு பிரதேச பொது மக்கள் உருக்கமாக தங்களின் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

காணிகளை வளைத்துப் பிடித்து முள்ளுக்கம்பி அடித்து  வளவுக்காரர்களாக,  பெருமையின் சின்னங்களாக அவற்றை பேணும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் சிந்திப்பார்களா?

Sivapasupathi2.jpg?resize=800%2C533Sivapasupathi3.jpg?resize=800%2C533Sivapasupathi4.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/80236/

தமிழினம்  அதன் குணத்தால் ஏன் இன்னும் அழியாமல் இருக்கு என்ற கேள்விகளுக்கான விடைகளில் இதுவும் ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பகலவன் said:

தமிழினம்  அதன் குணத்தால் ஏன் இன்னும் அழியாமல் இருக்கு என்ற கேள்விகளுக்கான விடைகளில் இதுவும் ஒன்று.

பல புலம்பெயர்ந்த மக்கள்  உதவிகளை செய்கிறார்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்து முன்பும் எழுதியுள்ளேன்.

இந்த அகதிகள், காணிகள் விசயத்தில் பல குளறுபடிகள். கோளாறுகள்.

சொந்த அனுபவத்தை வைத்து சொல்வதானால், ஏமாற்றப்படுவதை தடுக்க, அரச அதிகாரிகள் மூலமாக காணிகள் பங்கிடப்பட அல்லது கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஒருவர் பல இடங்களில் காணி பெறுவது தவிர்கப்படலாம்.

மோசடிகள் பலவிதம். நியாயத்துக்காக எதிர்த்து நின்று உயிர் இழந்தவர்களும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.