Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு

Featured Replies

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்பு

 

தூத்துக்குடியில் உள்ள சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இன்று அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்புபடத்தின் காப்புரிமைVEDANTA

புதன்கிழமையன்று இந்த உத்தரவை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியிருந்த நிலையில், வியாழக்கிழமை அதிகாலை ஐந்தரை மணியளவில் மின்வாரியம் மின்சாரத்தைத் துண்டித்தது.

தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பியுள்ள இந்த ஆணையில், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த பல நிபந்தனைகளை இந்த ஆலை நிறைவேற்றாததால், 2018-2023க்கான இசைவாணை வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலைப் பெறாமல் அந்த ஆலை இயங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்த நிலையில், மே 18-19ஆம் தேதிகளில் அந்த ஆலையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய சோதனையில், ஆலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடப்பது தெரியவந்ததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு; மின்சாரம் துண்டிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இதையடுத்து, அந்த ஆலைக்கான மின் இணைப்பைத் துண்டிக்கும்படியும் ஆலையை மூடும்படியும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமெனக் கோரி நடந்த போராட்டத்தில் இதுவரை குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர, தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இணைய வசதியை அரசு நிறுத்தியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-44235215

வைகோ வான வைகோவே அந்த விடயத்தில்  புல்லு சாப்பிடும்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த மூலைக்கு அகர்வாலின் பணபெட்டியில் சில கோடிகள் குறையும் அவ்வளவுதான் .

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, spyder12uk said:

வைகோ வான வைகோவே அந்த விடயத்தில்  புல்லு சாப்பிடும்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த மூலைக்கு அகர்வாலின் பணபெட்டியில் சில கோடிகள் குறையும் அவ்வளவுதான் .

Dd98DXfV4AE90S7.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 5/24/2018 at 8:39 PM, spyder12uk said:

வைகோ வான வைகோவே அந்த விடயத்தில்  புல்லு சாப்பிடும்போது தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த மூலைக்கு அகர்வாலின் பணபெட்டியில் சில கோடிகள் குறையும் அவ்வளவுதான் .

 

 

 

On 5/25/2018 at 8:56 AM, குமாரசாமி said:

Dd98DXfV4AE90S7.jpg

 

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் என்று மேலே இணைக்கப்பட்ட புகைப்படத்தில் வை.கோவின் பெயரும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெளிவரும் ஊடகங்களில் வை.கோவின் பெயர் இல்லை.  'புதிய தலைமுறை' செய்திகளிலும் வை.கோவின் பெயர் இல்லை..   ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் குரல் கொடுத்துவருபவர் வை.கோ.   ஆனால் பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்களின் முகநூலில்  வை.கோவின் பெயர் இருக்கிறது.  அத்துடன் ஸ்டாலின், சிதம்பரம் பெயர்களும் இருக்கிறது. இதேபோல திமுக ஆதரவு முகநூல்களில் மோடி, ஏடப்பாடி, பன்னீர் பெயர்கள் இருக்கின்றன.  முகநூல்களில் வரும் செய்திகள் பல உண்மைத்தன்மையற்றவை.

 

Edited by கந்தப்பு

On 5/28/2018 at 1:57 AM, கந்தப்பு said:

 

 

ஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பணம் பெற்றவர்கள் என்று மேலே இணைக்கப்பட்ட புகைப்படத்தில் வை.கோவின் பெயரும் இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் வெளிவரும் ஊடகங்களில் வை.கோவின் பெயர் இல்லை.  'புதிய தலைமுறை' செய்திகளிலும் வை.கோவின் பெயர் இல்லை..   ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பகாலத்தில் குரல் கொடுத்துவருபவர் வை.கோ.   ஆனால் பாரதிய ஜனதாவின் ஆதரவாளர்களின் முகநூலில்  வை.கோவின் பெயர் இருக்கிறது.  அத்துடன் ஸ்டாலின், சிதம்பரம் பெயர்களும் இருக்கிறது. இதேபோல திமுக ஆதரவு முகநூல்களில் மோடி, ஏடப்பாடி, பன்னீர் பெயர்கள் இருக்கின்றன.  முகநூல்களில் வரும் செய்திகள் பல உண்மைத்தன்மையற்றவை.

 

நீங்கள் சொல்வது போல் பொய்யாக வைகோவின் செய்தி இருக்கலாம் . ஆனால் ஆரம்ப காலங்களில் இந்த ஆலை தொடர்பாக மூர்க்கமாக போராடியவர் இந்த வைகோ  இப்ப தமிழ்நாடே இந்த ஆலையை எதிர்த்து கொண்டு இருக்கையில் இவரின் பம்மல் சந்தேகத்தை உண்டுபண்ணுது. 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, spyder12uk said:

நீங்கள் சொல்வது போல் பொய்யாக வைகோவின் செய்தி இருக்கலாம் . ஆனால் ஆரம்ப காலங்களில் இந்த ஆலை தொடர்பாக மூர்க்கமாக போராடியவர் இந்த வைகோ  இப்ப தமிழ்நாடே இந்த ஆலையை எதிர்த்து கொண்டு இருக்கையில் இவரின் பம்மல் சந்தேகத்தை உண்டுபண்ணுது. 

 

அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். ஆனால் ஊடகங்கள் அவரின் குரலுக்கு முக்கியத்துவம் குடுக்கவில்லை.  அண்மையில் வந்த காணொலி

வை.கோவைப் பற்றி பொய்யான செய்திகளைப் பரப்பியவர் எச்.ராஜா

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.