Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த காடுவெட்டி குரு சிகிச்சைப் பலனில்லாமல் உயிர் இழந்தார். 

66_22544.jpg

கடந்த மாதம் 12-ம் தேதி நுரையீரல் சம்பந்தமான நோயால் பாதிக்கப்பட்டு, சென்னை கிரீம்ஸ் ரோட்டில் அப்போலோ மருத்துவமனையில் காடுவெட்டி குரு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அப்போலோ மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்படி, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி(Tracheostomy) அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்தப்பின் பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, அவரைப் பார்த்துவந்தார். 

20dc8d1e-aef6-4dea-8cc8-a1ec3fab2284_220

மேலும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும், மருத்துவமனைக்குச் சென்று குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார். அறுவை சிகிச்சைக்கு பின் அவரது உடல்நலம் நன்கு தேறிவந்தது என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இன்று காலை அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதுகுறித்து விசாரித்தபோது குருவின் உடல்நிலையில் கவலைக்கிடமாக உள்ளது தெரியவந்தது. இந்தச் சூழலில் தான், காடு வெட்டி குரு இறந்து விட்டதாக இரவு 8.35 மணியளவில் டாக்டர்கள்  அறிவித்தனர். இதனால் பா.ம.க தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். குருவின் உடல் அவரது சொந்த ஊரான ஜெயம்கொண்டத்துக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது.

-  விகடன்

யார் இந்த குரு?

பாம.க.வின் வன்னியர் சங்கத்தலைவர் குருநாதன் என்கிற குரு. அவரது சொந்த ஊர் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி தான் . 1986-ல் காடு வெட்டியில் தி.மு.கவின் கிளைச் செயலாளராக இருந்தவர் இந்த குரு. தி.மு.கவில் வன்னியர்களுக்கு அவர்களது பகுதியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதாலும் வன்னியர் சங்கத்தை விரிபடுத்துவதற்காக எம்.கே.ராஜேந்திரன், வீரபோக.மதியழகன் அகியோர் குருவை ராமதாஸ் தலைமையில் வன்னியர் சங்கத்தில் இனைக்கிறார்கள். பின்பு படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகிக்றார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றார். 2001-ல் அ.தி.மு.க கூட்டணியில் ஆண்டிமடத்தில் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டு முதன் முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். அதன் பிறகு நடந்த 2006 சட்டமன்ற தேர்தல், 2009ம் ஆண்டு திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். மீண்டும் , 2011 ஜெயங்கொண்டத்தில் தி.மு.க கூட்டணியில் வெற்றி பெற்றார். 

விகடன்

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை..... கலங்க வைக்கும்......   ஒரு, அரசியல்வாதி. 

ஆழ்ந்த, அனுதாபங்கள்  ஐயா..............

Edited by தமிழ் சிறி

 

அன்னாருக்கு அஞ்சலிகள்.. 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

 

சம்பந்தமே இல்லாமல் பேருந்துகளை எரிக்கும் காடைத்தனம் பா.ம.கட்சியினரின் ஒழுக்கமின்மையை தெளிவாக காட்டுகிறது.

இது ஆரோக்கியமானது அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.