Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..

Featured Replies

அனைத்து செலவும் மாகாண சபையினுடையது திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை நடத்தினார்கள்..

sivagnanam-srilanka-net.jpg?resize=720%2

 

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கான அனைத்து ஏற்பாட்டையும் , செலவுகளையும் வடமாகாண சபையே செய்தது என அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே அவைத்தலைவர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில், பந்தல் போட்டது, கதிரை போட்டது, பந்தங்களில் எண்ணெய் தோய்த்தது, பந்தங்களை நாட்டியது என அனைத்து செலவுகளும் ஒழுங்கமைப்பும் வடமாகாண சபையே செய்தது.

முதலமைச்சர் தீபந்தம் எடுத்துகொடுக்க பிரதான சுடரை ஏற்றிய அந்த பிள்ளையை நினைவேந்தல் நிகழ்வு நடக்கும் இடத்திற்கு ஏற்றி இறங்கியது கூட மாகாண சபையே.

நினைவேந்தல் நாள் அன்று காலை 10 மணிவரையில் மாகாண சபையே நிகழ்வை ஒழுங்கமைத்தது. ஆனால் திடீரென்று வந்த சிலர் மைக்கை பறித்து நிகழ்வை தாம் நடத்த தொடங்கினார்கள்.

அந்த நேரத்தில் நாம் பயந்து ஒதுங்கவில்லை. அது ஒரு புனிதமான நிகழ்வு அதில் குழப்பங்கள் ஏற்படாது நிகழ்வு நடந்து முடிய வேண்டும் என்பதனால் ஒதுங்கி நின்றோம்.

இதற்கு மேலும் பல விடயங்களை சொல்லலாம். ஆனால் அந்த புனித நிகழ்வை பற்றி இங்கே கதைத்து அதனை விவாதத்திற்கு கொண்டு வர விரும்பாத காரணத்தால் அதனை அத்துடன் விடுகிறேன் என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/81738/

  • தொடங்கியவர்

நினைவேந்தல் நிகழ்வு என்பது மரணசடங்கு போன்றது….

epdp.thavarasa-tna.vic_.jpg?resize=540%2

 

நினைவேந்தல் நிகழ்வு என்பது மரண சடங்குக்கு செல்வது போன்று , அங்கே மாலை மரியாதை அளித்து மேள தளத்துடன் அழைத்து செல்வார்கள் என எதிர்ப்பார்க்க கூடாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நினைவேந்தல் என்பது மரண வீட்டுக்கு செல்வது போன்றது அங்கே மோள தாளத்துடன், மாலை போட்டு அழைத்து செல்லமாட்டார்கள். அதை நீங்கள் எதிர்பார்க்க கூடாது.

நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் அமைக்கப்பட்ட பந்தல்கள் , அந்த இடத்தில் வெறும் காலுடன் நடக்க கூடிய வாறு அதனை துப்பரவு செய்தமை , குடிக்க நீர் வழங்கியமை போன்ற செலவுகள் மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து பெறப்பட்ட பணத்தில் செய்யப்பட்டதே என தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/81730/

  • தொடங்கியவர்

உண்டியலில் போட்ட காசை திருப்பிக் கேட்பது நாகரிகம் ஆகாது…

sivaji.jpg?resize=600%2C450
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்டதாக நினையுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் தவராசாவிடம் ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.  வடமாகாண சபையின் 123 ஆவது அமர்வு இன்றைய தினம் வியாழக்கிழமை கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது.
 
அதன் போது, எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முள்ளிவாய்க்கால் நினைவு தின செலவுகளுக்கு என மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்தில் பெறப்பட்ட தனது பங்கான 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்ப தருமாறு கோரி இருந்தார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் தெரிவிக்கையிலையே சிவாஜிலிங்கம் அவ்வாறு தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
 
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஒரு புனிதமான தினம். அது நடந்து முடிந்ததை பற்றி கதைத்து அதனை கொச்சைப்படுத்த கூடாது. எனவே அது தொடர்பில் சபையில் கதைப்பதை நிறுத்துவோம்.  எதிர்க்கட்சி தலைவர் அதற்கு கொடுத்த பணத்தினை கோயில் உண்டியலில் போட்ட பணமாக நினையுங்கள். உண்டியலில் போட்ட பணத்தினை திருப்பி தாருங்கள் என கேட்க கூடாது என தெரிவித்தார்.  அதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது கோரிக்கையை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/81733/

  • கருத்துக்கள உறவுகள்

நந்தவனத்தில்....ஓர் ஆண்டி...,

நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி...

கொண்டு வந்தானொரு தோண்டி...,

அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி...!?

  • கருத்துக்கள உறவுகள்

எங்களில் சிலரை உலகின் எந்த இனத்திலும் காண முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வட மாகாணசபையினரை உண்மையிலயே பாரட்ட வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.