Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கியும் சாமும் (சாம்) யாழில் ஒரேமேடையில் தோன்றினர்…

Featured Replies

வடக்கு முதல்வரின் உரைகளின் தொகுப்பு- ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் வெளியீடு ஆரம்பம்!!

 

 

Capture-278-606x430.jpg

 
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூலான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூலின் வெளியீட்டு விழா யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன் மற்றும் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் இ.ஆர்னோல்ட், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பல அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

2-5-300x219.jpg

http://newuthayan.com/story/10/வடக்கு-முதல்வரின்-உரைகளின்-தொகுப்பு-நீதியரசர்-பேசுகிறார்-நூல்-வெளியீடு-ஆரம்பம்.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

விக்கியும் சாமும் (சாம்) யாழில் ஒரேமேடையில் தோன்றினர்…

 

Sam-Vikki.png?resize=726%2C456
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான , இரா.சம்பந்தனும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் ,ன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய நீதியரசர் பேசுகிறார் என்னும் நூல் வெளியீடடு விழாவிலேயே ,ருவரும் ,ணைந்து கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, ஈ. சரவணபவன், யாழ். மாநகர மேயர் ,மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Sam-vikki1-1.png?resize=711%2C520

Sumanthran-mavai.png?resize=716%2C476

http://globaltamilnews.net/2018/84925/

  • தொடங்கியவர்

விக்கியின் நூலை வெளியிட்டு வைத்தார் சம்பந்தன்

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் வெளியிட்டு வைத்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நூல் வெளியிட்டு விழாவில், முதலமைச்சரிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் வெளியிட்டு வைக்க, முதலமைச்சரின் சகோதரி நூலை பெற்றுக் கொண்டார்.

இதன்போது, முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன், சம்மந்தனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர் சம்மந்தன் உட்பட பிரதம விருந்தினர்களுக்கு சிறப்பு பிரதிகள், நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், வடமாகாண எதிர்கட்சி தலைவர் சி. தவராசா, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவவணபவன், த. சித்தார்த்தன், யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் தேசிய முன்னணியின் செயலாளர் சிவராசா கஜேந்திரன், என். வித்தியாதரன் உள்ளிட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமய தலைவர்கள், அரசியல் ஆய்வாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டிருந்தனர்.

 

 

வடக்கு அரசியல் விவகாரத்தில் எதிரும் புதிருமாய் பார்க்கப்படும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும், முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் நீண்ட காலத்திற்குப் பின்னர் ஒரே மேடையில் தோன்றியுள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீடடு விழா, யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகின்றது. இந்நிகழ்வில் இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்து உரையாடுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகள் எழுந்துள்ள அதே சந்தர்ப்பத்தில், கூட்டமைப்புக்கு எதிராக முதலமைச்சர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்நிலையில், இன்றைய நிகழ்வு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் இன்று இது தொடர்பில் பேசலாம் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

http://athavannews.com/?p=693093-விக்கியின்-நூலை-வெளியிட்டு-வைத்தார்-சம்பந்தன்-(3ஆம்-இணைப்பு

  • தொடங்கியவர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஒன்றிணைத்த 'நீதியரசர் பேசுகிறார்' 

 

 
 

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய 'நீதியரசர் பேசுகிறார்' எனும் நூல் வெளியீட்டு விழா இன்று யாழ்ப்பணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

01.jpg

இந் நிகழ்வில் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் தமிழ்த் தேசிய அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் கலந்துகொண்டதன் மூலம் இச் சந்திப்பானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். 

03.jpg

2.jpg

04.jpg

அத்துடன் மேற்படி நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு சிங்கப்பூர் பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் முத்துக்குமராசுவாமி சொர்ணராஜா பிரதம விருந்தினராகவும், வைத்திய கலாநிதி லக்ஸ்மன் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொண்டதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35471

  • கருத்துக்கள உறவுகள்

வடகொரியா மற்றும் அமெரிக்கத் தலைவர்கள் சந்தித்துக் கொண்டைதை விட யாரும் எதிர்பார்க்காத ஒரு சந்திப்பு. வரலாற்றில் இடம்பெறும்?.

  • தொடங்கியவர்

“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை” – விக்கி – “பிரிந்தால் அழிவோம்” – சம்பந்தன்…

 

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனின் உரைகளின் தொகுப்பான ‘நீதியரசர் பேசுகிறார்’ நூல் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டு வைக்க அவரது சகோதரி நூலைப் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் எதிர்க்கட்சித் தலைவர்  இரா.சம்பந்தன் உள்பட ஏனையவர்களுக்கு சிறப்பு பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட முக்கியஸ்த்தர்களின் உரைகளும் இடம்பெற்றன.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
 
Vikki-Book01.jpg?resize=800%2C533

“கொடுத்த கையைக் கடிக்கும் பழக்கம் எனக்கில்லை. ஆனால் உண்மைகளை உள்ளபடி வெளிக்கொண்டுவராது இருக்க முடியாதவன் நான்” என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24.06.18) நடைபெற்ற தனது உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகிறார்’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய அவர், “கூட்டமைப்பில் சிலர் என்னை வெளியேற்றக் குறிவைத்துள்ளதால் எனது சேவை தேவையா இல்லையா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். எமது விசேட அதிதி கௌரவ சம்பந்தன் அவர்களின் வரவு எமக்கெல்லாம் பெருமையையும் மகிழ்வையும் ஊட்டியுள்ளது. என்னை இந்த முதலமைச்சர் பதவிக்குக் கொண்டு வந்தவர் அவரே. இதுவரையில் அவருக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் விசுவாசமாகவே நான் நடந்து வந்துள்ளேன்.” எனவும் வட.மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 
Vikki-Book1.jpg?resize=800%2C533

இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவ்வாறு இன்றி பிரிந்து செயற்பட்டால் “நமது மக்களை மக்களை நாமே அழிப்பதாக அமையுk; என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இரா சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழிக்க சர்வதேசம் உதவியதாகவும், அதற்காக தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை தருவோமென சர்வதேசத்திற்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி வழங்கியதாகவும் குறிப்பிட்டார். எனினும், தீர்வுத் திட்டத்தில் இலங்கை அரசாங்கம் தற்போது பின்னிற்கின்றதென குற்றஞ்சாட்டிய அவர், விடுதலைப் புலிகளின் காலத்தில்கூட தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் பல முன்மொழிவுகளை முன்வைத்ததாகவும், அவற்றில் எதுவும் செயற்படுத்தப்படவில்லையென்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
Vikki-Book2.jpg?resize=800%2C533Vikki-Book3.jpg?resize=800%2C533Vikki-Book04.jpg?resize=800%2C533Vikki-Book4.jpg?resize=800%2C533Vikki-Book5.jpg?resize=800%2C533Vikki-Book6.jpg?resize=800%2C298Vikki-Book7.jpg?resize=800%2C533Vikki-Book8.jpg?resize=800%2C533Vikki-Book9.jpg?resize=800%2C533Vikki-Book10.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/84974/

  • தொடங்கியவர்

 

கொடுத்த கையை கடிக்கும் பழக்கம் எனக்கில்லை - சி.வி

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.