Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ஜனாதிபதியானதும், மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தரமாட்டேன், அது ஆபத்தானது”! ...கோட்டா

Featured Replies

பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே நோக்கம்: கோட்டா

 

 

gotabaya.jpg

பொருளாதார ரீதியாக அனைத்து சமூகங்களை வலுப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான தனது தூரநோக்கு சிந்தனை என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) மாலை தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர் மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் யுத்தத்தின் முடிவின் பின்னர் மஹிந்த அரசாங்கம் இந்த இலக்கை அடைவதற்கான பணியை ஆரம்பித்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும்பான்மை கட்சிகள் சில தற்போதே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையிலேயே அவர் இன்று ஊடகவியலாளர்களிடம் குறித்த கருத்தை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/பொருளாதார-ரீதியாக-அனைத்த/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

“ஜனாதிபதியானதும், மாகாணத்திற்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் தரமாட்டேன், அது ஆபத்தானது”! 

 

 

gotabaya-news.jpg

குளோபல் தமிழ் செய்தியாளர்…

 

மாகாண அரசுக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்கககூடாது என்றும் அது பெரும் ஆபத்தாக மாறிவிடும் என்றும்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த அணி சார்பில் போட்டியிட தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த கோத்தபாய நேற்று தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து உரையாடி இருந்தார். இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்றிருந்தது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அத்துடன் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதும் பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு காணப்போவதாகவும் பொருளாதார பிரச்சினை காரணமாகவே முப்பதாண்டு ஆயுதப் போராட்டம் நடந்தாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டுக்கடன் பெற்றதாக தம்மீது குற்றம் சுமத்தப்படுகின்றதாகவும் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவே வெளிநாட்டுக்கடன் பெற்றாகவும் அவர் கூறினார்.

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால் முதலமைச்சர் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவார் என்றும் கொழும்பு அரசினால் பின்னர் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் கோத்தபாய குறிப்பிட்டார். வடக்கு முதலமைச்சர் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாகவும் இலங்கையில் சிங்கள இராணுவம் இல்லை என்றும் தேசிய இராணுவமே காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னதாக ஈபிடிபி மற்றும் புளொட்டின் ஆயுதங்கள் களையப்பட்டதாக அவர் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு இராஜபக்சகளுக்கு எதிராகவே தயாரிக்கப்படுவதாகவும் இரட்டை குடியுரிமை உடையவர்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கப்படுவதாகவும் கூறிய அவர் புதிய அரசியலமைப்பு பெரும்பான்மை மக்களை திருப்திப்படுத்தாத வகையில் தயாரிக்கப்படுவதாகவும் மேலும் கூறினார்.

http://globaltamilnews.net/2018/89530/

  • தொடங்கியவர்

பொலிஸ் மற்றும் இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் இணைய தடையா?

 

 
Image

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால் எந்த பயனும் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனித்து வடமாகாணத்துக்கு மாத்திரம் பொலிஸ் அதிகாரத்தை வழங்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கும் தமிழ் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுக்கும் இடையில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை பகிர்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையிலேயே மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதால் எந்த பயனும் மக்களுக்கு ஏற்படப்போவதில்லை எனவும் தனித்த மாகாண சபைகளுக்கு எந்தவொரு அதிகாரத்தையும் வழங்கப் போவதில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது என்றால் பொலிஸ் துறை 9 பிரிவுகளாக பிரிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு செய்யும் போது பொலிஸ் துறையின் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.

பொலிஸ் துறை அலுவலர்களின் செயற்திறன், ஆயுதத்தெரிவு, கட்டளை – பணிதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மொழி பேசத்தெரியாத பொலிஸ் அதிகாரிகள் இருப்பது மக்களுக்கு சிரமமானது என்ற அடிப்படையிலேயே பொலிஸ் அதிகாரத்தை வழங்குமாறு கோரப்படுகிறது.

எனினும் பொலிஸ் அதிகாரத்தை பகிர்வதற்கு பதிலாக, தமிழ்மொழி தெரிந்த பொலிஸ் அதிகாரிகளை இணைத்துக் கொண்டு இந்த பிரச்சினையைத் தீர்க்க முடியும் எனத் தெரிவித்த கோட்டபாய ராஜபக்ச, பொலிஸ் மற்றும் இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் இணைவதை தமிழ் தேசிய கூட்டமைப்பும், வடமாகாண முதலமைச்சரும் தடுப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேவேளை, யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய பல விடயங்களுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் வடமாகாண சபையும் தடையாக இருந்துள்ளதாக, கோட்டாபய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கு கிழக்கில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குமான அவசியம் இருந்தது.

எனினும் அரசியல் சார்ந்த விடயங்களுக்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.ibctamil.com/politics/80/103864

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் ஒரு ஆசை..

மகிந்தவே எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தும், புலிகளின் பகிஸ்ரிப்பு மூலமே பதவிக்கு வந்தார். ரணில் இன்னும் முயல்கிறார்.

2009 வரை யாரென தெரியாது. வெள்ளைவான், போர்க்குற்றம் விசாரணை... ஏகப்பட்ட சமாச்சாரம்.

தீடீரென ஜனாதிபதி ஆகப் போறன், எண்டால், நடக்கிற விசயமே? 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

அந்தவகையில் யுத்தத்தின் முடிவின் பின்னர் மஹிந்த அரசாங்கம் இந்த இலக்கை அடைவதற்கான பணியை ஆரம்பித்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும் தற்போது அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான நகர்வுகள் இடம்பெற்று வரும் நிலையில், பெரும்பான்மை கட்சிகள் சில தற்போதே அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

இன்னமும் தோண்டி எடுக்கப்படும் எலும்புக் கூடுகளும் அதைத் தான் சொல்லுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

இவருக்கும் ஒரு ஆசை..

மகிந்தவே எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தும், புலிகளின் பகிஸ்ரிப்பு மூலமே பதவிக்கு வந்தார். ரணில் இன்னும் முயல்கிறார்.

2009 வரை யாரென தெரியாது. வெள்ளைவான், போர்க்குற்றம் விசாரணை... ஏகப்பட்ட சமாச்சாரம்.

தீடீரென ஜனாதிபதி ஆகப் போறன், எண்டால், நடக்கிற விசயமே? 

அரசியலில் எதிரிகள் என்று யாருமே இல்லை.எப்பவும் எதுவும் நடக்கலாம்.நல்லாட்சி என்று தம்மை தாமே சொல்லிக் கொள்ளும் அரசு மிகவும் பலவீனமாகவே இருக்கிறது.பல கட்சிகளும் சேர்ந்து தூக்கிவிட்டதே தற்போதைய அரசு.அடுத்த தேர்தலில் முன்னர் போல ஒரு கூட்டுச் சேருமென்று நினைக்க முடியாமல் உள்ளது.மகிந்த அரசு வெளிப்படையாக செய்தவற்றை விட தற்போதைய அரசு சத்தமில்லாமல் நடாத்திக் கொண்டிருக்கிறது.எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அரசியலில் எதிரிகள் என்று யாருமே இல்லை.எப்பவும் எதுவும் நடக்கலாம்.

ஈழத்தமிழ் மக்களை பொறுத்த அளவில் இவர் அத்தகைய அரசியலுக்கு விதிவிலக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.