Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!' - ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி

Featured Replies

' நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!'  - ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி

 
 

ஆடி மாதம் முடிந்த பிறகு கட்சி தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க இருக்கிறார் ரஜினி. அப்போது, அமைப்புரீதியாக சைதை துரைசாமி, அழகிரி போன்றவர்களின் பங்களிப்பு தனக்கு வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார்.

' நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!'  - ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி
 

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலனை விசாரிக்கச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அழகிரியுடன் விவாதித்தது தி.மு.க வட்டாரத்தை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. 'அழகிரியுடன் சில விஷயங்களை மனம்விட்டுப் பேசினார் ரஜினி. அரசியல் பிரவேசம் தொடர்பாகவும் சில நிமிடங்கள் விவாதித்தனர்' என்கின்றனர் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள். 

சென்னை, காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் கருணாநிதி. அவரது உடல்நலன் குறித்து விசாரிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், சி.பி.ஐ, சி.பி.எம் கட்சிகளின் தலைவர்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்து சென்றனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், நேற்று இரவு கருணாநிதியின் உடல்நலனை விசாரிப்பதற்காக மருத்துவமனைக்குச் சென்றார் நடிகர் ரஜினிகாந்த். இந்தச் சந்திப்பில், கருணாநிதியை அவரால் சந்திக்க முடியவில்லை. ஸ்டாலினிடம் விசாரித்துவிட்டு, அடுத்ததாக அழகிரியை சந்தித்துப் பேசினார். ஸ்டாலினிடம் இயல்பாகப் பேசாத ரஜினி, அழகிரியிடம் தீவிரமான விவாதத்தில் ஈடுபட்டிருக்கும் படங்கள் வெளியானது. 

மருத்துவமனை நிகழ்வுகள் குறித்து நம்மிடம் பேசிய அழகிரி ஆதரவாளர் ஒருவர், "மு.க.அழகிரிக்கும் ரஜினிக்கும் இடையில் நீண்ட கால நட்பு உண்டு. இளம் வயதில் இருந்தே அவருடன் தொடர்பில் இருக்கிறார் அழகிரி. சென்னையில் இருந்து மதுரைக்குச் சென்றபோதும், ரஜினியுடனான நட்பை மட்டும் அவர் விடவில்லை. துரை தயாநிதியின் திருமணத்துக்காக, மதுரைக்கே நேரில் வந்து வாழ்த்தினார் ரஜினி. ஒவ்வொரு விஷேச தினங்களிலும் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக் கொள்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார் ரஜினி. இந்த அறிவிப்புக்குப் பிறகு கோபாலபுரத்தில் கருணாநிதியைச் சந்தித்து ஆசி வாங்கச் சென்றார் ரஜினி. இதனை ரசிக்காத ஸ்டாலின், 'இது பெரியார் பிறந்த மண், ஆன்மிக அரசியலுக்கு இங்கே இடமில்லை' என நேரடியாக ரஜினியை விமர்சித்துப் பேசினார். இதையெல்லாம் கவனித்த அழகிரி, 'அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து சொல்வதில் என்ன தவறு இருக்கிறது, சென்னை செல்லும்போது ரஜினிக்கு நேரடியாக வாழ்த்து சொல்லப் போகிறேன்' என ஆதரவாளர்களிடம் கூறினார். 

 

 

ரஜினிகாந்த்

நேற்று இதற்கான வாய்ப்பு அமைந்தது. கருணாநிதி சிகிச்சை பெறும் அறை வரையில் ராகுல்காந்தியை அழைத்துச் சென்ற ஸ்டாலின், ரஜினியை அழைத்துச் செல்லவில்லை. இதற்குக் காரணம், 'ராமதாஸ் வந்தபோது அவரை அழைத்துச் செல்லவில்லை. ரஜினியை மட்டும் கூட்டிச் சென்றால் வேறுவிதமாகப் பேசுவார்கள்' என நினைத்ததுதான். ஆனால், ரஜினியின் வருகைக்கு அதிக முக்கியவத்துவம் கொடுத்தார் அழகிரி. நேற்று அவருடன் இயல்பாக விவாதித்தார் ரஜினி. தென்மண்டலத்தில் அழகிரிக்கு அமைப்புரீதியான பலம் இருப்பதை ரஜினி அறிவார். 'தென் மாவட்டம் அ.தி.மு.கவின் கோட்டை' எனப் பேசப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில், 2009 தேர்தலில் தி.மு.கவுக்குப் பெரிய வெற்றியைத் தேடித் தந்ததையும் சேலம் மாநகராட்சியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க தோற்றபோது, மதுரையில் ராமச்சந்திரன் என்பவரை நிறுத்தி வெற்றி பெற வைத்ததும் அழகிரிதான். கருணாநிதியின் மகன் என்பதையும் தாண்டி, அழகிரிக்குக் கட்சியினர் மத்தியில் செல்வாக்கு இருப்பதையும் ரஜினி அறிந்து வைத்திருக்கிறார். நேற்று ரஜினியிடம் பேசிய அழகிரி, 'இனியும் நீங்கள் தாமதிக்க வேண்டாம். நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள். தமிழக மக்கள் சாதி, மதங்களைத் தாண்டி உங்களை ஏற்றுக் கொள்வார்கள்' எனக் கூறியதாகவும் தகவல் வந்தது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை இருவரும் வெளியில் தெரிவிக்கவில்லை. விரைவில் போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியை சந்தித்துப் பேச இருக்கிறார் அழகிரி" என்றார் விரிவாக. 

 
 

 

இந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர், "ஆடி மாதம் முடிந்த பிறகு கட்சி தொடர்பான விஷயங்களில் தீர்க்கமான முடிவை எடுக்க இருக்கிறார் ரஜினி. அப்போது, அமைப்புரீதியாக சைதை துரைசாமி, அழகிரி போன்றவர்களின் பங்களிப்பு தனக்கு வேண்டும் எனவும் அவர் நினைக்கிறார். அந்த வகையில், 'தென்மாவட்டங்களில் தனக்குச் சாதகமாக அழகிரி இருப்பார்' எனவும் அவர் நம்புகிறார். இதற்கென தனியாக செயல் திட்டத்தையும் வகுக்க இருக்கிறார் ரஜினி" என்றார்.

https://www.vikatan.com/news/politics/132686-mkazhagiri-encouraged-rajini-to-enter-politics.html

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்!'  - ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி

பிறகு தமிழ் மரபுப்படி படாரென காலைவாரி விடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியை அழகிரி உற்சாகப் படுத்துவது இன்றைய நிலையில் ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுவதைப் போன்றது. காட்சி மாறி அழகிரி மீண்டும் திமுகவில் அதிகாரம் பெற்றால் (குறைந்த பட்சம் தென் தமிழகத்தில்), Colomban அவர்கள் சொன்னதைப் போல், நடிகர் மீது சேற்றை வாரி இறைக்கலாம். போக்கத்தவனுக்குப் போகிறதெல்லாம் இடம்தானே !

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது இதானோ? ரெல் மீ ..?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.