Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

Featured Replies

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

 

 

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடொராவின்  இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், இந்தியாவும் சீனாவும் தமது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்து சமுத்திரத்தில் ஜப்பானும் ஆழக்கால்பதிக்கி;ன்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஒனொடொராவின் விஜயம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு முதல்தடவையாக மேற்கொண்ட விஜயமாகும்.

இந்த விஜயத்தின்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் அமைச்சர் சென்றிருந்தார்.

இந்த வருடம் அம்பாந்தோட்டைக்கு ஜப்பானின் இரு விஜயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜப்பானின் இராஜதந்திரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஏப்பிரல் மாதம் ஜப்பானின் கடற்படை கப்பலான அகபொனோ அம்பாந்தோட்டைக்கு சென்றது. 

japan_de5.jpg

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்ட பின்னர் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது கடற்படை கலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை குறித்த ஜப்பானின் மூலோபாயக்கொள்கை அதன் வெளிப்படையான திறந்த கடல் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது.

ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார வளத்தை உறுதிசெய்வதற்காக விதிமுறைகைள அடிப்படையாக கொண்டகடல்சார் அமைப்பு முறை என்பதே  திறந்த கடல் என்ற கொள்கையாகும்.

இலங்கை மிக முக்கியமான கடல்சார் நாடு, இந்து சமுத்திர கடல்பரப்பில் மிகமுக்கியமான பாதையில்  இலங்கை அமைந்துள்ளது என ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்து முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மீது கவனம் திரும்பியுள்ளதன் காரணமாக அதனைபோன்ற மற்றுமொரு கடல்சார் வளத்திலிருந்தும் கவனம் திரும்பியுள்ளது- திருகோணமலை துறைமுகமே அது.உலகின் இரண்டாவது இயற்கை துறைமுகம்.

கடற்படை நிபுணர்களை பொறுத்தவரை அது  மிகவும் பெறுமதியான பொக்கிசம்.

சீனாவிற்கு போட்டியாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் இந்தியா சிங்கப்பூருடன் இணைந்து ஈடுபடுவது குறித்து ஜப்பான் ஆராய்ந்து வருகின்றது.

இந்த துறைமுகத்திற்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை அரசாங்கம் திருகோணமலையின் மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்தி அதனை ஏற்றுமதிக்கான தளமாக மாற்ற எண்ணுகின்றது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையத்தை அமைக்கும் எண்ணமும் உள்ளது.

சீனாவிற்கான இலங்கையின் கடன்களை குறைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங் நிறுவனத்திற்கு  99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்ததிலிருந்து இலங்கையில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கின்றது என்ற கருத்து வலுப்பெற்று வந்துள்ளது.

கடந்த வாரம் பென்டகன் தனது வருடாந்த அறிக்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக தனது நிதிப்பலத்தை காண்பிக்கின்றது என்பதற்கான அவதானமாகயிருக்க வேண்டிய உதாரணம் என அம்பாந்தோட்டையை பென்டகன் சுட்டிக்காட்டியிருந்தது.

சீனாவின் மூலதனத்தில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்துவதன் இந்து சமுத்திரத்தை ஆதிக்கம் செய்வதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது எனவும் பென்டகன் குறிப்பிட்டிருந்தது.

எனினும் கொழும்பில் உள்ள சீன இராஜதந்திரிகள் விமர்சகர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை தெளிவாக படிக்கவில்லை என்கின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார பொறுப்புகளை இலங்கை அதிகாரிகளிற்கே வழங்கியுள்ளது என்பது அவர்கள் வாதம்

அம்பாந்தோட்டைக்கு யுத்தக்கப்பல்கள் வருகையை கூட  இலங்கை அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர் என்கின்றனர் சீன இராஜதந்திரிகள்

ஜப்பான் தனது பொருளாதார உயிர்நாடியை பாதுகாக்க முயல்கின்றது என கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகவும் மும்முரமான கடற்பாதையின் நுனியில் அம்பாந்தோட்டை அமைந்துள்ளது.இந்த பாதை வழியாக வருடம்தோறும் 60,000 கப்பல்கள் செல்கின்றன.

இந்த கப்பல்கள் உலகின் 60 வீதமான எண்ணெயை கொண்டு செல்கின்றன.

hamm.jpg

சீனாவிற்கு இந்த கடல்பாதை எவ்வாறு முக்கியமோ அதேபோன்று ஜப்பானிற்கும் அது முக்கியம், என தெரிவிக்கும் மேற்குலக இராஜதந்திரி இரு நாடுகளும் இலங்கையுடன் தங்களிற்கு காணப்படும் நல்லுறவை இதற்காக பயன்படுத்த முயல்கின்றன என குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் சீனாவை எதிர்கொள்வதற்கு  இந்தியாவை விட ஜப்பானை பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு பயனளிக்கும் விடயமாக  அமையும் என மேலும் தெரிவிக்கும் மேற்குலக இராஜதந்திரி இந்தியாவை விட ஜப்பானை இலங்கை மக்கள் நம்புகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றார்.

நன்றி ஏசியா நிக்கெய் 

தமிழில் வீரகேசரி இணையத்தளம்

http://www.virakesari.lk/article/39016

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய பங்குக்கு ஏதாவது கிடைக்குமா என எண்ணி தான் களத்தில் குதித்து உள்ளார்கள்.  சிங்க|ளம்  வேண்டாம் என்றா சொல்லப்போகிறது??

  • தொடங்கியவர்

ஜப்­பானின் கரி­சனை

S-01Page1Image0004-7f0404a800f7fc10e545661ece2b737ab87d8ea7.jpg

 

-ஹரி­கரன்

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் இட்­சு­னோரி ஒனோ­டெரா கடந்த 20ஆம் திகதி நள்­ளி­ர­வுக்கு சற்று முன்­ன­தாக கட்­டு­நா­யக்­கவில் வந்­தி­றங்­கி­யதில் இருந்து, அவர் புறப்­பட்டுச் செல்லும் வரை- சர்­வ­தேச ஊட­கங்­களின் கவனம் அவரை நோக்­கி­ய­தா­கவே இருந்­தது.

இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவின் இலங்­கைக்­கான பயணம் அதி­க­ளவில் உற்றுக் கவ­னிக்­கப்­பட்­ட­மைக்கு இரண்டு முக்­கிய கார­ணங்­களைக் குறிப்­பி­டலாம்.

முத­லா­வது,காரணம்- இலங்­கைக்குப் பயணம் மேற்­கொண்ட முத­லா­வது ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் அவர் தான்.

இலங்கை சுதந்­திரம் பெற்று ,70 ஆண்­டு­க­ளுக்குப் பின்னர், முதல் முறை­யாக ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் ஒருவர் இலங்­கைக்கு வந்­தி­ருக்­கிறார். இலங்கை சுதந்­திரம் பெற்­ற­போது, இரண்டாம் உலகப் போரில் தோல்­வியைத் தழுவி, அமெ­ரிக்­கா­விடம் சர­ணா­கதி அடைந்த நாடாக இருந்­தது ஜப்பான்.

பின்னர் பொரு­ளா­தார ரீதி­யாக தன்னைப் பலப்­ப­டுத்திக் கொண்ட ஜப்பான் இப்­போது, மீண்டும் பாது­காப்பு ரீதி­யாகத் தன்னை வலுப்­ப­டுத்திக் கொள்ள ஆரம்­பித்­துள்ள நிலையில் தான், இலங்கை மீது அதிக கவ­னத்தை செலுத்த ஆரம்­பித்­துள்­ளது.

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவின் இலங்கைப் பய­ணமே, இலங்கை மீதான ஜப்­பானின் ஆர்­வத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இரண்­டா­வது காரணம், இலங்­கையில் சீனாவின் செல்­வாக்கும், தலை­யீ­டு­களும் அதி­க­ரித்­துள்ள சூழலில், அதனை சமா­ளிப்­ப­தற்­கான ஜப்­பானின் உத்தி என்­ன­வாக இருக்கப் போகி­றது என்ற எதிர்­பார்ப்பு.

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் கொழும்­புக்­கான பய­ணத்தின் மூலம், இந்த விட­யத்தில் ஜப்பான் மற்றும் இலங்கை ஆகிய நாடு­களின் நிலைப்­பா­டுகள் வெளிப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. இந்த இரண்டு முக்­கிய கார­ணி­களும் தான் ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் கொழும்­புக்­கான பய­ணத்­திற்கு கூடுதல் முக்­கி­யத்­து­வத்தை அளித்­தி­ருந்­தது.

ஐந்து நாட்கள் பய­ண­மாகத் தான் ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் டோக்­கி­யோவில் இருந்து புறப்­பட்­டி­ருந்தார். முதலில் அவர் சென்­றது புது­டெல்­லிக்கு. அங்கு இந்­திய பாது­காப்பு அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ரா­ம­னுடன் பேச்­சுக்­களை நடத்தி விட்டே கொழும்பு வந்­தி­ருந்தார்.

இந்தப் பேச்­சுக்­களின் போது, இந்­தி­யாவின் தரைப்­ப­டை­க­ளுடன் ஜப்­பா­னியப் படை­யினர் கூட்டுப் பயிற்­சியில் ஈடு­ப­டு­வது மற்றும், கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாட்டில் கைச்­சாத்­தி­டு­வது ஆகி­யன குறித்து இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­ட­தாக தக­வல்கள் உள்­ளன. கைய­கப்­ப­டுத்தல் மற்றும் குறுக்குச் சேவைகள் உடன்­பாடு என்றால், ஜப்பான் -இந்­தியா ஆகிய நாடு­களின் படை­யி­ன­ருக்கு, விநி­யோக, மற்றும் வெடி­பொருள் உத­விகள் தேவைப்­படும் போது, ஒரு நாடு மற்ற நாட்­டுக்கு வழங்­கு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டது.

ஜப்பான் அண்­மையில் கனடா, அவுஸ்­தி­ரே­லியா, பிரான்ஸ் போன்ற நாடு­க­ளுடன் இத்­த­கைய உடன்­பா­டு­களைச் செய்­துள்­ளது.

இலங்கை , இந்­தியா போன்ற நாடு­க­ளுடன் அமெ­ரிக்கா இத்­த­கைய உடன்­பாட்டை செய்­தி­ருக்­கி­றது. இப்­போது ஜப்­பானும் இந்­தி­யா­வுடன் இத்­த­கைய உடன்­பாட்டை செய்­வ­தற்கு முயற்­சிக்­கி­றது. ஜப்­பானைப் பொறுத்­த­வ­ரையில் இந்­தியப் பெருங்­க­டலின் மீதும் அதன் பாது­காப்பின் மீதும் அதிக அக்­கறை கொண்ட நாடு­களில் முக்­கி­ய­மான ஒன்­றாக இருக்­கி­றது.

இப்­போது இந்­தியப் பெருங்­கடல் பாது­காப்பு விட­யத்தில் அதிக அக்­கறை கொள்ளும் நாடு­களை வரி­சைப்­ப­டுத்­தினால், இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான், சீனா, அவுஸ்­தி­ரே­லியா ஆகி­யன அதில் முக்­கிய இடங்­களை வகிக்கும்.

இந்த நாடு­களில் பெரும்­பா­லா­ன­வற்­றுக்கு இந்­தியப் பெருங்­கடல் மாத்­தி­ர­மன்றி, தென் சீனக்­க­டலும் கூட முக்­கி­ய­மா­னது தான்.

மத்­திய கிழக்கில் இருந்து ஜப்­பா­னுக்குத் தேவை­யான எண்ணெய் இந்­தியப் பெருங்­கடல் மற்றும் தென் சீனக்­கடல் வழி­யாகத் தான் கொண்டு செல்­லப்­ப­டு­கி­றது.

 

ஜப்­பானைப் போலவே சீனா­வுக்கும் அது பிரச்­சினை தான். ஆனாலும் சீனா­வுக்கு இருக்­கின்ற மாற்று வழி­களோ , தெரி­வு­களோ ஜப்­பா­னுக்கு இல்லை.

அவுஸ்­தி­ரே­லியா மற்றும் அமெ­ரிக்­கா­வுக்கும் கூட, இந்­தியப் பெருங்­கடல் மற்றும் தென் சீனக்­கடல் கப்பல் பாதை­களில், சீனாவின் எந்தக் குறுக்­கீ­டு­களும் இருக்கக் கூடாது என்­பதே பிர­தான கவலை.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரையில், இந்தக் கப்­பல்­பா­தையின் மீது சீனா போன்ற நாடு­களின் தலை­யீ­டுகள்- குறுக்­கீ­டு­களால், தனது பாது­காப்பு நலன் கேள்­விக்­கு­றி­யாகி விடும் என்று அச்­சப்­ப­டு­கி­றது.

அண்­மையில் ஜப்­பானின் சச­காவா அமைதி நிறு­வகம், இந்­தி­யாவின் விவே­கா­னந்தா நிறு­வகம், அவுஸ்­தி­ரே­லிய தேசிய பல்­க­லைக்­க­ழகம், அமெ­ரிக்­காவின் சச­காவா அமைதி நிறு­வகம் ஆகிய சிந்­தனைக் குழு­மங்கள் இணைந்து, இந்தோ பசுபிக் பிராந்­தி­யத்தின் பாது­காப்புக் குறித்த அறிக்கை ஒன்றை வெளி­யிட்­டன.

அதில் இடம்­பெற்­றி­ருந்த 20 பரிந்­து­ரை­களில், ஒன்று, இந்­தியப் பெருங்­க­டலில் சீனா நிரந்­தர இரா­ணுவத் தளம் அமைப்­பதை, அமெ­ரிக்கா, இந்­தியா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடுகள் தமது பங்­காளி நாடு­க­ளுடன் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தியப் பெருங்­க­டலில் அண்­மைக்­கா­லத்தில் சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்­துள்ள நிலையில், இந்தப் பகு­தியில் சீனா தனது இரா­ணுவத் தளத்தை அமைத்து விடக் கூடாது என்­பதில் இந்த நான்கு நாடு­களும் உறு­தி­யாக இருக்­கின்­றன.

இதனை முன்­னி­றுத்­தியே ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் கொழும்­புக்­கான பய­ணமும் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. இந்தப் பயணம் மிகவும் ஒழுங்­க­மைக்­கப்­பட்ட ஒன்­றாக இருந்­தது. ஆனாலும் சில விட­யங்கள் இர­க­சி­ய­மாக வைக்­கப்­பட்­டன.

இட்­சு­னோரி ஒனோ­டெரா கொழும்­புக்கு வந்து சேர முன்­னரே, ஜப்­பா­னியக் கடற்­ப­டையின் நாச­காரிக் கப்­ப­லான, ‘இகா­சுச்சி’ திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை வந்­த­டைந்­தி­ருந்­தது.

இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவின் இலங்­கைக்­கான பயணம் குறித்து தகவல் வெளி­யிட்ட ஜப்­பா­னிய தூத­ரகம், கொழும்பில் உயர்­மட்டச் சந்­திப்­பு­களை நடத்­துவார் என்றும், கொழும்­புக்கு வெளி­யிலும் சில பய­ணங்­களை மேற்­கொள்வார் என்றும் தான் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஆனால் ஜப்­பா­னிய ஊடகம் தான் முதன்­மு­தலில், அவர் அம்­பாந்­தோட்டை, திரு­கோ­ண­மலை துறை­மு­கங்­க­ளையும் பார்­வை­யி­டுவார் என்று செய்தி வெளி­யிட்­டது.

அது­பற்றி துறை­மு­கங்கள், கப்­பல்­துறை அமைச்சர் மகிந்த சம­ர­சிங்­க­விடம் கேட்­ட­போது, ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர் அம்­பாந்­தோட்­டைக்குப் பயணம் மேற்­கொள்­ள­வுள்ளார் என்று தெரி­யுமே தவிர, அங்கு என்ன செய்யப் போகிறார் -எதற்­காகப் போகிறார் என்று தெரி­யாது என கைவி­ரித்­தி­ருந்தார். அந்­த­ள­வுக்கு அவ­ரது பய­ணத்தில் இர­க­சியம் காக்­கப்­பட்­டது.

ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்­சரின் இலங்­கைக்­கான பய­ணத்தின் முக்­கி­ய­மான இலக்­குகள் இரண்டு.

முத­லா­வது- இலங்­கை­யு­ட­னான பாது­காப்பு ஒத்­து­ழைப்­பு­களை வலுப்­ப­டுத்­து­வது.

இரண்­டா­வது- அம்­பாந்­தோட்டைத் துறை­மு­கத்தில் சீனாவின் இரா­ணுவ ரீதி­யான செயற்­பா­டு­க­ளுக்குத் தடை போடு­வது.

இந்­தியப் பெருங்­க­டலில் கப்­பல்கள் பய­ணிக்கும் பாதைக்கு அருகே இருப்­பதால் அம்­பாந்­தோட்டை துறை­முகம், மிக முக்­கி­ய­மா­னது என்று கூறி­யி­ருந்த ஜப்­பா­னிய பாது­காப்பு அமைச்சர், எந்த வகை­யிலும் இது சீனாவின் இரா­ணுவப் பயன்­பாட்­டுக்­கு­ரி­ய­தாக இருக்கக் கூடாது என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வ­தி­லேயே கவனம் செலுத்­தினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரைச் சந்­தித்த போதும் சரி, பாது­காப்பு அமைச்சில் ருவான் விஜே­வர்த்­தன தலை­மையில் பாது­காப்பு உயர் அதி­கா­ரி­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பு­களின் போதும் சரி, அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் பிர­சன்னம் குறித்தே அதிக கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்­தியப் பெருங்­கடல் பகுதி திறந்த- சுதந்­தி­ர­மான- வெளிப்­ப­டை­யா­ன­தாக இருக்க வேண்டும், கப்­பல்­களின் போக்­கு­வ­ரத்­துக்கு எந்த இடை­யூறும் இருக்கக் கூடாது என்­பதை வலி­யு­றுத்­திய இட்­சு­னோரி ஒனோ­டெரா, அம்­பாந்­தோட்­டையில் சீனாவின் இரா­ணுவச் செயற்­பா­டுகள் இருக்கக் கூடாது என்­ப­தையும் பகி­ரங்­க­மா­கவே வலி­யு­றுத்­தினார்.

இந்த விட­யத்தில், இலங்கை அர­சாங்கத் தரப்­பிடம் இருந்து, உறு­தி­மொ­ழி­களைப் பெற்றுக் கொள்­வ­திலும் அவர் வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார்.

அம்­பாந்­தோட்டை துறை­முகம் இரா­ணுவப் பயன்­பாட்­டுக்கு அப்­பாற்­பட்­ட­தாக இருக்கும், சீனா அதனை இரா­ணுவத் தேவைக்குப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற உறு­தி­மொ­ழியை இலங்கை அர­சிடம் தாம் பெற்­றுள்­ள­தாக ஜப்­பா­னிய தொலைக்­காட்­சிக்கு இட்­சு­னோரி ஒனோ­டெரா தெரி­வித்­தி­ருக்­கிறார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா 99 ஆண்டு குத்­த­கைக்குப் பெற்­றுள்ள போதும், அதனை இரா­ணுவத் தேவைக்குப் பயன்­ப­டுத்த அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டாது என்ற உறு­தி­மொ­ழியைப் பெற்றுக் கொள்ளும் விட­யத்தில் மாத்­தி­ர­மன்றி, சீனாவின் கட்­டுப்­பாட்டில் உள்ள அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கும் சென்று அதனை உறு­திப்­ப­டுத்­து­வதில் ஈடு­பட்டார் இட்­சு­னோரி ஒனோ­டெரா.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா குத்­த­கைக்குப் பெற முடிவு செய்த பின்னர், ஜப்­பா­னிய கடற்­ப­டையின் இரண்டு பாரிய போர்க்­கப்­பல்கள் அங்கு நல்­லெண்ணப் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தன.

அதன் தொடர்ச்­சி­யாகத் தான், இட்­சு­னோரி ஒனோ­டெ­ராவும் அங்கு பய­ணத்தை மேற்­கொண்டு, அம்­பாந்­தோட்டை சீனாவின் கோட்­டை­யாக இருக்­கி­றதா என்­பதை உறு­திப்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கிறார்.

அம்­பாந்­தோட்டை விட­யத்தில் சீனா­வுக்கு விட்­டுக்­கொ­டுக்க ஜப்பான் தயா­ராக இல்லை. அதற்­காக, இலங்­கை­யுடன் உற­வு­களைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், உத­வி­களை வழங்­கு­வ­தற்கும் ஜப்பான் முன்­வந்­தி­ருக்­கி­றது.

இலங்கை கடற்­ப­டைக்கு 1.1 மில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான இரண்டு ஆழ்­கடல் ரோந்துப் பட­கு­களை ஜப்பான் வழங்­கி­யி­ருக்­கி­றது. இவை 3000 கி.மீ வரை சென்று கண்­கா­ணிக்கக் கூடி­யவை.

திரு­கோ­ண­மலைத் துறை­மு­கத்தை இந்­தி­யா­வுடன் இணைந்து கூட்­டாக அபி­வி­ருத்தி செய்­யவும் ஜப்பான் சாத­க­மான பதிலை அளித்திருக்கிறது,

இலங்கையில் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க. அல்லது அதற்குப் போட்டியாக செயற்பட ஜப்பானும், .இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்த ஆரம்பித்திருக்கிறது.

கடந்த ஆண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்திருந்த ஜப்பானிய கடற்படையின் ஹெலிகொப்டர் தாங்கி கப்பலான “இசுமோ”வின் சகோதரக் கப்பலான, “காகா” (Kaga) அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானி நடவடிக்கைகள் சீனாவுக்குப் போட்டியாக தாமும் கடற்படையை நகர்த்துவோம் என்று எச்சரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதுமாத்திரமன்றி, இலங்கையுடனான நெருக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.

இலங்கையைப் பொறுத்தவரையில் எந்த நாட்டுக் கடற்படையும் வரலாம்- போகலாம், ஆனால் எந்த நாடும் இலங்கையை தமது இராணுவத் தேவைக்குப் பயன்படுத்த முடியாது என்ற கொள்கையைக் கொண்டுள்ளது.

அதையும் மீறி சீனா தனது செல்வாக்கை நிலைநாட்டி விடக்கூடாது என்பதில் ஜப்பான் உறுதியாக இருக்கிறது. அதனை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைப் பயணம் மீண்டும் உறுதி செய்திருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-26#page-1

  • கருத்துக்கள உறவுகள்

சீக்கிரம் சிங்களவரின் வீட்டு வாசலில் பிரபாகரன் படம் தொங்கும்வரை ஒரு வழிபன்னாமல் விடமாட்டாங்கள் போல் உள்ளது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.