Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“என் அன்புள்ள சாம்” “அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம்”

Featured Replies

“என் அன்புள்ள சாம்” “அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம்”

Wigneswaran-with-Sambanthan.jpg?resize=8

கௌரவ இரா.சம்பந்தன்
எதிர்கட்சித் தலைவர்
தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கொழும்பு
22.08.2018

 

என் அன்புள்ள சாம் அவர்களுக்கு!
ஜனாதிபதி செயலணி

வடக்கு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றம் பற்றிய ஜனாதிபதி செயலணியில் பங்குபற்ற வடமாகாணத்தில் இருந்து கௌரவ ஆளுநரைத் தவிர நானும் எமது பிரதம செயலாளருமே அழைக்கப்பட்டமை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

கூட்டத்திற்கு நான் செல்லவில்லை. இது சம்பந்தமாக நான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் அனுப்பி வைக்கின்றேன். குறித்த கூட்டத்தில் நான் பங்குபற்றியிருந்தால் நான் அரசியல் ரீதியாக பல நன்மைகளைப் பெற்றிருப்பேன். ஆனால் தமிழர்கள் தங்கள் பிரச்சினைக்கான தக்க தீர்வொன்றை பெறமுடியாதே இருக்கும். தற்பொழுது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர்கள் 16 பேருக்கும் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் குறித்த செயலணிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.  பொருளாதார ஊக்கிகளே அரசியல் தீர்விலும் பார்க்க தமிழர்களுக்கு இத்தருணத்தில் முக்கியத்துவம் அளிக்கக் கூடியவை என்று நீங்கள் நினைத்தால் குறித்த கூட்டத்தில் பங்கு பற்ற நீங்கள் முடிவெடுக்கலாம்.

ஆனால் அரசாங்கமானது பொருளாதார ரீதியாக எங்களுக்கு பல நன்மைகளைக் கொடுக்க எப்பொழுதும் ஆயத்தமாகவே உள்ளதென்றாலும் அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் கொடுக்க மறுக்கின்றது என்பதே என்னுடைய தனிப்பட்ட கருத்து. ஆகவே எமது 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த செயலணி கூட்டங்களில் பங்குபற்றாது ‘அரசியல் தீர்வு முதலில் பொருளாதார முன்னேற்றம் அதன் பின்னர்’ எனக் கூறுவதே உசிதம் என நான் கருதுகின்றேன். மத்திய அமைச்சர்கள் சுமார் 12 பேரும் அவர்களுடைய செயலாளர்களும் இன்னும் சிலரும் படையினரில் உயரதிகாரிகளுந் தான் குறித்த செயலணியில் அங்கம் வகிக்கின்றார்கள். இவ்வாறான கூட்டங்களில் படையினருக்கு என்ன பங்கு என நான் கேட்டிருக்கின்றேன்.
உங்களுடைய கருத்தை எனக்குத் அறியத்தரவும். நன்றி
இங்ஙனம்
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

http://globaltamilnews.net/2018/92531/

32 minutes ago, நவீனன் said:

இவ்வாறான கூட்டங்களில் படையினருக்கு என்ன பங்கு என நான் கேட்டிருக்கின்றேன்.

கைக்கூலி அரசியல் செய்யும் சம்சும் கும்பலின் முகத்திரை மீண்டும் கிழியப்போகிறது!

வடக்கின் அபிவிருத்திக்கு எந்த விசேட செயலணிகளும் தேவையில்லை. அதை செய்வதற்கு தான் வடமாகாண சபை உள்ளது.

முட்டுக்கட்டைகள் போடாமல் வடமாகாண சபையை முழுமையான அதிகாரங்களுடன் சுதந்திரமாக இயங்கவிட்டிருந்தால் முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் பாரிய அபிவிருத்தியை வடமாகாணம் கண்டிருக்கும்.

அடுத்தவருடம் ஜெனிவாவில் உலகை ஏமாற்ற எனவே மைத்திரி-ரணில் தலைமையிலான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் சதித்திட்டத்துக்கு கைக்கூலி அரசியல் செய்யும் சம்சும் கும்பலின் உதவி தொடருமா, அவர்களின் புதிய கைக்கூலி அரசியல் தந்திரங்கள் என்ன என்பது சில கிழமைகளில்  தெரியவரும்.

 

  • தொடங்கியவர்

விக்கினேஸ்வரனின் கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் நிராகரிப்பு 

 

 
 

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

tamil01.jpg

வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி  செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. 

இ ந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

viki01.jpg

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளது.

இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது.

ஆகவே செயலணியின் கூட்டத்தில் நிச்சமாக கலந்து கொள்ளவேண்டும் என பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 

இதனை யடுத்து கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/39046

 

 

 

முத­ல­மைச்­சர் சி.வி.யின் கோரிக்கை நிரா­க­ரிப்பு : பாராளுமன்றக்குழுக் கூட்டத்தில் முடிவு என்கிறார் சுமந்திரன் எம்.பி.

01PRO23082018Page1Image0009-d9151974ee6037dd6a1ce3910678f332e818f0e1.jpg

 

(ஆர்.யசி)

வடக்கு – கிழக்கு அபி­வி­ருத்தி குறித்த ஜனா­தி­பதி செய­ல­ணியில் கலந்­து­கொள்ள தமிழ் தேசி யக் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் சகல எம்.பி.க்களும் ஜனா­தி­பதி செய­லணிக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுத்­துள்­ளனர். கூட்­டத்தில் கலந்­து­கொள்­ளக்­கூ­டாது என்ற வடக்கு முதல்­வரின் கோரிக்­கை­யையும் நிரா­க­ரித்­துள்­ளனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுக் கூட்டம் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி தலை­மையில் கூடும் வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி குறித்த ஜனா­தி­பதி செய­லணி கூட்­டத்தில் கலந்­து­கொள்­வது குறித்து இங்கு ஆரா­யப்­பட்­டுள்­ளது. இது குறித்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஊட­கப்­பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் கூறு­கையில், 

வடக்கு கிழக்கு அபி­வி­ருத்தி குறித்த ஜனா­தி­பதி செய­ல­ணியின் கூட்டம் எதிர்­வரும் 27 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 16 பேருக்கும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் இந்தச் செய­ல­ணியில் வடக்கு முதல்வர் விக்­கி­னேஸ்­வ­ரனும் இணைக்­கப்­பட்­டுள்ள போதிலும் இதற்கு முன்னர் அவர் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை.

அதற்­கான கார­ணி­களை ஜனா­தி­ப­திக்கு கடிதம் மூலம் தெரி­வித்­த­தா­கவும் அந்தக் கடி­தத்தில் ஒரு பிர­தியை எதிர்க்­கட்சி தலை­வ­ருக்கும் விக்­கி­னேஸ்­வரன் அனுப்பி வைத்­துள்ளார். அதேபோல் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்களும் இந்தக் கூட்­டத்தில் கலந்­து­கொள்ள வேண்டாம் எனவும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு­போதும் அர­சியல் தீர்வு வேண்டாம் என்ற நிலை­பாட்டில் செயற்­ப­ட­வில்லை. அர­சியல் தீர்வு ஒன்­றினை நோக்­கிய பய­ணத்­தையே நாமும் முன்­னெ­டுத்து செல்­கின்றோம். பாரா­ளு­மன்­றத்தில் நாம் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் எமது நோக்­கத்தை தெளி­வா­கவும் சிங்­கள தலை­மை­க­ளுக்கு விளங்­க­கூ­டிய வகை­யிலும் முன்­வைத்து வரு­கின்றோம்.

அன்று இருந்­ததை விடவும் சற்று முன்­னேற்­ற­க­ர­மான சூழ­லையும் நாம் எமது அழுத்­தங்­களின் மூல­மாக பெற்­றுக்­கொண்­டுள்ளோம். எனினும் வெறு­மனே அர­சியல் தீர்வு வேண்டும் என கூறிக்­கொண்டு எமது மக்­களின் பிரச்­சி­னை­களை கைவிட முடி­யாது என்­ப­திலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு தெளி­வாக உள்­ளது. அர­சியல் தீர்வு பெற்­றுக்­கொள்­வதை போலவே எமது மக்­களின் தேவை­க­ளையும் பூர்த்­தி­செய்ய வேண்டும். காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும், வீடுகள் கட்­டி­கொ­டுக்­கப்­பட வேண்டும், பாட­சா­லைகள், வீதிகள், தொழில் வாய்ப்­புகள், மருத்­துவ வச­திகள் என அனைத்­துமே எமது தமிழ் மக்­க­ளுக்கும் வேண்டும். கடந்த காலங்­களில் இந்த கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்ட போதிலும் இந்த ஆட்­சியில் எமது மக்­க­ளுக்­கான பல தேவைகள் பூர்த்­தி­யாகும் சூழ்­நிலை உள்­ளது. காணிகள் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஏனைய அபி­வி­ருத்­தி­களை செய்யும் நிலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளது.

அதேபோல் அண்­மையில் ஜனா­தி­பதி வடக்­கிற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட போது மாவை சேனா­தி­ராஜா எம்.பி தெளி­வாக இந்தக் கார­ணி­களை ஜனா­தி­ப­திக்கு எடுத்­து­ரைத்தார். ஜனா­தி­ப­தியும் வடக்கின் நிலை­மை­களை கவ­னத்தில் கொண்டு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கவும் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

வாய் வார்த்­தை­யாக அவர் கூறி­னாலும் கூட அதனை நிறைவு செய்ய நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆகவே இந்தக் கார­ணி­களை கருத்தில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும் வடக்கு கிழக்கு அபிவிருத்தி குறித்த ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் கலந்துகொள்வதாக ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம். வடக்கு முதல்வர் கூறிய காரணிகளை விடவும் மக்களின் நிலைமைகளை நாம் கருத்தில் கொண்டு இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தீர்மானம் எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-24#page-1

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஜனாதிபதி செயலணி விவகாரம்: விக்கிக்கும், சம்பந்தனிற்கும் இடையில் சந்திப்பு!

 

wikki-sampanthan-720x450.jpg

வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் இதுதொடர்பில் எதிர்வரும் சில தினங்களில் சி.வி விக்னேஸ்வரனை சந்தித்து பேசவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது.

இந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று(வியாழக்கிழமை) கூடி ஆராய்ந்துள்ளது.

இதன்போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திசார் பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இவற்றை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது என கூட்டமைப்பு அறிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஜனாதிபதி-செயலணி-விவகாரம்/

  • கருத்துக்கள உறவுகள்

65_A54_C05-8_EC9-420_A-_A53_C-458_AB7_C2

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

65_A54_C05-8_EC9-420_A-_A53_C-458_AB7_C2

சாம்... அந்த மரக்  குத்தியில்,  யோசிக்காமல்  தலையை வைத்தால்  தான்... தமிழருக்கு விடிவு பிறக்கும்.
"நித்திரை, கொள்பவனை எழுப்பலாம்... 
நித்திரை,  கொள்பவன் போல்... நடிப்பவனை, ஒரு நாளும் எழுப்ப முடியாது."

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் சமாந்திரமாக இருக்க வேணும்.சம் சும் மோசமாக இருக்கலாம்.அதுக்காக வேறு ஒரு தலைமையை நாடலாம்.ஆனால் மீன்டும் ஒருக்கால் விக்கி அய்யா வந்து .....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

அபிவிருத்தியும் அரசியல் தீர்வும் சமாந்திரமாக இருக்க வேணும்.சம் சும் மோசமாக இருக்கலாம்.அதுக்காக வேறு ஒரு தலைமையை நாடலாம்.ஆனால் மீன்டும் ஒருக்கால் விக்கி அய்யா வந்து .....

நீங்கள் வேறை... விக்கி ஐயாவுக்கு,  குடைச்சல்  குடுக்குறதே.... சம்/சும்  கும்பல் தானே....  ?

மாத்தி யோசித்தால்.... சம்பந்தனும், சுமந்திரனும் ஓய்வு எடுத்தால்...
விக்கி  ஐயாவின்,   சிந்தனையை... நீங்களே பார்ப்பீர்கள்.
சுமந்திரன் ஏற்கெனவே... அடுத்த தேர்தலில், இருந்து... ஓய்வு எடுப்பதாக அறிவித்து விட்டார்.
சம்பந்தன் தான்... விடாப்  பிடியாக, நமக்கு... அரசியல்  சேவை,  செய்ய வேண்டும் என்று... நாண்டு கொண்டு நிற்கிறார். ??

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.