Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓணம் பண்டிகை: களையிழந்து காணப்படும் கேரளா

Featured Replies

ஓணம் பண்டிகை: களையிழந்து காணப்படும் கேரளா

 

 

ty-720x450.jpg

கேரளா மக்களால் சிறப்பிக்கப்படும் ஓணம் பண்டிகை நாளான இன்று, அம்மாநிலம் களையிழந்து காணப்படுகிறது.

கேரளாவில் கடந்த 8 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையில் கொட்டித்தீர்த்த மழை, அம்மாநில மக்களின் வாழ்வை சீழ்குழைத்துள்ளது.

இதனால் இன்று (சனிக்கிழமை) ஓணம் பண்டிகையின்றி கேரளா வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த காலங்களில் ஓணம் பண்டிகை என்றால் கேரளாவே களை கட்டி பிரகாசிக்கும்.

குறிப்பாக கேரளாவின் பிரசித்திபெற்ற ஆனச்சல் ஐயப்பன் ஆலயம் மற்றும் பத்மநாபபுரம் மாளிகை என்பனவே ஓணம் நாளில் பிரகாசிக்கும் இடங்கள்.

ஆனால் இந்த ஆண்டு குறித்த இரண்டு இடங்களுமே வெறிச்சோடி காணப்படுகின்றன. பலமாநிலங்களை சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை சிறப்பிக்க முடியவில்லை என்றும், அந்த நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவுள்ளதாகவும், ஐயப்பன் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கேரளா முதல்வர் பினராயி விஜயனின் கட்டுப்பாட்டிலுள்ள பத்மநாபபுரம் மாளிகையும் வெறிச்சோடி காணப்படுவதால், அங்கு ஓணம் பண்டிகையின் எதிர்பார்ப்பும் செல்லும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 400 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஓணம் பண்டிகை எனப்படுவது, இந்தியாவின் தென்தமிழகத்திலும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும்.

மகாபலி சக்கரவர்த்தியின் செருக்கினை அடக்கிட, திருமால் வாமனராக அவதரித்து, பலிச்சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதாகவும், அதற்கு மகாபலி சக்கரவர்த்தி இசைவளித்தவுடன், முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் வானத்தையும் அளந்த வாமனர், மூன்றாம் அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து, அவரை அழிக்க முற்படும் சமயம், மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் தன்னுடைய மக்களைக் காண தமக்கு அருள் செய்ய வேண்டும் என்று கோரினார் என்பது வரலாறு.

எனவே அதை ஏற்று வாமனர் அருள் புரிந்தார் என்றும், மகாபலி சக்கரவர்த்தி வருடா வருடம் மக்களை காவருவார் என்ற நம்பிக்கையோடும் இந்த ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

uy7u.jpggyfy.jpg

http://athavannews.com/ஓணம்-பண்டிகை-களையிழந்து/

  • கருத்துக்கள உறவுகள்

களையிழந்து காணப்படுவதாக யார் சொன்னார்கள்..?

இங்கே அனைத்து மல்லுகளும் ஓட்டலில் முண்டியடித்து மொக்கிகொண்டுதான் உள்ளார்கள்..!

ஒணானனாவது, சோகமாவது?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் லண்டனிலும் ஈஸ்ட் ஹாம்  பகுதியில் வேட்டியுடன் ஒனசாப்பாடு வரிசையில் நின்று தாக்கிகொண்டு நிக்கினம் உலகத்திலே விவஸ்தைகெட்ட கூட்டம் இந்த மலையாள கூட்டமகாத்தான் இருக்கணும் .? படமெடுக்க போனை தூக்க பார்வையாலே கெஞ்சுகிறார்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.