Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தை இடத்தில் வைத்து பார்த்தேன் - லண்டனில் ராகுல் உருக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தை இடத்தில் வைத்து பார்த்தேன் - லண்டனில் ராகுல் உருக்கம்

 
 
2018-08-26@ 00:55:31

Tamil_Daily_News_Aug18_2018__6138879656792.jpg

லண்டன்: ‘‘பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய பிள்ளைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பேசினார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, புகழ்பெற்ற லண்டன் பொருளாதார பள்ளியில் இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்களிடையே கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் ஒருபுறம் பாஜ.வும், மறுபுறம் அனைத்து எதிர்க்கட்சிகளும் அடங்கிய கூட்டணியும்தான் இருக்கும். இதில், எந்த மாற்றமும் இல்லை. நாட்டில் இதுவரை இல்லாத வகையில் கல்வி நிறுவனங்கள் மீது மத்திய பாஜ அரசு ஆதிக்கம் செலுத்துகிறது. அரசியல் சாசனம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது. இவற்றை நாங்கள் பாதுகாப்போம். நாடெங்கிலும் பரப்பப்படும் நஞ்சை தடுத்து நிறுத்துவதுதான் முதல் வேலை என்பதை நானும், அனைத்து எதிர்கட்சிகளும் உணர்ந்துள்ளோம். அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜ.வை வீழ்த்துவதே காங்கிரசின் முதல் வேலை.நான் முன்பே கூறியபடி, நானும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவன்தான். அதன் வலி எனக்கு புரியும். அதனால், இந்த பூமியில் எந்த வடிவத்தில் வன்முறை நடத்தப்பட்டாலும் அதை தடுப்பேன். யார் துன்புறுத்தப்பட்டாலும்  மிகவும் வருத்தப்படுவேன். அதனால்தான், 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக  நடத்தப்பட்ட வன்முறையை 100 சதவிகிதம் எதிர்க்கிறேன். அதில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைப்பதை 100 சதவீதம் ஆதரிக்கிறேன். இதில் நான் தெளிவாக உள்ளேன்.

நான் மிகவும் விரும்பியவர்கள் கொல்லப்பட்டதை நான் பார்த்துள்ளேன். இதேபோல், எனது தந்தையை கொன்றவரும் கொல்லப்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவரை எனது தந்தையின் இடத்திலும், அவருடைய குழந்தைகளை எனது இடத்திலும் வைத்து பார்த்தேன். வன்முறையின் வலியை அதிகம் பேர் நேரிடையாக உணர்வதில்லை. இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, லண்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இங்கிலாந்து அரசியல் தலைவர்களுடனும் ராகுல் கலந்துரையாடினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=430715

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DlgK0T3U4AEjxBJ.jpg:large

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சவுண்ட்டு விடுறவர் முடிந்தால் அவரின் அப்பா கொலையில் சம்பந்தமே இல்லாமல் கொலை குற்றசாட்டு உடன் வருடகணக்கில் சிறையில் இருக்கும் அந்த எழுவரையும் விடுவிக்கலாமே ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிங்களா.. ராஜீவ் காந்தியால் கொல்லப்பட்ட மற்றும் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்ற சுய கற்பிதத்தோடு விடுதலைப்புலிகள் மீது பகமை கொண்டு பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலிலும் பின்னும் கொன்றவற்றிற்கும்.. ராகுல் என்பவர் பதில் சொல்லியாக வேண்டும். 

மேலும் பிரபாகரனின் பிள்ளைகள் கொல்லப்பட்டதற்காக.. ராகுலும் அவரின் அக்காவும் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அதுதானே நியாயம். 

போலி அரசியல் வியாபாரிகள்.. எமது மக்களையும் மண்ணையும் எமது போராளிகளையும் அழித்தது என்றும் மன்னிக்கப்பட முடியாத குற்றங்கள் என்பதே உண்மை.

அதற்கான தண்டனைகளை காலம் எல்லோரும் வழங்கும். யாரும் இந்தப் பூமியில்.. ஆதிக்கம் செய்து சிரஞ்சீவிகளாக வாழ்ந்திட முடியாது. ?

இது ராகுலின் உருக்கம் அல்ல.. ராகுலின் வெறித்தனத்தின் வெளிப்பாடு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 8/26/2018 at 3:26 PM, nedukkalapoovan said:

அதற்கான தண்டனைகளை காலம் எல்லோரும் வழங்கும். யாரும் இந்தப் பூமியில்.. ஆதிக்கம் செய்து சிரஞ்சீவிகளாக வாழ்ந்திட முடியாது.

உண்மை சரித்திரம் ரொம்ப பெரிசு .

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா, எலி கோவணத்தோட திரியுதே, லண்டணில எண்டு பார்த்தால், எல்லாம் மகிந்த ராஜபக்சேவுக்கு இலண்டன் வர முடியாத அளவுக்கு தமிழர் காட்டின எதிர்ப்பு தான்.?

  • கருத்துக்கள உறவுகள்

நம்பீட்டம் நம்பீட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.