Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

காதல் என்றால் காதல்தான்

கண்டதும் கவிழ்க்கும் காதல்

காணமல் மடியும் காதல்

கண்டும் காணாமலும்

உண்டும் உறங்காமலும்

முரண்படும் உறவு காதல்

எனக்கே தெரியலையே ! அதுதான் அனுபவத்திலை நானும் படிப்பம் என்று பார்த்தன்

  • Replies 778
  • Views 81.2k
  • Created
  • Last Reply

காதலில் எத்தனை வகைகள் உள?

காதல் என்றா காதலா மாஸ்டர் நல்ல விளக்கம்.......... :P

காதலில இத்தனை வகையா.............மொத்தத்தில காதல் புரியாத புதிர் என்று சொல்லுறீங்க.......... :huh:

உங்களுக்கே இன்னும் தெரியவில்லையா மாஸ்டர் அநுபவத்தில படிபிக்க போறீங்களா மாஸ்டர்....சரி படிபியுங்கோ.............. ;)

ஆணுக்குள் பெண் வந்தால் காதல் என்றும் பெண்ணுக்குள் ஆண் வந்தால் காமமும் என சொல்லுரார்களே இது உண்மையா?

நிலா அக்கா எப்படி இப்படி எல்லாம் தங்களுக்கு டவுட் வருது............ :P :P

பார்த்த காதல் பாராமல் காதல் என்று இருக்கின்றதா? இருக்குமாயின் இவை இரண்டிலும் உள்ள நன்மை தீமைகள் என்ன மாஸ்டரே

அன்றிலிருந்து இன்றுவரை பெண்களை அடிமைப்படுத்தும் சமுதாயத்தில் அப்படித்தான் சொல்லுவார்கள். நாம் எல்லோரும் தற்போது மேலைத்தேய கலாச்சாரத்திற்குள் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். முற்றுமுழுதாக மாறாவிட்டாலும் எம்மையறியாமலேயே எமக்குள்ளும் அவர்களின் சில மாற்றங்கள் திணிக்கப்படுகின்றுது. என்னைப்பொறுத்தவரையில் ஆணோ பெண்ணோ காதல் ஒருவரையொருவர் மனதார புரிந்து (இங்கு யார் காதலை முதலில் சொல்கின்றார்கள் என்பது முக்கியம் இல்லை) காதலை அவர்களின் மனஉணர்வுகளை பரிமாறி தமக்கென்று ஒரு வாழ்வை உருவாக்க முடியுமாயின் அது வாழ்க்கை. இங்கு ஆண் சொன்னால் காதல் பெண் சொன்னால் காமம் என்று சொல்லமுடியாது. உள்ளத்தில் தோன்றுவதுதான் வார்த்தைகளாக வந்து வீழும்.

என்னைப்பொறுத்தவரையில் பார்த்தகாதல் என்றால்ஒருவரையொருவர் (சொத்து அந்தஸ்து சாதி மதம் இனம் ) புரிந்து கொள்கின்ற காதல் பார்த்த காதல்பார்க்காத காதல் உள்ளத்தின் உணர்வுகளிற்கு இடமளித்து வரும் காதல் பார்க்காத காதல்

Edited by Paranee

மாஸ்டர் பார்காத காதல் என்றா இரண்டு பேரும் பார்காம காதலிகிறதோ உது நல்ல படியா நடக்கும் என்று நினைகிறீங்களோ.......... :huh:

நன்றி மாஸ்டர். அருமையான விளக்கம்.

ஆமாம் இன்றைய நடைமுறையில் இணையக்காதல் என்பது பரவலாகி வருவது உண்மை. அதைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

எப்போதும் இணையத்தானே காதல் செய்கின்றோம்

மாஸ்டர் பார்காத காதல் என்றா இரண்டு பேரும் பார்காம காதலிகிறதோ உது நல்ல படியா நடக்கும் என்று நினைகிறீங்களோ.......... :huh:
ஜம்மு இதுதான் "காதல்கோட்டை" போல. ம்ம் அதுதான் இணையக்காதல் என்று இப்ப வருவது. பொறுங்கோ மாஸ்டர் என்ன சொல்லுறர என்று பார்ப்பம்.
எப்போதும் இணையத்தானே காதல் செய்கின்றோம்
அட மாஸ்டர் ஒரு வரில சொல்லிட்டீங்களே.ம்ம் மாஸ்டர் காதலிக்கும் போது ஆடவன் சொல்லும் சில வசனங்கள்ஹேய் அபப்டி செய்யாதே இபப்டி உடை உடுக்காதே அவனோடு பேசாதே ....................... இப்படி சிலர் சொல்லுவார்களே உது எதற்காக? :lol: தன் காதலி மீது ஆடவர் கொள்ளும் சந்தேகத்திலா இல்லை அன்பினாலா? :)

காதல் கோட்டை மாதிரியா அதுவும் நல்லா தான் இருக்கும் படத்தில பார்க்க நிஜத்தில நல்லா இருக்குமோ நிலா அக்கா........ :P

நானும் இந்த யாழ் இணையத்தால் இணைந்தவன்தான். ஆரம்பத்தில் இங்கு கவிதைகள் கருத்துக்கள் எழுதிக்கொண்டிருந்தேன். யாழ் இணையத்தின் அங்கத்தவராகமலேயே ஆயிரம் உறவுகள் களத்திற்கு வந்து போகின்றனர். அவர்களில் ஒருவராய் வந்து இன்று எனக்குள் ஒருத்தியாய் வாழ்கின்றாள்

என்றும் நான் நன்றியுடையவன் இந்த யாழ் களத்திற்கு

அரேபிய தேசத்தில் வானம் பார்த்த பூமியாய் பாலைவன ஓட்டகமாய் தேசத்தின் நினைவுகளை சுமந்து இரைமீட்டு வாழ்ந்த எனக்கு தமிழ் தாய்மண் வாசம் காட்டிய இந்த யாழ் இணையம் எனக்கு வாழ்வுத்துணையையும் தேடித்தந்தது

பரணி அண்ணா அப்ப அண்ணி யாழில பழைய ஆளா சொல்லவே இல்லை...............நிலா அக்கா உங்களுக்காவது தெரியுமா அண்ணியை......... :P

அதைப்பற்றி எனக்குத் தெரியாது. நான் எனது மனைவிக்கு (மனைவியாக முதலே அவர் கேட்டபோது) சொல்லியிருக்கின்றேன். உடை உடுத்துவது உங்களது சுதந்திரம். அது மற்றவர்களிற்கு இடையூறாக இருக்கக்கூடாது. எனக்கு மனைவியாக நீ இருக்கின்றாய். எனது ஆசைகள் இன்பங்கள் துன்பங்கள் எல்லாம் உன்னுடன் அமையும். எத்தனையோ பேர் கட்டிய மனைவியை காதலியை பிரிந்து வாழ்க்கின்றார்கள். அவர்கள் மனதில் தப்பான எண்ணத்தை வளர்க்ககூடாது அதற்கு நாம் உடந்தையாக இருக்காமல் இருந்தால் போதும்.இன்றுவரை உடை விடயத்தில் தடை இல்லை. மற்றவர்களுடன் கதைப்பது அது அவர்களின் சுதந்திரம். அவர்கள் என்ன குழந்தைகளா அவர்களிற்கும் அறிவு இருக்கும்தானே எம்மைப்போலத்தானே அவர்களும் அதனால் அதற்கும் தடை இல்லை. ஒரேயொரு விடயத்தில் மட்டும் தடை உணவு. தினமும் 3 நேரமும் உணவருந்த வேண்டும். உணவு எஞ்சிவிட்டது என்று எறியக்கூடாது. எத்தனையோ ஜீவன்கள் ஒரு வேளை உணவில்லாமல் உருக்குலைந்து சாகின்றுது.

யாரிற்கும் தெரியாது ஜம்மு அவர் இங்கு பதிந்து கருத்துக்கள் எழுதுவதில்லை. பார்வையாளராக வந்து கவிதைகள் வாசிப்பார். கவிதைகள் என்றால் நல்ல விருப்பம். இன்றும் எனது கவிதைகளிற்கு முதல் ரசிகை அவள்தான். இந்த யாழ் இணையத்தின் ஒரு உறுப்பினர் சரீஸ். எனது துணைவியாரின் நண்பர். உலகறிந்த கவிஞன் அவர்தான் என்னை எனது துணைவியாரிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

பரணி அண்ணா அப்ப அண்ணி யாழில பழைய ஆளா சொல்லவே இல்லை...............நிலா அக்கா உங்களுக்காவது தெரியுமா அண்ணியை......... :P

Edited by Paranee

மாஸ்டர் அப்போ உங்கள் வாழ்க்கைத் துணைவி யாழின் உறுப்பினர்களுல் ஒருவரா? அவர் தற்போதும் யாழுக்கு வருபவரா? அல்லது அதற்கு நீங்கள் தடை விதித்து விட்டீர்களா?

தடையா ?

எப்பவாவது இருந்துவிட்டு வருவாள்.

எஙகே நேரம். வேலை வீடு . போதாக்குறைக்கு இப்பதானே இந்தப்பாழாய்ப்போன சன்ரீவியாலே

தடையா ?

எப்பவாவது இருந்துவிட்டு வருவாள்.

எஙகே நேரம். வேலை வீடு . போதாக்குறைக்கு இப்பதானே இந்தப்பாழாய்ப்போன சன்ரீவியாலே

மாஸ்டர் நாற்சந்தியில் நம்ம பாடசாலை இடம்மாற்ரப்பட்டுள்லதால் அடுத்த கேள்விகளை அங்கேயே கேட்கின்றோம் :P

மாஸ்டர் நான் பாடசாலை உங்களின் பெயரில் ஆரம்பித்துவிட்டேன் அங்கே வந்து எங்களுக்கு பாடங்களை எடுக்கலாம் பல மாணவர்கள் காத்து கொண்டு இருகிறார்கள்............. :P

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=331913

அழகான பெண்ணை விட அன்பான பெண்ணே மேலானவள்.

அன்பான பெண் எங்கே இருக்கிறாள்? தேடி தேடி என் தலையில் நரையும் விழுந்து விட்டது.

அன்பான பெண் எங்கே இருக்கிறாள்? தேடி தேடி என் தலையில் நரையும் விழுந்து விட்டது.

தாத்தா நாங்கள் மற்றவர்களிற்கு எவ்வளவு அன்பை கொடுகிறோமோ அவ்வளவு அன்பை மற்றவர்களிடம் இருந்தும் பெற முடியும்............உது என்ட அநுபவத்தில கண்டது...........தாத்தா........ :P

அன்பான பெண் எங்கே இருக்கிறாள்? தேடி தேடி என் தலையில் நரையும் விழுந்து விட்டது.

பொன்னி ஜம்மு சொல்வது போல அன்பைக் கொடுத்தால் அன்பை பெறலாம். :P

உண்மைதான்

இதைத்தான் அன்று சொன்னார்கள் ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும் என்று

மற்றவரில் அன்பு வைத்தால் எதிரிகூட எம்மீது அன்பாக இருப்பான்

பொன்னி ஜம்மு சொல்வது போல அன்பைக் கொடுத்தால் அன்பை பெறலாம். :P

ஆமாம் சின்ன பேபிக்கு தெரியுது நிலா அக்கா தாத்தாவிற்கு தெரியுது இல்லை பாவம்.......... :P

மற்றவரில் அன்பு வைத்தால் எதிரிகூட எம்மீது அன்பாக இருப்பான்

பரணி அண்ணாவே சொல்லிட்டார் பிறகு என்ன..............ஆமாம் அன்பால் எதிரியை கூட தன்வசமாக்கலாம் இது இன்றைய சிந்தனை........... :P

Edited by Jamuna

சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது. :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.