Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

Featured Replies

இறுதிப் போரில் 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இராணுவம் கொன்றது: ஃபொன்சேகா பேட்டி

சரத் பொன்சேக்கா Image captionமுன்னாள் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா

இலங்கை இறுதிப் போரின் போது 23 ஆயிரம் விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் கொன்றதாக அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா தெரிவித்தள்ளார்.

மேலும், "இறுதிப் போரில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் ஆகியோரும் பதுங்கு குழிகளில் இருந்து போரிட்டு மாண்டதாகவே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தது'' என்று தற்போது அமைச்சர் பதவி வகிக்கும் சரத் ஃபொன்சேகா தெரிவித்தார்.

இறுதிப் போரில் 4000 முதல் 5000 வரையிலான பொதுமக்களே கொல்லப்பட்டிருக்கலாம் என தான் கணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்து வரும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா, கொழும்பில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது இறுதிப் போரின் உயிர்ச் சேதங்கள் குறித்தும் பேசினார்.

 

 

இறுதிப் போரில் 40,000 பேர் கொல்லப்படவில்லை எனவும், 7,000 அல்லது 8,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இதில் நான்கில் ஒரு வீதம் விடுதலைப் புலிகள் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ன கூறவிரும்புகிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு இறுதிப் போரை வழிநடத்திய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா பதிலளித்தார்.

சீன அதிபருடன் மஹிந்த ராஜபக்ஷபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் 23 ஆயிரம் உறுப்பினர்களை இலங்கை இராணுவம் கொன்றது. மேலும் 12,000 பேரைக் கைது செய்தது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பல் ஒன்று இறுதிப் போர் நடந்த போது சேவையில் ஈடுபட்டிருந்தது. பாதிக்கப்படுவோரை இராணுவத்தின் பக்கம் கொண்டுவர அந்தக் கப்பல் பயன்பட்டது. போரின் இறுதி இரண்டு வாரங்களைத் தவிர அந்த கப்பல் சேவை தொடர்ந்து இயங்கியது. அதனால், 30 - 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை. புதுகுடியிருப்பு, கிளிநொச்சி உள்ளிட்ட குறுகிய பிரதேசத்தில் 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால் அந்தப் பிரதேசத்தில் எந்தவொரு இடத்தில் மண்வெட்டியால் நிலத்தைக் கொத்தினாலும், கொல்லப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் இருக்க வேண்டும்'' என்றார்.

''4,000 முதல் 5,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என நான் நினைக்கிறேன். காரணம், விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளில் பொதுமக்களே கடமையில் இருந்தனர். இறுதிப் போரில் ஒரு பெண்ணைக் கைது செய்திருந்தோம். அவர் ஓர் ஆசிரியை. ஆசிரியையுடன் மாணவர்களுக்கும் ஆயுதங்களை வழங்கி பதுங்கு குழிகளில் கடமைக்காக அமர்த்தியுள்ளனர். எனவே, பொதுமக்களும் கொல்லப்பட்டிருக்கலாம்'' என குறிப்பிட்டார்.

''அப்படி 40,000 பேர் கொல்லப்பட்டிருந்தால், இராணுவம் முன்நோக்கிச் செல்ல தடையாக இருந்திருக்கும். இறந்தவர்களின் உடல்களை அகற்ற இராணுவம் இன்னுமொரு படைப் பிரிவை ஈடுபடுத்தியிருக்க வேண்டும். எனினும், அப்படியொரு நிலை ஏற்படவில்லை. 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்பது பொய்யான தகவல்'' என்றார்.

சரத் ஃபொன்சேகா

எந்தக் காலப்பகுதியில் இந்த 23,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்? என்று அவரிடம் கேட்கப்பட்டது.

''இறுதிப் போரில்தான் இந்த 23,000 புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பில் 35,000 உறுப்பினர்கள் இருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அறியக்கிடைத்தது. போர் நடந்த போது நாள்தோறும் புலிகளுக்கு ஏற்படும் இழப்புகளை இராணுவம் அலைவரித் தகவல்களை அனுப்பிவைத்தனர். இதன்மூலம் தான் இந்த எண்ணிக்கை உறுதியானது. இறுதிப் போர் நடந்த 2 வருடங்கள், 9 மாதங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன'' என்றார்.

பதுங்கு குழிகளில் ஆசிரியை உள்ளிட்ட பொதுமக்கள் இருந்ததாகக் கூறுனீர்கள்! அவர்கள் ஆயுதப் பயிற்சி பெற்றவர்களா? அல்லது பயிற்சியின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா? என்று கேட்கப்பட்டதற்கும் முன்னாள் இராணுவத் தளபதி பதிலளித்தார்.

sarath Fonseka

''பதுங்கு குழிகளில் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களுக்கு குறுகிய கால ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டிருந்தது. வயோதிக தாய், தந்தையருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதைப் போன்ற புகைப்படங்கள் அக்காலத்தில் பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்திருந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கும். அதேபோன்று பயிற்சிகள் வழங்கப்பட்டவர்களே இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தனர். ஆயுதத்தைப் பயன்படுத்தத் தெரியாத, கண்கள், காதுகள் சரிவர இயங்கும் ஒருவரை அவர்கள் பதுங்கு குழியில் கடமையில் ஈடுபடுத்தியிருந்தாலும், அவர்களுக்குப் பாதுகாப்பிற்கு ஆளணி பலம் கிடைத்திருக்கும். இவ்வாறு இறுதிப் போரில் அனைவரையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர்" என அவர் தெரிவித்தார்.

"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி, மகள் உள்ளிட்டவர்களும் முன்னிலை பதுங்கு குழிகளில் இருந்து போர் செய்து இறுதி நேரத்தில் மாண்டதாகவே எமக்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தன. எனவே அனைவரையும் அவர்கள் போரில் ஈடுபடுத்தியதாகவே நான் கருதுகிறேன்.'' என்றார்

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் போரின் பின்னர் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏதாவது நீங்கள் அறிந்துள்ளீர்களா? இவற்றில் நம்பகத் தன்மை இருக்கிறதா? என்று முன்னாள் இராணுவத் தளபதியிடம் கேட்கப்பட்டது.

அகழ்வுப் பணிகள் Image captionஇலங்கையின் மன்னார் பிரதேசத்தில் மனித புதைகுழியென சந்தேகிக்கப்படும் இடத்தில் 43ஆவது தடவையாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன

''இவற்றை நம்ப நான் தயாரில்லை. இறுதிப் போரின் போது முஸ்லிம் தரப்பினர் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்ததற்கான எவ்வித தடயங்களும் இருக்கவில்லை. முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என நான் நினைக்கவில்லை. முஸ்லிம் மக்களை பொதுவாக எடுத்துக் கொண்டால், இன்றும் அவ்வாறான மனநிலையில் அவர்கள் இல்லை. இதனை நான் ஏற்கமாட்டேன். விடுதலைப் புலிகள் மட்டுமே அந்நேரத்தில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்றே நான் கருதுகிறேன்.'' என்று குறிப்பிட்டார்.

கோத்தபய ராஜபக்‌ஷ

இறுதிப் போரில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்றே போரை வழிநடத்தியதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச கூறி வருகிறார். எனினும், இராணுவத்திற்குத் தலைமைதாங்கிய அந்நாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ''ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்'' எனக் கூறுகிறார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் சரத்ஃபொன்சேகா இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்ட தகவல்கள் அடுத்த ஜெனீவா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பேசுபொருளாக மாறும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

https://www.bbc.com/tamil/global-45449763

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சுமத்திரனின் அண்ணன் போல் இருக்கு ஒவ்வொரு நேரத்துக்கு ஒவ்வொரு கணக்கு சொல்கிறார் எண்டாலும் நம்ம ஆள் சும்மை வெல்ல முடியாது  விடிய காலமை ஒரு அறிக்கை மத்தியானம் அதை எதிர்த்து அறிக்கை இரவு அதுவும் சரி மற்றதும் சரி என்ற அறிக்கை விடுவார் .

  • கருத்துக்கள உறவுகள்

10 வருசமா கூட்டிக் கழிச்சு.. இப்பதான் ஒரு கணக்கை முடிச்சிருக்கிறார்.

23,000 + 12,000 = 35,000

மேலும் இப்ப விளங்குது ஏன் உடலங்களை சிங்கள இராணுவம் எரியூட்டியது.. பாங்கி மூனின் வருகைக்கு முன்னதாக.. தடயங்களை அகற்றியது என்பது.  மண்வெட்டியால் வெட்டினால்.. எலும்புகள் கிடைக்காமல் போகட்டும் என்று கூட இருக்கலாம். 

அது தான் மன்னாரில் வெட்ட வெட்ட வந்து கொண்டிருக்கிறது.

ஆக இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரிகளில் பொன்சேக மிக முக்கியமானவர்களில் ஒருவர். 

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் புலிகளின் கணக்கில் சேர்த்தால் பொன்சேகா சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் கொல்லப்பட்டவர்களின், காணாமல் போனவர்களின், சரணடைந்தவர்களின் உண்மையான தரவுகளை சிங்கள அரசோ படையினரோ ஒருபோதும் வெளியிடமாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் கிண்டினால் எலும்புகூடக் கிடைக்காது. எலும்புகளைக் கூட அழிக்க சீனா இரசாயனப் பதார்த்தங்களை வழங்கியதாக எங்கோ படித்த நினைவு.

56 minutes ago, nedukkalapoovan said:

பாங்கி மூனின் வருகைக்கு முன்னதாக.. தடயங்களை அகற்றியது

பாங்கி மூனை தான் வேறுவழியில் விலைக்கு வாங்கிவிட்டார்களே! 

விலை போன பாங்கி மூன் தான் பெற்ற நானாவித இலஞ்சங்களுக்கு கட்டுப்பட்டு தன்னால் முடிந்தளவு கடைசிவரை இனப்படுகொலைகளை நடத்த உதவி செய்ததும், போர்க்குற்றவாளிகளை காப்பாற்ற முனைந்ததுவும் இப்போது வரலாறு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, கிருபன் said:

இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களையும் புலிகளின் கணக்கில் சேர்த்தால் பொன்சேகா சொல்லுவதும் சரியாகத்தான் இருக்கும். ஆனால் கொல்லப்பட்டவர்களின், காணாமல் போனவர்களின், சரணடைந்தவர்களின் உண்மையான தரவுகளை சிங்கள அரசோ படையினரோ ஒருபோதும் வெளியிடமாட்டார்கள்.

முள்ளிவாய்க்காலில் கிண்டினால் எலும்புகூடக் கிடைக்காது. எலும்புகளைக் கூட அழிக்க சீனா இரசாயனப் பதார்த்தங்களை வழங்கியதாக எங்கோ படித்த நினைவு.

கண்டும் காணாமல் இருக்கிற ஐநாவுக்கு மண்டையோடு எலும்புகள் இருந்தும் ஒன்றுதான் இல்லாமலிருப்பதும் ஒன்றுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.