Jump to content

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்


Recommended Posts

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்

Ananthasangari-4781.jpg?resize=800%2C566

தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனவும் உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வடக்கு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்

 

அவரின் கடிதத்தின் முழு விபரம் வருமாறு

மேதகு முதலமைச்சர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்களுக்கு,
அன்புடையீர்,

அனைவரும் நன்றாக சிந்தித்து முடிவு எடுக்கவேண்டிய தருணம் இது

மாகாணசபையின் இறுதி அமர்வு தங்களின் பிறந்த நாளில் வருவதாக செய்திகள் கூறுகின்றன.. தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட நீங்கள் உட்கட்சி விவகாரத்தால் தாங்கள் சுயமாக சிந்தித்து செயற்பட முடியாமலேயே காலங்கள் ஓடிவிட்டன.

குறிப்பாக தமழரசுக் கட்சியினர் தங்களுடன் மோதிக் கொண்டு அரசியல் நாகரீகம்கூட தெரியாமல் சிலர் தங்களை வசைபடியது மட்டுமல்லாமல் முதலமைச்சர் பதவியில் இருந்து தங்களை அகற்ற அவர்கள் நடந்து கொண்ட முறைமையை எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுறுக் கொள்ள முடியாத ஒன்று. தமிழர்கள் கையில் அதிகாரம் போனால் இப்படித்தான் செயற்படுவார்கள் என்று, எமது பண்பாடு கலாச்சாரம் எல்லாம் வெறும் பேச்சளவில் மடடும்தான் என எம்மைப் பார்த்து உலகமே நகைத்தது. இருந்தும் தாங்கள் பொறுமையை கடைப்பிடித்து மாகாண சபையின் காலம் முடியும்வரை தாக்குப்பிடித்து சமாளித்து விட்டீர்கள். உட்கட்சி உரசலால்; நீங்கள் மனதில் நினைத்திருந்த பல நல்ல திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போய் விட்டது. அந்த இடைப்பட்ட காலத்தில் தங்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நான் நன்கு அறிவேன். ஏனெனில் என்னையும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்ற அவர்கள் எடுத்த நடவடிக்கை தோல்வியில் முடிய, என்னை கொலை செய்வதற்குகூட பல முயற்சிகளையும் மேற்கொண்டனர், என்பது யாவரும் அறிந்ததே. தற்போதுள்ள தமிழரசுக் கட்சியின் சில முக்கிய பிரமுகர்கள் பதவி ஆசைக்காக கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

தங்களின் பதவிக் காலத்தில் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றியிருக்கலாம். முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்கான நிரந்தர திட்டங்களை தீட்டியிருக்கலாம். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கான தீர்வுகளை நோக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். அரசியல் கைதிகளுக்கான விடுதலை விடயத்தில் தீர்வைக் கண்டிருக்கலாம். இவை எல்லாவற்றையும் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளால் எதுவுமே செய்யமுடியாத ஒரு இக்கட்டான நிiமைக்கு தாங்கள் தள்ளப்பட்டு விட்டீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே அவ்வாறான ஒரு சூழ்நிலை தங்களுக்கு மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் இதனை பகிரங்கமான ஒரு அறிக்கையாக விடுக்கின்றேன். இனிமேல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழரக் கட்சி உள்ளடக்கிய தமிழத் தேசியக் கூட்டமைப்பில் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் என, அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். இழக்கக்

கூடாதவற்றை எல்லாம் இழந்து விட்டு ஏங்கித்தவிக்கும் தமிழ் மக்களுக்கு நல்வழி காட்டவேண்டிய பொறுப்பை தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டு விட்டீர்கள். அதில் இருந்து நழுவ மாடடீர்கள் என நான் எண்ணுகின்றேன். தமிழரக் கடசியினருடன் கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை தாங்கள் மறந்திருக்கமாடடீர்கள். அவ்வாறான ஒரு அனுபவம் மீpண்டும் வருவதை தாங்கள் விரும்ப மாட்டீர்களென நான் நினைக்கின்றேன். அவர்களுடன் இணைந்து தாங்கள் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பது, தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரு மாபெரும் வரலாற்றுத் துரோகமாகும்.

எனவே தமிழரசுக் கட்சி சார்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியில் வந்து, அரசியல் பணியை மேற்கொண்டு, தங்கள் மனதில் ஏற்கனவே எண்ணியிருந்த, மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய பல நல்ல திட்டங்களை உருவாக்க வேண்டும். இதுவே தமிழ் மக்களின் விருப்பமுமாகும்.

நீங்கள் நீதியரசராக இருந்தபோது, அரசியல் சாசன பேரவைக்கு நீங்களும், கலாநிதி நீலன் திருச்செல்வம் மற்றும் பேராசிரியர் ஜெயதேவா உயாங்கொட ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவேளை, ஒரு ஊடகம் நீங்கள் 22 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக நீதிபதியாக நியமிக்கப் பட்டபோது ஆற்றிய உரையை குறிப்பிட்டு, நீங்கள் மூவரும் நாட்டின இறைமைக்கு முரண்பட்டவர்களென விமர்சனம் செய்ததை கண்டித்து, நான் 23.03.2009ம் திகதி குறிப்பிட்ட ஊடகத்தின் ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை இங்கே தங்களுக்கு அறியத் தருகின்றேன்.

‘ கௌரவ நீதி அரசர் சீ. வி. விக்ணேஸ்வரன் அவர்கள் பெரிதும் மதிக்கப்பட்டு வந்த ஓர் நீதிபதியாவார். அவர் 1987ம் ஆண்டு நீதிபதியாக நியமனம் பெற்றபோது ஆற்றிய உரை சிலரின் விரோதமான விமர்சனத்திற்குள்ளாகி இருப்பதனால் மட்டுமே, அவர் ஓர் நேர்மையான எதற்கும் அஞ்சாதவர் என பெயர் பெற வைத்தது. அவரின் உரை நாட்டின் இறைமைக்கு முரணானதாக இருந்தால், அதற்கு 1987ம் ஆண்டே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமேயன்றி, 22 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் சிறப்பான நீதிபதி என்ற பெயரை சம்பாதித்தபின் அல்ல. நீதியரசர் சீ.வி. விக்ணேஸ்வரன் நாட்டிலுள்ள பல இன மத மக்களால் மதிக்கப்படுபவர். அவரை புலி என முத்திரை குத்த முடியாது. ஒரு நீதிபதிக்கே உரித்தான அடக்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் மௌனம் சாதித்தே வந்துள்ளார்.’

தங்களின் இத்தகைய குணாதிசயங்களால்தான் தங்களை நான் பெரிதும் மதிக்கின்றேன். எங்களுக்கிடையில் எதுவித முரண்பாடும் வந்து விடக் கூடாது என்பதாலேயே நான் இதுவரை தங்களுடன் அரசியல் பேசவில்லை. தங்களால் காலத்திற்கு காலம் பிரஸ்தாபிக்கப்படும் பிரச்சினைகளில் நிறைய உண்மை உண்டு. சில இலக்குகளை அடைய வேண்டுமானால், நாங்கள் இராஜதந்திர ரீதியாகவும், பகைமைக்கு இடம் கொடாமலும், நிதானமாகவும் செயற்படவேண்டும். எனவே தாங்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி, எமது மக்களின் நன்மை கருதி தங்களின் கடும் போக்கை சற்று தளர்த்தி, எமது மக்களின் எதிர் காலத்தை சுபீட்சமாக்குவீர்களென எதிர் பார்க்கின்றேன்.
அன்புடன்,

வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

http://globaltamilnews.net/2018/95586/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராமசாமி பணத்தை எடுத்து வைடா! காமெடி தலைவர் மொமண்ட் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்ந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் – முதலமைச்சருக்கு ஆனந்தசங்கரி கடிதம்

சாத்தான் வேதமோதுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு பாரம்பரிய பத்திரிகையாம் வீரகேசரி இப்படி தமிழை  வதைக்குது .
    • இந்தப் போட்டியில் என்னை ஒருத்தரும் வெல்லமாட்டினம் போல இருக்கு! வென்றால் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் நன்றி!
    • 4 ஜூன் 2024, 10:50 GMT புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள்இந்திய தேர்தல் 2024 பகுதியளவு மற்றும் முழுமையாக அறிவிக்கப்பட்ட முடிவுகள் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை       என்டிஏ* 295   என்டிஏ (பாஜக கூட்டணி) 295 seats இந்தியா** 231   இந்தியா (எதிர்க்கட்சிகளின் கூட்டணி) 231 seats மற்றவை 17   மற்றவை 17 seats *பாஜக கூட்டணி **எதிர்க்கட்சிகளின் கூட்டணி கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 5:11 PM அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும் முழு முடிவுகளையும் பார்க்க  தற்போது வரை வெளியாகியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் மொத்தம் 40 தொகுதிகளில் வேட்பாளர்களின் நிலவரம் என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.   பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,GETTY IMAGES 1. திருவள்ளூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சசிகாந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாலகணபதி, வி.பொன் (பாஜக) மூன்றாம் இடம்: நல்லதம்பி (தேமுதிக) 2. வடசென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கலாநிதி வீராசாமி (திமுக) இரண்டாம் இடம்: ஆர். மனோகர் (அதிமுக ) மூன்றாம் இடம்: ஆர்.சி. பால் கனகராஜ் (பாஜக) படக்குறிப்பு,தென்சென்னை தொகுதி வேட்பாளர்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக), ஜெயவர்தன் (அதிமுக), தமிழிசை சௌர்ந்தரராஜன் (பாஜக) 3. தென்சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தமிழச்சி தங்கபாண்டியன் (திமுக) இரண்டாம் இடம்: தமிழிசை சௌந்தரராஜன் (பாஜக) மூன்றாம் இடம்: ஜெ. ஜெயவர்தன் (அதிமுக) 4. மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தயாநிதிமாறன் (திமுக) இரண்டாம் இடம்: வினோஜ் (பாஜக) மூன்றாம் இடம்: எல் . பார்த்தசாரதி (தேமுதிக) 5. ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.ஆர் பாலு (திமுக) இரண்டாம் இடம்: ஜி பிரேம்குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: வி.என் வேணுகோபால் (தமிழ் மாநில காங்கிரஸ்) 6. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வம் ஜி (திமுக) இரண்டாம் இடம்: ராஜசேகர் இ (அதிமுக) மூன்றாம் இடம்: ஜோதி. வி (பாமக) 7. அரக்கோணம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜெகத்ரட்சகன் (திமுக) இரண்டாம் இடம்: எல். விஜயன் (அதிமுக) மூன்றாம் இடம்: கே.பாலு (பாமக) 8. வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: டி.எம் கதிர் ஆனந்த் (திமுக) இரண்டாம் இடம்: ஏசி சண்முகம் (பாஜக) மூன்றாம் இடம்: எஸ் பசுபதி (அதிமுக) 9. கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கோபிநாத் கே (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ஜெயப்பிரகாஷ் வி (அதிமுக) மூன்றாம் இடம்: நரசிம்மன் சி (பாஜக)   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கோப்பு படம் 10. தருமபுரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மணி. எ (திமுக) இரண்டாம் இடம்: சௌமியா அன்புமணி (பாமக) மூன்றாம் இடம்: அசோகன். ஆர் (அதிமுக) 11. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அண்ணாதுரை சி.என். (திமுக) இரண்டாம் இடம்: களியபெருமாள் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: அஸ்வத்தாமன் எ (பாஜக) 12. ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தரணிவேந்தன் எம்.எஸ் (திமுக) இரண்டாம் இடம்: கஜேந்திரன் ஜி.வி (அதிமுக) மூன்றாம் இடம்: கணேஷ்குமார் எ (பாமக) 13. விழுப்புரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ரவிக்குமார் டி (விசிக) இரண்டாம் இடம்: பாக்கியராஜ். ஜெ (அதிமுக) மூன்றாம் இடம்: முரளி சங்கர். எஸ் (பாமக) 14. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மலையரசன் டி (திமுக) இரண்டாம் இடம்: குமரகுரு ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ஜெகதீசன் (நாம் தமிழர் கட்சி) 15. சேலம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வகணபதி டிஎம் (திமுக) இரண்டாம் இடம்: விக்னேஷ் பி (அதிமுக) மூன்றாம் இடம்: அண்ணாதுரை என் (பாமக) 16. நாமக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மதீஸ்வரன் வி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: தமிழ்மணி எஸ் (அதிமுக) மூன்றாம் இடம்: ராமலிங்கம் கே பி (பாஜக) 17. ஈரோடு மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கே.இ. பிரகாஷ் (திமுக) இரண்டாம் இடம்: அசோக் குமார் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்மேகம் எம் (நாம் தமிழர் கட்சி ) 18. திருப்பூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுப்பராயன் கே (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: அருணாச்சலம் பி (அதிமுக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எ.பி. (பாஜக) 19. நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஆ.ராசா (திமுக) இரண்டாம் இடம்: எல். முருகன் (பாஜக) மூன்றாம் இடம்: டி.லோகேஷ் தமிழ்செல்வன் (அதிமுக)   படக்குறிப்பு,கோயம்புத்தூர் வேட்பாளர்கள், அண்ணாமலை (பாஜக), சிங்கை ராமச்சந்திரன் (அதிமுக), கணபதி ராஜ்குமார் (திமுக) 20. கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கணபதி ராஜ்குமார் பி (திமுக) இரண்டாம் இடம்: அண்ணாமலை கே (பாஜக) மூன்றாம் இடம்: சிங்கை ஜி ராமச்சந்திரன் (அதிமுக) 21. பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஈஸ்வரசாமி கே (திமுக) இரண்டாம் இடம்: கார்த்திகேயன் எ (அதிமுக) மூன்றாம் இடம்: வசந்தராஜன் கே (பாஜக) 22. திண்டுக்கல் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சச்சிதானந்தம் ஆர் (திமுக) இரண்டாம் இடம்: முகமது முபாரக் எம் எ (அதிமுக) மூன்றாம் இடம்: திலக பாமா எம் (பாமக) 23. கரூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ஜோதிமணி. எஸ் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: தங்கவேல். எல் (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன்.வி.வி (பாஜக) 24. திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: துரை வைகோ (மதிமுக) இரண்டாம் இடம்: கருப்பையா. பி (அதிமுக) மூன்றாம் இடம்: செந்தில்நாதன். பி (அமமக) 25. பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: அருண் நேரு (திமுக) இரண்டாம் இடம்: சந்திரமோகன் என்.டி (அதிமுக) மூன்றாம் இடம்: பாரிவேந்தர் டி.ஆர் (பாஜக) 26. கடலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: எம்.கே. விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பி. சிவக்கொழுந்து (தேமுதிக) மூன்றாம் இடம்: தங்கர் பச்சான் (பாமக) படக்குறிப்பு,சிதம்பரம் தொகுதி வேட்பாளர்கள், திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்), மா.சந்திரகாசன் (அதிமுக), கார்த்தியாயினி (பாஜக) 27. சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தொல் திருமாவளவன் (விசிக) இரண்டாம் இடம்: சந்திரஹாசன் எம் (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்தியாயினி பி (பாஜக) 28. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: சுதா ஆர் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: பாபு பி (அதிமுக) மூன்றாம் இடம்: ஸ்டாலின் எம் கே (பாமுக) 29. நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: செல்வராஜ் வி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) இரண்டாம் இடம்: சுர்ஷித் சங்கர் ஜி (அதிமுக) மூன்றாம் இடம்: கார்த்திகா எம் (நாம் தமிழர் கட்சி) 30. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: முரசொலி எஸ் (திமுக) இரண்டாம் இடம்: சிவநேசன் பி (தேமுதிக) மூன்றாம் இடம்: முருகானந்தம் எம் (பாஜக) 31. சிவகங்கை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கார்த்தி சிதம்பரம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: சேவியர் தாஸ் எ (அதிமுக) மூன்றாம் இடம்: தேவநாதன் யாதவ் டி (பாஜக)   பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும் பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 32. மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: வெங்கடேசன் எஸ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) இரண்டாம் இடம்: ராம ஸ்ரீனிவாசன் (பாஜக) மூன்றாம் இடம்: சரவணன் பி (அதிமுக) 33. தேனி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: தங்க தமிழ்செல்வன் (திமுக) இரண்டாம் இடம்: டிடிவி தினகரன் (அமமக) மூன்றாம் இடம்: நாராயணசாமி விடி (அதிமுக) 34. விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: மாணிக்கம் தாகூர் பி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: விஜயபிரபாகரன் வி (தேமுதிக) மூன்றாம் இடம்: ராதிகா ஆர் (பாஜக) படக்குறிப்பு,ராமநாதபுரம் வேட்பாளர்கள் நவாஸ் கனி (திமுக கூட்டணி), ஜெய பெருமாள் (அதிமுக), ஓ.பன்னீர் செல்வம் (சுயேச்சை) 35. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: நவாஸ்கனி கே (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்) இரண்டாம் இடம்: ஓ. பன்னீர்செல்வம் (சுயேச்சை) மூன்றாம் இடம்: ஜெயப்பெருமாள் பி (அதிமுக) 36. தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: கனிமொழி கருணாநிதி (திமுக) இரண்டாம் இடம்: சிவசாமி வேலுமணி ஆர் (அதிமுக) மூன்றாம் இடம்: ரோவெனா ரூத் ஜேன் ஜே (நாம் தமிழர் கட்சி) 37. தென்காசி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராணி ஸ்ரீ குமார் (திமுக) இரண்டாம் இடம்: கே கிருஷ்ணசாமி (அதிமுக) மூன்றாம் இடம்: பி ஜான்பாண்டியன் (பாஜக)   படக்குறிப்பு,திருநெல்வேலி வேட்பாளர்கள், நயினார் நாகேந்திரன் (பாஜக), ஜான்சி ராணி (அதிமுக), ராபர்ட் ப்ரூஸ் (காங்கிரஸ்) 38. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: ராபர்ட் பிரூஸ் சி (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: நயினார் நாகேந்திரன் (பாஜக) மூன்றாம் இடம்: சத்யா (நாம் தமிழர் கட்சி) 39. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஜய் வசந்த் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: ராதாகிருஷ்ணன் பி (பாஜக) மூன்றாம் இடம்: மரிய ஜெனிஃபர் கிளாரா மைக்கேல் (நாதக) 40. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள் முதலிடம்: விஇ வைத்திலிங்கம் (காங்கிரஸ்) இரண்டாம் இடம்: என் நமச்சிவாயம் (பாஜக) மூன்றாம் இடம்: ஆர் மேனகா (நாம் தமிழர் கட்சி) https://www.bbc.com/tamil/articles/c51137wpdpvo
    • இவ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் திமுக்கா கூட‌ தொங்காம‌ இருந்தால் இவ‌ர்க‌ளுக்கும் பிஜேப்பி நிலை தான்.............என்ன‌ பிஜேப்பிய‌ விட‌ இவ‌ர்க‌ளுக்கு கூடுத‌லான‌ ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இருக்கு அம்ம‌ட்டும் தான்   த‌னித்து நின்று இருந்தால் சில‌ தொகுதிக‌ளை இவ‌ர்க‌ள் வெல்வ‌தே சிர‌ம‌ம்...................................................
    • உங்களால் எப்போதும் தமிழர்களை ஆள முடியாது.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ 04 JUN, 2024 | 04:18 PM   பா.ஜ.க.-வால் தமிழ்நாட்டை, தமிழர்களை எப்போதும் ஆளவே முடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசியிருந்தார். கடந்த சில மாதங்களுக்மாதங்களுக்கு முன் இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இன்று (ஜூன் 4) தமிழ்நாட்டில், தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். பல தொகுதிகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் பா.ஜ.க. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாத சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், "பா.ஜ.க.-வால் தமிழகத்தை ஆளவே முடியாது" என்று பேசிய ராகுல் காந்தியின் வீடியோ தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/185310
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.