Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது

Featured Replies

அமைச்சர் ஹிஸ்புல்லாவும் மகனும் அதிரடியாக கைது

 

 

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரையும் இன்று காலை வாழைச்சேனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

hizz.jpg

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக் கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ்மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/40741

  • கருத்துக்கள உறவுகள்

சவுதியில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தி.. இரத்த ஆறு ஓடச் செய்யப்பட்டு.. காத்தான்குடி சவுதி இளவரசர் ஹிஸ்புல்லாவும் மகனும் விடுவிக்கப்படாட்டி இருந்து பாருங்கள். ??

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் மற்றும் மகனுக்கு பிணை

 

 

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஆகிய இருவரை பிணையில் செல்ல வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

hispulla.jpg

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படியில் இவர்கள் இருவரும் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே நீதவான் அவர்களுக்கு பிணை வழங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

லங்கா பில்டர்ஸ் கோப்பரடிவ் சொஸைட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த பொலிஸ் மா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் மற்றும் அவரது மகனையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைவாக அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40752

  • தொடங்கியவர்

ஊடகங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் ஹிஸ்புல்லா; நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது என்ன?

 

 

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

இன்றைய(19) தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட நால்வரின் கைது மற்றும் அதன் பின்னர் அவர்களை நீதிமன்றத்திற்குள் ஆஜர்படுத்திய சம்பவம் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தமை போன்ற சம்பவங்கள் அனைத்தையும் ஊடகங்களின் கண்ணில் மண்ணைதத் தூவி அவர்களது புகைப்படங்களோ அல்லது வீடியோ காட்சிகளோ வெளிவராத வண்ணம் கனகச்சிதமாக அனைத்து தரப்பினரும் செயற்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்படவுடன் அவர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து சட்டத்தரணிகளின் வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊடகங்களுக்கு தெரியாதவாறு வெளியேறிச் சென்றுள்ளனர்.

சாதாரண குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படும் நபர்களையெல்லாம் ஊடகங்களை அழைத்து கருத்துக்கூறும் பொலீசர் இந்த விடயத்தை ஊடகங்களில் வராதவாறு பார்த்துக்கொண்டனர்.

நீதிமன்ற வளாகத்திற்குள் ஊடகங்களளை வரக்கூடாது என்று கூறும் பொலீசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டும் நீதிமன்றத்தின் வாயிலில் இருந்து வாகனத்தில் ஏற்றிச் செல்ல அனுமதித்தது எவ்வாறு?

இவர்களின் கைது குறித்து அமைச்சரின் சட்டத்தரணிகள் கூட ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.

இதனால் நீதிமன்றத்திற்கு முன்னால் செய்தி சேகரிப்பதற்காக குவிந்திருந்த ஊடகவியலாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.

இந்த நாட்டின் பிரதமர் கூட நீதிமன்றத்திற்குள் செல்லும்போது தங்களது வாகனங்களை நீதிமன்றத்திற்கு வெளியில் விட்டுவிட்டு நடந்து செல்லும்போது ஒரு அமைச்சர் நீதிமன்றத்திற்குள் வாகனத்தில் சென்று இறங்கியமை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டமைக்கு அமைய குறித்த இருவரும் வாழைச்சேனைப் பொலீசாரினால் கைது செய்யப்பட்டு இன்று வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 25 இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் செல்ல வாழைச்சேனை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன் அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த காவல்துறைமா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106364

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்கா மக்கா...

தமிழர் சொத்துக்களை ஆட்டையை போட்ட பழக்க தோஷம்... 

அது குறித்து தம்பட்ட வீடியோ விட்ட மாதிரி, இதுக்கும் விடுவார் பாருங்க... எலெக்ச்சன் நேரத்தில...

நம்ம நானாவா ... கொக்கா.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.