Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்கா.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தà®à¯ விதிà®à¯à®à®ªà¯à®ªà®à¯à®®à¯

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்.. அமெரிக்காவின் மிரட்டலால் பரபரப்பு.. என்ன நடந்தது?

இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது.

இந்தியாவும் அமெரிக்காவும் நீண்ட காலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. நிறைய ஒப்பந்தங்கள் மூலம் இந்தியா அமெரிக்காவுடன் நட்பு பாராட்டி வருகிறது.

ஆசியாவிலேயே அமெரிக்காவிற்கு மிகவும் நெருக்கமான நாடு என்றால் அது இந்தியாதான். இந்த நிலையில் இந்த உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்தியா கடந்த சில வருடங்களாக ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. அதன் ஒரு வகையாக இந்தியா ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது. இந்த நிலையில் போர் விமானங்கள் மட்டும் இல்லாமல் விண்ணில் சென்று எதிரிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் வாங்க உள்ளது.

இந்த நிலையில் இன்று ரஷ்யாவிடம் இந்தியா, எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வந்துள்ளார். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் போடப்பட உள்ளது.

இந்த ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். வானத்தில் செல்லும் எதிரிநாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

சிரியாவில் 2014 ரஷ்யா அத்துமீறியதை அடுத்து, அந்த நாட்டிடம் இருந்து சக்தி வாய்ந்து போர் ஏவுகணைகளை வாங்கி கூடாது என்று அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தது. அதையும் மீறி வாங்கினால் அந்த நாடுகளின் மீது தானாக ஒப்பந்தத்தின் படி பொருளாதார தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் மோடி தலைமையிலான அரசு கடந்த வருடம் ஆகஸ்டில் கையெழுத்து போட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மீது ஒப்பந்தத்தின் அடிப்படையில் தானாக பொருளாதாரா தடை விதிக்கப்படும். அமெரிக்க இன்று காலையே இதற்கான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது. இன்னும் சில நாட்களில் இதற்கான முடிவுகள் தெரிய வரும். இதே காரணத்திற்காக சீனா மீது அமெரிக்கா சென்ற வருடம் பொருளாதார தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/international/us-threatens-india-with-sanctions-amidst-india-s-treaty-russ-331190.html

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையில் இந்த உறவில் பெரிய விரிசல் ஏற்பட்டு உள்ளது.

hqdefault.jpg

டைரக்டர் சங்கர் கோபித்து கொண்டாலும் சங்கர் சீமோந்து போட்டுத்தான் அடைக்கணும் ..?

10 hours ago, தமிழ் சிறி said:

இந்த ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும். வானத்தில் செல்லும் எதிரிநாட்டு போர் விமானங்களை தாக்கி அழிக்க கூடியது. அதோடு ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத ஸ்டெல்த் ரக விமானங்களையும் தாக்கி அழிக்க கூடியது. இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

வாங்கி வாங்கி குவிக்கிறாங்க சண்டை போட மாட்டீனமா ? எப்போ பூமியோட பாரம் குறையுறது ? ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

இதை இந்தியா வாங்கும் பட்சத்தில் அது பாகிஸ்தானுக்கும், சீனாவிற்கும் பெரிய பிரச்சனையாக இருக்கும்.

சைனா 2016 ல் இருக்கணும்  இதே s-400ஆறு பற்றி உள்ளது வாங்கி விட்டது அனேகமா இப்ப கொப்பி பேஸ்ட் பண்ணி விட்டுருப்பார்கள் .

Image result for s-400 missile system தமிழà¯

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர வர சனத்துக்கு அமெரிக்கா எண்டாலே மரியாதை பயம்  இல்லாமலே போச்சுது.....  tw_tounge:
 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

வர வர சனத்துக்கு அமெரிக்கா எண்டாலே மரியாதை பயம்  இல்லாமலே போச்சுது.....  tw_tounge:
 

ட்ரம்ப் மிரட்டலை புறக்கணித்தது இந்தியா: ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணை வாங்க இன்று ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் அதனை புறக்கணித்து, ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்ய அதிபர் புதினும், பிரதமர் மோடியும் இன்று கையெழுத்திட உள்ளனர்.

தரையிலிருந்து பாய்ந்து சென்று, எதிரி நாட்டு ஏவுகணை களை இடைமறித்து தாக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டமிட் டுள்ளது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் இறுதி செய்யப்பட் டுள்ளது. ஆனால், ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கக் கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

 

ரஷ்யா, ஈரான், வடகொரியாவுடன் ஆயுதக் கொள் முதல் உட்பட வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க வகை செய்யும் சட்டம் (சிஏஏடிஎஸ்ஏ) அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த சட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து முடிவு எடுக்க அதிபருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரஷ்யாவுடன் எவ்வித வர்த்தக உறவையும் வைத்துக்கொள்ள வேண்டாம் என நட்பு நாடுகளை வலியுறுத்தி உள்ளோம். இதை மீறும் நாடுகள் மீது புதிய சட்டத்தின்படி பொருளாதாரத் தடை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் ஏவுகணையை வாங்க இந்தியா உறுதியாக உள்ளது.

trump-modi-reuters27218%201jpg
 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இன்று இரு தலைவர்களும் தனியாக சந்தித்து விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது இரு நாடுகளுக் கிடையே சுமார் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி, எஸ்-400 ஏவுகணை கொள் முதல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க் கப்படுகிறது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.

https://tamil.thehindu.com/india/article25131068.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

  • கருத்துக்கள உறவுகள்

073acda1b42caf599f0e98f7ba89bb35_farmer-

ஒப்பந்தம் போட்டு விட்டினம் கணி பொறியாவது.. எலிபொறியாவது .. எல்லாரும் விவசாயம் செய்யலாம் .வாங்கோ ?

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

073acda1b42caf599f0e98f7ba89bb35_farmer-

ஒப்பந்தம் போட்டு விட்டினம் கணி பொறியாவது.. எலிபொறியாவது .. எல்லாரும் விவசாயம் செய்யலாம் .வாங்கோ ?

 

us கிந்தியா மீது தடை என்றால் usக்குத்தான் பெரும்பாதிப்பு தெரிந்தே மோடி ஆட்டம் காட்டியிருக்கிறார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.