Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூக வலைத்தள போராட்டத்தை மறக்க வைத்துள்ள சின்மயி – வைரமுத்து விவகாரம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 19 people, people smiling

சிம்மையி.. இந்த சிஷ்யைகளுக்கும் ஒவ்வொரு ருவிட்டர் கணக்கு திறந்து உதவி செய்யலாமே. ஏன் செய்யவில்லை. ஓ.. அது தெய்வக் குற்றமாகிவிடுமாக்கும். ?

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே

இனி கவிஞர்கள் கவிதை எழுதுவதையே விடவேண்டியதுதான். அடுத்தடுத்து கவிஞர்களே வம்பில மாட்டிக்கிறாங்களே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஒரு ஆணாக என்னையே என்னால் நம்ப முடியாத போது மற்றவர்களை எப்பிடி நம்புவது... எந்த சினிமாவாக இருந்தாலும் give and take policy மறைமுகமாக கடைபிடிக்கபட்டே வருகிறது. நடிகைகள் துணை நடிகைகள் தான் அதிகம் பாதிக்கபட்டிருக்ககூடும் பிரகாஷ் ராஜ் விகடனில எழுதிய தொடரில் தெலுங்கு சினிமாவில் நடிகையின் உதவியாக வந்த பெண் கூட தயாரிப்பாளரின் படுக்கை அறைக்கு செல்லும் சூழல் பற்றி எழுதி இருப்பார் 

என்னை பொறுத்தவரை வைரமுத்து கூட உத்தமர் ஆக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, ஆண்களில் 70 வீதமானோர் சந்தர்ப்பம் கிடைக்காத்தால் நல்லவராக இருப்போர் தான் 

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப....  உள்ள  பிரச்சினை அது, அல்ல....
பத்து  வருடத்துக்கு...  முன்பு,  வைரமுத்து  கூப்பிட்டார்.....
எதுக்கு,  கூப்பிட்டார்....என்று, சின்மயியின்... அம்மம்மாவுக்கு  தான்....  உண்மை தெரியும். 

"திருப்பி... திருப்பி.... தோசையை  சுட்டால்   கருகி விடும்."
- வாழும் வள்ளுவன்  தமிழ் சிறி. -

#Metoo
ஏழாவது படிக்கும் போது விடுமுறைக்கு வந்ததில் என் தெருவில் இருந்த வீட்டிற்கு நேரம்போக்க செல்ல, சுவாரசியமாய் சிரிக்க சிரிக்க பேசிய அண்ணன் என் விவரமின்மையை எடைபோட்டு வேலையைக் காண்பித்தார். ஒரே ஓட்டமாய் வீட்டுக்கு ஓடிவந்து பதட்டமாய் உட்கார்ந்து, அப்பா வந்ததும் என்ன சொல்வதென்று சரியாய் சொல்லத் தெரியாமல் சொல்ல, அப்பாவிற்கு ஓரளவுக்கு புரிந்தது. வெளியேறி அவனை சந்தித்து கோபப்பட்டு கேட்க, அவன் அதற்குமேல் கோபப்பட்டு, தேவையில்லாமல் பழிபோடுவதாய் சொன்னான். என்னை ஒழுங்காய் பார்த்ததுக் கூட இல்லை என்றான். அப்பா விடுவதாய் இல்லை.. ஊர் பெரியவர்களிடம் முறையிட்டு பஞ்சாயத்தைக் கூட்ட ஏற்பாடு செய்தார். அம்மாவுக்கு என்ன சொல்வதென்று தெரியாத வேதனை. பக்கத்து வீடுகள் எங்களுக்கு கேட்கும் என்றுதெரிந்தே சத்தமாய் பேசினார்கள். பஞ்சாயத்தில் எல்லார் முன்னாடியும், நான் என்ன அவ வீட்டுக்கா வந்தேன்.. அவ தான் என் வீட்டுக்கு வந்தா..? யார் மேல தப்பு..? என்றார். எதுக்கு ஒரு பொண்ணு வீடு வீடா போனும் என்ற கோணத்தில் போக, கிருஷ்ணா உன் பொண்ண கண்டிச்சு வளப்பா.. என்றதாய் பஞ்சாயத்து முடிந்தது. என் ஊரிலேயே சுதந்திரமாக வளர்க்கப்பட்டவள் நான். அதன் பிறகு அம்மா என்னை எந்த வீட்டுக்கும் அனுப்பியதில்லை. தெருவில் இறங்கி ஸ்கூலுக்கு போகும் அதற்கு பின்னான நாட்களில் எல்லாரும் என்னைப் பார்த்த விதம், அப்பவே சொன்னேன்.. கேக்காதீங்கன்னு..! என்று அம்மா அப்பாவை நொந்துக்கொள்ள வைத்தது. 

வீட்டை விட்டு வெளியேறும் பெண் எதற்கும் தயாரானவளாய் தான் இருப்பாள் என்ற எண்ணத்தில், ஆண்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும், அவளை அடைவதிலேயே, உரசிடவே, அவிழ்த்துப் பார்த்திடவே அட்லீஸ்ட் வழிந்துப் பேசியாவது தன் ஆண்மையை கொஞ்சமாய் ஆற்றிக்கொள்ள, தெரிந்தும் தெரியாதது போல் இயல்பாய் வெளியேறுவதே பெண்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்த்துக் கேட்பவள், அரைபவளுக்கெல்லாம் அன்றே அவள் வேலையின் கடைசிநாள். 

அப்படி சகித்துக்கொண்டு எதற்கு வேலைப்பார்க்கவேண்டும்..? வெளியேறவேண்டியது தானே..? 
இப்படி வெளியே வரும் பெண்களையெல்லாம் வெளியேற்றிவிட்டு வெறும் ஆண்கள் மட்டும் இங்கு நிலைத்திருக்கவா..? 

ஏன் இவ்வளவு நாள் சொல்லல.. ? 
வீட்டை விட்டு வெளியேறுவதில் இப்படியான ப்ரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என்று எச்சரித்தும் தான், எதையாவது சாதிக்கவேண்டும், அல்லது சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்று வெளியேறுகிறோம். அவர்கள் எச்சரித்தது போல் நடக்கும் போது திரும்பவும் கூட்டுக்குள் அடைந்து சொன்னனா..? என்ற பெற்றோரின் வசைகளை வாங்கி, பூட்டு போட்டுக்கொள்ளும் பெண்கள் ஒரு புறம் இருக்க, இதை எதிர்கொண்டு, மனதிற்குள் புழுங்கி, அங்கேயே நின்று போராடி, தன் கனவிற்கான ஒரு ஸ்ட்ராங்கான பேஸ்மென்டைப் போட்டுக்கொள்ளும் பெண்கள் தான் மறு புறம். இன்று சொல்லும் போது வரும் இவ்வளவு விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாதப் பக்குவத்தில் அன்று இருந்ததால் தான் அவர்கள் அப்போது சொல்லவில்லை.. 

அப்பொழுது சொல்லியிருந்தாலாவது எதாவது செய்திருக்கலாம். சாட்சி இருந்திருக்கும்.. இப்பொழுது சொல்வதால் என்ன ஆகப்போகிறது..?
எதுவும் ஆக வேண்டாம்.. யாரும் இதற்கு தீர்ப்பும் தர தேவையில்லை.. எதையும் இவள் வெளியே சொல்லப் போவதில்லை... சொல்பவளுக்கு இந்த சமூகத்தில் இதுதான் நிலைமை என்று என்னை பயமுறுத்தி பயமுறுத்தி, என் பயத்திலிந்து தைரியம் வளர்த்து, உன் கேவலத்தை நிகழ்த்திவிட்டு, இனி வெள்ளை சட்டைப் போட்டுக்கொள்ளமுடியாது. 

வெளியே சொல்வோம்... நீ சந்தர்ப்பத்தை உபயோகித்து, பெண்ணை அனுகாதவனாய் இருந்தால், அவளுக்கு குரல் கொடு.. செய்தவனாய் இருந்தால் மன்னிப்புக் கேட்டு, அமைதியாயிரு. 

இதன் மூலம் விளம்பரம் தேடிக் கொள்வதற்காக இப்போது சொல்கிறார்கள் என்றால் கூட சரிதான். நான் சொல்கிறேன்.. நீயும் உனக்கு நடந்ததை சொல் என்று விளம்பரம் செய்கிறோம்.. அதனால் தான் #Meயுடன்tooவாய் இணைகிறோம்.. 

இனி.. ஸ்லட்.. பிட்ச்.. தேவிடியா.. போல வார்த்தைகளை சொல்லி பெண்களை எமொஷனலாக்க முடியாது. இயல்பாய் கடந்து போவார்கள்.

உஷா கிருஷ்ணன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.