Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று

October 21, 2018

1 Min Read

India-West-Indies.jpg?zoom=3&resize=335%

இந்தியா மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் பொட்டி இன்று ; கவுகாத்தியில் இன்று நடைபெறவுள்ளது.  ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியதீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்ற நிலையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரின் முதலாவது போட்டி கவுகாத்தியில் இன்று ஆரம்பமாகின்றது.

 

http://globaltamilnews.net/2018/100071/

  • கருத்துக்கள உறவுகள்

அடித்து நொறுக்கிய ரோஹித் - கோலி ; அதிரடியாக வெற்றியிலக்கை கடந்தது இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சிறந்த இணைப்பாட்டத்தால் இந்திய அணி 42.1 ஓவரில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அதிரடியாக மேற்கிந்திய அணிvirat1.jpg

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு மேற்கிந்தியத் தீவுகள் அணியை பணித்தார். அதற்கிணங்க முதலில் களமிறங்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை குவித்தது.

சிம்ரன் ஹெட்மயர் 106 ஓட்டத்தையும், கிரேன் பவுல் 51 ஓட்டத்தையும், ஜோசன் ஹொல்டர் 38 ஓட்டத்தையும், ஷெய் ஹோப் 32 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

het2.jpg

323 என்ற பெரியதோர் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 1.6 ஆவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. 

அதன்படி தவான் 6 பந்துகளை எதிர்கொண்டு 4 ஓட்டத்துடன் தொமஸுனுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரின் ஆட்டமிழப்பையடுத்து ரோஹித் சர்மாவுடன் அணித் தலைவர் விராட் கோலி ஜோடி சேர்ந்தாடி வர மேற்கிந்திய அணிக்கு இந்தியாவின் விக்கெட்டுக்களை தகர்த்த முடியாது போனது.

இவர்கள் இவரும் இணைந்து ஆடுகளத்தில் அதிரயான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 7.3 ஆவது ஓவரில் 1 விக்கெட்டுனை இழந்து 50 ஓட்டங்களை பெற்றது. விராட் கோலி 32 ஓட்டத்துடனம், ரோஹித் சர்மா 14 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

இதன் பின்னர் 10.2 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரை சதம் கடந்தார். தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து மைதானத்தில் அதிரடி காட்ட இந்திய அணி 15 ஆவது ஓவரிலேயே 100 ஓட்டங்களை பெற்றது.

vi.jpg

21.2 ஆவது ஓவரில் ரோஹித் சர்மா 51 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம், 3 ஆறு ஓட்டம் அடங்களாக அரைசதம் விளாச, மறுமுணையில் மேற்கிந்திய அணியின் பந்துகளை அடித்து நொருக்கிய விராட்  கோலி 26.5 ஆவது ஓவரில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி 88 பந்துகளில் 3 ஆறு ஓட்டம் 16 நான்கு ஓட்டம் அடங்களாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 36 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

koli.jpg

இவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 31 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசி 84 பந்துகளில் 9 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்களில் தனது 20 சதத்தை பூர்த்தி செய்ய இந்திய அணி 32.2 ஆவது பந்தில் 1 விக்கெட்டினை இழந்து 250 ஓட்டங்களை கடந்தது.

rohith.jpg

இதன் பின்னர் அணித் தலைவர் விராட் கோலி 32 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 140 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

விராட் கோலியின் வெளியேற்றத்தை தொடர்ந்து அம்பத்தி ராயுடு களமிங்கி ரோஹித் சர்மாவுடன் அதிரடி காட்டி வர இந்திய அணி 40 ஆவது ஓவருக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றது. 

இந் நிலையில் 42 ஆவது ஓவருக்காக தொமஸ் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள ரோஹித் சர்மா அடுத்தடுத்து 3 நான்கு ஓட்டங்களை விளாசி தள்ளினார். இதனால் இந்திய அணி 42 ஆவது ஓவரின் முடிவில் 320 ஓட்டங்களை பெற்றது.

இறுதியில் 42.1 ஆவது பந்தில் ரோஹித் சர்மா 1 ஆறு ஓட்டத்தை விளாசி 150 ஓட்டங்களை கடந்த இந்திய அணி மேற்கிந்திய அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அதிடியாக கடந்தது.

இதன் மூலம் இந்திய அணி 42.1 ஆவது ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 326 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் ரோஹத் சர்மா 117 பந்துகளில் 15 நான்கு ஓட்டங்கள் 8 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 152 ஓட்டத்துடனும், ராயுடு 26 பந்துகளில் 1 ஆறு ஓட்டம் 1 நான்கு ஓட்டம் அடங்களாக 22 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணிக்காக 152 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மா தெரிவானார்.

http://www.virakesari.lk/article/42894

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன் & மீரா .....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

கெளஹாத்தியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 323 என்ற இமாலய இலக்கை இந்தியா எளிதில் எட்டியது.

'ரோகித் இருந்தால் போதும், எந்த சேசிங்கும் எளிதுதான்'படத்தின் காப்புரிமை BCCI/Twitter

வெற்றியை எளிதாகிய இந்திய இணையின் ஆட்டத்தை கிரிக்கெட் வீரர்களும், ரசிகர்களும் வெகுவாக புகழ்ந்தனர்.

நேற்றைய போட்டி குறித்து இந்திய அணியின் ஆள் ரவுண்டரான ரவிந்திர ஜடேஜா கூறுகையில்,'ரோகித், கோலி சேர்ந்து ரன்கள் சேர்க்க துவங்கிவிட்டால், அவர்களை அவுட்டாக்குவது மிகவும் கடினம். அதற்கு அவர்கள் அடிக்கும் முறையான கிரிக்கெட் ஷாட்கள் தான் காரணம். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவதில் இவர்களை மிஞ்ச ஆள் கிடையாது.' என்றார்.

'ரோகித் இருந்தால் போதும், எந்த சேசிங்கும் எளிதுதான்'படத்தின் காப்புரிமை BCCI/Twitter

இதேபோல் ஆட்டத்தின் முடிவில் பேசிய அணித்தலைவர் கோலி, '''ரோகித் இருந்தால் போதும் , எந்த சேசிங்கும் எளிதுதான். அவர் சிறப்பாக் ஆடிவரும்போது, எந்த இழக்கும் இமாலய இலக்காகவோ, கடினமான இலக்காகவோ தோன்றாது'' என்று புகழாரம் சூட்டினார்.

சிறப்பாக விளையாடிய கோலி - ரோகித் ஜோடியின் ஆட்டம் பற்றிய 5 சுவாரஸ்ய அம்சங்கள் இவை.

  • 2 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகள் விளாசிய விராட் கோலி, 107 பந்துகளில் 140 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார்.
  • நேற்றைய போட்டியில் கோலி எடுத்த சதம் கேப்டனாக அவர் எடுத்த 14-ஆவது சதம் ஆகும். அணியின் கேப்டனாக அதிக சதங்கள் எடுத்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் இருக்கிறார். கேப்டன்கள் வரிசையில் 22 சதங்கள் எடுத்த ரிக்கி பாண்டிங்குக்கு அடுத்த நிலையில் கோலி உள்ளார்.
  • தனது ஆட்டத்தில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகளை விளாசிய ரோகித சர்மா, 117 பந்துகளில் 152 ரன்கள் எடுத்தார்.
  • 2018-ஆம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவங்களிலும் சேர்த்து நேற்றைய போட்டியில் 2000 ரன்களை கோலி கடந்தார். இந்த சாதனையை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக செய்துள்ளதன் மூலம் கோலி, டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.
  • மேலும், நேற்றைய ஆட்டத்தில் சர்வதேச போட்டிகளில் தனது 60-வது சதத்தை எடுத்த கோலி, குறைந்த இன்னிங்ஸ்களில் 60 சர்வதேச சதங்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடி த்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sport-45936767

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.