Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த பிரதமர் அடுத்து என்ன? சிறிலங்காவின் அரசியல் ஆட்டப்பார்வை

Featured Replies

நெருப்பில்லாமல் புகை வருமா? இது சிறிலங்கா அரசியலை பொறுத்தவரை இன்று மாலை இது பழையமொழி. புகையில்லாமல் நெருப்பு வந்து மகிந்த பிரதமாராகி விட்டமை புதிய செய்தி.

எல்லா நகர்வுகளுமே டொமினோ கட்டைகள் போல படபடவென சரிந்தன. தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு விலகிய பின்னர் இவை யாவும் சடுதியாக படபடவென மாறின. படபடவென கொழும்பில் பட்டாசுகளும் வெடித்தன.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளும் இனி மகிந்த அரசாங்கத்துக்கு ஆதரவு என றிசாட் பதியுதீன் போன்றவர்கள் பல்டி அடித்த சாட்சிகளும் வந்தன.

ஆகமொத்தம் இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. தனது தவணையை முழுமையாக முடிக்காத ராசியற்ற பிரதமர் என்ற ராசியை ரணில் விக்ரமசிங்க மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டார்.

எனினும் மகிந்த பதவியேற்ற பின்னரும் நானே பிரதமர் என பதறிய ரணில் சட்டவிரோத நியமனம் என நாட்டு மக்களுக்கு சொன்னார்.

மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது என்பதால் பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாகவும் ரணில் சொல்கிறார். மங்கள சமரவீரவும் ஆமென் என அறிக்கைவிட்டார்.

ஆனால் இன்றை நகர்வுகளுக்கு முன்னர் ஒரு சூட்சும நகர்வு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எஸ்.பி திசாநாயக்கா வீட்டில் ஓரு இராப்போசன விருந்துடன் இரகசியச் சந்திப்புநடந்ததாக செய்தி வெளியாகியபோதே இதற்குரிய சுழிகள் போடப்பட்டன.

இந்தப் பேச்சுக்களில் மஹிந்தவைப் பிரதமராகக் கொண்ட, இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்தும் பேசப்பட்டது. மைத்திரியை படுகொலை செய்வது தொடர்பான சதித்திட்டம் தொடர்பாக, அவருக்கே தெரியாத அதிர்ச்சி தகவல்களை, மஹிந்த வெளிப்படுத்தினார்

இந்தச்சந்திப்புப் பற்றிய தகவல்கள் வெளியானவுடன், எந்தத் தரப்பும் அதை மறுக்கவில்லை. பின்னர் மெல்லமெல்ல மறுத்தன. ஆனால் இன்று முன்னிரவில் மைத்திரி முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகளுடன் இது உறுதிப்படுத்தப்பட்டது.

நாடாளுமன்ற ஆசனங்களின் யதார்த்தப்படி ஒன்றிணைந்த எதிரணியான மகிந்தாவாதிகள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியுடன் சேர்த்தால் கூட, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.

இதனால் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றோ, அவற்றை உடைத்தோ, அல்லது ஐ.தே.கவின் பக்கத்தில் இருந்து சிலரை இழுத்தோ தான், இந்தத் திட்டம் நிறைவேற்ற வேண்டும். அதுதான் இனி நடக்கும்.

தற்போதைய அரசாங்கம்; கவிழ்ந்துவிட்டது இனி யாருக்கு என்ன இலாபம்?

எஸ்.பி. திஸாநாயக்க உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் திரிசங்கு நிலையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேரும், இப்போது, பிரதமர் மகிந்தவின் கீழ்.

விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹலிய ரம்புக்வெல போன்றவர்கள் அவசரத்துக்கும ஒரு அவசர தீர்வு இனி அவர்களுக்கும் அரசாங்கத்தின் சலுகைகள் கிட்டும்.

ஒன்றிணைந்த எதிரணியைப் பொறுத்த வரையில், அரசாங்கத்தைக் கவிழ்த்து மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கிய கைங்கரியத்தை செய்துவிட்டது.

இனி இடைக்கால அரசாங்கத்தின் கீழ் தேர்தலை நடத்தினால், ஆட்சியைப் பிடிப்பதும் சுலபம். ஏன்ற கணக்கு உள்ளது.

இயலுமானால் முடிந்தால், 19ஆவது திருத்தத்தில், திருத்தம் செய்து, அரசதலைவருக்காக அதிகாரத்தை மீண்டும் கொண்டு வர முடியும். இல்லாவிட்டால், மஹிந்தவே பிரதமர்

ஆகமொத்தம், ஐ.தே.க என்ற யானையின் தும்பிக்கையை வெட்டிவிட்டு, இடைக்கால அரசாங்கத்தைக் கைப்பற்றும் இந்தத் திட்டம் ஒன்றிணைந்த எதிரணியால் கச்சிதமாக்கபட்டுவிடடது. ஆயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்வினைகள் இனி சவாலாகத்ததான் இருக்கும்.

இனி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் தலைமையை ஏற்;று பொதுஜன பெரமுனவை அவரது கட்சியாக மாற்ற முடியும்.

பொதுஜன முன்னணியுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்து போட்டியிட்டால், இனியும் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ளலாம்

இதேபோல மைத்திரியை பொறுத்தவரையில், அவர் மீண்டும் அரசதலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புகிறார்.

அவருக்கு உள்ள ஒரே தெரிவான பொதுஜன பெரமுனவிடம் தஞ்சமடைந்துவிட்டார். இதனால்தான் இன்று அவர் தனக்கு முன்னால் மகிந்தவை சத்தியப்பிரமாணம் செய்யவைத்தார்.

இப்போது பொதுஜன பெரமுனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்துள்ளதால் அவரை அரசதலைவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த முடியும்.

ஆகமொத்தம் நல்லாட்சியை உருவாக்கியபோது மைத்திரிக்கு வழங்கப்பட்ட மக்களாணையை மிதிக்கபட்டுள்ளது. மைத்திரி மக்களாணையை மதிப்பார் என்ற ஐ.தே.கவின் நம்பிக்கையும் பொய்த்தது. மைத்திரி முன்னால் மகிந்த பிரதமராக பதவியேற்ற காட்சிகள் தமிழ்மக்களையும் அச்சப்படுத்தியுள்ளது.

ஆனால் இந்தகுறுக்கு வழியில் ஆட்சி தொடருமா முட்டுச்சந்தில் முட்டுமா என்பதை இனிவரும் கொதிநிலையாக நாட்கள்தான் தீர்மானிக்கும்.

இலங்கையின் அரசியலிலும் அறம் ஏதும் இல்லை யாருடைய கை ஓங்குகிறதோ அந்தப்பக்கம் கைகள் ஓங்கக்கூடும்;.

ஆல் பழத்தால் இங்கே கிளி அரசுபழத்தால் இங்கே கிளி இதுதாக் அரசியல்.. இதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கிளிகள் எந்தப்பக்கம் அதனிடமுள்ள எதிர்க்கட்சி தலைவர் பதவி நீடிக்குமா? இனி தான் அவர்களின் ஆட்டம் ஆரம்பிக்கும்.

https://www.ibctamil.com/articles/80/108108?ref=rightsidebar

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für à®à®®à¯à®ªà®¨à¯à®¤à®©à¯, à®à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯, மாவ௠à®à®³à¯à®³ பà®à®®à¯

இப்ப...  நாங்கள், எந்தப்  தாவுறது?   என்ற,  உச்சா...  போகும் நிலையில்..  தமிழர் தலைவர்கள்.... 

  • தொடங்கியவர்
37 minutes ago, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®®à¯à®ªà®¨à¯à®¤à®©à¯, à®à¯à®®à®¨à¯à®¤à®¿à®°à®©à¯, மாவ௠à®à®³à¯à®³ பà®à®®à¯

இப்ப...  நாங்கள், எந்தப்  தாவுறது?   என்ற,  உச்சா...  போகும் நிலையில்..  தமிழர் தலைவர்கள்.... 

எங்கு எங்களுக்கு காசும், எமது பந்தங்களுக்கு அரச வேலையும், எமது கனடிய பண உதவியாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி வாய்ப்பும் கிடைக்குதோ அவர்களின் பின்னால் நக்கித் திரிவதே எமது பலதசாப்த கொள்கை!
அதை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்?
ஏமாந்த, எப்போதும் ஏமாறும் தமிழர்கள் இருக்கையில் அவர்களின் வாக்குகள் எங்களுக்கு வராதா என்ன?
இப்படி பல சிந்தனைகள் மத்தியில் இவர்கள் .
சொரணையற்ற சுமந்திரன் தனது பால்ய நண்பன் ரணிலை பற்றியும் சிந்தித்து பணமா? ரணிலா? என்ற திரிசங்கு நிலையில்!

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி தொடங்கிய 24 மணி நேரத்தில், உறுதியான நிலையில் விக்கியர்.

நல்லாட்சி... பொறுமையாக, ராஜதந்திரமாக நடந்து எல்லாம் வாங்கித் தருவோம் என்று பீலா விட்டுக் கொண்டிருந்த சாம்-சும் கோஸ்ட்டிக்கு... திருடனுக்கு தேள் கொட்டிய நிலை.

சிங்களத்துடன் உறுதியாக நின்று உரிமை பெற வேண்டும் முதலில்... பின்னர் அபிவிருத்தி என்று நின்ற விக்கியர் தனது நிலை சரியானது என நிரூபிக்கப்பட்ட நிலையில் உறுதியாக உள்ளார்.  

  • தொடங்கியவர்

மஹிந்தவிற்கு நண்பனின் வாழ்த்துச் செய்தி!

DnJcmcrUwAATZW2.jpg

தனது நீண்ட நாள் நண்பன் மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

எனவே மஹிந்த ராஜபக்ஷவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் ஒருவர் காலமாகியிருந்த நிலையில் அவருக்கு அஞ்சலி செலுத்த சுப்பிரமணியன் சுவாமி இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் சுப்பிரமணியன் சுவாமிக்கும் இடையில் சிநேகப்பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

அதன் பின்னர் அண்மையில் இந்தியாவிற்கான விஜயத்தை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ பாரத பிரதமர் உள்ளிட்ட ப.ஜா.கவின் முக்கிய தலைவர்களை சந்தித்திருந்தார்.

இதன் போதும் சும்பமணியன் சுவாமியை சந்தித்த அவர் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்திருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில் இன்று மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் 11 வது பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில், அவருக்கு சும்பமணியன் சுவாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/மஹிந்தவிற்கு-நண்பனின்-வா/

  • தொடங்கியவர்

மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்வேன்: சுப்ரமணியன் சுவாமி

xfdx-720x450.jpg

 

 

இலங்கை பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு பதவியேற்றுள்ள நிலையில், அவரை டுவிட்டர் மூலம் தனது நண்பன் எனக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்த, இந்தியாவின் பிரதான கட்சியான பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி , விரைவில் தான் இலங்கைக்கு (கொழும்பு) வருகை தரவுள்ளதாக அறிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமி  இன்று (சனிக்கிழமை), வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே மேற்படி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். தொலைபேசி மூலம் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளேன்.

என்னுடன்  பேசிய அவர், இலங்கை தமிழர் விவகாரத்தில் அவர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த தீர்வை எடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

மிக விரைவில் இலங்கைக்கு செல்லும் நான், இந்தியாவின் தமிழக மீனவர்கள் எல்லைப் பிரச்சினை தொடர்பில் பேசி, அதற்காக தீர்வொன்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்” என சுப்ரமணியன் சுவாமி  கூறியுள்ளார்.

http://athavannews.com/மிக-விரைவில்-இலங்கைக்கு/

  • கருத்துக்கள உறவுகள்

rajeeee-761x480.jpg

மஹிந்த ராஜபக்ஷவின் நியமனம் சட்டபூர்வமானது – மனோகரத சில்வா

 

 

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமனம் செய்யப்பட்டமையானது சட்டபூர்வமான முறையில் இடம்பெற்றுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி மனோகரத சில்வா கூறுகிறார். அமைச்சரவையை மாற்றுவதற்கு அல்லது அதன் செயற்பாடுகளை மாற்றுவதற்குறிய அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார்.

http://muthalvan.com/மஹிந்த-ராஜபக்ஷவின்-நியமன/

  • தொடங்கியவர்

இலங்கை நெருக்கடி: 'படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது'

வீரகத்தி தனபாலசிங்கம் பிபிசி தமிழுக்காக

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள், கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள். இது பிபிசியின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

இலங்கையின் இரு பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைத்தபோது தேசிய இனப்பிரச்சனை உட்பட நாடும் மக்களும் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சனைகளுக்கு கருத்தொருமிப்பின் அடிப்படையில் இணக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதற்கான அரிதான வாய்ப்பு இது என மக்கள் நம்பினார்கள்.

அரசாங்கத்தின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனநாயகத்தை மீட்டெடுத்து புதியதொரு அரசியல் கலாசாரத்தைத் தோற்றுவிக்கப்போவதாகவும் உறுதியளித்தார்கள்.

ஆனால், இன்று நாட்டில் தோன்றியிருக்கும் அரசியல் நெருக்கடி முன்னெப்போதையும்விட படுமோசமான அரசியல் கலாசாரத்திற்குள் நாடு வீழ்ந்துவிட்டது என்பதையே வெளிச்சம்போட்டுக் காட்டியிருக்கிறது.

கட்சி அரசியல் போட்டிக் கலாசாரத்தில் இருந்து விடுபட்டு, கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளைப் பெற்று ஆரோக்கியமான சிந்தனைகளை அரவணைத்துக் கொள்ளக்கூடியவர்களாக இலங்கை அரசியல்வாதிகள் ஒருபோதும் மாறப்போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அதன் பிரதான பங்காளிக் கட்சிகளின் அரசியல்வாதிகளிடையே முரண்பாடுகள் தொடர்ந்து வளர்ந்துகொண்டுதான் இருந்தன.

தங்களது ஆட்சியை ' நல்லாட்சி " என்று கூறிக்கொண்ட அவர்கள் அரசாங்க நிர்வாகச் செயற்பாடுகள் சுமுகமாக முன்னெடுக்கப்படும் வகையில் ஒருங்கிணைந்து செயற்படுவதில் அக்கறை காட்டவில்லை. பொருளாதாரக் கொள்கைகள் என்றாலும் சரி, அபிவிருத்தி திட்டங்கள் என்றாலும் சரி, அரசியல் சீர்திருத்தங்கள் என்றாலும் சரி இரு கட்சிகளின் அமைச்சர்களும் முரண்பட்ட வண்ணமே இருந்தனர். இடையிடையே தங்களது கட்சிகள் தனியாக ஆட்சியமைக்கும் யோசனையையும் வெளிப்படுத்தத் தவறியதில்லை.இந்த லட்சணத்தில்தான் ' நல்லாட்சி' நடந்துகொண்டிருந்தது.

இரு கட்சிகளின் அமைச்சர்களும் அரசியல்வாதிகளும் முரண்பட்டுக் கொண்டிருந்தாலும், ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய சூழ்நிலை உருவாகாதிருப்பதை உறுதிசெய்ய வேண்டுமென்பதில் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் பிரதமர் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் புரிந்துணர்வு இருந்துவந்ததால் அரசாங்கம் சிக்கல்களுக்கு மத்தியிலும் இயங்கிக்கொண்டிருந்தது.

ஆனால், காலப்போக்கில் அவர்கள் இருவருக்கும் இடையிலும் முரண்பாடுகள் அதிகரிக்கத்தொடங்கின. இதற்கு அடிப்படைக் காரணம், ஆட்சி முறை குறித்த வேறுபாடுகள் அல்ல. ஜனாதிபதியும் பிரதமரும் தங்களது அரசியல் எதிர்காலத்துக்காக கொண்டிருந்த வியூகங்களேதான் காரணம்.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று, மறுநாள் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தவுடன் அங்கிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சிறிசேன இனிமேல் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று பிரகடனம் செய்ததை யாருமே மறந்திருக்கமாட்டார்கள். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்துவிடவேண்டுமென்பதில் அவருக்கு இருந்த வைராக்கியமாகவே அவரது அந்தப் பிரகடனத்தை பலரும் அர்த்தப்படுத்திக் கொண்டார்கள்.

ஆனால், ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து அதை ஒழிக்கவேண்டுமென்று குரல்கொடுத்துவந்த சுதந்திர கட்சி இன்று ஜனாதிபதி ஆட்சி முறை மாற்றப்படவே கூடாது என்று வாதிடுகின்ற கட்சியாக சிறிசேனவின் தலைமையின் கீழ் மாறியிருக்கும் விசித்திரத்தை நாம் பார்க்கிறோம்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இருந்ததாக நம்பப்பட்ட புரிந்துணர்வே பல்வேறு முரண்பாடுகளுக்கு மத்தியிலும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை ஒருவாறாக நகர்த்திக்கொண்டு வந்ததென்றால், அவர்கள் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்துவிட்ட பிறகு இரு பிரதான கட்சிகளுக்கும் இடையிலான சஞ்சலமான சகவாழ்வு எவ்விதத்திலும் தொடர முடியாததாகி விட்டது.

கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் ராஜபக்ஷக்களின் புதிய கட்சி அதிர்ச்சிதரத்தக்க வகையில் பெற்றவெற்றி ஜனாதிபதி சிறிசேனவின் அரசியல் பலவீனத்தை அம்பலப்படுத்திவிட்டது. அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சிகளுக்கு அந்த தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பிரதமர் விக்கிரமசிங்கவின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையுமே குற்றஞ்சாட்டிய சிறிசேன அவரை பதவி நீக்கவும் முயற்சித்தார்.

ஆனால், அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தின் விளைவாக அவ்வாறு பதவி நீக்குவது சாத்தியமில்லை எனக் கண்ட சிறிசேன தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் மூலமாக பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுவன் பின்னணியில் செயற்பட்டார். ஆனால் விக்கிரமசிங்க அப்பிரேரணையை தோற்கடித்தார்.

அதற்குப் பிறகு இரு பிரதான கட்சிகளும் சேர்ந்து அரசாங்கத்தை நடத்தினாலும் அது வெறுமனே தங்களுக்கு வசதியான நேரம் வரும்போது ' காலைவாருவது' என்ற அந்தரங்க நோக்கத்துடனான ஒரு பாசாங்காகவே இருந்தது. இப்போது அதுவே அம்பலமாகியிருக்கிறது.

எந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து விரட்டுவதற்காக நான்கு வருடங்களுக்கு முன்னர் விக்கிரமசிங்கவுடன் சிறிசேன கைகோர்த்தாரோ, அதே ராஜபக்ஷவைப் பயன்படுத்தியே விக்கிரமசிங்கவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் தோல்வி கண்டிருந்தால் ராஜபக்ஷச்கள் தன்னை நிலத்தின் கீழ் எட்டு அடிக்குள் தள்ளியிருப்பார்கள் என்று அன்று சொன்ன ஜனாதிபதி சிறிசேன இன்று அதே ராஜபக்ஷக்களை அரவணைத்துக்கொண்டு தான் ஜனாதிபதியாக வருவதற்கு பெரிதும் உதவிய விக்கிரமசிங்கவுக்கு எதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்.

தனது எதிர்கால அரசியல் குறித்து ராஜபக்ஷக்களுடன் அண்மைக்காலமாக சிறிசேன பேச்சுவார்த்தை நடத்திவந்தாலும் நேற்று முன்தினம் மாலையில் நடைபெற்றதைப்போன்று அதிர்ச்சி தரக்கூடியதாக நிகழ்வுப்போக்குகள் மாறும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.

சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, தேசிய ஐக்கிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த சில மணி நேரத்திற்குள்ளாக ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஆனால், நடந்திருப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கூறிய விக்கிரமசிங்க தானே இன்னமும் பிரதமர் என அடம்பிடிக்கிறார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் தனக்கு இருக்கிறதென்றும் அதை நிரூபிக்க வசதியாக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு விக்கிரமசிங்க சபாநாயகரைக் கேட்டிருந்த நிலையில் ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை இரு வாரங்களுக்கு முடக்கியிருக்கிறார்.

பிரதமராக பதவியேற்ற ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்கக்கூடிய நிலை இருந்தால் சிறிசேன பாராளுமன்றத்தை முடக்குவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருப்பாரா என்பது முக்கியமான கேள்வி.

இலங்கையில் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களை ' குதிரை பேரம் ' செயவது ஒன்றும் புதிய விடயம் அல்ல. ராஜபக்ஷக்கள் அதில் ஜாம்பவான்கள் என்பதை கடந்த காலத்தில் நிரூபித்திருக்கிறார்கள். இரு தரப்பினரும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைபேசுவதற்கு அடுத்த இருவாரங்களும் பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே இலங்கையில் நடந்தேறியிருக்கும் அரசியல் நாடகத்தை இந்தியா உட்பட சர்வதேச சமூகம் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்குலகு எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் முக்கியமான ஒரு விடயமாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இரு அரசியல் தலைவர்கள் தாங்களே இந்நாட்டுப் பிரதமராக இருப்பதாக ஏட்டிக்குப் போட்டியாக உரிமை கோருகின்ற விசித்திர அரசியல் சூழ்நிலையில் நாம் தடுமாறிக்கொண்டிருக்கின்றோம்.

(கட்டுரையாளர்- இலங்கையின் மூத்த பத்திரிக்கையாளர். தினக்குரல் இதழின் முன்னாள் பிரதம ஆசிரியர்.)

https://www.bbc.com/tamil/sri-lanka-46003297

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தியுள்ளார் :

October 28, 2018

Jeyambathy.jpg?zoom=3&resize=335%2C178

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்கியமையானது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி  விக்கிரமரட்ன நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் வழங்கிய ஆணையை ஜனாதிபதி தவறாக பயன்படுத்தி விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியலமைப்பிற்கு முரணாக பிரதமர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை எனத் தெரிவிப்பவர்கள் அரசியலமைப்பினை முழுமையாக ஆராயவில்லை என்றே குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்த அவர் இவ்விடயத்தில் அரசியலமைப்பு அரசியல் தேவைக்கேற்ப மாற்றயமைக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பின் 42 ஆம் அத்தியாயம் இவ்விடயங்கள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவினை பெறுபவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தின் அமைச்சரவை செயற்படும் வரையில் பிரதமர் ஒருவர் பதவி வகிக்க முடியும் என பதவி நீக்கம் தொடர்பில் 46 (2) பிரிவு தெரிவிக்கின்றது .

பதவி காலத்தில் அவரே தன்விருப்பின் பெயரில் பதவி விலகலாம், அல்லது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டு வந்து அதனை நிறைவேற்றும் பட்சத்தில் பதவி விலக முடியும் என்றே 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரதமரை பதவியில் இருந்து நீக்கும் அதிகாரமோ, இடைப்பட்ட காலத்தில் அமைச்சரவையினை கலைக்கும் அதிகாரமோ ஜனாதிபதிக்கு கிடையாது. தற்போது இடம்பெற்ற விடயங்கள் இடம்பெற கூடாது என்பதற்காகவே பாராளுமன்றம் அதிக அதிகாரமுடையதாக மாற்றியமைக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்திற்கான சட்டத்திரணிகள் அமைப்பினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

http://globaltamilnews.net/2018/101076/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.