Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயம் – தெமட்டகொடவில் பதற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெமட்டகொடவில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் உள்ள துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://globaltamilnews.net/2018/101071/

அர்ஜூன ரணதுங்கவை தாக்க முயற்சி – பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டதில் மூவர் காயம்

gun-shot-300x199.jpgகொழும்பு- தெமட்டகொடவில் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்தனர்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு இன்று பிற்பகல் வந்த, முன்னாள் பெற்றோலிய  வளங்கள் அமைச்சரான அர்ஜூன ரணதுங்கவுக்கு, மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து, அவரைத் தடுத்து வைத்தனர்.இதனால் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது, அர்ஜூன ரணதுங்க மீது தாக்குதல் நடத்த முற்பட்டவர்கள் மீது, அவரது பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அர்ஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/10/28/news/33814

தெமட்டகொடை துப்பாக்கி சூடு ; ஒருவர் பலி

தெமட்டகொடையில் அமைந்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமத்திகப்பட்டிருந்த இருவரில் குருணாகல் பகுதியை சேர்ந்த ஆர்.இ.ஏ ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/43400

மஹிந்தவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட நல்லாட்சி அமைச்சரின் பரபரப்பு தகவல்கள்!

வாழ்க்கையில் முதல் தடவையாக மரண பயத்தை உணர்ந்தேன் என பெற்றோலிய வள முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் சற்று முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

என்னை அறையொன்றில் அடைத்து கொலை செய்ய முயற்சித்தனர். கலகம் விளைவித்த நபர்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் ஆயுதங்களை பிடுங்கி எடுக்க முயற்சித்தனர்.

அதனை தடுக்கும் நோக்கில் பாதுகாப்பு உத்தியோகத்தர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். நான் வெளிநாடு சென்று இன்று காலை நாடு திரும்பினேன். எனது உத்தியோகபூர்வ இல்லத்தின் சாவி பெற்றோலியத் திணைக்கள நான்காம் மாடியில் காணப்பட்டது. காலையில் அமைச்சு செயலாளரிடம் அறிவித்துவிட்டு நான் அமைச்சிற்கு சென்றேன். இதன் போது மலர்மொட்டு நாகரசபை உறுப்பினர் ஒருவர் எனக்கு தடை ஏற்படுத்தியிருந்தார்.

எனது பாதுகாப்பு உத்தியோகத்தர் அவரை விரட்டியடித்தார், பின்னர் பணி நீக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் தடிகளுடன் ஆட்களையும் திரட்டிக் கொண்டு என்னைத் தாக்க வந்தார்.

என்னை அறையொன்றில் போட்டு பூட்டி வைத்தனர். இந்த சந்தர்ப்பத்தில் மரண பயம் முதல் தடவையாக என் வாழ்க்கையில் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/108234?ref=bre-news

தெமட்டகொட: துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய இருவரும் பலி; கொந்தளிப்பில் கொழும்பு!

தெமட்டகொட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் சற்றுமுன் மற்றொரு நபரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்.,

கொழும்பு - தெமட்டகொடை பகுதியிலுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைமையகத்தில் இன்று (28.10.2018) மாலை அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் அர்ஜுண ரணதுங்க பெற்றோலிய தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த நிலையிலேயே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு ஏற்பட்ட அமைதியின்மையின் போது கூட்டுத்தாபனத்திற்கு அருகில் அர்ஜீன ரணதுங்கவின் பாதுகாவலர்களர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின்போது. இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந் நிலையில் இன்று இரவு ஒருவர் பலியாகியிருந்தார், இதனையடுத்து நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது என ஹேமந்த கமகே இன்று இரவு தெரிவித்திருந்தார்.

தற்போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்றுவந்த 2-வது நபரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், தெமட்டகொடை பெற்றோலிய தலைமையகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/108240?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்த வந்தவுடனையே நல்ல சகுனங்கள் தொடங்கீட்டுது...

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுனவை கைது செய்யக் கோரி பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

October 29, 2018

Ceylon-Petroleum-Corporation.jpg?zoom=3&

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை தெமடகொட பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை கைது செய்யுமாறு கோரியே இவ்வாறு வேலைநிறுத்த போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

http://globaltamilnews.net/2018/101102/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.