Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம். நேரடி ஒளி பரப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DsHAetSXgAc9zor-720x450.jpg

அரச தரப்பினர் சபாநாயகரின் ஆசனத்தினை கைப்பற்றியதால் பதற்றம்!

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதாகவும், இதன்காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு கோரி அரச தரப்பினர் நாடாளுமன்றத்தில் கோசமிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இதுதொடர்பிலான புகைப்படம் ஒன்றினை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

police-720x450.png

நாடாளுமன்ற வளாகத்தில் பொலிஸார் குவிப்பு.

அரசியல் சர்சைகள் மேலும் அதிகரித்துள்ள நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் என்றுமில்லாதளவு பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு பணிக்களுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைமைக்கு தீர்வை முன்வைப்பதற்கு நேற்று நாடாளுமன்றம் கூட்டப்பட்டபோது, உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் மோதல் உருவாகியது.

அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை இன்று மீண்டும் கூட்டுவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரச்சினைகள் இன்றும் ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளமையால் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாடாளுமன்ற-வளாகத்தில்-பொ/

தற்போது... பாராளுமன்றில் நடந்து கொண்டிருக்கும் காட்சிகளின்  நேரடி  காணொளி.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரடி ஒளிபரப்பு:   நேற்றை விட... இன்று, அதிக அமளி பாராளுமனறத்தில்  ஏற்பட்டுக்  கொண்டு இருக்கின்றது.

sri-lanka-parliament-3-720x450.jpg

நாடாளுமன்றத்தில் பதற்றம் – நாடாளுமன்ற வளாகத்தில் விசேட உலங்கு வானூர்தி!

நாடாளுமன்றம் அமர்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்றத்தினுள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் வருகை தந்ததாக கூறப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு கோரியே அவர்கள் இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், ஐக்கிய தேசிய கட்சியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் மிகவும் அமைதியான முறையில் தங்களது ஆசனங்களில் அமர்ந்துள்ளதாகவும் எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, நாடாளுமன்ற வளாகத்திற்கு சற்றுமுனனர் உலங்கு வானூர்தி ஒன்று தரையிரங்கியுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும் குறித்த உலங்கு வானூர்தியில் வருகை தந்தவர்கள் தொடர்பிலான தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

http://athavannews.com/நாடாளுமன்றத்தில்-பதற்றம/

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sri-lanka-parliament-1-720x450.jpg

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/நாடாளுமன்றம்-டிசம்பர்-மா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Maithiri-2-720x450.png

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி எச்சரிக்கை!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்தில் அரச தரப்பினர் அமர்ந்துள்ளதன் காரணமாக அங்கு பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.

இந்நிலையில் “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற மரபுகள் அனைத்தையும் எப்போதும் நிலை நிறுத்துமாறு நான் வலியுறுத்துகிறேன்.

அத்துடன் எந்தவொரு சூழ்நிலையிலும் நான் நாடாளுமன்ற அமர்வினை தள்ளிபோடமாட்டேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நாடாளுமன்றத்தில்-ஏற்பட்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமனறத்தில் இருந்து.. நேரடி ஒளி பரப்பு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: people sitting

 

Image may contain: 2 people, people sitting

ஐ. தே. க. உறுப்பினர் காட்டும்  நடு விரல். 

Image may contain: one or more people, people sitting, crowd and text

காவல் துறையினரின் பாதுகாப்புடன் சபாநாயகர் மன்றுக்கு வருகை தந்த போது.... 
மகிந்த அணி அவர் மீது... கதிரைகளையும், கோப்புக்களையும்  எறிந்தார்கள்.
சபாநாயகர் ஆசனத்தினை... மகிந்த அணி சூழ்ந்து கொண்டிருந்து கலகம் செய்ததால்... சபாநாயகர் திரும்பிச்சென்றார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

DsHVh-RU0AE4K9O-720x450.jpg

நாடாளுமன்றத்தில் மோதல் – விஜித ஹேரத் உள்ளிட்ட நால்வர் காயம்!

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற மோதலில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் காயமடைந்துள்ளார்.

இன்று நண்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அரச தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அருந்திக்க பெர்ணாண்டோ சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்ததுடன், அரச தரப்பினர் சபநாயகரின் ஆசனத்தினை சூழ்ந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்தினர்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது கத்தியுடன் சபைக்கு வருகை தந்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித தெவரப்பெருமையை கைது செய்யுமாறு வலியுறுத்தி அரச தரப்பினர் இவ்வாறு நாடாளுமன்றத்தில் குழப்பத்தினை ஏற்படுத்தினர்.

இதன்போதே விஜித ஹேரத் காயமடைந்துள்ளார். அத்துடன், சபாநாயகர் மற்றும் செங்கோலின் பாதுகாப்புக்காக, சபைக்குள் பிரவேசித்த பொலிஸார் மீது மகிந்த ராஜபக்ச தரப்பினர் நடத்திய தாக்குதலில் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற குழப்ப நிலையினைத்தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

DsHVh9lV4AAHNrH.jpg

DsHVh-MVAAAkahA.jpg

46452306_351791998909667_4468475316104331264_o.jpg

http://athavannews.com/நாடாளுமன்றத்தில்-மோதல்-2/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

Quellbild anzeigen

இந்த அரசியல் வாதிகள் எல்லாம் இறந்திட்டா, ஏன் வானத்தைப் பார்த்து சுடறாங்க... ஏன் என்றால் அவங்க ஆவியாகக்கூட உயிரோட சுத்தக்கூடாது என்றுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்ற இன்றைய நிகழ்வுகள் , ஆவுஸ்திரேலியர் வர்ணனையில்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட.... கோவணத்தையும், உருவி விட்டார்களா? ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.