Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு முன்னாள் முதலமைச்சரின் பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு முன்னாள் முதலமைச்சரின் பொலிஸ் பாதுகாப்பு திடீரென நீக்கப்பட்டது

மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு , கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் மிகவும் எழுச்சிகரமாக நடைபெற்றுள்ள நிலையில் அந்த நிகழ்வு நடைபெற்று  24 மணிநேரங்கள் கூட ஆகியிராத நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
நல்லூர் வீதியிலுள்ள அவரின் இல்லத்திற்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பும் உடனடியாக நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதிக்கும் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவ்வாறான நிலைமையில் தற்போது திடீரென அவரின் பாதுகாப்புகள் அகற்றப்பட்டுள்ளமை பொது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாவீரர் நாளையொட்டி இவரால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில்  நிலையில் நேற்று மாலை மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று 24 மணிநேரங்கள் கூட ஆகியிராத நிலைமையில் உடனடியாக அவரின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

அவர் மாவீரர் தினத்தையொட்டி வெளியிட்டிருந்த விசேட அறிக்கையில் ”தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உயிர்நீத்த எமது விடுதலை வீரர்களை நினைவு கூறும் எமது மக்களின் உணர்வினை எந்த எதிர்ப்பினாலும் தகர்த்துவிட முடியாது.” என தெரிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

-(3)

 

http://www.samakalam.com/செய்திகள்/வடக்கு-முன்னாள்-முதலமைச்/

 

சொறிலங்காவின் அரசியல் கேலிக்கூத்துகள்!

தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கு நிம்மதியான பாதுகாப்பை தரும்.

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பற்றியும், தமிழின விடுதலைக்கான அவசியம் பற்றியும், மாவீரர்களை நினைத்து கெளரவிக்கும் தேவை பற்றியும், சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிகள் பற்றியும் தொடர்ந்தும் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் பேசிவருவது பேரினவாதத்தைச் சினமடைய வைத்திருக்கிறது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இனக்கொலையாளி மகிந்தவின் சட்டத்திற்குப் புறம்பான ஆட்சி இப்போது செய்திருப்பது. 

இன்று தமிழ்த் தேசியம் பற்றி உண்மையாகப் பேசிவரும் விக்கினேஸ்வரனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொலீஸ் பாதுகாப்பை நீக்குவதென்பது, ராணுவ புலநாய்வுத்துறையோ அல்லது சிங்களத்தின் தமிழ்க் கைக்கூலிகளோ மிக இலகுவாக அவரை இலக்குவைக்க முடியும் என்கிற நிலையை உருவாக்கியிருக்கிறது.

குமார் பொன்னம்பலம், ஜோசப் பரராஜசிங்கம் போன்றவர்களுக்கு நடந்த கொடூரங்களைப் போலவே திரு விக்கினேஸ்வரனுக்கும் நடத்த சிங்களப் பேரினவாதம் கங்கணம் கட்டியிருக்கலாம். ஆகவே,  அவரும் அவரோடு பணியாற்றுபவர்களும் அவதானமாக இருப்பது அவசியமாவதோடு, இச்செயல்பற்றி சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதும் அவசியமாகிறது.

55 minutes ago, Rajesh said:

தமிழீழ தனி நாடே தமிழர்களுக்கு நிம்மதியான பாதுகாப்பை தரும்.

உண்மைதான். ஆயுதப் போராட்டத்தின் வெற்றியினாலன்றி தனியான நாடொன்றை நிறுவுவது மிகக் கடிணமானது. ஆனால், இப்போதைக்கு அப்படியான சாத்தியம் இருக்கிறதா? 

அப்படியில்லாமல், இன்னொரு மிகவும் பலம் மிக்க வல்லரசொன்றின் தேவைக்காக இலங்கை இரு நாடுகளாகப் பிரிய வேண்டும். ஆனால், இந்தியா என்கிற தமிழர் விரோத பிராந்திய வல்லரசை எதிர்த்துக்கொண்டு ஈழத்தமிழருக்கு உதவுவதற்கு எவருக்காவது தேவையிருக்கிறதா என்று பார்த்தால், அப்படி எவருமே இருப்பதாகக்த் தெரியவில்லை.

சமஷ்ட்டி ரீதியிலான தீர்வொன்றை நினைத்துப் பார்ப்பதையோ அல்லது வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம் என்பதையோ அடியோடு மறுக்கும் சிங்களப் பேரினவாதம், எமக்கு எதையுமே தரப்போவதில்லை என்பது உண்மை. ரணிலாக இருந்தாலென்ன, மகிந்தவாக இருந்தாலென்ன இதுதான் நிலமை.

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு வடமகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு கடிதம்

1 Min Read
November 28, 2018

viki-_1276.jpg?resize=800%2C534

ஜனாதிபதிக்கு முன்னாள் வடமகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிய ஆங்கில கடிதத்தின் தமிழாக்கம்

 

மேன்மைதங்கிய மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு
ஜனாதிபதி
ஜனாதிபதி செயலகம்
காலி முகத்திடல்
கொழும்பு – 01 28.11.2018

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு!
வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர்.  சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ்மா அதிபருக்கும் சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டி சில்வா என்பவர். நீங்கள் யாழ்ப்பாணம் வந்த போது உங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் இது பற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது பண்ணப்பட்டிருக்கும் உப பொலிஸ் அதிபர் நாலக சில்வா என்பவர்.

மேற்படி உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ்மா அதிபரும் சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது. குறித்த கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இற்றைவரையில் தொடர்ந்து வந்துள்ளது.

இன்று காலை யாழ் பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே யாழ் பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருந்தார்.  நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பொலிஸ்மா அதிபருக்கு அறிகையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு மேன்மை தங்கிய உங்களிடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சர் அவர்களுக்கு தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.
நன்றி
இப்படிக்கு

நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன்
முன்னாள் முதலமைச்சர்
வடமாகாணம்

பிரதி –
1. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
2. பொலிஸ்மா அதிபர்
3. சிரேஸ்ட உப பொலிஸ்மா அதிபர், வடமாகாணம்

http://globaltamilnews.net/2018/104954/

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாலக சில்வாதான் என் மீதான கொலை முயற்சிக்கும் காரணம் ; ஜனாதிபதிக்கு விக்கி கடிதம்

பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

vikkines-2-600x382.jpg

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ராஜபக்ச குடும்பம் மீதான கொலைச் சதியுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாதான் தன் மீதான கொலை முயற்சிக்கும் காரணமானவர் என்றும் விக்னேஸ்வரன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடமாகாண முதலமைச்சராக என்னுடைய பதவிக்காலம் முடிந்ததன் பின்னர் என்னுடைய பிரத்தியேக பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்கள் தொடர்ந்து எனக்கு பாதுகாப்பு வழங்கி வந்துள்ளனர்.

சில காலங்களுக்கு முன்னர் என்னுடைய உயிருக்கு ஆபத்து என்பது சம்பந்தமாக பொலிஸ் மா அதிபருக்கும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்திருந்தேன். அது சம்பந்தமான செய்திகளை எமக்கு வழங்கியவர் அம்பலாங்கொடையைச் சேர்ந்த டி சில்வா என்பவர்.

நீங்கள் யாழ்ப்பாணம் வந்த போது உங்களுக்கும் தனிப்பட்ட ரீதியில் இது பற்றித் தெரிவித்திருந்தேன். இதில் சந்தேகத்திற்குரியவராகக் கணிக்கப்பட்டவர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா என்பவர்.

மேற்படி உயிராபத்து சம்பந்தமாக பொலிஸ் மா அதிபரும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த காரணத்தினால் அவர்களுக்கு இது பற்றி எழுத்தில் தெரிவிக்குமாறு கோரியிருந்தார்கள். இது என்னால் செய்யப்பட்டது.

இந்தக் கடிதத்தின் பிரதி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. என்னுடைய வாசஸ்தலத்திற்குரிய பாதுகாப்பு கைவாங்கப்பட்டதெனினும் என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இற்றைவரையில் தொடர்ந்து வந்துள்ளது.

இன்று காலை யாழ்ப்பாண பொலிஸ் தலைமையக மேற்பார்வையாளர் என்னுடைய பொலிஸ் பாதுகாப்பு அலுவலர்களை உடனே பொலிஸ் நிலையத்தில் வந்து கையெழுத்திடுமாறு கோரியிருந்தார்.

நான் தற்போது கொழும்பில் என்னுடைய பாதுகாப்பு அலுவலர்களுடன் தங்கியிருக்கின்றேன். எனினும் இரு அலுவலர்கள் இன்று காலை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கையிடப்பட்ட என்னுடைய உயிராபத்திற்கான காரணங்களை முன்வைத்து என்னுடைய தனிப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்குமாறு மேன்மை தங்கிய உங்களிடம் தயவாகக் கேட்டுக்கொள்கின்றேன். கிழக்கு மாகாண முன்னைய முதலமைச்சருக்கும் தற்போதும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அறிகின்றேன்.எனத் தெரிவித்திருந்தார்.

 

http://www.virakesari.lk/article/45385

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.