Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிலை கடத்தல் விசாரணை அதிகாரி ஓய்வு பெறும் நாளில் பதவி நீடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில், தமிழர் வரலாறுடன் பின்னிப் பிணைந்த சிலைகளை கடத்தி விற்று, கொழுத்த, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்ற பெயரில் இருந்த திருடர்களின் சிம்ம சொப்பனமாக இருந்தவர், பொன் மாணிக்கவேல்.

இவரை தவிர்க்குமுகமாக இந்த சிலை கடத்தல் வழக்குகளை CBI விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு இருந்தது.

ஆனால் அதை சென்னை உயர் நீதிமன்றம் தடுத்து, அவரே விசாரிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்து இருந்தது.

இந்நிலையில் இன்று அவர் ஓய்வு பெரும் நாள். சிலை கடத்தலுடன் தொடர்பான அரசியல் வாதிகள் பெரும் மகிழ்வுடன் இருந்தனர். அவரும், தனது சக ஊழியர்களிடம் பிரியாவிடை பெற்று இருந்தார். தமிழக அரசு நிம்மதியாக புதிய அதிகாரியினை நியமித்து இருந்தது. அவர் தமிழர் அல்ல.

ஆயினும், அவரது பணியை மேலும் ஒரு வருடத்துக்கு நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ளது. நீதிமன்றுக்கு மட்டும் அவர் ரிப்போர்ட் பண்ணினால் போதும் என அறிவித்து உள்ளது.

இது தொடர்பில் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லலாம் என தெரிகிறது. ஆயினும் தமிழகத்தின் பல அமைப்புகளும், பத்திரிகையினரும் இதை வரவேற்று உள்ளனர்.

* பல தளங்களில் வாசித்ததில் இருந்து சுஜ ஆக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்.மாணிக்கவேலின் அடுத்த இலக்கு! - தொடங்கிவிட்டது அதிரடி

 

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் செயல்படுவார் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஊதியமே வழங்கவில்லை என்றாலும் பணி செய்யத் தயார்'' எனப் பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

பொன் மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்தார். இவரது தலைமையின் கீழ் செயல்பட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு பல நூற்றாண்டு வரலாறு கொண்ட ராஜராஜ சோழன் சிலை உள்ளிட்ட பல்வேறு சிலைகளை மீட்டெடுத்து வந்தது. பல தொழிலதிபர்கள் மற்றும் குற்றவாளிகள் பதுக்கிவைத்திருந்த சிலைகளைத் தைரியமாக மீட்டெடுத்து வந்தார் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல். இதற்காகப் பொதுமக்களிடம் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்றுவந்தார். இந்தநிலையில்தான், சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து யானை ராஜேந்திரன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. 

 

அப்போது, ``சிலைக்கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்த தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த நீதிபதிகள், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் ஒரு வருடத்துக்குச் செயல்படுவார் என்றும் அவருக்குத் தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவு குறித்து பேசிய பொன்.மாணிக்கவேல், ``சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஊதியமே வழங்கவில்லை என்றாலும்கூட தொடர்ந்து பணி செய்யத் தயார். வெளிநாடுகளில் உள்ள சிலைகளை மீட்டெடுக்கவும், இங்குள்ள சிலை திருடர்களை பிடிக்கவும் துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது உயர் நீதிமன்றம்தான். உயர் நீதிமன்றம் மட்டும் இல்லையெனில் சிலைக்கடத்தல் பிரிவு இருந்திருக்காது. உயர் நீதிமன்றம் இல்லையென்றால் நான் இந்த வழக்கில் இருந்திருக்க மாட்டேன். 100 சதவிகிதம் சிலைகளை மீட்டெடுத்த பெருமை உயர் நீதிமன்றத்தையே சேரும். முடிந்தளவுக்குச் சிறப்பாகப் பணியாற்றி பெருமை சேர்ப்பேன். இதுவரை என்னுடன் இருந்த குழுவே இனியும் சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும். கும்பகோணத்திலேயே தங்கி  சிலைக்கடத்தல் வழக்குகளை முடிந்தவரை ஓராண்டுக்குள் முடிக்க முயல்வேன். விரட்டி, விரட்டி வழக்குகளை விசாரிப்பேன். ஆஸ்திரேலியாவில் உள்ள 7 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒரு சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கடுமையான சூழலில் பணிபுரிந்து வருகிறோம். எங்கள் டீம் விசாரிக்கின்ற வழக்குகள் எல்லாம் நேற்று நடந்தவை கிடையாது. 36 வருடத்துக்கு முன்பாக நடத்தது; எப்ஐஆர் இல்லாத வழக்குகளை எல்லாம் விசாரித்து சிலைகளை கண்டுபிடித்து வருகிறோம். ராஜராஜ சோழன் சிலை மீட்டது எல்லாம் இந்த மாதிரி தான்" என்றார்.  

அப்போது பொன்.மாணிக்கவேல் பணியாற்றியவர்கள் வழியனுப்பு விழாவில் பங்கேற்றது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``எல்லோரையும் நான் உள்ளத்தில் வைத்துள்ளேன். நிறைய பேர் வந்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்தனர். ஏன் இப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்டேன். `உங்களை பிடிக்கும் ஐயா' எனக் கூறி நிறைய காவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதைக் கேட்டதுமே ஓரளவுக்கு நான் பணிபுரிந்திருக்கிறேன் என்ற திருப்தி வந்துவிட்டது. காவலர்களிடம் கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறேன். நெருக்கடி கொடுத்திருக்கிறேன். எங்களுக்குள் மன வருத்தம் இருந்துள்ளன. ஆனால் யாரும் என்னை விட்டுக்கொடுத்ததில்லை. இதுவரை நான் யாரையும் நீக்கியதில்லை. சத்தம் போடுவேன். மிரட்டி, உருட்டி வேலை வாங்குவேனே ஒழிய, யார் வயிற்றிலும் அடித்ததில்லை" எனக் கூறினார்.

https://www.vikatan.com/news/tamilnadu/143492-i-am-ready-to-work-without-salary-says-ig-pon-manikkavel.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்திகளை அழகாக இணைத்துக் கொண்டிருந்த நவீனன் எங்க கொலீடேயே போட்டார்?

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பெருமாள் said:

 

செய்திகளை அழகாக இணைத்துக் கொண்டிருந்த நவீனன் எங்க கொலீடேயே போட்டார்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளத்தை செய்தித்தளமாக மாற்றிய பெருமை அவருக்கு இருக்கு அவர் காணமால் போனபின் கருத்துக்களம் செழுமையானதுடன் பழைய கருத்தாளர்களையும் இங்கு மறுபடியும் சாத்திரி ,நெல்லையன் போன்றவர்களை  காணக்கூடியதாக இருக்கு . 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

செய்திகளை அழகாக இணைத்துக் கொண்டிருந்த நவீனன் எங்க கொலீடேயே போட்டார்?

வேற்றுக் கிரகத்திற்கு அனுப்பிவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாய்க அரசின் நிர்வாகத்தில் தேவை இல்லாமல்  தலையிட்டு சென்னை உயர் நீதிமன்றம் குழப்பம் விளைவிப்பதாக ரெல்லி உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்குவார்கள் .. தீர்ப்பு வர அது ஒரு 30 வருடம் ஆகும் .. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.