Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ

Featured Replies

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற ஒன்று இல்லை எனவும், ஒப்பந்தம் இருப்பதாகக் கூறுவதில் அர்த்தம் இல்லை என்றும், சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வார்த்தை அளவில் மாத்திரமே அர்த்தமற்ற ஒப்பந்தமாக இது இருக்கின்றது என்றும், அசோசியேட் பிறஸ் ஊடகத்துடனான நேர்காணலில் கோதபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களில் கிழக்கில் விடுதலைப் புலிகளுடனான போரில் கணிசமான வெற்றிகளை தமது இராணுவம் பெற்றது என்றும், இந்த வெற்றி தற்பொழுது வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் கோத்தபாய மேலும் கூறினார்.

சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸவின் இந்தக் கூற்று, அரசுத் தலைவரின் கூற்றாகவே கருத்தப்படும் என, அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

http://www.pathivu.com/

அரசாங்கத்தில் உள்ள சிலர் இப்படி உளறுவதும், பின்னர் அரசு அதை மறுப்பதுவும், இதைப் பற்றி விசாரணை மேற்கொள்வதாகக் கூறுவதும் புதிதல்ல.

ஓ அப்படியா செய்தி? பிறகு?

ஓ அப்படியா செய்தி? பிறகு?

இதை நோர்வேக்காரனுக்கு சொல்ல வேண்டியதுதானே ஏன் சும்மா வாய்சவாடல்

  • தொடங்கியவர்

இவர்களுக்கெல்லாம் இதைப்பற்றிச் சொல்வதற்குத் தகுதியில்லை. மாவீரர் தினவுரையில் தலைவரால் செத்து விட்டதாகக் கூறிய விடயத்தைத்தான் இப்போது தூசு தட்டி இந்தக் கெட்ட பாய சொல்கிறார். சொந்தப் புத்தியில் செயற்படுபவர்களாகவிருந்தால் நாடு தம் மக்கள் என்ற உணர்வாவது இருக்கும். யாரோ ஆட்டுவிக்க ஆடும் பம்பரம்போல் ஆட்டுவித்தவர்கள் கைவிட்ட பின்பும் இவர்கள் நிற்காமல் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஆட்டம் முடியும் தறுவாயில் சோர்ந்து விழுந்துகிடக்கும் போது. ஞானம் பிறக்கும்.

எழத்துமூலமாக நோர்வேயிடம் கையளித்தால் நன்றாக இருக்கும் கோயபத்த ஐயே

போர்நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று இப்போதில்லை சர்வதேசத்திற்காகவே அதனைச் ல்லாதிருக்கிறோம்

கிழக்கைப் போன்று புலிகளை வடக்கிலும் ஒடுக்குவோம்

கொழும்பு, ஏப்.13

போர் நிறுத்த ஒப்பந்தம் என ஒன்று இப்போது இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தம் எனக் கூறுவதில் அர்த்தமில்லை.

உண்மை என்னவெனில், சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே, அவர்களைச் சந்தோசப்படுத்துவதற்காகவே, போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது அமு லில் இல்லை என்பதனை உத்தியோகபூர்வமாக நாம் வெளிப்படுத்தாமல் உள்ளோம்.

இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

ஆரம்பத்திலிருந்தே விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல்கள், பதுங்கி இருந்து தாக்குதல்கள் ஆகியவற்றை மேற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி னர். அதனால் இராணுவமும் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை உருவானது என்றார் கோத்தபாய.

அவரது இந்தக் கூற்றுக் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பின் கருத்தை உடனடியாக அறியமுடியவில்லை. எனினும் இத்தகைய குற்றச்சாட்டுகளை அடிக்கடி அவர்கள் மறுத்து வந்திருக்கின்றனர். இராணுவமே தங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாக அவற்றுக்குத் தாம் பதிலடி கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று கூறி யிருந்தனர்.

வடக்கில் விரைவில் முழுவீச்சில் தாக்குதல்கள்

இது ஒரு புறமிருக்க

கிழக்கில் விடுதலைப் புலிகளை பலவீனமடையச் செய்தது போன்று வடக்கிலும் அவர்கள் மீதான தாக்குதல்கள் விரைவில் முழுவீச்சில் தொடங்கப்படும் என்று கோத்த பாய தெரிவித்தார்.

தாக்குதல்களை நிறுத்தி அவர்களுக்கு இடைவெளி அவகாசம் கொடுப்பது உகந் தது அல்ல. அவர்கள் மீண்டும் அணிதிரள இடங்கொடுக்கக் கூடாது. அவர்களை ஒடுக்கி விடும் தாக்குதல்களை வடக்கிலும் நாம் தொடரவேண்டி தொடங்க வேண்டி உள்ளது. அவர்களது தளங்களை இனங்கண்டு, மேன்மேலும் அவற்றை

uthayan.com

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய விமானத்தாக்குதலோட வெறுத்து போனார் இப்படி பேசினால் தான் பதவிய தக்க வைச்சிருக்க முடியும் என்றுநு ஒரு நம்பிக்கை விமானத்தாக்குதலை அடுத்து இவரை பதவி விளகசொல்லி தென்னிலங்கையில் பலத்த கோசம் எழுவது நாடறிந்ததே..

போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ

21 ம் நூற்றான்டின் சிறந்த கண்டுபிடிப்பாளர் விருது வழங்கப்படலாம் :P :P

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச மன்னிப்புச் சபைக்கு எதிராக ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்-செய்தி

உத்தியோகப்பூர்வமாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்று நாம் கூற இயலாது. அனைத்துலக சமூகத்தின் திருப்திக்காக உத்தியோகப்பூர்வமாக யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அர்த்தமற்றது.என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.-செய்தி

ஊடகவியலாளர்கள் விசர் நாய்கள் போல் நடந்தால் அவர்களுக்கு விசர் நாய் தடுப்பூசி போட வேண்டும்" என சிறீலங்காவின் மூத்த அமைச்சரான நிமால் சிறீபால டீ சில்வா-செய்தி

'எமக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வேண்டும்': அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம்-செய்தி

நேற்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வைத்து சிறிலங்கா புலனாய்வுத் துறையினரால் தமிழ்த் தேசிய கூட்டடைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.-செய்தி

சிறிலங்கா விமானப் படையின் மிக் -27 யுத்த விமானங்கள் மக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து பத்து குண்டுகளை வீசியது.-செய்தி

சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களின் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவுக்கு நேற்று புதன்கிழமை தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது-செய்தி

ஊடகங்களை ஒடுக்குவதற்காக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது-செய்தி

மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும-செய்தி

ஈஸ்ரர் பண்டிகையை முன்னிட்டு பாப்பரசர் பெனடிக் அவர்கள் வழங்கிய செய்தியில் சிறீலங்காவில் பேச்சுவார்த்தைகளின் ஊடாகவே தற்போது நிலவும் முரண்பாடுகளால் நிலவும் இரத்தக்கறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ளார்-செய்தி

வத்திக்கானில் பாப்பரசர் பெனடிக்ட்டை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சந்தித்துப் பேச உள்ளார்.-செய்தி

எல்லாரும் எல்லோரையும் எல்லாநேரத்திலும்மடையரர்களா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.