Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பிய எம்.பியுடன்- கூட்டமைப்பின் தலைவர் சந்திப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கொழும்பில் இன்று சந்தித்தார்.

சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

PHOTO-2019-01-02-11-17-30.jpgPHOTO-2019-01-02-11-17-29.jpgDSC_0040.jpg

https://newuthayan.com/story/16/ஐரோப்பிய-எம்-பியுடன்-கூட்டமைப்பின்-தலைவர்-சந்திப்பு.html

  • கருத்துக்கள உறவுகள்

புதிய அரசியல் யாப்பு நியாயமானதாக இருந்தால் மக்கள் தமது ஆதரவினை வழங்குவார்கள் !
செய்திகள்,

ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள்.

தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தொடர்பில் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன் ஏனெனில் இது எனது நாடு இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வோன் ஓர்டன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை இன்று கொழும்பில் சந்தித்தார்.

இதன் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திய இரா. சம்பந்தன், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துக்காட்டினார்.

மேலும் பதிலளித்த இரா சம்பந்தன் அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டுவருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் , கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்பதாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் , புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்படமுடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய, மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப்பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த இரா சம்பந்தன், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000 ஆம் ஆண்டு அறிக்கை, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் தெரிவித்தார்.

கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மேலும் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன் ஏனெனில் இது எனது நாடு இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த சுமந்திரன், தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என தெரிவித்த அதேவேளை, இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த இரா சம்பந்தன் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

காணி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், நாங்கள் அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியமர்வுகளை எதிர்க்கிறோம். மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தினையும் கலாச்சாரத்தினையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன், கடந்த 2009 இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.

 

ஐரோப்பிய பா.உ. ஜெப்றி வான் ஓர்டன் – த.தே.கூ கொழும்பில் சந்திப்பு


PHOTO-2019-01-02-11-17-29-300x200.jpg

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய பாராளுமன்றின் இலங்கை நட்பு குழுவின் உறுப்பினருமான கௌரவ ஜெப்ரி வான் ஓர்டன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களை இன்று கொழும்பில் சந்தித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் கௌரவ உறுப்பினரை தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் அவர்கள், அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக் காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்பு சபையின் மீள் நியமனத்தினால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளமையையும் எடுத்துக்காட்டினார். மேலும் பதிலளித்த இரா சம்பந்தன் அவர்கள் அரசாங்கத்தினை மீளக் கொண்டுவருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும் என்றும் நாடானது ஒரு பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்தபோது நாட்டு பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தினை மீள கொண்டுவருவதற்கான ஆதரவினை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் அவர்கள், கடந்த டிசம்பர் 7ம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்பதாக பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் புதிய அரசியல் யாப்பானது நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்படமுடியாததாகவும் இருப்பதனை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில் மக்களும் பிராந்திய / மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப்பகிர்வினையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். மேலும் ஒரு புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுகின்ற போது அது நியாயமானதொன்றாக இருக்கும் பட்சத்தில் அதற்க்கு எமது மக்கள் தமது ஆதரவினை கொடுப்பார்கள் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.DSC_0040-300x200.jpg

13வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தினை கொண்டுவருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள், ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை,ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000ம் ஆண்டு அறிக்கை,மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்து கட்சி தெரிவுக்குழு,மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைந்திருந்தன எனவும் தெரிவித்தார் கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார். மேலும் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன் ஏனெனில் இது எனது நாடு இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம் எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அவர்கள் தெரிவித்தார்

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த கௌரவ சுமந்திரன் அவர்கள், தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிக சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளனர் என தெரிவித்த அதேவேளை இலங்கையில் நியாயமான அதிகார பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவினை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது என தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும்போக்காளர்களை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

காணி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் அவர்கள் நாங்கள் “அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இன விகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியமர்வுகளை எதிர்க்கிறோம் மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தினையும் கலாச்சாரத்தினையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்பதனையும் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த கௌரவ ஜெப்ரி வான் ஓர்டன் அவர்கள்,2009இற்கு பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உண்மையான நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாமையினையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்தார்.

http://marumoli.com/ஐரோப்பிய-பா-உ-ஜெப்றி-வான்/?fbclid=IwAR1qbS5mgg0JfZmrr96QBJc9EEpMjg3XYbl3IXX7ndsCs8DNJbNiYomOovk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

PHOTO-2019-01-02-11-17-29.jpg

சம்பந்தனையோ தமிழர் தரப்பையோ எந்த வெள்ளையள் வந்து சந்திச்சாலும்...... சம்பந்தன்ரை பேச்சுத்துணைதான் எல்லாத்தையும் முடிவெடுக்கும்.
நல்லதோ கெட்டதோ சம்பந்தன் அரசியல்லை இருந்து பெஞ்சன் வாங்கிறது எல்லாருக்கும் நல்லது.

 சம்பந்தனே! பொம்மை அரசியல் இனியும் வேண்டாம் tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

சம்பந்தனையோ தமிழர் தரப்பையோ எந்த வெள்ளையள் வந்து சந்திச்சாலும்...... சம்பந்தன்ரை பேச்சுத்துணைதான் எல்லாத்தையும் முடிவெடுக்கும்.
நல்லதோ கெட்டதோ சம்பந்தன் அரசியல்லை இருந்து பெஞ்சன் வாங்கிறது எல்லாருக்கும் நல்லது.

  சம்பந்தனே! பொம்மை அரசியல் இனியும் வேண்டாம் tw_glasses:

இவங்களும் பெட்டி கொடுக்கிறாங்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
27 minutes ago, ஈழப்பிரியன் said:

இவங்களும் பெட்டி கொடுக்கிறாங்களோ?

2009க்கு பிறகு இவையள் சந்திச்ச வெளிநாட்டு பிரமுகர்கள் எண்ணிக்கை   கணக்கிலை எடுக்கேலாமல் மேகத்தை தொடும். 

இப்பிடியான சந்தர்ப்பங்கள் ஏன்?எப்பிடி?ஆராலை வந்ததெண்டது இப்போதைக்கு இரண்டாம் பட்சமாய் விடுவம் :cool:

ஆனால்......
உவையள்     இவ்வளவு ஆக்களை நவநாகரீகமாக சந்திச்சும்.....
ஈழத்தமிழர் பிரச்சனை தந்தை செல்வநாயகம் காலத்திலையே நிக்கிது.

  • கருத்துக்கள உறவுகள்

நேர்மையான அதிகாரப் பகிர்வையுடைய புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்பட்டால் ஆதரவு வழங்க தயார் - சம்பந்தன்

நியாயமான அதிகாரப்பகிர்வுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் ஆதரவு வழங்கும் - சுமந்திரன்
 
 
main photo
 
மக்களும் பிராந்திய, மாகாண அரசுகளும் அதிகாரங்களைப் பயன்படுத்தும் வகையிலான நேர்மையான ஒரு அதிகாரப் பகிர்வையுடைய புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும்போது அது நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஐரோப்பிய நாடாளுமன்ற இலங்கை நட்புக்குழுவின் உறுப்பினருமான ஜெப்ரி வான் ஓர்டன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று புதன்கிழமை கொழும்பில் சந்தித்தார். இச் சந்திப்பின்போதே இரா.சம்பந்தன் அவரிடம் இவ்வாறு கூறியுள்ளதாக கொழும்பு செய்தியாளர் கூர்மை செய்தித் தளத்திற்கு குறிப்பிட்டார். 
 
புதிய அரசியல் யாப்பு, நாடு ஒருமித்ததாகவும் பிரிக்கப்பட முடியாததாகவும் இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக அமையும் அதே சந்தர்ப்பத்தில், மக்களும் பிராந்திய, மாகாண அரசாங்கங்களும் தமது வாழ்வில் தொடர்புடைய அன்றாட விடயங்களில் அதிகாரங்களைப் பயன்படுத்தும் வகையிலான நேர்மையான அதிகாரப்பகிர்வைக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

கொண்டு வரப்படும் புதிய அரசியல் யாப்பு நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதற்கு எமது மக்கள் தமது ஆதரவை வழங்குவர் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலிருந்து பதவிக்கு வந்த ஒவ்வொரு தலைவர்களும் அரசியல் யாப்பில் முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்கு பல்வேறு கருமங்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த இரா சம்பந்தன்,

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் காலத்தில் மங்கள முனசிங்க அறிக்கை, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் 2000 ஆம் ஆண்டு அறிக்கை, மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் அனைத்துக் கட்சி தெரிவுக்குழு, மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் அறிக்கை போன்றன அரசியல் யாப்பிற்கு அதிகளவு முன்னேற்றங்களை பரிந்துரைத்திருந்தன எனவும் குறிப்பிட்டதாக கொழும்பு செய்திளார் கூறினார்.

கடந்த முப்பது வருடங்களாக பல்வேறு கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை நாட்டின் நன்மை கருதி நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நான் நியாயமாக நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் இது எனது நாடு. இந்த நாடு செழிப்படைய வேண்டும் என்பது எனது விருப்பம். எனவே என்னால் நம்பிக்கையற்றவனாக இருக்க முடியாது எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை தொடர்பில் ஜெப்ரி வான் ஓர்டனுக்கு இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார். அரசியலமைப்புச் சபையின் மீள் நியமனத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அதேவேளை இந்த அரசியலமைப்புச் சபையின் மீள் நியமனத்தால் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை பேணப்பட்டுள்ளமை கடந்தகாலங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் மூலம் நிரூபணமாகியுள்ளதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

அரசாங்கத்தை மீளக்கொண்டு வருவதற்கு நாம் வழங்கிய ஆதரவு கொள்கை அடிப்படையிலானதாகும். பிரதமரோ அரசாங்கமோ இல்லாத ஒரு இக்கட்டான நிலைமையில் நாடு இருந்தபோது பொருளாதாரத்திற்கும் நிறுவனங்களின் சுமுகமான செயற்பாடுகளுக்கும் ஏற்படவிருந்த பாதக விளைவுகளை தடுக்கும் முகமாகவே அரசாங்கத்தை மீளக்கொண்டு வருவதற்கான ஆதரவை கொடுத்தோம் என தெரிவித்துள்ளார்.

இதன்போது புதிய அரசியல்யாப்பு உருவாக்கம் தொடர்பில் தெளிவுபடுத்திய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவிருந்த நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட வரைபு யாப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதிக்கு முன்பதாக நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பிலான கேள்வியொன்றிற்கு பதிலளித்த சுமந்திரன்,

தீவிரவாத போக்குடைய புலம்பெயர் சமூகம் மிகச் சிறிய எண்ணிக்கையிலேயே உள்ள அதேவேளை, இலங்கையில் நியாயமான அதிகாரப்பகிர்வு இடம்பெறும் சந்தர்ப்பத்தில் அத்தகைய நடவடிக்கைகளுக்கு பெரும்பான்மையான புலம்பெயர் சமூகம் தமது ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கடும் போக்குடைய புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளும் நடவடிக்கைகளும் நாம் எடுக்கும் தீர்மானங்களில் செல்வாக்கு செலுத்தாது. இலங்கையில் இடம்பெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் அத்தகைய கடும் போக்காளர்களை மக்கள் தோற்கடித்துள்ளனர் என்றார்.

இதேவேளை காணி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், "அரசாங்கத்தினால் பிரதேசங்களின் இனவிகிதாசாரத்தில் மாற்றங்களை கொண்டுவரும் நோக்கில் முன்னெடுக்கப்படும் குடியேற்றங்களையே நாங்கள் எதிர்க்கின்றோம். மாறாக இயற்கையாக மக்கள் குடியமர்வதை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்கள் தமது நிலத்தையும் கலாசாரத்தையும் பேணுவதில் மிகவும் உள்ளார்ந்த அக்கறை கொண்டவர்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் நிறைவில் கருத்து தெரிவித்த ஜெப்ரி வான் ஓர்டன், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளுக்கு அதிகளவு வெளிநாட்டு உதவி கிடைக்கும் என தான் எதிர்பார்த்ததாகவும் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு போதிய முயற்சிகளை மேற்கொள்ளாததையிட்டு தாம் கவலை அடைவதாகவும் தெரிவித்ததாக கொழும்பு செய்தியாளர் குறிப்பிட்டார்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=658

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.