Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயாறில், கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01-M-1-1-720x450.jpg

நாயாறில், கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது எனவும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, குறித்த பகுதியில் பழைமை வாய்ந்த கலைப்பொருட்கள் மற்றும் மடாலயம் என்பன ஏற்கனவே இருந்ததென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோயிலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் பௌத்த மதகுரு ஒருவர் ஆக்கிரமித்தமை தொடர்பான வழக்கு, நேற்று (செவ்வாய்க்கிழமை) முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணையின்போது தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாகிய தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் மந்தவெல மேற்குறிப்பிட்டவாறு சாட்சியம் வழங்கியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், முல்லைத்தீவு நாயாறு பகுதியில் அமைந்துள்ள குருகந்த ரஜமகா விஹாரை 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. எனவே புராதன பௌத்த விகாரை அமைந்துள்ள இடத்தில் இந்து கோயில் அமைப்பது சட்டத்துக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதாடிய எதிர்தரப்பினர், தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் பக்கச்சார்பாக செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதவான், குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

நாயாறு நீராவியடிப் பிள்ளையார் கோயிலையும் அதனை அண்மித்த பகுதிகளையும் ஆக்கிரமித்து பௌத்த மதகுரு ஒருவர் பௌத்த விஹாரையையும் புத்தர் சிலையையும் அமைத்து வந்திருந்தார்.

அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், அண்மையில் புத்தர் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் தைப்பொங்கல் தினத்தன்று நீராவியடிப் பிள்ளையார் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட மக்களுக்கும் பௌத்த மதகுருவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த சம்பவம், முல்லைத்தீவு நீதவானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.

அண்மைக்காலமாக வவுனியா சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக பலர் குற்றம் சுமத்தியிருந்ததோடு, தமிழ் தலைமைகளும் இந்த விடயம் தொடர்பாக அதிருப்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/நாயாறில்-2000-ஆண்டுகளுக்கு-ம/

தமிழ் தலைமைகள் ரணிலுக்கு கழுவுவதில் தான் விருப்பமாக உள்ளார்கள் , மக்களின் பிரச்சனைகள் எங்க இவர்களுக்கு தெரிய போகுது . இவர்கள் எப்பவும் சிங்களவர்களின் அடிமைகள் .....
 

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்ப அத்தனை வளங்களும் இருந்தும் தெற்காசியாவில் செல்வம் கொழிக்கும் நாடாக இலங்கைத்தீவை ஆக்கவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் உதவாக்கரை மதங்களை கட்டிப்பிடித்து உருள்வது தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் முட்டாள்த்தனம் 

இவ்வுலகில் கடவுள்கள்  பெயரில் மக்கள் பல ஆயிரம்  ஆண்டுகள் சண்டை பிடிக்க கடவுள்கள் அதைப்பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் கடவுள்கள் என்று எவரும் இல்லை என்று தானே அர்ததம்.இந்த சிறிய விடயத்தை புரிந்து கொள்ளாத ஆனமீகவாதிகள் பேரறிவு உள்ளவர்களாம்.😂  கடவுளை மறுத்து மக்களை சீர்திருத்த புறப்பட்டவர்  புத்தர்.அவரையே கடவுளாக்கி வழிபட தொடங்கிவிட்டார் கள் முட்டாள்கள்.

 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, tulpen said:

நாட்டை பொருளாதார ரீதியில் கட்டி எழுப்ப அத்தனை வளங்களும் இருந்தும் தெற்காசியாவில் செல்வம் கொழிக்கும் நாடாக இலங்கைத்தீவை ஆக்கவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் உதவாக்கரை மதங்களை கட்டிப்பிடித்து உருள்வது தான் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் முட்டாள்த்தனம் 

இவ்வுலகில் கடவுள்கள்  பெயரில் மக்கள் பல ஆயிரம்  ஆண்டுகள் சண்டை பிடிக்க கடவுள்கள் அதைப்பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் கடவுள்கள் என்று எவரும் இல்லை என்று தானே அர்ததம்.இந்த சிறிய விடயத்தை புரிந்து கொள்ளாத ஆனமீகவாதிகள் பேரறிவு உள்ளவர்களாம்.😂  கடவுளை மறுத்து மக்களை சீர்திருத்த புறப்பட்டவர்  புத்தர்.அவரையே கடவுளாக்கி வழிபட தொடங்கிவிட்டார் கள் முட்டாள்கள்.

 

அங்கே மதம் எனும் பெயரில் தமிழின அழிப்பும் சிங்கள குடியேற்றங்களும் சுலபமாக நிறைவேற்றப்படுகின்றதை எப்போதுதான் புரிந்துகொள்ளப்போகின்றீர்களோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.🤣

தொல்பொருள் திணைக்களம் சர்வதேசத்தால் தடைசெய்யப்பட வேண்டிய மிக மோசமானதொரு சிங்கள-பௌத்த பயங்கரவாதக் கும்பல்!

சம்மந்தனும் சுத்துமாத்து சுமந்திரனும் யாழ் நூலகத்தை எரித்த பயங்கரவாதக் கும்பலை பிரதமர் பதவியில் தக்கவைத்து அதன் மூலம் கிடைக்கும் சுயலாபங்களை எண்ணுவதில் மூழ்கியுள்ளார்கள் போலுள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.