Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தருடன் இணைந்து போர்க்குற்றத்தை என்மீதும் படையினர் மீதும் திருப்பிவிட ரணில் முயல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
February 13, 2019

Mahinda-Rajapaksa.jpg?zoom=1.44000005722

 

 

ஐக்கிய நாடுகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமை கூடடத் தொடரில் இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
 
இந்தியா சென்றிருந்த மகிந்த ராஜபக்ச, அங்கு ஊடகவியலாளர்களை சந்தித்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை, ரணில் விக்கிரமசிங்க அரசு, இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் போர்க்குற்றத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி வரலாற்றுத் துரோகம் செய்துள்ளதாகவும் இதன்போதும் மகிந்த ராஜபக்ச சாடியுள்ளார்.
 
அத்துடன், இம்முறையும் இலங்கைக்கு எதிராக புதிய தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் அதற்கும் ரணில் தரப்பினர் வெட்கமின்றி ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமை நாடுகளின் பட்டியலில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையில், பிரிட்டன், ஜேர்மனி, கனடா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இலங்கைக்கு எதிரான புதிய தீர்மானத்தைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவிக்கின்றார்.அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் கொழும்பில் தங்கியிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் தமது நிகழ்ச்சி நிரலை அவர்களிடம் கையளித்துள்ளதாகவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச, இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் ரணில் தலைமையிலான அரசு மௌனம் காப்பதாகவும், போர்க்குற்றத்தை தம்மீதும், இராணுவம்மீதும் திருப்பிவிட்டு, தப்பித்துக் கொள்வதே ரணில் அரசின் முயற்சி என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, தாம் ஐ.நா தீர்மானங்களை கண்டு அஞ்சப் போவதில்லை என்றும் அதனை இலங்கையில் நடைமுறைத்த அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பெங்களுர் நகரில், இந்திய ஆங்கில பத்திரிகை ஒன்றின் மாநாட்டில் பங்கு பற்றச் சென்றிருந்த, மகிந்த ராஜபக்ச இன்று மதியம் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2019/113102/

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தவறு செய்யேல என்றால் ஏன் ஐயா பதறுகின்றீர்கள்?!

த.தே.கூட்டமைப்பையும் தமிழரசுக்கட்சியையும் மறைமுகமாக பலப்படுத்துகிறாரோ?

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அதிமுக ,காங்கிரஸ் பிசேப்பி, ஐக்கிய தேசிய கட்சி சுதந்திரா கட்சி , அமெரிக்கா ரஷ்யா .. 

" நீ என்னோடு இல்லையென்றால் அவனோடுதான் நிற்கிறாய் "  

 சீனியர் யார்ஜ் புஷ் 1991 ஈராக் யுத்தத்தின் போது சொன்னது

இரு துருவ அரசியல் குறித்தான அடிப்படை / ஆய்வு கட்டுரை எங்காவது கிடைக்குமா .. ? 🤔

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இந்த அப்பாவி மனிசனை உள்ளே தள்ள யோசிக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பிழம்பு said:

இரா. சம்பந்தன் மற்றும் சுமந்திரனுடன் இணைந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இலங்கைக்கு அழுத்தத்தை கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

சம்பந்தன்........?  உங்களுக்கு  பகிடி கூடிப்பாேச்சுது. அவர் தன்னட்டை பறிச்ச கதிரையை திருப்பி தரச்சாெல்லித்தான் அழுத்தம் குடுப்பார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.