Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புழுகன் அரிச்சந்திரன் நகைச்சுவை நாடகம் பாகம் ஒன்று

Featured Replies

நாடகத்திற்கு பதிலாக வீராவின் நிலவரம் நிகழ்ச்சி போகின்றதே? :lol: பிழையான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்.

உண்மைதான் புலம்பெயர் நாடுகளில் நாங்கள் வீடுகள் வேண்டுவது பலருக்கு கண்ணுக்கை குத்தும்தான், இதற்காகவே இரண்டுவருடங்களுக்கு முன் நான் எனது வீட்டுக்கு சில மாற்றங்களை செய்தேன் அதைப்போல் நீங்களும் செய்து பாருங்களேன்.

நான்கு வருடங்களுக்கு முன் தாயகத்தில் இருந்த எனது தந்தையின் சொத்தான அரிசிமில்லை விற்று அந்தபணத்தில் இங்கு புதிதாக கட்டப்படும் வீடு ஒன்றை வாங்கினேன்.(மில் வித்தகாசுக்கு கனடாவில் இருக்கும் தம்பியுடன் பங்கு பிரைச்சனை வேறை இருக்கு) இரண்டு வருடங்களாக எங்கள் தமிழ் ஆக்களின் கண்ணூறாலை நான் இரவில் நித்திரையே கொள்ளமுடியவில்லை, அதன் பின் ஒரு முடிவுக்கு வந்த நான் 30 கிலோ மஞ்சள்(தாலியாக பாவிக்கும் மஞ்சள்) வாங்கி அரைத்து வீட்டின் வெளி சுவர் முழுவதும் பெயிற் போல் அடித்தேன். அதன் பின் பாவித்த பற்றறிகளை உடைத்து அதன் உள்பகுதியில் இருக்கும் கறுப்புகலரை எடுத்து வீட்டின் நிலமட்டத்தில் இருந்து ஒரு ஆள் உயரத்துக்கு வீட்டை சுற்றி பற்றரி கலரை அடித்தேன். பற்றி கலரை ஆள் உயரத்துக்கு ஏன் அடித்தேன் என்றால் பேய் பிசாசு நிலத்தில் இருந்து கறுப்புகலரில் ஏறமுடியாது என்பதற்காக.

அடுத்து எனது பென்ஸ் காருக்கு நாவுற்றை துடைப்பதற்காக, காரை சுவருடன் முட்டி மக்காட் பகுதியை சிறு சேதாமாக்கிவிட்டேன். (சுவருடன் முட்டும் போது வெறியில் முட்டுவதாயின் லைற்றை உடைக்க கூடாது. லைற் புதிதாக மாற்றுவதாயின் 90 யூரோ கொடுத்து வாங்க வேண்டும்) இந்த மாற்றங்கள் செய்தபின் எனது பென்ஸ்காரோ, அல்லது வீடோ கடந்த இரண்டு வருடங்களாக கண்ணூறு இல்லாமல் இருக்கின்றது. இதில் நான் குறிப்பிட்டது தமிழ் மக்களின் கண்ணூருக்காக மட்டுமே.

வெற்றுநாட்டவரின் கண்ணூற்றை தடுப்பதற்கு வீட்டின் முன் பகுதியில் சற்றலைற் சட்டி ஒன்றை பூட்டி அதன் உள்பகுதியில் "TAMIL" என்று ஆங்கிலத்தில் எழுதிவிட்டால் வெற்றுநாட்டவரின் கண்ணூறும் இல்லாமல் போய்விடும்.

வீட்டிலை அலுமாரிக்கை வைச்சு தண்ணி அடிக்கிறவை அப்படியே தொடரவும். இல்லையேல் என்னைப்போல் கண்ட இடத்திலும் தண்ணி அடித்துவிட்டு காரை பிரட்டிப்போட்டு அப்படியே விட்டுவிட்டு நாலு கிலோமீற்றர் ஓடி வீட்டை வர அடிச்ச தண்ணியின் வெறியும் முறிஞ்சுட்டுது.

இலவசமாக இதுபோல் கணக்க அற்வைஸ் என்னட்டை இருக்கு உங்களுக்கு தேவைப்படும் போது என்னிடம் தொடர்பு கொள்ளவும்

நல்ல அட்வைஸ் யாரையோ கடிகிறமாதிரி இருக்குது அபி

நல்லாயிருந்தது சாத்திரி அண்ணா என் நண்பர்கள் பலரும் விரும்பி கேட்டனர்

நானும் கேட்டேன், நன்றாக இருந்தது....

செல்போன் சாமத்தில் அடிப்பது போல் ஊளையிட்டு சவுண்ட் கொடுப்பது யார்? அதைக்கேட்க நல்ல பகிடியாக இருந்தது :lol:

கனடாவின் தமிழ் தொலைக் காட்சி ஒன்றில் ஒரு தமிழ் மழிகைக் கடைக்கான விளம்பரத்தில், அக்கடை சிறந்த ஆட்டிறைச்சிக்குப் பெயர்போனது என்று காட்டுவதற்காகவும் ஆட்டிறைச்சிப் பிரியர்கள் அந்தக் கடையைத் தேடிச் சென்று ஆட்டிறைச்சி வாங்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்திற்காகவும், ஒருவர் ஒரு ஆட்டிடம் "மெய்ய ஆடு உன்ர இறைச்சியை நான் எங்க சிறப்பா வாங்கலாம்?" என்று கேட்க ஆடு குறிப்பிட்ட கடையின் பெயரைக்கூறுவதாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

விளம்பர தர்மத்தின் படி இந்த விளம்பரம் வெற்றி பெறுகிறது என்று கொள்ளலாம். அனைவரது கவனத்தையும் ஏதோ ஒரு வகையில்; (அது கோபமாக இருக்கலாம், அருவருப்பாக இருக்கலாம், எவ்வாறாயினும் இருக்கலாம்) இவ்விளம்பரம் கைப்பற்றி அதன் மூலம் கடையின் பெயரை விநயமாக விளம்பரப்படுத்துகிறது. அந்த வகையில் விளம்பரத்தின் நோக்கம் வெற்றி பெறுகிறது, கடைக்காரர் விளம்பரக் காரரிற்குக் கொடுத்த காசும் நியாயமாகிறது.

ஆனால், எவரேனும் மேற்படி விளம்பரத்தை விளம்பரமாகப் பாhக்காது ஒரு கலைப்படைப்பாகப் பார்த்து அதன் கலை நயம் பற்றி அதன் கருத்துப் பற்றிப் பேச விழைவார்களேயாயின், அங்கு அது வெற்றி பெறுகிறதா என்பது கேள்விக்குறியே.

ஓரு உயிரினைக் கொலை செய்தது மட்டுமல்லாமல் அதன் இறைச்சியையும் சிறப்பாக விற்கின்றோம் என்று தம்பட்டம் அடித்து விற்பது எத்தனை குரூரமானது என்று காட்டவும் அப்படியான ஒரு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு அந்தக் கடைக்கு இறைச்சி வாங்கச் செல்பவர் எத்தனை குரூரம் மிக்க சின்னப் பிறப்பு என்று காட்டவும் மேற்படி விளம்பரத்தின் படைப்பாளி முனைந்திருந்தார் என்றால் மட்டும் மேற்படி படைப்பு அற்புதமான கலைப் படைப்பாக வெற்றி பெறுகிறது, மிளிர்கிறது. ஆனால் அவ்வாறு நாம் இந்த விளம்பரத்தினை எடுத்துக் கொண்டால் அங்கு விளம்பரம் தோற்றுப் போகிறது. ஏனெனில்;, கடைக்காரரிடம் அவரின் ஆட்டிறைச்சியினை விளம்பரப் படுத்தித் தருகின்றேன், வாடிக்கையாளரை அதிகரிக்கச் செய்கின்றேன் என்று பணம் வாங்கியவர், மறு வளத்தில் புலால் உண்ணுதலின் மற்றும் விற்பதின் குரூரத்தை மக்களிற்கு நினைவு படுத்துவதன் வாயிலாக, கடையின் வாடிக்கையளாரைக் குறைக்கவே முயலுகிறார் . இது விளம்பர படைப்பாளி கடைக்காரரிற்கு உறுதி அளித்த விளைவிற்கு நேர் மாறானது.

ஆக, மேற்படி விடயத்தில், விளம்பரம் அல்லது கலைப்படைப்பு ஆகிய இரண்டில் ஒரு இலக்குத் தான் வெற்றி பெற முடியும். இரண்டும் எப்போதும் வெற்றி பெற முடியாது.

சாத்திரியின் நாடகங்களைக் கேட்கும் போது மேற்படி விளம்பரம் ஏற்படுத்துவன போன்ற உணர்வுகளே எனக்குள் எழுகின்றன. யாரேனும் ஆகாதவர்களைத் தாக்குவதற்காக மட்டும் இந்நாடகங்கள் உருவாக்கப் படுகின்றன என்றால், அது தொடர்பில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. ஆனால் என்னால் இவற்றை கலா இரசனை மிக்க படைப்புக்களாகவோ அல்லது ஆக்கபூர்வமான சமுதாயச் சீர்திருத்த நோக்கத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்ட படைப்புக்களாகவோ பார்க்க முடியவில்லை. மனிதனின் அருவருப்பான வழுக்களை இரசிக்கும் பக்குவம் எனக்கு இல்லை என்பதால் இதை என்னால் இரசிக்க முடியவில்லை என்கிறேன். ஏன் இது ஆக்கபூர்வமற்றதாய் எனது தனிப்பட்ட கருத்து அமைகிறது என்பதைக் கீழே கூறுகின்றேன். இரண்டும் எனது தனிப்பட்ட கருத்துக்கள் மட்டுமே.

போட்டி, பொறாமை, புழுகல், பொய், கர்வம், ஆணவம் இப்படிப் பலவகையான வழுக்கள் இன மொழி மத மற்றும் இதர பேதங்கள் அனைத்திற்கும் அப்பால் அனைத்து மனிதர்களிடத்திலும் உள்ளன. மற்றவரிற்குத் தான் இந்தக் குணங்கள், ஆனால் அவற்றின் சுவடே எங்களில்இல்லை என்று நினைப்பவர்கள்

உண்மையான சுயபரிசீலனை செய்தால் நிட்சயம் அவற்றின் வகையறாக்கள்

(ஒருவேளை வடிவங்கள் வேறுபட்டாலும்) அனைவரிலும் எங்கோ ஒரு ழூலையில் இருப்பது புலனாகும். மட்டுப்படுத்தப் பட்ட உணவிற்காக அடிபட்ட ஆதி மனிதனில் இருந்து அபரிமித நுகர்வியல் மோகத்தில் அல்லல் படும் இன்றைய மனிதன் வரை, இந்தப் போட்டி பொறாமை மனிதனின் இயலாமைகளின், ஏக்கங்களின் ஒரு வெளிப்பாடாகவே இருக்கின்றன.

இந்த நிலையில், உங்கள் படைப்புக்களில் ஒரு சமூகப் பிரச்சினை அல்லது இயல்பு பற்றி கையாழ முனைகிறீர்கள் ஆயின் ,குறிப்பிட்ட விடயம் உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தினை உங்களது நேயர்களும் உணர வேண்டும் என நீங்கள் விரும்புகின்றீர்கள் ஆயின், முடிவுகளைத் திணிப்பதற்குப் பதிலாக, அதற்கான சிந்தனையைத் தூண்டும் தளத்தினை ஏற்படுத்திவிட்டு சிந்திப்பதை நேயர்களிடம் விட்டு விடுங்கள். தற்போது உள்ள வடிவத்தில், உங்கள் படைப்புக்களில் காணப்படும் ஒரு பெரிய பிரச்சினை என்னவெனில், நீங்கள் கோடிட்டுக் காட்டும் பிரச்சினைகளிற்கு நீங்கள் அப்பாற்பட்டவர் என்பது போன்று நீங்கள் காட்ட விழைவது போன்ற சிந்தனையே உங்களது இலக்கு நேயர்களில் எழுவதற்குச் சாத்தியம் அதிகம். ஏனெனில் ஒரு விமர்சனம் என்று வரும் போது பொதுவாக பலரது அது தொடர்பான எதிர்வினை "அங்க மட்டும் என்ன வாழுதாம்?" என்ற அடிப்படையில் தான் அமைவது வழமை. இதனால் சொல்லப்படும் கருத்து எடுபடுவதற்குப் பதில் பழிவாங்கல் படலமும் அதற்கான திட்டமிடலும் தொடங்குவதே அதிகம்.

நான் ஒரு நாடக விற்பன்னர் இல்லை. எனவே எனது பார்வை தான் சரியானது என நான் சொல்லவில்லை. ஒரு நேயராக மட்டும் எனது உணர்வை ஒளிவு மறைவின்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகின்றேன். அவ்வளவு தான்.

Edited by Innumoruvan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் இன்னுமொருவன் எந்தவொரு கலைஞனின்படைப்பையும் இரண்டாக பிரிக்கலாம் சமூகம் சார்ந்த படைப்பும் அவனைச்சுற்றி அல்லதுஅவனது சமூதாயத்தின் நடக்கின்ற தாக்கங்களே படைப்புக்கள் ஆகின்றது அதுதான் மக்களின் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றது அது தவிர்ந்த படைப்புக்கள் மற்றையது வெறும் கற்பனையான ஆனால் பிரமாண்டமானதாக இருக்கும் இது ஒரு தற்காலிக பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும். எனது எழுத்துக்கள் என்னை பாதித்தவையே புலத்தில் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்த நாடகத்தில் வரும் புளுகு பாத்திரம் மற்றது இரவில் தொலைபேசியடித்து மற்றவர்களிற்கு தொல்லை கொடுப்பதென்பது பொதுவாக நடக்கின்ற நிகழ்வுகள்தான்.மற்றபடி இதில் உங்களின் ஆட்டு விழம்பரத்தை பற்றி கதைக்க தொடங்கினால் அது வேறுபக்கமாக போய் கோயிலில் உள்ள பாதி நிர்வாண அம்மன் சிலையை கடவுளாய் பார்க்கிறீர்களா?? காமமாய் பார்க்கிறீர்களா?? என்று பக்கம் பக்கமாக எழுதவேண்டிவரும் ஆனால் ஒரு வரியில் உங்கள் சந்தேகத்திற்கு பதில் சொல்லிவிடுகிறேன் இந்த நாடகத்தை மட்டுமல்ல எல்லா நாடகங்களையுமே பார்த்த கேட்ட சம்பவங்களையே பொதுவாக நாடகமாக்குகின்றேன். அது பலரை சிரிக்க வைக்கிறது சிலரை கோபபடுத்துகின்றது .சிந்தியுங்கள.......; அந்த சிலரை ஏன் கோபபடுத்துகின்றது என்றால் அது அவரில் ஏதோவொரு தாக்கத்தை உருவாக்கியிருக்கின்றது என்பதுதான் அர்த்தம் .அவர் ஏன் தன்னில் அந்த நாடகம் தாக்கத்தை உருவாக்குகின்றது என்று உணருகிறார் என்றால் அவர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பாத்திரமாக இருந்திருக்கிறார்.; என்பதுதானே அர்த்தம். ஆனாலும் எனது நாடகங்களை வானொலிகளில் மட்டும் போடகொடுத்து விட்டு பேசாமல் நானும் இருந்து விடலாம் கேட்பவர்களும் கேட்டு விட்டு வனொலிகாரரை தங்கள் மனதிற்குள் திட்டிவிட்டு போசாமல் இருந்து விடுவார். ஆனால் யாழில் இடுவதன் காரணம் இதன் பிரதி பலன்களை நானும் மட்டுமல்ல தாக்கமடைந்தவர்களும் உணரவேண்டும் என்பதே கோப படுபவர் மற்றவர்களின் கருத்துகளால் சிந்திக்கவேண்டும் என்பதுமே. நன்றி அன்புடன் சாத்து

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடகம் அருமை . நன்றாக இருக்கிறது. ஒரு கலைப்படைப்பு அதன் வெற்றிய அடைவது வாசகர்கள் நேயர்களால் அந்த வெற்றியை இந்த நாாடகம் பெறும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு பாத்திரமும் அருமையாக செய்துள்ளார்கள். மக்களை வெல்லும் கலைகள்தான் காலத்தை வெல்லும். சாத்திரி அவர்கள் கூறியிருப்பது போல ஒருவனின் படைப்பு அவன் சார்ந்த சமூகத்திலிருந்தே பிறக்கிறது. தனித்த தனித்த சிக்கல்கள் பிரச்சனைகள் தான் பெரும் கலைப்படைப்பாகிறது.

இன்னும் வளர வாழ்த்துக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.